SHARE

Tuesday, November 09, 2010

ஈழத்தமிழன் சிந்திய குருதியில் சட்டமன்றத்துப் பன்றியாகும். ''செந்தமிழன் சீமான்''

ஈழத்தமிழன் சிந்திய குருதியில் சட்டமன்றத்துப் பன்றியாகும். ''செந்தமிழன் சீமான்''
தொண்டு செய்யும் "தமிழீழ புரட்சிகர மாணவரே" தங்கள் பதில் என்ன?
=========================================
‘‘எங்க தொகுதியில சீமானைப் போட்டியிட வைங்க…’’ என்று தமிழகத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் சீமான் ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்க, ‘‘எப்படியும் தேர்தலில் சீமானைப் போட்டியிட வைப்பது…’’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.‘‘சீமானுக்காக தொகுதியைக் கூட தேர்ந்தெடுத்து விட்டோம். தேர்தலில் போட்டி என்று சீமான் களமிறங்கினால், அநேகமாக அது சிவகங்கை தொகுதியாகத்தான் இருக்கும்…’’ என்று சொல்லும் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ‘‘அந்தத் தொகுதியை ஏன் குறிவைக்கிறோம்?’’ என்பது குறித்தும் சொன்னார்கள்.

‘‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழினத்துக்குத் துரோகம் இழைத்த காங்கிரஸ்காரர்களில் முக்கியமானவர் உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம். அவர்தான், இலங்கையில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிப்பதற்குத் துணைநின்ற காங்கிரஸ் அரசாங்கத்தின் இழிசெயலை தட்டிக்கேட்காமல் ஒப்புதல் வழங்கி வேடிக்கை பார்த்தவர். அதனால், அவரை சிவகங்கையில் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் தாகமாக இருந்தது.ஆனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது எல்லாரும் சீமானுக்கு ஆதரவாக ஒன்று திரளாமல் இருந்துவிட்டார்கள். இல்லையென்றால், அப்பவே சீமான் களத்துக்கு வந்திருப்பார். இப்போது நிலைமை அப்படி இல்லை. அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் சீமானைக் களமிறக்குவது என்று முடிவெடுத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...