SHARE

Saturday, December 06, 2025

காலநிலை அறிவிப்பு 06-12-2025 - கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா

 06.12.2025 சனிக்கிழமை இரவு 9.00 மணி


நாளை அதாவது 07.12.2025 அன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும்.
எனவே நாளை முதல் (07.12.2025) எதிர்வரும் 14.12.2025 வரை நாடு முழுவதும் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 09.12.2025, முதல் 12.12.2025 திகதிகளில் நாடு முழுவதும் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக மத்திய மாகாணம், தென் மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், வட மத்திய மாகாணம் போன்றவற்றின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மிக முக்கியமாக மேற்குறிப்பிட்ட இந்த நாட்களில் மத்திய மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம் போன்றன ஏனைய பகுதிகளை விட அதிக மழையைப் பெறும் வாய்ப்புள்ளன.


மலையக உறவுகளே...

மேலும் சில நாட்கள் நீங்கள் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களில் இருப்பது தான் சிறந்தது.
ஏனெனில்,
1. இன்றும் மலையகத்தின் பல பிரதேசங்களினதும் மண், ஈர உள்ளடக்கத்தை முழுமையாக கொண்டுள்ளது.
2. டிட்வா புயலின் பின்னர் இன்றுவரை ஆவியாக்கத்திற்குரிய (நீர் மற்றும் மண்) வெப்பநிலை நிலவவில்லை. மிகக் குறைவான சராசரி வெப்பநிலையே நிலவுகின்றது. குறிப்பாக கடந்த 03 நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் சராசரி வெப்பநிலையாக 11 பாகை செல்சியஸ் வெப்பநிலையே நிலவுகின்றது.
3. இன்னமும் பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன. ஆறுகள் முழுக் கொள்ளளவோடு பாய்கின்றன.
4. மலையகம் முழுவதுக்கும் அவ்வப்போது கன மழையைத் தரக்கூடிய வளிமண்டல தளம்பல் நிலை தென்மேற்கு இலங்கையில் நாளை உருவாகும் வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலைகள் மலையகத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு அபாயத்தை உருவாக்கும். எனவே தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் இருப்பதே சிறப்பு.
இது தொடர்பான அதிகாரிகளும் மக்களுக்கு இது தொடர்பாக விழிப்பூட்ட வேண்டும்.


வடக்கு,கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் குளங்களின் நீர் மட்டத்தை தற்போது, முழு வழஙகல் மட்டத்தில்( Full Supply Level- FSL) பேணாமல் சற்று குறைந்த மட்டத்தில் பேணலாம்.
ஏனெனில் எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதி வரை வடகீழ்ப் பருவமழை கிடைக்கும் என்பதனால் பின்னாட்களில் கிடைக்கும் மழையை வைத்து முழுக்கொள்ளளவைப் பேணலாம்.
குறிப்பாக டிசம்பர் மாதத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் வங்காள விரிகுடாவில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகி இலங்கை அருகே நிலை கொள்ளும் வாய்ப்புண்டு. எனினும் இதனை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் அதாவது எதிர்வரும் 08.12.2025 முதல் 14.12.2025 வரை கனமழை கிடைக்கும் என்பதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளிலும், குளங்கள் வான் பாயும் பகுதிகளுக்கு அண்மித்தும், ஆறுகளுக்கு அண்மித்தும் உள்ள மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
- நாகமுத்து பிரதீபராஜா-



2025.12.06 සෙනසුරාදා රාත්රී 9.00
හෙට, එනම් 2025.12.07 දින, ශ්රී ලංකාවේ නිරිතදිග කොටස කේන්ද්ර කර ගනිමින් වායුගෝලීය කැළඹීමක් ඇතිවීමේ හැකියාවක් පවතී.
ඊට අමතරව, ඉහළ ආර්ද්රතාවයක් සහිත නැගෙනහිර සුළං පැමිණීමක් සිදුවනු ඇත.
එබැවින්, හෙට (2025.12.07) සිට 2025.12.14 දක්වා, රටේ බොහෝ ප්රදේශවල මධ්යස්ථ සිට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.
විශේෂයෙන් 2025.12.09 සිට 2025.12.12 දක්වා, රටේ බොහෝ ප්රදේශවල තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.
විශේෂයෙන්, මධ්යම පළාතේ බොහෝ ප්රදේශ, දකුණු පළාත, බස්නාහිර පළාත, ඌව පළාත, සබරගමුව පළාත, උතුරු පළාත, නැගෙනහිර පළාත, උතුරු මැද පළාත ආදී ප්රදේශවලට තද වැසි ඇති වීමට ඉඩ ඇත.
වැදගත්ම දෙය නම්, මෙම දිනවල මධ්යම පළාත, ඌව පළාත, බස්නාහිර පළාත, සබරගමුව පළාත යනාදිය අනෙකුත් ප්රදේශවලට වඩා වැඩි වර්ෂාපතනයක් ලැබීමට ඉඩ ඇත.



ආදරණීය කඳුකර ජනතාව...
නායයෑම් සහ ගංවතුර ව්යසනයන්ගෙන් ආරක්ෂිත ස්ථානවල තවත් දින කිහිපයක් රැඳී සිටීම ඔබට වඩා හොඳය.
මක්නිසාද යත්,
1. අදටත්, කඳුකරයේ බොහෝ ප්රදේශවල පසෙහි සම්පූර්ණ තෙතමනය පවතී.
2. ටිට්වා සුළි කුණාටුවෙන් පසු, මේ දක්වා වාෂ්පීකරණ (ජලය සහ පස) උෂ්ණත්වයක් නොමැත. සාමාන්ය උෂ්ණත්වය ඉතා අඩුය. විශේෂයෙන් නුවරඑළිය දිස්ත්රික්කයේ, පසුගිය දින 03 සඳහා සාමාන්ය උෂ්ණත්වය සෙල්සියස් අංශක 11 කි.
3. බොහෝ ජලාශ තවමත් ගලා යයි. ගංගා සම්පූර්ණ ධාරිතාවයෙන් ගලා යයි.
4. නිරිතදිග ශ්රී ලංකාවේ නිරිතදිග ප්රදේශයේ විටින් විට අධික වර්ෂාවක් ඇති කළ හැකි වායුගෝලීය කැළඹීමක් වර්ධනය වීමට ඉඩ ඇත.
මෙම තත්වයන් කඳුකර කලාපයේ බොහෝ ප්රදේශවල නායයෑම් අවදානමක් ඇති කරයි. එබැවින් ආරක්ෂිත ස්ථානවල රැඳී සිටීම වැදගත් වේ.
අදාළ බලධාරීන් මේ සම්බන්ධයෙන් මහජනතාව දැනුවත් කළ යුතුය.
උතුරු, නැගෙනහිර සහ උතුරු මැද පළාත්වල ජලාශවල ජල මට්ටම සම්පූර්ණ සැපයුම් මට්ටම (FSL) පවත්වා ගැනීම වෙනුවට තරමක් අඩු මට්ටමක පවත්වා ගත හැකිය.
ජනවාරි මැද භාගය වන තෙක් වයඹ දිග මෝසම් වැසි පැමිණෙනු ඇතැයි අපේක්ෂා කරන බැවින්, ඊළඟ දිනවලදී ලැබෙන වර්ෂාව භාවිතා කිරීමෙන් සම්පූර්ණ මට්ටම පවත්වා ගත හැකිය.
විශේෂයෙන් දෙසැම්බර් තුන්වන සහ සිව්වන සතිවලදී, බෙංගාල බොක්කෙහි වායු සංසරණයන් දෙකක් ඇති වී ශ්රී ලංකාව අසල පදිංචි වීමේ හැකියාවක් පවතී. කෙසේ වෙතත්, මෙය ඉදිරි දින කිහිපයෙන් පසුව පමණක් තහවුරු කළ හැකිය.
ඉහත සඳහන් දිනවල, එනම් 2025.12.08 සිට 2025.12.14 දක්වා තද වැසි අපේක්ෂා කරන බැවින්, උතුරු හා නැගෙනහිර පළාත්වල පහත් බිම් ප්රදේශවල, පොකුණු සහ ගංගා අසල ජීවත් වන ජනතාව විමසිලිමත් වීම අවශ්ය වේ.
- නාගමුතු ප්රදීපරාජා-



06.12.2025 Saturday 9.00 PM
Tomorrow, i.e., on 07.12.2025, there is a possibility of atmospheric disturbance centered over the southwestern part of Sri Lanka.
In addition, there will be an arrival of easterly winds with high humidity.
Therefore, from tomorrow (07.12.2025) until 14.12.2025, moderate to heavy rain is likely to occur in many parts of the country.
Especially from 09.12.2025 to 12.12.2025, heavy rain is likely to occur in many parts of the country.
Especially, many parts of the Central Province, Southern Province, Western Province, Uva Province, Sabaragamuwa Province, Northern Province, Eastern Province, North Central Province, etc. are likely to experience heavy rain.
Most importantly, on these days, the Central Province, Uva Province, Western Province, Sabaragamuwa Province, etc., are likely to receive more rain than other areas.


Dear Malaiyaka Uravukale:

It is better for you to stay in safe places from landslides and flood disasters for a few more days.
Because,
1. Even today, the soil in many areas of the hill country still has full moisture content.
2. After the Titva cyclone, there has been no evaporation (water and soil) temperature to date. The average temperature is very low. Especially in the Nuwara Eliya district, the average temperature for the last 03 days has been 11 degrees Celsius.
3. Many reservoirs are still flowing. Rivers are flowing at full capacity.
4. An atmospheric disturbance that may occasionally bring heavy rain to the entire hill country is likely to develop in southwestern Sri Lanka tomorrow.
These conditions will create a landslide hazard in many parts of the hilly region. Therefore, it is important to remain in safe places.
The authorities concerned should also alert the public regarding this.
The water level of the reservoirs in the Northern, Eastern, and North Central provinces can be maintained at a slightly lower level instead of maintaining the Full Supply Level (FSL).
Since the northwest monsoon is not expected to arrive until mid-January, the full level can be maintained by using the rains received in the following days.
Especially in the third and fourth weeks of December, there is a possibility of two air circulations forming in the Bay of Bengal and settling near Sri Lanka. However, this can only be confirmed after the next few days.
Since heavy rains are expected on the abovementioned days, i.e., from 08.12.2025 to 14.12.2025, it is necessary for people living in the low-lying areas of the Northern and Eastern provinces, near ponds and rivers, to be vigilant.
- Nagamuthu Piratheeparajah-

Friday, December 05, 2025

நிலநடுக்க எச்சரிக்கை அச்சப்படத் தேவை இல்லை.


05.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது என்ற எனது எச்சரிக்கை குறித்து மக்கள் அச்சப்படத் தேவை இல்லை. 

மேலதிக விபரம். 

இந்த பதிவு தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை. மாறாக மக்கள் அது தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை.

இலங்கையில் 2004ம் ஆண்டுவரை சுனாமி அனர்த்தம் என்றால் என்னவென்றே பல மக்களுக்கு தெரியாது. அது போன்றே புவிநடுக்க நிகழ்வு பற்றியும் எம் மக்களிடையே பெரியளவிலான விழிப்புணர்வு இல்லை.
 


சுனாமி நிகழும் வரை, சுனாமியால் இலங்கைக்கு பாதிப்புக்கள் இல்லை என்றே பலரும் கருதியிருந்தனர். ஆனால் 2004 சுனாமி நிகழ்ந்த பின்னரே அதனைப் பற்றி பலர் அறிந்து கொண்டனர். 

அவ்வாறில்லாமல் புவி நடுக்க நிகழ்வுகளுக்கான வாய்ப்புக்களை நாம் கொண்டிருக்கின்றோம் என்னும் விழிப்பும், புவிநடுக்க நிகழ்வின் பௌதிக செயன்முறை, சாத்தியமான பாதிப்புக்கள், மற்றும் பாதிப்புக்களைக் குறைக்கும் வழிமுறைகளை இலங்கையர் அனைவரும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். 

ஏனெனில் இலங்கையிலும் இலங்கையைச் சூழவும் அண்மித்த காலங்களில் பல சிறிய அளவிலான புவிநடுக்க நிகழ்வுகள் அதிகளவு பதிவாகி வருகின்றன. Hearth et.al.( 2022) என்பவர்களின் ஆய்வின் படி 29.08.2020 முதல் 05.12.2020 வரை விக்டோரியா நீர்த்தேக்கத்தினைச் சுற்றி 05 சிறிய அளவிலான நில நடுக்கங்கள் நிகழ்ந்திருப்பதாக கூறுகின்றனர்.

2007 க்கு பின்னர் இலங்கையிலும் இலங்கையைச் சூழவும் ஏற்பட்ட புவி நடுக்க நிகழ்வுகளின் திகதி, புவிநடுக்கபதிவு கருவியில்( Seismograph) பதிவான ரிக்டர் அளவு, அந்த புவிநடுக்க மையம்( Epic Center) போன்ற விபரங்களை இதனுடன் இணைத்துள்ளேன். 

இலங்கை இந்தியக் கவசத்தகட்டில் அமைந்திருந்தாலும் இலங்கைக்கு கீழே பல சிறிய கவசத்தகடுகள் உள்ளன. அவை நாள் தோறும் ஒருங்கல்,விலகல் அமிழல் போன்ற பல செயற்பாடுகளுக்கு உள்ளாகுகின்றன. அவற்றின் விளைவே  இந்த புவி நடுக்க நிகழ்வுகளின் அதிகரிப்பு. 




 மத்திய மலை நாடு:

அது மட்டுமல்லாது மத்திய மலை நாட்டில் போவத்தன்ன, காசல்றீ, ரந்தெனிகல, ரந்தெம்ப, கொத்மலை, லக்சபானா, மேல் கொத்மலை, மொரகாகந்த, பொல்கொல்ல, விக்டோரியா, மஸ்கெலிய, போன்ற நீர்த்தேக்கக்கங்கள் அமைந்துள்ளன. அவற்றுக்கு அண்மித்து ஏற்படும் மிதமான ( ரிக்டர் அளவில் 5.0 க்கு மேலாக) நிலநடுக்கங்கள் கூட இந்த நீர்த்தேக்கங்களைப் பாதிக்கும். இந்த சூழ் நிலையில் என்றோ ஒரு நாள் இலங்கையின் நிலப்பகுதியிலோ அல்லது இலங்கையின் கரையோரப் பகுதியிலோ நிகழும் பெரிய அளவிலான ( 6.0 ரிக்டர் அளவுக்கு மேலான) நில நடுக்கங்கள் இலங்கையை கடுமையாகப் பாதிக்கும். 

இந்த டிட்வா புயலின் பேரனர்த்தத்துடன் எங்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான அனர்த்தங்கள் தொடர்பாகவும் நாங்கள் விழிப்பாக இருந்தால் நாம் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கணிசமான அளவு தவிர்க்கலாம். ஜப்பான் போன்ற நாடுகளில் இத்தகைய முறைமையே பின்பற்றப்படுகின்றது. 

இயற்கை அனர்த்தங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால் பாதிப்புக்களை நாம் குறைக்கலாம். 

இயற்கை அனர்த்தங்கள் வருவதற்கு முன் மக்களை விழிப்பூட்டத் தவறிவிட்டு  அனர்த்தம் வந்த பின், அமர்ந்திருந்து அது இது என விபரித்து, யாதொரு பயனும் கிடையாது. 
நான் அந்த வகையைச் சார்ந்தவனுமல்ல.  அனர்த்தத்துக்கு முன்னான, மக்களின் விழிப்புணர்வே மிகப்பெரிய அனர்த்த தணிப்பு நடவடிக்கை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். 


இலங்கையின் புவிநடுக்கம் தொடர்பான மேற்காணும் படங்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டன ( கலாநிதி நா.பிரதீபராஜா-யாழ் பல்கலைக்கழகம் )

Thursday, December 04, 2025

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah

03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி
விழிப்பூட்டும் முன்னறிவிப்பு

இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளை 04.12.2025 அன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
எதிர்வரும் 05.12.2025 அன்று கிழக்கு மாகாணத்திற்கு குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அன்றைய தினம்( 05.12.2025) வடக்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 06 மற்றும் 07 ம் திகதிகளில் நாடு முழுவதும் பல இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மன்னார், அனுராதபுரம், புத்தளம், சிலாபம், மாத்தளை, கண்டி, நுவரெலியா, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை, காலி,பதுளை மாவட்ட்ங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 08.12.2025 அன்று வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பதுளை மாவட்டத்திற்கும் சற்று கனமழை கிடைக்கும் என்பதோடு வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.
எதிர்வரும் 09.12.2025 திகதி நாடு முழுவதும் மிதமானது முதல் கனமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
10.12.2025 அன்று நாடு முழுவதும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இது வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அவ்வப்பொழுது இலங்கையில் பல இடங்களிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புக் காணப்படுகின்றது.
ஆயினும் ஒரு தீவிரமான வானிலை நிகழ்வுக்குரிய எந்த வாய்ப்பும் அடுத்து வரும் 07 நாட்களுக்கு இல்லை என்பதனால் மக்கள் மழை கிடைத்தாலும் அச்சம் கொள்ள தேவையில்லை.
----------------------------++++++++++-------------------------
ஆனால் ஏற்கெனவே புயலினால் மிகக்கனமழை கிடைத்து, ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து, குளங்கள் வான் பாய்ந்து மண் ஈரலிப்பாக உள்ள நுவரெலியா, கண்டி, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மாவட்டங்களுக்கு சற்று கனமான மழை கிடைத்தாலே( குறைந்தது 30-40 மி.மீ. கிடைத்தால் கூட) அது நிலச்சரிவைத் தூண்டும் என்பதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் 6,7,8,9 ம் திகதிகளில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபடுவோரும் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.
-------------------------+++++++++++-----------------------------
நான் பல தடவைகள் குறிப்பிடுகின்ற ஒரு விடயம் சாத்தியமான அனர்த்தம் ஒன்றை கருத்தில் கொண்டு நாம் தயாராக இருந்தால், அந்த அனர்த்தம் நிகழாவிட்டாலும் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தயராக இல்லாது விட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
- நாகமுத்து பிரதீபராஜா -

2025.12.03 Wednesday 3.30 pm
The warning forecast
-------------------------------------------------
Moderate rainfall is expected in some areas of the northern and eastern provinces today.
Moderate rainfall is expected in north, east, south, west and central provinces tomorrow 2025.12.04.
Heavy rains are expected in the Eastern Province, especially Trincomalee and Battakalapuwa districts as of 2025.12.05.
There is a possibility of moderate rainfall in northern, central and northern central provinces on that day (2025.12.05).
Moderate to heavy rains are expected in many places across the island on 06 and 07. There is a possibility of heavy rains in many areas of Mannarama, Anuradhapura, Puttalam, Chalawatha, Kandy, Nuwara Eliya, Colombo, Gampaha, Ratnapura, Kalutara, Galle and Badulla districts.
Heavy rains will occur in northern central, central and eastern provinces and Badulla district on 2025.12.08 and moderate rains in some parts of the northern province.
Moderate to heavy rains are expected across the country as of 2025.12.09.
Moderate rainfall is expected across the country on 2025.12.10.
As this is the north-west monsoon season, many places in Sri Lanka are likely to occur frequently moderate to heavy rains.
However, as there is no possibility of severe weather event for the next 07 days, people shouldn't worry despite the rain.
-------------------------+++++++++++++----------------------
But as the storm has already poured heavy rains, the water levels in the rivers have risen, the ponds have overflowed and the soil is wet, although Nuwara Eliya, Kandy, Badulla, Kegalle and Ratnapura districts have received minor heavy rains (even though at least 30-40 mm), it will cause landslide, so People in these areas should be very careful about this. People in Central, Uwa and Sabaragamuwa provinces should be careful especially on the next 6th, 7th, 8th and 9th
Those who are engaged in disaster relief activities in the above mentioned districts should also keep this in mind.
-------------------------++++++++++++--------------------------
One thing I've mentioned many times is that if we are ready considering a possible disaster, even if it doesn't happen, we won't be affected. But serious consequences will happen if we are not ready.
- Nagamuthu Pradeeparaja -

02.12.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முக்கியமாக வவுனியாவின், ஓமந்தை, கீரிசுட்டான், புளியங்குளம் , கனகராயன்குளம், மூன்றுமுறிப்பு, பாலைப் பாணி பகுதிகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சாளை, கெருடமடு, புதுக்குடியிருப்பு மற்றும் முத்தையன் கட்டு குளத்தின் கீழ்ப் பகுதிகளிலும் சற்றுக்கனமழை கிடைக்கும்.
அதேவேளை நுவரெலியா, கண்டி, காலி, பதுளை இரத்தினபுரி, மாவட்டங்களின் சில பகுதிகளிலும், தம்புள்ள, அனுராதபுரம் பகுதிகளிலும் இன்று மாலை அல்லது இரவு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இப்பகுதிகளில் அனர்த்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவும்.
பெருமழை இல்லை. ஆகவே அச்சப்படத் தேவையில்லை.
- நாகமுத்து பிரதீபராஜா -
2025.12.02 අඟහරුවාදා ප.ව. 3.30
උතුරු සහ නැගෙනහිර පළාත්වල සමහර ප්රදේශවලට අද සවස හෝ රාත්රියේ මධ්යස්ථ වැසි ඇති වීමට ඉඩ ඇත.
ප්රධාන වශයෙන් වවුනියාවේ ඕමන්තෙයි, කීරිෂුඩ්ඩාන්, පුලියන්කුලම්, කනගරායන්කුලම්, මුරුමුරිප්පු, පලෙයිපානි ප්රදේශවල සහ මුලතිව් දිස්ත්රික්කයේ සාලයි, කෙරුඩමඩු, පුදුකුඩියිරිප්පු සහ මුතයියන් කට්ටු යන ප්රදේශවල පහළ ප්රදේශවල.
මේ අතර, නුවරඑළිය, මහනුවර, ගාල්ල, බදුල්ල සහ රත්නපුර දිස්ත්රික්කවල සහ දඹුල්ල සහ අනුරාධපුර ප්රදේශවල සමහර ප්රදේශවලට අද සවස හෝ රාත්රියේ මධ්යස්ථ වැසි ඇති වීමට ඉඩ ඇත.
මෙම ප්රදේශවල ආපදා සහන මෙහෙයුම්වල නියැලී සිටින අය මෙය සැලකිල්ලට ගත යුතුය.
දැඩි වර්ෂාවක් නොමැත. එබැවින් කලබල විය යුතු නැත.

- නාගමුතු ප්රතිපරාජා - 

01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி

டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை. 

மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. 

ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க. 

இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள். 

டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம். 

- நாகமுத்து பிரதீபராஜா -

காலநிலை அறிவிப்பு 07-12-2025 - கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா

  07.12.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி விழிப்புணர்வூட்டும் பதிவு - கனமழை மற்றும் அதனோடு இணைந்த நிலச்சரிவு போன்ற நிகழ்வுகள் தொடர்பானது.  ...