SHARE

Tuesday, June 18, 2013

அறிமுகம்: புதிய ஈழ புத்தக நிலையம்


 
ENB இணைய குடும்பத்தில் மற்றொரு குழந்தையாக `புதிய ஈழ புத்தக நிலையம்` NEBH, இணைந்து கொண்டுள்ளது என்பதை தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.

உலக சோசலிச, மற்றும் புதிய- தேசிய ஜனநாயகப் புரட்சிகர சர்வ தேசிய இயக்கத்தின் அறிவார்ந்த வெளியீடுகளை உழைக்கும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை NEBH தனது தலையாய பணியாகக் கொண்டுள்ளது.

NEBH புரட்சிகர அரசியல் இலக்கிய வெளியீடுகளின் (இலாப நோக்கற்ற)   விற்பனை நிறுவனமும், அதே வேளை .புரட்சிகர இலக்கிய வெளியீடுகளின், சர்வதேச அரசியல் விவகார வெளியீடுகளின் அறிமுகத் தளமுமாகும்.

சமூக மாறுதலை வேண்டிநிற்கும் சமுதாய சக்திகளுக்கு இவ்விணையம் காணிக்கை!
 
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Sunday, June 09, 2013

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் - நூல் வெளியீட்டு நிகழ்வு

ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும் - நூல் வெளியீட்டு நிகழ்வு

சமரன் வெளியீட்டகத்தின் `ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்` நூல் வெளியீட்டு விழா 12/06/13 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

சோலையார் பேட்டை இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாருதி திருமண மண்டபத்தில் இந்நிகழ்வு இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு ம.ஜ.இ.க. வேலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் க.குணாளன் தலைமை ஏற்கிறார்.

ம.ஜ.இ.க. மாநில அமைப்பாளர் தோழர் ஞானம் அவர்கள் நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரை ஆற்றுவார்.

முதல் வெளியீட்டு நூலை திருப்பத்தூர்-வேலூர் மாவட்ட  பெரியார் திராவிடக் கழக செயலாளர் தோழர் A.D.G.கெளதமன் பெற்றுக்கொள்கிறார்.

ம.ஜ.இ.க. தோழர்கள் மா.குணாளன்- தஞ்சை, தோழர் மனோகரன் சென்னை ஆகியோர் கருத்துரை வழங்குவர்.

இறுதியில் மக்கள் கலை மன்ற கலை நிகழ்ச்சி இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்துக்கும் நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் ஜீவா
முன்னிலை வகிப்பார்.

Department of Homeland Security is on the verge of a shutdown

Senate Democrats Block DHS Measure as Funding Deadline Approaches Lawmakers say they remain far apart on deal for Homeland Security to put n...