'வெளி உலகைக் காட்டுங்கள்' - தமிழ் அரசியல் கைதிகள் -உருக்கமான கோரிக்கை
வீரகேசரி இணையம் 7/8/2010
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விரைவில் விடுதலை செய்யுமாறு சமூக அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் “வெளி உலகைக் காட்டுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.தமது விடுதலை தொடர்பாக மெகசின் தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘1993 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை சிறைக் கம்பிகளுக்கிடையே 17 வருடங்கள் ஓடிவிட்டன. யாருமற்ற அநாதைகளாக இந்த சிறைக்குள் நித்தம் நித்தம் எமது உறவுகளை, எமது எதிர்காலத்தை நினைத்து நினைத்து வெந்துகொண்டிருக்கிறோம்.
எந்தவித விசாரணைளும் இன்றி எத்தனையோ பேர் எதிர்காலத்தையும் குடும்பங்களையும் தொலைத்து சித்திரவதைப்படுகின்றோம். அரசாங்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வும் அபிவிருத்தியும் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு, கல்வித்திட்டம், திருமணம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அதை நினைத்து நாங்கள் சந்தோசமடைகிறோம். ஏனென்றால் எமக்கும் மாண்புமிகு ஜனாதிபதி இப்படியான சந்தர்ப்பத்தை வழங்குவார் என்று முழுநம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
இப்போது நாங்கள் உங்களிடம் கேட்பது என்னவென்றால் நீங்கள் மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்து எமக்கான சுதந்திரமான விடுதலையை பெற்றுத்தாருங்கள். நாங்கள் கடந்த காலங்களில் பல உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியிருந்தோம். எனினும் அவை பயனளிக்காமல் போய்விட்டன. அரசியல்வாதிகள் பலரும் எமக்காகக் குரல்கொடுத்திருந்தார்கள். அதிலும் பயன்கிடைக்கவில்லை.தற்போது நாங்கள் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறோம். விடுதலைக்காக உதவுங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Subscribe to:
Post Comments (Atom)
இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...

-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...
No comments:
Post a Comment