SHARE

Thursday, September 24, 2015

இறுதி ஓராண்டுப் போர்க்காலத்தில் 146,679 வன்னி மக்களுக்கு கணக்கில்லை.மன்னார் ஆயர்


இறுதி ஓராண்டுப் போர்க் காலத்தில், 146,679 வன்னி மக்களுக்கு கணக்கில்லை.
                            
  மன்னார் கத்தோலிக்க ஆயர் `அதி வணக்கத்துக்குரிய`ராஜப்பு ஜோசேப்பு 
இறுதிக்கட்டப் போர்க்குற்றங்களை ஆய்வு செய்ய சிங்களம் அமைத்த LLRC (The Lessons Learnt and Reconciliation Commission) இற்கு அளித்த வாக்கு மூலத்திலேயே அவர் மேற்கண்டவாறு ஆணித்தரமாகக் கூறி இருந்தார்.

அவருடைய கூற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

1)  இலங்கை அரசாங்க அதிபர் அலுவலகங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் குடிசனப் புள்ளிவிபரத் தகவலின் அடிப்படையில் 2008 ஐப்பசி மாதம் வன்னிச் சனத்தொகை 429059 ஆகும்

2) 2009 ம் ஆண்டு ஜூலை மாதம் 10 தேதி ஐ.நா.வின் கள அறிக்கையின் அடிப்படையில்,இலங்கை அரசாங்கத்தின் ''கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்'' (ஐப்பசி 2008 இற்கும் வைகாசி 2009 இடைப்பட்ட பகுதியில் ) கூடிய மக்கள் தொகை 282.380 ஆகும்.

3) இதனடிப்படையில் பார்க்கும் போது (எண் கணிதவியலின் தர்க்கத்தை மீறி நிற்கின்ற ) -
( 'discrepancy'),  அந்த 146,679 மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டறியப்பட வேண்டிய விடயமாகும்.

                        மன்னார் கத்தோலிக்க ஆயர் `அதி வணக்கத்துக்குரிய` ராஜப்பு ஜோசேப்பு

=====================================================================
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
=======================================================

No comments:

Post a Comment

2026 BRICS New Delhi Declaration

BRICS New Delhi Declaration: Building for Resilience, Innovation, Cooperation and Sustainability (September 12, 2026) 12 Sep, 2026 1. We, th...