SHARE

Saturday, November 22, 2014

ஜனாதிபதி மூன்றாம் தவணை- JVP ''ஆர்ப்பாட்டம்``

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவதனை எதிர்த்து எதிர்வரும் 18ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஜே.வி.பி கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ போட்டியிட்டால், பாரிய போராட்டம் நடத்தப்படும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த தேர்தல் சட்டவிரோதமானதாக அமையும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.மூன்றாம் தவணைக்காக போட்டியிடும் நோக்கில் உச்ச நீதிமன்றிடமிருந்து ஜனாதிபதி தீர்ப்பை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எதனை எதிர்பார்த்தாரோ அதே தீர்ப்பு இன்று நடைபெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

அமெரிக்க ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த மூல வரைபு-தமிழ்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் (புரிந்துணர்வு ஒப்பந்தம்)  மூல வரைபு நியூயார்க் டைம்ஸ்  ஜூன் 17, 2026, (தமிழாக்கம் கூகி...