SHARE

Tuesday, February 02, 2010

நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்

1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கவில்லை.சம்பந்தன்
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் கேட்கமாட்டோம். இதனை 1960, 70 களில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட நாம் வலியுறுத்தியுள்ளோம். பிளவுபடாத இலங்கைக்குள் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழக்கூடியதாக அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்தக்கோரிக்கையாகும்.
அதனையும் மீறி நாட்டை பிரிக்கவேண்டுமென்ற கோஷத்துடன் யாராவது தமிழ் பேசும் மக்களிடம் ஆணை கேட்டுவந்தால் அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டுமென நாம் அன்றே தெரிவித்திருக்கின்றோம்.இந்த நாட்டில் சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் விதத்தில் ஒரு காத்திரமான தீர்வு காணப்படவேண்டும். அவ்வாறான சூழ்நிலையைத்தான் எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்

AFGHANISTAN: LONDON CONFERENCE 2010 A STRATEGIC FAILURE

Paper no. 3643 02-Feb-2010
AFGHANISTAN: LONDON CONFERENCE 2010 A STRATEGIC FAILURE
By Dr. Subhash Kapila
Introductory Observations
Afghanistan, the hapless Muslim nation, brutalized for a decade by the medieval fundamentalist Islamic regime of the Taliban which was superimposed by Pakistan, is inextricably enmeshed in the conflicting strategic interests of the United States, Pakistan, Saudi Arabia and China.

The London Conference held on January 28, 2010 on Afghanistan flaunted by the United Kingdom as finding a ‘new roadmap’ for peace and stability in Afghanistan is foredoomed to failure as it has significantly deviated from US original war aims which prompted its military intervention in Afghanistan post-9/11. .................... ........................................ >>>
Concluding Observations
The United States military intervention in Afghanistan in December 2001 took place with the strategic aims of liquidating the Al Qaeda and Taliban from Afghanistan post-9/11. This strategic aim was reiterated by President Obama as late as March 2009 in the Af-Pak Strategy Blueprint.



In January 2010 the prime US strategic aims still remain unachieved. They stand unachieved primarily because US military planners have been reluctant to ‘Surgically Disconnect” Pakistan from interferences in Afghanistan’s stability – a fact now acknowledged growingly in US policy making circles.

If after such an acknowledgement at the highest US military levels, the United States becomes a partner to the diabolical British- Pakistan joint plan to rehabilitate the Taliban in power-sharing in Kabul which would lead to an eventual Taliban regime in Afghanistan, then the United States strategic vision on Afghanistan even after a decade of military involvement there, can at best be termed as strategically myopic.

Saudi Arabia and Pakistan have been the major instigators of Afghanistan’s instability historically. Both were instrumental in the installation of Al Qaeda and Taliban in Afghanistan. How can then in United States perceptions can they now emerge as saviors of Afghanistan?

The London Conference 2010 Roadmap on Afghanistan is doomed to strategic failure due to the seeds of failure inherent in its misplaced strategic vision on Pakistan’s strategic utility to the West and the West’s willingness to accommodate the Taliban in power-sharing in Kabul at Pakistan’s behest.
(The author is an International Relations and Strategic Affairs analyst. He is the Consultant, Strategic Affairs with South Asia Analysis Group. Email: drsubhashkapila.007@gmail.com)
More

Monday, February 01, 2010

தமிழீழ தனியரசுக்கு பிரித்தானியா வாழ் தமிழ் மக்களும் அமோக ஆதரவு: 99.33 வீத மக்கள் ஆதரவு தெரிவிப்பு
[ திங்கட்கிழ, 01 பெப்ரவரி 2010, 04:17.43 AM GMT +05:30 ]
நேற்றும்(31/01), நேற்று முன்நாளும்(30/01) பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கமைவாக சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 99.33 வீதமான பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து புதியதோர் வரலாறு படைத்துள்ளனர்.

வாக்கெடுப்பில் 64,692 பேர் கலந்து கொண்டதுடன், 64,256 பேர் (99.33 வீதம்) ஆம் எனவும், 185 பேர் (0.29 வீதம்) இல்லை என்றும் வாக்களித்த அதேநேரம், 251 பேர் (0.38) தகுதியற்ற வாக்குகளையும் அளித்துள்ளனர்.

1976ஆம் ஆண்டு தமிழீழத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தனியரசுக்கான ஆணையை மீண்டும் வலியுறுத்தும் வகையில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் மீண்டும் தமது வேணவாவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற வாக்கெடுப்பில் 18 அகவைக்கு மேற்பட்ட இளையோர் முதல் மூதாளர்வரை மிகுந்த உற்சாகத்துடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் வாக்களித்திருந்தனர்.

சனிக்கிழமை லண்டனிலும், லண்டனிற்கு வெளியே கிளாஸ்கோவில் (Glasgow) இருந்து சவுத்தம்ரன் (Southampton) வரையும் வாக்களிப்பு இடம்பெற்றிருந்த நிலையில், எம்-25 நெடுஞ்சாலைக்கு உட்பட்ட லண்டன் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகவும் வாக்களித்திருந்தனர்.

இதனையடுத்து லண்டனின் மத்தியிலுள்ள கிறீன் பார்க்கில் அமைந்துள்ள செறரன் - பார்க் லேன் விடுதியில் நடைபெற்ற முடிவு அறிவிக்கும் நிகழ்வில் பிரித்தானிய ஈழத்தமிழ் மக்களின் அபிலாசை வெளியிடப்பட்டது. இரவு 10:30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், பொதுச்சுடரை பேராசிரியர் தீரன் ஏற்றி வைக்க, இளையோரான ராஜி நேசராஜா வாக்கெடுப்பின் பின்னணி பற்றி எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பறி காட்னர் (Barry Gardner), நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Shiobhain McDonagah), பேராசிரியர் தீரன் (Prof.Theeran), ஹுகோ சால்ரன் (Hugo Chalton), மொறீசியசைச் சேர்ந்த ராஜ் புத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் (Joan Ryan), நாடாளுமன்ற உறுப்பினர் அன்றூ பெலிங் (Andrew Pelling), நாடாளுமன்ற வேட்பாளர் அன்றூ சரலம்பஸ் (Andrew Charalambous) ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்த பேராசியர் பிறையன் வுட்றிப் (Bryan Woodriff), மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய மைக் கிறிபின் (Mc Griffin) ஆகியோர் தேர்தல் முடிவுகளை மக்களின் அமோக கரவொலியின் மத்தியில் அறிவித்தனர்.

இதனையடுத்து கருத்துக் கணிப்பு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் தமிழ்த் தேசிய சபையின் சிறீரஞ்சன், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜனனி ஜனநாயகம், பிரித்தானிய இளையோர் அமைப்பைச் சேர்ந்த ராஜ் செல்வா ஆகியோர் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பற்றி உரையாற்றினர்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களிற்கான தீர்வு என 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்தே 1977ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தமிழீழத் தனியரசுக்கான வேணவாவை பன்னாட்டு சமூகத்திற்கு மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் இந்த “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” அடிப்படையாக வைத்து வாக்களித்துள்ளனர்.

ஏற்கனவே நோர்வே, பிரான்ஸ், கனடா, யேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதுடன், தமிழீழத் தனியரசுக்கான தமது விருப்பை புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, January 31, 2010

கிளர்ச்சியாளர்களை பிழைக்க விடமாட்டேன் சம்பந்தன்

கிளர்ச்சியாளர்களை பிழைக்க விடமாட்டேன் சம்பந்தன்
Align Centre

மேலும்

இலங்கை இராணுவத் தலைமை மறுசீரமைப்பு

ராஜபக்ச சரத் பொன்சேகா முரண்பாட்டின் பின்னணியில் இலங்கை இராணுவத் தலைமை மறுசீரமைப்பு
மேலும்

பெரும்பான்மையோரின் அங்கீகாரத்துடனேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு-மகிந்த

இல்லை இல்லவே இல்லை
இலங்கை நாட்டில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தமிழ் பேசும்மக்களிடையேயான வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும். ''அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம்'' மூலம் அல்ல.
மேலும்

Saturday, January 30, 2010

Tony Blair "You are a liar," "And a murderer".

More

உளுத்துப் போன ஜனநாயகத்துக்கு புழுத்துப்போன சமூகத்தின் புகழாரம்

இலங்கையில் அமைதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தல் : அமெ. பிரதி ராஜாங்க செயலாளர்
வீரகேசரி இணையம் 1/28/2010 2:03:36 PM -

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுலி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எமது அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
70சதவீதமானவர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம். அதேவேளை, இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படவும் வேண்டும்.
சிறுசிறு சம்பவங்களைத் தவிர, தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது" என்றார்.


உத்தியோகபூர்வ முடிவுக்கு அமைவாக அரசியல் கட்சிகள் செயற்படவேண்டும் ஐ.நா.செயலாளர் நாயகம் வேண்டுகோள்
வன்முறைகள் சார்ந்ததாக இல்லாமல் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று முடிந்ததை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.அதேசமயம் உத்தியோகபூர்வமான முடிவுகளுக்கு

கீழ்ப்படிந்து செயற்படுமாறு பான் கீ மூன் இலங்கையின் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஐ.நா. இணையத்தளம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.
அதேவேளை,எந்தவொரு கவலைகள் தொடர்பான பிரச்சினைகளையும் சமாதான வழியில் முன்னெடுக்குமாறு பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார். நியூயோர்க்கிலுள்ள
ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பான் கீ மூன், தேர்தல் கடும் போட்டியாக இடம்பெற்றதை நான் உணர்கிறேன். பிரசார வேளையில் வன்
செயல்கள் இடம்பெற்றதையிட்டு நான் கவலையடைந்திருந்தேன்.வாக்களிப்பு அமைதியாக இடம்பெற்றதையிட்டு ஆறுதல் அடைகிறேன்.சில வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஒப்பீட்டளவில் வன்முறைகள் குறைவானதாக அமைதியாக தேர்தல் இடம்பெற்றுள்ளது என்று பான் கீ மூன் கூறியுள்ளார்.
அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக முடிவுகளை பிரகடனப்படுத்தியிருப்பது பற்றி குறிப்பிட்ட பான் கீ மூன், சட்ட ஒழுங்கு விதிகள் மற்றும் தேர்தல் ரீதியான ஏதாவது கவலைகளுக்கு
தீர்வுகாணும் விடயங்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமான தீர்மானத்திற்கு அமைவாக செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
நாட்டின் நலனுக்காக சகல தரப்பினரும் பொறுமை,பொறுப்புணர்வுடன் செயற்படும் அறிவுஞானத்தை பார்ப்பதற்கு நாங்கள் விரும்புகிறோம் என்று நான் எதிர்பார்க்கிறேன்.இது தேசிய சௌஜன்யத்துக்கும் எதிர் காலத் தேர்தல்களுக்கும் இடமளிக்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயக நடைமுறைகளில் பங்கேற்க மக்கள் விரும்புவதை வாக்களிப்பு எடுத்துக்காட்டுகிறது -ஐரோப்பிய ஒன்றியம்

வீரகேசரி நாளேடு 1/30/2010 10:49:14 AM -

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தொகையான மக்கள் வாக்களித்துள்ளமை குறித்து பெருமிதமடைவதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை மக்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக கலந்து கொள்ள பேரார்வம் கொண்டுள்ளார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றதை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் துணைத் தலைவியுமான பெரோனஸ் கதறீன் அஷ்ரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல வருடங்களின் பின்னர் இத்தகையதோர் தேர்தல் முதல் தடவையாக பாரதூரமான அசம்பாவிதங்களின்றிறி நடந்தேறியதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கின்றது.
பெரும் தொகையான மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளமை அவர்கள் ஜனநாயக நடைமுறைகளில் முழுமையாக பங்கேற்க விரும்புகிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து பாராட்டுத் தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் சகல மக்களுக்கும் நிலையான சமாதானத்தை கொண்டுவருவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்கும் அவர் எடுக்கும் தீவிர முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது இடம்பெற்ற குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் குறித்து இந்த அறிக்கையில் கவலை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் கண்காணிப்பாளர்களாலும் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினாலும் தெரிவிக்கப்பட்ட ஒழுங்கீனங்கள் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்துவதுடன் சகல வேட்பாளர்களினதும் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு மன்மோகன்சிங் வாழ்த்து
வீரகேசரி நாளேடு 1/29/2010 10:43:33 AM -

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மன்மோகன்சிங், உங்கள் தலைமையில் இலங்கையில் பூரண அமைதி ஏற்பட்டு அனைத்து சமூகத்தினரும் இணக்கத்துடனும், மரியாதையுடனும் வாழ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் முன்னிலைப்படுத்துவோம்- தமிழ் இளையோர்

"ஆம்" எனப் புள்ளடியிட்டு தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் முன்னிலைப்படுத்துவோம்:
தமிழ் இளையோர் அமைப்பு - பிரித்தானியா
திகதி: 29.01.2010 // தமிழீழம் சங்கதி
எமது கடந்த கால வரலாறானதுஎமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது. எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும் நிரப்பப்பட்டுள்ளது.
எமது மக்களின் வரலாறானது இதுவரை எமது கரங்களினாலேயே எழுதப்பட்டுள்ளது. சந்தர்ப்பங்கள் அமைவது அரிது, ஆனால் இன்று எம் முன்னால் எமது எதிர்காலத்தை நாம் எழுதுவதற்கான சந்தர்ப்பம் வட்டுகோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தல் என்கின்ற வடிவில் அமைந்துள்ளது.
வாக்குச்சீட்டில் "ஆம்" எனப் புள்ளடி இடுவதன் மூலம் இதை நிகழ்த்திக்காட்ட முடியும். மேற்குலகுக்கு மிகவும் பரிச்சயமான இளையோர் அமைப்பு என்கின்ற வகையில் தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஜனநாயக ரீதியில் முன்னிலைப் படுத்துவது எமது மிகப் பெரிய பொறுப்பாகும்.
எமது மக்களுடைய அபிலாசைகளை நாம் வாழுகின்ற நாட்டின் அரசியல்சட்டதிட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் உட்பட்டு வெளிப்படுத்துதல் எமது அடிப்படை உரிமையாகும். இன்று எமது தாயக மக்களின் தலைவிதி இலங்கை அரசு என்ற கொடிய எழுத்தாளனால் எழுதப்படுகின்றது.
இலங்கையில் எத்தனை புதிய அரச தலைவர்கள் வந்தாலும் போனாலும் தமிழர்கள் தொடர்பான இலங்கை அரசின் அணுகுமுறை என்றும் மாறியதில்லை. அரசு என்று தமிழர்களுக்கான ஒரேயொரு 'அழிவு' என்ற முடிவையே என்றும் எழுதுகின்றது, அதனை அனைவரும் வக்கிரமான ஒரு அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதாவது குரல் அதற்கு எதிராக ஒலிக்குமானால் அது வன்முறையால் அடக்கப் படுகின்றது. அதனால் தமிழ் இளையோர் அமைப்பு எம் மக்கள் அனைவரையும் தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்களித்து, எம்மக்களின் தலைவிதிக்கு நிரந்தர தீர்வை, ஒரு நல்ல முடிவை எழுதுமாறு கேட்கின்றது. நாம் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் எமது தொப்புள் கொடி தாயகத்துடனேயே தொடர்பு கொண்டுள்ளது.

<< பிரித்தானிய வாக்குச் சாவடிகள் >>
அதனால் நாம் அனைவரும் நாடற்றவர்கள் என அடையாளப் படுத்தப் படுகின்றோம். தயவு செய்து இனிமேலும் இந்த அவதுறை தொடர விடாது பேனாவை எமது ஆயுதமாக பாவித்து எமது எதிர்காலத்தை நாமே எழுதுவோம். தமிழீழத்தின் எதிர்காலம் எம் கைகளிலேயே உள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...