SHARE

Sunday, May 25, 2014

ராஜபக்சே அழைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!


இந்தியாவின் 15வது பிரதமர் பாசிச மோடியின் பதவியேற்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு சார்க் நாடுகளோடு சகோதரத்துவம் என்கிற பெயரில் ஈழதேசிய தமிழின அழிப்புப் போர்க்
குற்றவாளி ராஜபட்சேவுக்கும் மோடி ஆட்சி அழைப்பு அனுப்பியுள்ளது.


இதை எதிர்த்து கழகம் கண்டனச் சுவரொட்டி வெளியிட்டது.


குஜராத் படுகொலையையும்,ஈழப்படுகொலையையும் கண்டித்து தமிழகமெங்கும் இனப்படுகொலை எதிர்ப்பு ,ஈழ ஆதரவு, இந்திய ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும்,மறியல் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

மே 17 இயக்கம்

ரஜனி இல்ல முற்றுகை

இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் ரஜனி மற்றும் விஜய் கலந்து கொள்வதை எதிர்த்து ரஜனியின் இல்லத்தை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு

ஈரோடு,புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிற்கும் இவ் எதிர்ப்பியக்கம் பரவிவருகின்றது.

மாணவர்கள் டெல்கியிலும், இதர பல்கலைக் கழகங்களிலும் போராட்டத்தில் குதித்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் திருவூரில் ரெயில் மறிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.



சாதி வெறியன் ராமதாசின் பா.ம.க.வும், ``கெப்ரன்`` விஜய்காந்தின் தே.மு.தி.க பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளன.ஜெயா அரசு பங்குகொள்வதில்லை அறிவித்து வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ளது. வருத்தம் தெரிவித்த கலைஞர் கருணாநிதி  எனினும் ராஜபக்ச வருகையை எதிர்க்க இது சரியான தருணம் அல்ல எனக்கூறியுள்ளார்.


மக்களின் இந்த உணர்வுக்கு அஞ்சி சமரசவாத,அதிகார பூர்வக் கட்சிகளும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

26-05-2014 03.41

நன்றி: தகவல் ஊடகங்கள் - Face Book

No comments:

Post a Comment

Iran’s New Grand Strategy

Iran’s New Grand Strategy How a Remade Islamic Republic Will Reshape the Middle East Narges Bajoghli and Vali Nasr July/August 2026  Publish...