SHARE

Saturday, February 06, 2016

இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - GTF

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - GTF:

GTN 06 பெப்ரவரி 2016

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குளோபல் தமிழ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிராந்திய வலயத்தின் முக்கிய நாடு மட்டுமன்றி, அண்டை நாடு என்ற ரீதியில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை பெற்றுக்கொடுக்க இந்தியா செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை வழங்க வேண்டுமென அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
``புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நிலையான அரசியல் தீர்வுத் திட்டமொன்றின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றே விரும்புகின்றார்கள்``
 என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,
இந்தியா புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Iran war: Govt. claims neutrality but seen drifting towards US-Israel-India axis

Iran war: Govt. claims neutrality but seen drifting towards US-Israel-India axis Sunday Times 08-03-2026 IRIS Dena’s goodwill request for a ...