எத்தனை நாள் இந்த இலையாகாத் தளிர்களை சிலையாக்கி மகிழ்வீர்,
எத்தனை நாள் இந்த முகையவிழா மொட்டுக்களுக்கு முழுமாலை போட்டுப் புகழ்வீர்,
எத்தனைநாள் இந்தக் கோரக்கொலைகளை
`` ஈகம், வீரம்`` எனும் எட்டப்பர் செவி மடுப்பீர்,
எத்தனை நாள் இந்த ஈரமில்லா நெஞ்சர்களின் ``வீரவணக்க`` வழி நடப்பீர்,
இன்னும் எத்தனை நாள்?
No comments:
Post a Comment