SHARE

Sunday, March 05, 2017

மாவைக்கு மைத்திரி மீது நம்பிக்கை- ஈனம்!


மைத்திரி மீது நம்பிக்கையீனம் அதிகரிக்கிறது:
மீண்டும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி நிற்கின்றோம்.
மாவை

உங்கள் மீதான நம்பிக்கையீனம் அதிகரித்துச் செல்கின்றது. உங்களைத் தெரிவு செய்த மக்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருகின்றது. உங்களை கனத்த இதயத்துடன் - மனத்துடனேயே வரவேற்க வேண்டியுள்ளது என்றும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்பாக மாவை.சேனாதிராசா குறிப்பிட்டார்.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

உங்களை எங்கள் மக்கள் நம்பிக்கையோடு தெரிவு செய்தார்கள். ஆனால் எங்கள் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெறவில்லை. மக்கள் போராடுகின்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. நம்பிக்கையீனம் வளர்ந்து வருகின்றது. அரசியல் பொறுப்புள்ளவர்கள் என்ற வகையில், எங்களுடைய மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதை உணர்ந்து கொண்டாலும், எங்கள் மக்கள் தெரிவு செய்த அரச தலைவரை, மீண்டும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி நிற்கின்றோம். இருப்பினும் கனத்த இதயத்துடன் - மனத்துடனேயே வரவேற்க வேண்டியுள்ளது என்றார் மாவை சோ.சேனாதிராசா.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...