SHARE

Thursday, August 04, 2011

வெள்ளை வான் கொலையாளி வடக்கின் முடிசூடா மன்னன்!


புதிய சங்கிலியன் சிலை சொல்லும் செய்தி என்ன?

தமிழீழ மக்களை  ஆளும் அதிகாரம் சிங்களப்பேரினவாத மைய அரசின் அடிமைகளும் எடுபிடிகளுமாகிய கொலையாளிகளின் கையிலேயே உள்ளது என்பதே அந்தச்செய்தி!

இந்த யதார்த்தத்தை மறுத்து இலங்கையில் ஜனநாயகம் நிலவுவதாகவும்,உள்ளூர் சபைத் தேர்தலில் தங்களுக்கு மக்கள் ஆணை வழங்கியதாகவும்,இந்த ஆணை சுயாட்சி மாநிலம் பெறுவதற்கானதென்றும்,தாமே தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும்,தம்முடன் பேசி தமிழ்மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏகாதிபத்திய தாச, சமரசவாத புலம்பெயர் மேட்டுக்குடி தமிழர் அமைப்புக்களும்,தமிழகப் புலிப்பினாமிகளின் தத்துப்பிள்ளைகளான `புரட்சிகர தமிழீழ மாணவர்களும்`, இந்தக்கும்பல்களின் ஊடகங்களும் பிதற்றுவது, மக்களை ஏமாற்றுவதும் மோசடி செய்வதும் மட்டுமல்ல 30 ஆண்டுகள் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ தேசத்தை அவமானப்படுத்தி அவமதிப்பதுமாகும்.

எத்தனை நாள் துயின்றிருப்பாய் எனதருமைத் தாயகமே!

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்

நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ததோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை

ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை

கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை

கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை

உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா


யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று

பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று


பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மே....லே நின்றாய் ஓ நந்தலாலா

உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம்

தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின

தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மே....லே நின்றா......ய் ஓ...... நந்த....லா.......லா...........


பாடலாசிரியர்:வாலி

படம் : சிம்லா ஸ்பெஷல்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

ராகம்:சிந்து பைரவி

No comments:

Post a Comment

2026 BRICS New Delhi Declaration

BRICS New Delhi Declaration: Building for Resilience, Innovation, Cooperation and Sustainability (September 12, 2026) 12 Sep, 2026 1. We, th...