SHARE

Friday, March 26, 2010

குசினி நிர்வாகத்தில் குழப்பம் நஞ்சூட்டப்பட்டனர் குழந்தைகள்!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருட்டுச்சோலைமடு மாணவர்கள்
வீரகேசரி இணையம் 3/25/2010 7:06:27 PM
மட்டக்களப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இருட்டுச்சோலைமடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 118 மாணவர்கள் அருந்திய உணவில் நச்சுத்தன்மை கலக்கப்பட்டதால்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

இருட்டுச்சோலை மடு விஷ்ணு வித்தியாலய மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களாவர். பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவை உண்ட பின் அங்குள்ள கிணற்று நீரை இவர்கள் அருந்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வயிற்றுளைவு, வாந்தியால் அவதிப்பட்ட இவர்கள் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் அவசர வைத்திய சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாக மட்டு. போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 12 - 15 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 118 மாணவர்களில் 112 பேர் இன்று காலை, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அறுவர் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர் முருகானந்தம் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டகளப்பு பொலிசார், மாணவர்கள் உண்ட உணவிலேயே நஞ்சு கலக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து சத்துணவு வழங்கிய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

உணவில் நஞ்சு? சிறார்கள் பாதிப்பு
உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில்
இலங்கையில் இருட்டுச்சோலைமடு அரசாங்க பாடசாலையின் உணவை உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பாடசாலை இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு மேற்கே வவுனதீவு பிரதேசத்தில் இருக்கிறது.
பாடசாலையால் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்னர் இந்தச் சிறார்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழோசையின் மட்டக்களப்புச் செய்தியாளர் கூறுகிறார்.
வாந்தி, மயக்கம் காரணமாக இந்தச் சிறார்கள் மட்டக்களப்பு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் டாக்டர் கே முருகானந்தம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு அல்லது அவர்கள் அருந்திய நீரில் நச்சுத்தன்மை கலந்திருக்கக் கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் டாக்டர் முருகானந்தம் கூறுகிறார்.

எனினும் சோதனைக்காக அனுப்பபட்டுள்ள நீர் மற்றும் உணவு குறித்த அறிக்கை கிடைத்த பிறகே இந்தச் சம்பவத்துக்கான உறுதியான காரணம் குறித்து தெளிவாகக் கூற முடியும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தடுப்பு முகாம்களில் தொடரும் தமிழின அழிப்பு

Fate of 100 Vanni detainees taken away by SLA not known
[TamilNet, Friday, 26 March 2010, 10:52 GMT]
Sri Lanka Army (SLA) soldiers had blind folded one hundred Vanni youths and young family men detained Kaithadi Palmyra Development Board Special IDP detention centre in Jaffna peninsula and taken them away in vehicles in the last one week, according to complaints made by family members of the persons taken away to Jaffna Human Rights Commission (HRC) and International Committee of Red Cross (ICRC). SLA soldiers had taken 70 of the above IDPs in the first instance and 30 in the second, and the SLA authorities refuse to reveal any information of their whereabouts or what had happened to them, the complainants said. The SLA authorities also refuse to reveal the number of IDPs detained in this detention centre, sources in Jaffna said.

A group of Vanni IDPs detained in various camps in Jaffna peninsula had been classified as persons involved in ‘terrorism’ and brought to Kaithadi special detention centre located in the Palmyra Development Board building.

SLA authorities in the above centre had only allowed a few relatives of the detainees to visit them.

The detention centre is in the complete control of SLA.

The wives and parents of the abducted IDPs are in a state of grief and fear for their lives.

Earlier, some Jaffna University students who had come from Vanni to restart their disrupted education had also been arrested and detained in Kaithadi detention centre.

Saturday, March 20, 2010

அபிவிருத்திக்கு பலம்வாய்ந்த பாராளுமன்றம் அவசியம்

அபிவிருத்திக்கு பலம்வாய்ந்த பாராளுமன்றம் அவசியம்
நாட்டை நேசிக்கும் வேட்பாளரை தெரிவு செய்யுங்கள் ஆளும் கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பலம் வாய்ந்த பாராளுமன்றம் அவசியமாகத் தேவைப்படுவதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டை நேசிக்கும் வேட்பாளர்களை பொதுமக்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார்.

கண்டி கெட்டம்பே அரங்கில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டம் இடம்பெற்றது. அங்கு உரைநிகழ்த்திய ஜனாதிபதி மிகவும் ஒழுக்கக் கட்டுப்பாடுடைய சமூகமொன்றை உருவாக்குவதற்கான கடமையை நான் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மிகுந்த தார்மீக விழுமியங்களைக் கொண்டுள்ளதும் ஒழுக்கமானதுமான சமூகத்தை உருவாக்குவதற்கான ஆணையை மக்கள் தமக்கு இரண்டாவது தடவையாக வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2005 இல் தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்முன்னால் கேள்விக்குறியொன்று இருந்தது. நாங்கள் முன்னோக்கிச் செல்வது தொடர்பாக கேள்விக்குறி காணப்பட்டது. ஆயினும் மக்கள் விரும்பியதை அவர்களுக்கு நாங்கள் வழங்காமல் விட்டுச்சென்றிருக்கவில்லை. சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் எதிர்கால தலைமுறையினரை தயார்படுத்துவதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இப்போது இந்த நாடு உங்களுடையது. இதனை சுபிட்சத்தை நோக்கியும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நோக்கியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு வலுவான பாராளுமன்றம் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சரத் அமுனுகம, மகிந்தானந்த அளுத்கமகே, தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்கா ஆகியோரும் உரையாற்றினர்.

மலைநாட்டுக்கான தமது விஜயத்தின்போது "மகிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் திறந்துவைத்தார். கெட்டம்பேயில் 302 மில்லியன் ரூபா செலவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைய திறப்புவிழாவில் மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்
.

Sunday, March 14, 2010

அன்று கிளிநொச்சி இன்று அலரி மாளிகை

அன்று கிளிநொச்சி இன்று அலரி மாளிகை!
எம் பிள்ளைகளை விடுவிக்க கோரி அன்று கிளிநொச்சிக்குப் போனோம்; இப்போது அலரி மாளிகைக்குப் போகிறோம் - ஒரு சிங்களத் தாய்
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 12:29 GMT ] [ தி.வண்ணமதி ] புதினப் பலகை

“புலிகளால் கைதுசெய்யப்பட்ட படையினரை விடுவிப்பதற்காக அன்று கிளிநொச்சிக்குப் போனோம். இப்போது, எங்களது படைவீரர்களை விடுவிப்பதற்கு நாங்கள் அலரிமாளிகைக்குப் போகிறோம்” என விசாக தர்மதாச தெரிவித்தார்.

சர்வதேசப் பெண்கள் தினத்தின் 100வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடும் முகமாக கொழும்பிலுள்ள ஜே.ஆர் ஜெயவர்த்தன மையத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே விசாக தர்மதாச இந்தக் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் பெண்கள் அமைப்புக்களது பிரநிதிநிகளும் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்கள்.

ராஜபக்சவினது நிர்வாகத்தினால் கைதுசெய்யப்பட்ட படைவீரர்களை விடுவிப்பதற்கு ஏற்ற பிரசாரங்களைத் தாம் முன்னெடுத்து வருவதாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் [Association of War Affected Women -AWAW] மூத்த பணியாளரான விசாக தர்மதாச குறிப்பிட்டார்.

பெண்ணுரிமை அமைப்புக்கள் பல இணைந்து ஒழுங்குசெய்திருந்த இந்தக் கூட்டத்தில், ஊடக சுதந்திரம், நாட்டில் சனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்படுதல் மற்றும் பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் போன்ற அழைப்புக்கள் விடுக்கப்பட்டன.

தமக்காகப் போராடியோரையே அரசு பிடித்து வைத்துள்ள போது, தமக்கு எதிராகப் போராடியவர்களைப் பிடித்து வைத்திருந்த புலிகளிடம், அவர்களை விடுவிக்குமாறு நாம் கேட்டது நியாயம் இல்லை.

அரச படையினர் விடுதலைப் புலிகளை வீழ்த்தி வெற்றிகளைத் தமதாக்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான் அரசியல்வாதிகள் படைவீரர்களின் நலன்களில் அக்கறைகொண்டு செயற்பட்டதாகவும் தர்மதாச தெரிவித்தார்.

“படைவீரர்கள் தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருந்த வேளையில், எமது பிள்ளைகள் தங்களது உயிர்களை விட்டுக்கொண்டிருந்த வேளையில், எங்களது துயராற்றுவதற்கு எவரும் வரவில்லை” என அவர் தெரிவித்தார்.

வெளிவருகின்றது, சமர்க்கள நாயகன் இறுவட்டு!

மரணவிழாவில் வாழ்ந்த மனிதன்.
உன் மூச்சடங்கிப் போனதோ,
உன் மூச்சடங்கிப் போனதோ,

பகையின் விழிக்குள் நின்று குமுறிய எரிமலையே
நீ அடங்கிப் போனாயோ,
நீ அடங்கித்தான் போனாயோ,
நம்ப மனம் மறுக்கிறதையா!

உன்னை நோய் பிடித்துச் சென்றபோதும்,
உன்னை நோய் பிடித்து அணுவணுவாகத் தின்றபோதும்,
நீ பாய் விரித்துப் படுப்பதில்லையே,
நீ பாய் விரித்துப் படுத்ததில்லையே!

பகையைத் தேடித்தேடி சுழன்றடித்த சூறாவளியே,
பகையைத் தேடித்தேடி சுழன்றடித்த சூறாவளியே,

உன் மூச்சடங்கிப் போனதோ,
உன் மூச்சடங்கிப் போனதோ.

(பிரிகேடியர் பால்ராஜின் மரணவிழா ஊர்வலத்தில் பாடப்பட்ட புலம்பல் பா. 23-05-2008)

Tuesday, March 02, 2010

விரட்டியடிக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்கள் வீடு திரும்புகின்றனர்

விரட்டியடிக்கப்பட்ட இஸ்லாமியத்தமிழர்கள் வீடு திரும்புகின்றனர்!
Back and never to leave again
After nearly 20 years, Muslims in Jaffna who were evicted by the LTTE, return home. Here they share their happiness with Chandani Kirinde Fifty-six-year-old Mohamed Basheer’s eyes still well up with tears when he recollects the day in 1990 when the LTTE issued an eviction order on all Muslims living in the Jaffna peninsula, giving them a few hours to quit a city that had been their home for as many generations as he could recollect.

With his wife and six young children, they left with all they could take with them, leaving behind their hometown to live for nearly 20 years as “outsiders” going from place to place but never finding a place to call home.

But today Basheer is a happy man. He has returned to Moor Street in the Jaffna town and vows never to leave it again.

“The day we left, we were stripped of all our valuables. Some little girls had their earrings torn out from their ears as they left. But now I am back and I will never leave this city,” said Basheer as he sat on the floor of the mosque which he and two others are slowly reconstructing as the thousands of Muslims who fled Jaffna come back to their former homes with normalcy returning after nearly three decades of bitter fighting.

Several Muslims returned to Jaffna after the re-capture of the town by government troops in 1995 and S.M. Fiaz is among them. He left his family at the welfare centre for displaced Muslims in Puttalam and moved back as he felt someone needed to look after the mosque. “I am glad that things are returning to normal now and more and more people are coming back. We are preparing the mosque for their arrival,” Fiaz said.

Life is still hard for most of the families who had returned to Jaffna more than seven years ago and who are now housed in the remnants of the Kadija Girls’ School. The school has been compartmentalised and made into makeshift homes.

Khair Unnisar lives with her family in one of the small blocked out sections and wants more government action to assist them as well as those who will be returning soon. “The government must assist us to build our old homes,” said Unnisar who works at a local NGO.

They have been well received by their Tamil brethren with relations between the two communities not constrained by the bitter experiences of the past.

“We always felt like “outsiders” even in predominantly Muslim areas in the country.

But now, with God’s blessings we are back in our old homes,” Basheer said, content that he is back to his roots and eagerly awaiting the arrival of his family members.

A new Moulavi Mohamed Irshad arrived at the mosque recently from Matale and he will lead the prayers at the Moor Street Mosque.

Now instead of the sound of gunfire and explosions, it is the call to prayers to the faithful that is once again filling the air in the Muslim enclaves of Jaffna.

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...