SHARE

Tuesday, October 01, 2013

பாலச்சந்திரன்: ``நெஞ்சினில் எரியும் தீயே எமக்கு வேகம் தருவதும் நீயே!``

 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 நீ விடுதலைக்காக உயிரள்ளித்தந்த ஒட்டுமொத்த சிறுவர்களின் ஒற்றைக் குறியீடு.


நெஞ்சினில் எரியும் தீயே 
எமக்கு வேகம் தருவதும் நீயே!

என் மொழி தன் பேச்சின் மூச்சிழந்து தவித்தது பாலச்சந்திரா உன் கொடிய இழப்புச் செய்தி கேட்ட போது...

 நீ விடுதலைக்காக உயிரள்ளித்தந்த ஒட்டுமொத்த சிறுவர்களின் ஒற்றைக் குறியீடு.

 பால்வடியும் முகம் பார்த்தும் இரக்கமில்லாத கயவர்களின் கொலைப்பசிக்கு என்னினத்தின் சிறுவர்கள் வரிசையில் நீயும் சென்றாய்.

 தமிழ் தாய் தந்தையர் எல்லோருக்கும் எக்காலத்திலும் நீயே செல்லப்பிள்ளை. 

வீழ்ந்து கிடக்கும் எம் உணர்வுகளுக்கு நீ பிறந்த நாட்கள் புது வீரம் பாய்ச்சும் இது உறுதி. 

எம் தேசத்தின் விருட்சங்கள் யாவும் பட்டுப் போனாலும் அவற்றின் வேர்களில் இருந்து மீண்டும் விடுதலை பயிர் வீறு கொண்டு முளைக்கும்,

 எம் செல்வமே உன் பெயர் சொல்லிவிட்டால்.

Sivavathani Prabaharan

No comments:

Post a Comment

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...