SHARE

Wednesday, November 24, 2010

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் ஜீவா கைது! விடுதலை கோரி ம.ஜ,இ.க பிரச்சார இயக்கம்

அன்பார்ந்த தமிழீழமக்களே, தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களே, புலம்பெயர் வாழ் தமிழர்களே!
ஈழவிடுதலைப் போராட்டத்தை கருவறுத்த இந்திய விஸ்தரிப்புவாத அரசுக்கு எல்லாவகையிலும் துணை நின்ற தமிழக மாநில கருணாநிதியின் பாசிச நிர்வாகம் அதனை அம்பலப்படுத்தி
முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மீது தனது பாசிசத் தாக்குதலை கட்டவிழ்த்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியே
நக்சல்பாரி புரட்சியாளரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழக மூத்த தோழருமான ஜீவாவின் கைதாகும்.
முள்ளிவாய்க்காலில் நாற்பதினாயிரம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு பக்கத்துணையாக நின்று பார்த்து ரசித்த கருணாநிதியின் பாசிச நிர்வாகம், முப்பத்தைந்து வருடங்களுக்கு
முன்னால் கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அப்புசாமி செட்டியார் என்கிற ஒரு கொடிய நிலப்பிரபுவை கொன்றொழித்ததாக 1976ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின்
பேரால் தற்போது தோழர் ஜீவாவைக் கைதுசெய்துள்ளது.. இவ்வழக்கு 1998 இலேயே காலாவதியாகி,குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில் தோழர் ஜீவாவைக் கைது செய்தது ஏன்?
இதனை விளக்கி தமிழக மக்களிடையே மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் பிரச்சார இயக்கம் மேற்கொண்டு வருகின்றது.அதன் பொருட்டு வெளியிடப்பட்ட துண்டுபிரசுரத்தை கீழ்க்காணும்
இணைப்பை அழுத்திப் படிக்கவும்.
தமிழகத்தில் ஒரு ஜனநாயக இயக்கம் ஈழத்தமிழரின் விடுதலைக்கு முன்னிபந்தனையாகும் என்பதை நமது முப்பது ஆண்டுகாலப் போராட்டம் நிரூபித்துள்ளது.
எனவே ம.ஜ.இ.க.வின் மீதான
அடக்குமுறைகளுக்கெதிரான கண்டன இயக்கத்திற்கு ஆதரவு அளித்தும், தோழர் ஜீவாவின் மீதான வழக்கினை நடத்தவும், அத்தோழரின் குடும்பத்தைப் பராமரிக்கவும் கணிசமாக நிதி
கொடுத்து உதவுமாறும், ஆதரவாளர்களையும் அநுதாபிகளையும் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
=======================================
Maoist cadre held Special Correspondent The Hindu Monday, Nov 08, 2010
CHENNAI: The Q branch CID police on Saturday arrested a top Maoist cadre in Tiruvallur district.
According to police sources, Natham Jeeva, who remained underground for many years, was nabbed near Thiruninravur by a special team following a specific input.
He was allegedly involved in a murder case.
“Jeeva is a very important Maoist cadre who was wanted by the Tamil Nadu police for about 35 years,” Inspector-General of Police (intelligence) M.S. Jaffar Sait said.

No comments:

Post a Comment

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...