SHARE

Monday, December 01, 2014

நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் - மெல்கம் ரஞ்சித் கர்தினால்:-

நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் -மெல்கம் ரஞ்சித் கர்தினால்

30 நவம்பர் 2014

நீதியானதும் சுயாதீனமானதுமான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமேன கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முறைகேடான வகையில் தேர்தல் நடத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தை பயன்படுத்தி தங்களது பிரச்சாரத்தை எந்தத் தரப்பினரும் மேற்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் மக்கள் வாக்களிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் பிரச்சார காலத்திலும், தேர்தல் தினத்திலும், தேர்தலுக்கு பின்னரும் வன்முறைகள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது அடக்குமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...