SHARE

Friday, May 23, 2014

Toronto Sun வாக்கெடுப்பில் தமிழீழக் கொடி அமோக வெற்றி!

கனடா நாட்டில் ஒரு மாணவர் கலாச்சார நிகழ்வில் புலம்பெயர் தமிழீழ மாணவர் ஒருவர் தன் நாட்டு தேசியக் கொடி போர்த்திச் சென்றார். இதற்காக அவர் அந்நிகழ்வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கனடா நாட்டில் இன்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக இருப்பதன் விளைவாக, அதிகாரம் தமிழீழக் கொடியையே தடை செய்தது.

இது குறித்து Toronto Sun பத்திரிகை ஒரு வாக்கெடுப்பை நடத்தியது.

இவரை இந்தக் கொடி ஏந்த அநுமதிக்கலாமா? என்பதே வாக்கெடுப்புக்கான கேள்வியாகும்.

இதை ஒரு விஞ்ஞானபூர்வ வாக்கெடுப்பாக கொள்ள முடியாதெனினும், வெகுஜனவிருப்பின் அடையாள வாக்காக நிச்சயம் கொள்ளமுடியும்.

அந்த வாக்கெடுப்பில் தமிழீழத் தேசியக் கொடி  அமோக வெற்றி ஈட்டியுள்ளது.
இதில் வெற்றி பெற அயராது உழைத்த ஈழ நெஞ்சங்களுக்கு இது மகிழ்சிக்குரிய வெற்றி விளைவாகும்! இத் தருணத்தில் Toronto Sun பத்திரிகை யின்  வாக்கெடுப்பு முடிவுக்கும்,முயற்சிக்கும் நன்றி கூறுகின்றோம்.







No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...