SHARE

Thursday, February 04, 2010

சம்பந்தன் ஒரு சாக்கடை

சம்பந்தன் ஒரு சாக்கடை-யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
இன்று முள்ளிவாய்கால் இறுதிப் போரின்பின் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருப்பதால், சம்பந்தன் தனது பழைய அரசியல் வாழ்க்கையான, பாம்புக்குத் தலையையும் மீனுக்கு
வாலையும் காட்டும் விராலாகவும், இடத்திற்கேற்ற முறையில் நிறத்தை மாற்றும் பச்சோந்தித்தனத்தையும் தொடங்கியுள்ளார் தமிழீழத் தனியரசிற்காக மக்கள்முன் சத்தியம் செய்து புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வழிதடுமாறி வழுக்கி விழுகின்றது. தமிழ்மக்களுக்குப் பிழையாக வழிகாட்டித் தன் பிழைப்பை நடத்தத் தொடங்கியுள்ளார் சம்பந்தன், தமிழீழ மண்ணையும், மக்களையும் மறந்து தனது மந்திரிப்பதவி நப்பாசைக்காக சரத்பொன்சேகாவிற்கு தன்னிச்சையாக ஆதரவுகொடுத்தார். மேலும்

செங்கல்பட்டு: காட்டுமிராண்டி கருணாநிதி ஆட்சியின் காடைத்தனம்

நீ வேறு நான் வேறு இல்லைக் கருணா
சிங்கள - பவுத்த வெறியன் மகிந்த இராபச்சே தமிழர்களைச் சிறைகளில் அடைத்து வைதது சித்திரவதை செய்கிறான் என்றால் அவனை மிஞ்சும் வண்ணம் செம்மொழி மாநாடு நடத்தும்
கருணாநிதியின் ஆட்சியில் இந்த காட்டுமிராண்டித்தனமான, கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கருணாநிதி தமிழினத் துரோகி என்ற பட்டத்தை நிரந்தரமாக்கிக் கொண்டுள்ளார். "ஈழத்தமிழர்கள் ஏதிலிகள் அல்ல. அவர்கள் எங்கள் விருந்தினர்கள். எமது தொப்புள்க் கொடி
உறவினர்" என கருணாநிதி மாய்மாலம் பேசுவதில் மட்டும் எந்தக் குறையுமில்லை. மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று "ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்" என்று
சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான்.
முள்ளிவாய்க்காலில் 25,000 பொதுமக்கள் செல்லடியிலும் குண்டுமழையிலும் பொட்டுப் பூச்சிகள் போல் வகைதொகையின்றி கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில்
முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
அது மட்டுமல்ல அங்கு அரங்கேற்றப்பட்ட மனிதப்படுகொலைக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோர் மட்டுமல்ல காங்கிரஸ் ஆட்சியில் பங்காளியாக இருக்கும்
திமுக தலைவர் கருணாநிதியும் காரணம் ஆவார். அவர் கையிலும் ஈழத்தமிழர்களின் பச்சை இரத்தம் பூசப்பட்டுள்ளது. அவரும் ஒரு போர்க்குற்றவாளிதான்.
<தமிழ் படைப்பாளிகள் கழகம்>

மேலும்

62 ஆண்டுகால ஏகாதிபத்திய அரைக்காலனியாதிக்கத்தை மூடிமறைக்கும் அரசுத்தலைவரின் 'பயங்கரவாதத்திலிருந்து சுதந்திரம் பெற்ற' உரை

2010-1948= 62 President's Speech at the 62nd Independence Day
Feb 4, 2010
My dear people
Today is our Independence Day. It is a very happy day for all of us. Thirty years of terrorism is now over. We are celebrating our independence in such an atmosphere for the first time. Now all of you can live in consolation without fear or doubt.
Anyone can go anywhere freely. That is very important. This is our motherland. All of us are children of one mother. All of us are kings today. We all should live together as brothers with equal rights and with dignity. Let us discuss our issues among ourselves and resolve them.
Everyone will receive all facilities in equal manner. That is called equality and equal rights.
One country, one people, one law. That is our way, the only way.
Thus, there is no racism, separatism or terrorism. Never forget the motherland; never betray it. We consider no one in our country as a minority person. All those who love the country are children of Mother Lanka.
Our motherland is emerging as a hub of development. Democracy should be protected forever.
Recently, the people of Northern and Eastern provinces too were able to vote democratically. I am very pleased about it. Politicians should not mislead the innocent people.
Hereafter, we will not entertain narrow divisions based on race, religion, language and political ideology in terms of regions. Never leave room for the politics of hate. Peace, brotherhood, co-existence and prosperity -- that is our prime objective.
Let us join together. Let us build this country for the sake of our future generations.
More
"உதயன்", "சுடர் ஒளி" ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்!
"பகிரங்கப் பொது வாழ்வுக்கு வந்தவர்கள் குறித்து செய்தி வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் செயற்படுவோர் பற்றிய செய்திகள், தகவல்கள் வெளியிடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறுவது அவசியமல்ல. அதைத் தடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரமும் இல்லை; உரிமையுமில்லை.
செய்திகள் தவறாக இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யுங்கள்"
உதயன் ஆசிரியர்
இதற்கு "உன்னைக் கொலை செய்யச் செய்திருக்க வேண்டும்''.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சிவநாதன் கிஷோர்
மேலும்:

Wednesday, February 03, 2010

லண்டன் மாணவர் போராட்டம் முறியடிக்கப்பட்டது எவ்வாறு? பரமேஸ்வரன் விளக்கம்.

2009 ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை முறியடிக்க மேட்டுக்குடித் தமிழர் தலைமை எவ்வாறெல்லாம் முயன்றது என்பதை விளக்கி, அறிக்கை ஒன்றை காணொளி வடிவில் வெளியிட்டுள்ளார் பரமேஸ்வரன். உண்ணாவிரதப் போராளி பரமேஸ்வரனின் காணொளியைக்காண உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.
Parameswaran's e-mail < s.parameswaran@live.com >

Tuesday, February 02, 2010

நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்

1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.
அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்

AFGHANISTAN: LONDON CONFERENCE 2010 A STRATEGIC FAILURE

Paper no. 3643 02-Feb-2010
AFGHANISTAN: LONDON CONFERENCE 2010 A STRATEGIC FAILURE
By Dr. Subhash Kapila
Introductory Observations
Afghanistan, the hapless Muslim nation, brutalized for a decade by the medieval fundamentalist Islamic regime of the Taliban which was superimposed by Pakistan, is inextricably enmeshed in the conflicting strategic interests of the United States, Pakistan, Saudi Arabia and China.

The London Conference held on January 28, 2010 on Afghanistan flaunted by the United Kingdom as finding a ‘new roadmap’ for peace and stability in Afghanistan is foredoomed to failure as it has significantly deviated from US original war aims which prompted its military intervention in Afghanistan post-9/11. .................... ........................................ >>>
Concluding Observations
The United States military intervention in Afghanistan in December 2001 took place with the strategic aims of liquidating the Al Qaeda and Taliban from Afghanistan post-9/11. This strategic aim was reiterated by President Obama as late as March 2009 in the Af-Pak Strategy Blueprint.



In January 2010 the prime US strategic aims still remain unachieved. They stand unachieved primarily because US military planners have been reluctant to ‘Surgically Disconnect” Pakistan from interferences in Afghanistan’s stability – a fact now acknowledged growingly in US policy making circles.

If after such an acknowledgement at the highest US military levels, the United States becomes a partner to the diabolical British- Pakistan joint plan to rehabilitate the Taliban in power-sharing in Kabul which would lead to an eventual Taliban regime in Afghanistan, then the United States strategic vision on Afghanistan even after a decade of military involvement there, can at best be termed as strategically myopic.

Saudi Arabia and Pakistan have been the major instigators of Afghanistan’s instability historically. Both were instrumental in the installation of Al Qaeda and Taliban in Afghanistan. How can then in United States perceptions can they now emerge as saviors of Afghanistan?

The London Conference 2010 Roadmap on Afghanistan is doomed to strategic failure due to the seeds of failure inherent in its misplaced strategic vision on Pakistan’s strategic utility to the West and the West’s willingness to accommodate the Taliban in power-sharing in Kabul at Pakistan’s behest.
(The author is an International Relations and Strategic Affairs analyst. He is the Consultant, Strategic Affairs with South Asia Analysis Group. Email: drsubhashkapila.007@gmail.com)
More

Monday, February 01, 2010

தமிழீழ தனியரசுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் அமோக ஆதரவு: 99.33 வீத மக்கள் ஆதரவு தெரிவிப்பு
[ திங்கட்கிழ, 01 பெப்ரவரி 2010, 04:17.43 AM GMT +05:30 ]
நேற்றும்(31/01), நேற்று முன்நாளும்(30/01) பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கமைவாக சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 99.33 வீதமான பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து புதியதோர் வரலாறு படைத்துள்ளனர்.

வாக்கெடுப்பில் 64,692 பேர் கலந்து கொண்டதுடன், 64,256 பேர் (99.33 வீதம்) ஆம் எனவும், 185 பேர் (0.29 வீதம்) இல்லை என்றும் வாக்களித்த அதேநேரம், 251 பேர் (0.38) தகுதியற்ற வாக்குகளையும் அளித்துள்ளனர்.

1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தனியரசுக்கான ஆணையை மீண்டும் வலியுறுத்தும் வகையில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் மீண்டும் தமது வேணவாவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற வாக்கெடுப்பில் 18 அகவைக்கு மேற்பட்ட இளையோர் முதல் மூதாளர்வரை மிகுந்த உற்சாகத்துடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் வாக்களித்திருந்தனர்.

சனிக்கிழமை லண்டனிலும், லண்டனிற்கு வெளியே கிளாஸ்கோவில் (Glasgow) இருந்து சவுத்தம்ரன் (Southampton) வரையும் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், எம்-25 நெடுஞ்சாலைக்கு உட்பட்ட லண்டன் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து லண்டனின் மத்தியிலுள்ள கிறீன் பார்க்கில் அமைந்துள்ள செறரன் - பார்க் லேன் விடுதியில் நடைபெற்ற முடிவு அறிவிக்கும் நிகழ்வில் பிரித்தானிய ஈழத்தமிழ் மக்களின் அபிலாசை வெளியிடப்பட்டது. இரவு 10:30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், பொதுச்சுடரை பேராசிரியர் தீரன் ஏற்றி வைக்க, இளையோரான ராஜி நேசராஜா வாக்கெடுப்பின் பின்னணி பற்றி எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பறி காட்னர் (Barry Gardner), நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Shiobhain McDonagah), பேராசிரியர் தீரன் (Prof.Theeran), ஹுகோ சால்ரன் (Hugo Chalton), மொறீசியசைச் சேர்ந்த ராஜ் புத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் (Joan Ryan), நாடாளுமன்ற உறுப்பினர் அன்றூ பெலிங் (Andrew Pelling), நாடாளுமன்ற வேட்பாளர் அன்றூ சரலம்பஸ் (Andrew Charalambous) ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த பேராசியர் பிறையன் வுட்றிப் (Bryan Woodriff), மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய மைக் கிறிபின் (Mc Griffin) ஆகியோர் தேர்தல் முடிவுகளை மக்களின் அமோக கரவொலியின் மத்தியில் அறிவித்தனர்.

இதனையடுத்து கருத்துக் கணிப்பு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் தமிழ்த் தேசிய சபையின் சிறீரஞ்சன், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம், பிரித்தானிய இளையோர் அமைப்பைச் சேர்ந்த ராஜ் செல்வா ஆகியோர் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பற்றி உரையாற்றினர்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களிற்கான தீர்வு என 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்தே 1977ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமிழீழத் தனியரசுக்கான வேணவாவை பன்னாட்டு சமூகத்திற்கு மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் இந்த “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்து வாக்களித்துள்ளனர்.

ஏற்கனவே நோர்வே, பிரான்ஸ், கனடா, யேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதுடன், தமிழீழத் தனியரசுக்கான தமது விருப்பை புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Budget 2025: Commitment to IMF Programme, Challenges Ahead, says Moody’s Ratings

ENB Budget series: IMF இற்கு அடிமைச் சேவகம். _____________________                   The budget underscores the challenge that Sri Lanka’s f...