Body Armour
The body armour made from overlapping iron strips. These metal strips were fastened with hooks and laces at the front and hinged at the back. These were held together by vertical leather strips on the inside.
This enable the soldier to be well protected and also be flexible enough to allow him to bend. The armour was strengthened by front and back plates below the neck. The shoulders were protected by a pair of curved pieces.
SHARE
Thursday, December 17, 2009
Italy's Prime Minister Silvio Berlusconi was attacked
Tuesday, December 15, 2009
'பாலஸ்தீன விடுதலைக்கான பரந்துபட்ட முன்னணி (PFLP)யின்'- 42ம் ஆண்டு நிறைவு

"முற்றுகைக்கும், அத்துமீறல்களுக்கும் மத்தியில் பிளவு வாதத்துக்கு எதிராக ஒற்றுமையை உயர்த்திப்பிடித்த வண்ணம் 'பாலஸ்தீன விடுதலைக்கான பரந்துபட்ட முன்னணி (PFLP) யின்'- 42ம் ஆண்டு நிறைவை நாம் நினைவு கூருகின்றோம். போரட்டத்திற்கு எம்மை முழுமையாக , அர்ப்பணித்து நமது கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக திட உறுதியுடன் எமது ஆயுதங்களை குறிவைத்தவாறு 43ம் ஆண்டை நாம் திறக்கின்றோம்.''
The Abu Ali Mustafa Brigades, the armed wing of the PFLP
மேலும்
Sunday, December 13, 2009
Wednesday, December 09, 2009
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Tamil News Info.com
1) இலங்கை அரசுக்கு எதிராக ஆரம்பித்த போரை ''18 நாடுகளுக்கு எதிராக'' நடத்திமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது,
2) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனமான போரை'' எதிர்கொள்ள நேரிட்டது,
3) ''சர்வதேச சமூகம் திரை மறைவில் நடத்திய சதி''.யை சந்திக்க வேண்டியிருந்தது,
4) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவு'',
5) ''இந்தியா இரசாயன ஆயுதங்களை வழங்கி'' யுத்த மரபுகளை மீறி போராளிகளையும் பொதுமக்களையும் கொன்றொழித்தது,
6) உள் இருந்த ''துரோகிகளின் காட்டிக் கொடுப்பு'' .
7) இவையனத்தையும் தனித்து நின்று எதிர்த்து வன்னியின் கடைசித் தளமும் எதிரியின் கையில் வீழாது தடுக்க நாம் இறுதிவரை போராடினோம்.
8) இருந்தாலும் பின்னடைந்தோம், பின்னடைவிலும் சாதுரியமாக பின்வாங்கினோம், மீண்டும் எழுவோம் தொடர்ந்தும் போராடுவோம்.
9) இந்த இடைக் காலத்தில் போராட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு புலம் பெயர் தமிழர்களுடையது.
10) தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இதுவே இந்த இரகசிய ஆவணம் சொல்லும் செய்தியாகவுள்ளது.
தான் கவனயீனமாக இருந்த நேரத்தில் கற்பழிக்கப் பட்டுவிட்டேன் எனச்சொல்லும் எந்தப்பெண்ணையும் சமூகம் மன்னிக்காது என மாபெரும் ஆசான் கார்ல் மார்க்ஸ் கூறியிருக்கிறார்.
ஏகாதிபத்தியத்தின் சிறகுச் சூட்டுக்குள் தேசக் குஞ்சுகளைப் பொரிக்கலாம் என நம்பிய குட்டி முதலாளித்துவ தேசியவாதம் இப்போது வைக்கும் ஒப்பாரி இது.
தமிழீழ மக்களுக்கும், விடுதலைப் புலிக் கட்சிக்கும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகள் தலைமை வகுத்தளித்த திட்டம், அதற்கு நேர் எதிர் முரணான வழியில் நடந்தேறியிருப்பதையே இங்கே காணுகின்றோம்.இதையே இந்தச் சித்திரம் சோகச் சுமையுடன் சிறப்புற விளக்குகிறது.எந்த மக்களின் புரட்சிகரப் போராட்டங்களும் தமது நியாயத்தை விஞ்ஞான அடித்தளத்தில் நிலை நிறுத்த வரலாற்று அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.தமிழீழப் புரட்சிப் போருக்கு அந்த அவகாசம் ஆக அறுபது வருடங்களாக குறுகியதற்கு முதல் மரியாதை பெறவேண்டிய பெரு மனிதர் தமிழீழ தேசியத் தளபதி பிரபாகரன் அவர்களே.( அயர்லாந்தையும், பாலஸ்தீனத்தையும் நினைவில் கொண்டு பாருங்கள்).
இனி எழுந்து வரும் புதிய தமிழ்ப் புலிகள்:
1) ''உலக வல்லாதிக்கத்தின் அரக்கத்தனத்தை'', ஏகாதிபத்தியவாதிகள் தேசிய சுதந்திரத்தின் எதிரிகள் என உரைப்பார்களாக!
2) இந்தியாவும் கருணாநிதியும் இலங்கை அரசுக்கு வழங்கிய ''அருவருக்கத்தக்க ஆதரவை'', இந்திய விஸ்தரிப்புவாத அரசின் வர்க்க நலனாக கண்டு கொள்வார்களாக!
3) துரோகத்துக்கான சமூக அடிப்படை வர்க்க நலனே என்பதை அங்கீகரிப்பார்களாக!
4) புதிய ஜனநாயக தமிழீழ மக்கள் ஜனநாயக குடியரசமைக்க புரட்சிகர மக்கள் யுத்தப் பாதையில் அணிதிரள்வார்களாக!.
5) தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்!
6) உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!!
-புதிய ஈழப் புரட்சியாளர்கள்-
ஜனாதிபதித் தேர்தல்-2010

2009-12-08 06:29:53 யாழ் உதயன்
பஸில் சுரேஸுடன்; சரத் சம்பந்தனுடன் பேச்சு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி இரு பிரதான வேட் பாளர்களின் தரப்புகளில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகின்றது.
நேற்றுமுன்தினம் இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடன் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவும், அதே வேளை கூட்டமைப்பின் மற்றொரு சிரேஷ்ட தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும் சகோதரருமான பஸில் ராஜபக்ஷ எம்.பியும் பேச்சு
நடத்தியிருக்கின்றனர்.
தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளராகத் தமிழர் ஒருவரை நிறுத்தும் திட்டம், கூட்டமைப்புக்குள் ஆதரவு இழந்து போன நிலையில், இரு பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்ற வினாவே கூட்டமைப்பு வட்டாரங்களில் முக்கியமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. இத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் விடயமாகத் தமிழர்களின்
வாக்குகள் மாறலாம் என்று கணிப்பிடப்படும் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறும் தீவிர முயற்சியில் இரு பிரதான வேட்பாளர்களின் தரப்புகளும் ஈடுபட்டுள்ளன.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஏற்கனவே இத் தேர்தல் தொடர்பாகத் தனித்தனியே பேசியிருந்தனர் என்பது தெரிந்ததே. நேற்று முன்தினம் இரவு இரா. சம்பந்தனுடன் ஜெனரல் பொன்சேகா விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இரவு எட்டு மணிமுதல் நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடித்த இந்தப் பேச்சுகளின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான கரு ஜயசூரியவும் உடனிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுகள் எதிர்பார்த்ததை விட மிகவும் நம்பிக்கை ஊட்டுவனவாக இருந்தன என்ற சாரப்பட இரா.சம்பந்தன் தமது கூட்டமைப்பின் ஏனைய முக்கிய தலைவர்களிடம் தகவல் வெளியிட்டார் என அறியவந்தது. சம்பந்தர் எழுப்பிய பல்வேறு வினாக்கள் தொடர்பில் சரத் பொன்சேகா அளித்த பதில்களும் உறுதிமொழிகளும் சம்பந்தருக்குத் திருப்தி தருவனவாக
அமைந்தன என்று குறிப்பிட்டு அவற்றைப் பட்டியலிட்டன கூட்டமைப்பு வட்டாரங்கள்.
இதேவேளை, கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியிருந்த சம்பந்தன் எம்.பி., அச்சந்திப்பின் பெறுபேறுகள் தொடர்பில் தமது சகாக்களிடம் சற்று அவநம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேசமயம், மறுபுறத்தில் , நேற்று முன்தினம் இரவு தமிழ்க் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் பஸில் ராஜபக்ஷ
எம்.பி. சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நடத்தினார் என அறியவந்தது. இந்தச் சந்திப்பின்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,
அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் இரா. யோகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த அரசுத் தலைமை தொடர்பாகவும், அதன் போக்குத் தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் உள்ள ஆதங்கங்கள், அதிருப்திகள், கோபங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பஸிலிடம் விரிவாக விளக்கினார் எனத் தெரிகின்றது.
யுத்த வெற்றியின் பின்னர் சாந்தி, சமாதானம், சமரசம் ஆகியவற்றை வலியுறுத்திய அசோக மன்னன் போல ஒரு சகாப்தத்தின் உன்னத தலைவராக மிளிரவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார் என்று இந்தப் பேச்சுகளின்போது குறிப்பிட்ட அவரின் சகோதரர் பஸில் ராஜபக்ஷ, இந்தத் தேர்தலிலும் வென்று அதன் மூலம் தமிழர்களுக்கு உரியதைத் தாமே வழங்கி செய்து காட்ட ஜனாதிபதி விரும்புகின்றார் என்றும் குறிப்பிட்டார் எனத் தெரிகின்றது. அதற்காக, ஜனாதிபதிக்கு வாய்ப்பு வழங்கி ஒத்துழைக்கக் கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்றார்
பஸில்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் எவையெவற்றைச் செய்யவேண்டும் எனத் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றதோ அவற்றையெல்லாம் பட்டியலிட்டுத் தருமாறும் தாம் ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசி அவற்றில் செய்யக்கூடியவை பற்றிய தகவலைக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்துவார் எனவும் பஸில் ராஜபக்ஷ, சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கூறியிருக்கின்றார். இவைபற்றித் தொடர்ந்து பேச்சு நடத்தவும் இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
Sunday, December 06, 2009
ஒபாமாவின் ஆப்கான் ஆக்கிரமிப்புக்கு பக்க பலம் கொடுக்கும் பாசிச இந்தியா!

Afghanistan Sun
Sunday 6th December, 2009
(ANI)
New Delhi, Dec.6 : Expressing concern over President Obama's plan to start pulling American troops out of Afghanistan by mid-2011, top government sources here have said that America must not vacate war-ravaged Afghanistan until the establishment of peace and stability there.
Sources said, ever since President Obama unleashed his revamped Afghan strategy, according to which the US would be sending an additional 30,000 troops, Indian authorities are reportedly in touch with the White House, and are convinced that Washington is not adopting any 'exit strategy'.
New Delhi believes that the situation in Afghanistan is so grave that the planned US surge would not be able to resolve the quagmire in the next 18 months.
While the United States has stressed that it shares its goal of dismantling Pakistan and Afghanistan-based terror safe havens with India, sources clarified that New Delhi has no intention of sending troops to Afghanistan.
U.S. Ambassador to India Timothy J. Roemer had said: "Our core goal in Afghanistan and Pakistan-to disrupt, dismantle, and defeat terrorist networks-is an aspiration we share with India."
"We must unite in the commitment of our civilian resources, and provide the tools for economic development and humanitarian aid to eliminate the extremist violence that is the enemy of peace, faith,democracy, tolerance, fundamental freedoms and human rights," said Roemer, hours after President Obama's announcement of the new Afghan policy.
Obama had on Tuesday, said he was ordering 30,000 more U.S. troops to Afghanistan by next summer to counter a resurgent Taliban and had plans to begin a troop withdrawal in 18 months. The goal, Obama said, was to speed up the battle against Taliban insurgents, secure key population centres and train Afghan security forces so they can take over and clear the way for a U.S. exit.
Violence has escalated as tens of thousands of additional foreign troops, mainly Americans, have been deployed in response to an escalating Taliban insurgency which has claimed record numbers of military and civilian lives so far in 2009.
Saturday, December 05, 2009
Friday, December 04, 2009
மனோ கணேசன் என்கிற "மனித உரிமைவாதியின்'' மானங்கெட்ட சமரசம்

இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எமது செயற்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
2009-12-04 05:54:09
ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காண தமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என மனோ கணேசன் எம்.பி கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை தாம் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் வெயிட்ட அறிக்கையிலேயே மனோ கணேசன் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
தென்னிலங்கைவாழ் தமிழர்கள் எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். வடக்குகிழக்கு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடரும். தென்னிலங்கை முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட் டிருக்கும் சரத் பொன்சேகாவிற்கு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
சரத் பொன்சாகாவிற்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாம் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்குகளாகும். யுத்த வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசு மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரே தேர்தலில் பொது வேட்பாளராக எதிரணியினால் நிறுத்தப்படுவதால் இன்று இந்த அரசு அதிர்ந்துபோய்யுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட
சிறந்த வழி எதுவும் கிடையாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு
இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எமது செயற்திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வடகிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களான யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் வாழும் தமிழர் தொடர்பல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு தொடர்ந்தும் நடத்தப்படும். இன்றைய அரசை மாற்றிடவேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் மனங்களில்
ஒலிப்பதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த உணர்வுகளை எதிரொலிக்கச் செய்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மலையக கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு
தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்துக்கொண்டிருகும் தமிழ் மக்கள் மத்தியில் இந்த அரசை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம். எனவே நமது மக்களின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப மலையக கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி
மாற்றத்திற்காக மலையக கட்சிகள் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழர் போராட்டம்
இந்நாட்டில் இனியொரு ஆயுத போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாறவேண்டும். அது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதிகாரப் பகிர்வுக்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம்
காய்நகர்த்த வேண்டும். எமது போராட்டத்தை சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது.
புலம்பெயர் தமிழர்கள்
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும். களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
பகிஷ்கரிப்பு எங்களுக்கு உடன்பாடானது அல்ல
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலக்கட்டத்திலிருந்து இன்றுவரையும் தேர்தல் பகிஷ்கரிப்பை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இந்நிலையில் நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் கொழும்பில் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் அணியின் அதிகாரம் தமிழ் மக்கள் மீது பாதிப்பை செலுத்துகின்றது. இந்நிலையில் எமது வாக்களிப்piன் மூலமாக அந்த அதிகார அணியை இயன்றவரையில் எமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இராமண் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையின்றி இனிமேலும் இருக்கமுடியாது. இங்கே போட்டியிடும் இருவருமே இராவணர்கள் தான். இந்த இராவணர்களில் பெரிய இராவணன் யார்? சின்ன இராவணன் யார்? என்று சிந்தித்து முடிவு செய்யவேண்டிய நிலைமையில் தமிழ் இனம் இருக்கின்றது. இதைத்தவிர நடைமுறை சாத்தியமான மாற்று வழி கிடையாது.
மனசாட்சிப்படி மக்களை வாக்களிக்க கோரமுடியாது
தமிழ் மக்களிடம் தமது சொந்த விருப்பத்தின்படி வாக்களியுங்கள் எனக்கூறிவிட்டு எமது கடமையில் இருந்து நாம் நழுவ முடியாது. தமிழ் மக்களின் பரதிநிதிகள் என்ற முறையில்
மக்களுக்கு தலைமைத்துவம் வழங்கி வழிகாட்டவேண்டிய வரலாற்று கடமையை நாம் நிறைவேற்றுவோம். ஏனைய தமிழ் கட்சிகளும் மக்களுக்கு தெளிவாக வழிகாட்டவேண்டும் என நாம் கோருகின்றோம்.*
Thursday, December 03, 2009
ஜனாதிபதித் தேர்தல் 2010
*Fonseka announces candidature B. Muralidhar Reddy
* "Common Presidential Candidate" Dr. Vickramabau Karunarathne
Statement by Nava Sama Samaja Party
* Locking Tamil nationalism through presidential candidature
[TamilNet, Saturday, 28 November 2009, 12:27 GMT]
* TNA looking at five options
*Pillayan not concerned about constitutional “jargon”
*On the invitation of Sarath Fonseka, Gajendran returned to Sri Lanka – Media
*Mano Ganesan backs Fonseksa
*TNA ?????????????
More
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை
"சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...