SHARE

Wednesday, February 07, 2024

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை

 Policy Statement by Honourable Ranil Wickremesinghe

President of the Democratic Socialist Republic of Sri Lanka

At the inauguration of the 5th session of the 9th Parliament of Sri Lanka

07-02-2024


ஜனாதிபதியின்  கொள்கை விளக்க உரை

ஆரம்பம் முதல் இன்று வரை உலகம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தது. நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்தன. தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடி ஏற்பட்டது.

சில சமயங்களில் நெருக்கடியிலிருந்து விடுபட முடிந்தது. வேறு சில சந்தர்ப்பங்களில், நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை. நெருக்கடியைச் சபித்துக் கொண்டிருப்பதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியாது. நெருக்கடிக்கான காரணங்களை விமர்சிப்பதன் மூலம் மீள முடியாது.

நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் தான் உலகமும் நாடுகளும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகளைத் தீர்க்க முடிந்துள்ளது.

நெருக்கடி முகாமைத்துவத்தில் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்?

புத்தபிரான் போதித்த ஒரு போதனையை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

“அத்ததீபா – விஹரத”

தங்களுக்குத் தாங்களே ஒளியாக வாழ வேண்டும்.

நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். உலகில் எங்கும் ஏனையவர்களைக் குறைகூறி நெருக்கடியைச் சமாளித்தது கிடையாது.

எம்மை எமக்கான ஒளியாக மாற்றாவிட்டால், நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் சீர்செய்யாவிட்டால், நமக்கு நன்மை நடக்காது. நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. நெருக்கடிக்கும் தீர்வு இல்லை.

முறைமையில் மாற்றம் இருக்காவிட்டால் சிஸ்டம் சேஞ்ச் பற்றி தொண்டைக் கிழியக் கத்தினாலும் நாம் அடிப்படையில் இருந்து மாறாவிட்டால் முறைமைய மாற்ற எம்மால் முடியாது.

அதனைச் சுட்டிக் காட்டும் வகையில் கடந்த காலம் , நிகழ்காலம், எதிர்காலம் பற்றிய பல விடயங்களை இச்சபையில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

2022 பெப்ரவரியில் இந்த நாடு இருந்த நிலை, நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். 2023 பெப்ரவரி மாதமளவில், இந்த நாட்டை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வர முடிந்தது. இந்த வருடம் பெப்ரவரியாகும் போது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தை விட சிறந்த நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் இந்த பெப்ரவரி வரையான நமது பொருளாதார குறிகாட்டிகள் சிலவற்றை நான் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு பணவீக்கம் 50.06 சதவீதமாக இருந்தது. இன்று அது 6.4சதவீதமாக குறைந்துள்ளது.

உணவுப் பணவீக்கம் 54.4 சதவீதமாக உள்ளது. இன்று அது 3.3 சதவீதமாக உள்ளது.

அன்று ஒரு டொலரின் பெறுமதி 363 ரூபாய். இன்று 314 ரூபாய்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023 இல் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் உபரியை ஏற்படுத்த முடிந்தது. சுதந்திரத்திற்குப் பின்னரான 76 வருடங்களில் இலங்கையானது முதன்மையான வரவு செலவுத் திட்ட உபரியை ஏற்படுத்திய 6 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதம் இருப்புப் பற்றாக்குறை காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், எங்களால் உபரியை ஏற்படுத்த முடிந்தது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலுவைத் தொகை உபரியை ஏற்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

2023 இல் 28 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 12 சதவீதமாக உள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், 52 பிரதான அரச நிறுவனங்கள் 745 பில்லியன் ரூபா நட்டம் ஈட்டின. செப்டம்பர் 2023இற்குள், இந்த 52 நிறுவனங்களும் 313 பில்லியன் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. ஆனால் இந்நிறுவனங்கள் கடன் சுமையை தாங்க முடியாத நிறுவனங்களாக காணப்படுகின்றன.

தெரிவுசெய்யப்பட்ட கடனைச் செலுத்த முடியாத நிலையை 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அந்த சமயம் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம் வரை சரிந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. 2023 டிசம்பர் நிலவரப்படி, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

குறுகிய காலத்தில், சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். 2022 ஆம் ஆண்டில் நம் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். 2023 இல் அந்த எண்ணிக்கையை 1,487,303 ஆக அதிகரிக்க முடிந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.

மேலும், 2023இல் பல சாதகமான நகர்வுகளை முன்னெடுத்தோம். கோட்டா முறையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. மீனவர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன. நாட்டுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், உற்பத்தித் தொழிற்துறைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விநியோக வலையமைப்பில் எந்தத் தடையும் இல்லை.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக சுருங்கியது. 2022 முதல், தொடர்ந்து 6 காலாண்டுகளில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியை எட்டினோம்.

நமது பொருளாதாரம் விண்கல் வேகத்தில் சரிந்தது. ஆனால் தற்போது எமக்கு அதனை மாற்ற முடிந்துள்ளது. அதை மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளோம். நாங்கள் வீ(V) வடிவ மீட்பு அல்லது வீ(V) வடிவ மீட்சியைப் பெற்று வருகிறோம்.

நாம் அடைந்த விசேடமான வெற்றியாக அதனைக் குறிப்பிடலாம். வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளாதார மீட்சி மிகவும் கடினமானது மற்றும் வேதனையானது. ஆனால் ஏனைய நாடுகளைப் போல நீண்ட கால சிரமங்கள் மற்றும் வலிகள் இல்லாமல் நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மால் முடிந்தது.

நான் ஒரு உதாரணத்தைக் கோடிட்டுக் காட்டுகிறேன்.


கிரேக்கம் கடன் செலுத்த முடியாமல் 2009ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதன் பின்னர் முழு நாடும் மிகவும் கடினமான சூழ்நிலையில் தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தது. அந்தக் காலத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. மீண்டும் அந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சுமார் 10 வருடங்கள் தேவைப்பட்டது.

நமது நாடு குறுகிய காலத்தில் இத்தகைய விதிவிலக்கான சாதனைகளை எட்டுவது உண்மையில் உலக சாதனையாகும். எங்களால் எப்படி அவ்வாறான சாதனைப் படைக்க முடிந்தது?

2022ஆம் ஆண்டு முழுவதும் பொருளாதாரம் சரிந்தது. 2022 ஆம்ஆண்டை விட 2023இல் ஓரளவு பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடிந்தது. இது தற்செயலாக நடந்ததல்ல. மிகவும் கவனமாகவும் தொலைநோக்குடனும் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், நாங்கள் தயாரிக்கும் கொள்கைகள், நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தையும் அவ்வப்போது நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். மக்கள் முன்னிலையிலும் அவ்வப்போது பகிரங்கமாக அறிவித்தேன். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவை பற்றி கலந்துரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தக் கொள்கைகள் ஒருபோதும் மறைக்கப்படவில்லை. ஒவ்வொரு நடவடிக்கையையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்துள்ளோம்.

அரசியல் ஆதாயத்துக்காக நான் ஒருபோதும் முடிவுகளை எடுக்கவில்லை. ஒவ்வொரு முடிவையும் நாட்டு நலன் கருதியே எடுத்தேன். எமக்கு பாதகமாக இருந்தாலும் நாட்டுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்கவில்லை. தனிப்பட்ட இலாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்கு சரியான கொள்கைகளை செயற்படுத்தினோம்.

பாராளுமன்றத்திலுள்ள சில தரப்பினர் அந்த முடிவுகளை எதிர்த்தனர். ஆனால் பெரும்பான்மையானோர் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களையும் இலக்குகளையும் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்காக அந்த முடிவுகளுக்கு ஆதரவாக கையுயர்த்தினர்.

எதிர்காலத்தில் தேசத்தின் பாராட்டை அவர்கள் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நாங்கள் இந்தப் பயணத்தில் படிப்படியாக முன்னேறிச் சென்றோம். 2022ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அன்றிருந்த நாட்டின் உண்மையான நிலைமையை நான் எடுத்துக் காட்டினேன். பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதே இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை நிலையான பாதைக்கு வழிநடத்தும் பல திட்டங்களை முன்வைத்தேன். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த தேவையான மறுசீரமைப்புகளின் ஆரம்ப கட்டமாக 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

சிரமத்துடனும் சில சமயங்களில் தயக்கத்துடனும் நாங்கள் செயல்படுத்திய பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கைகள் காரணமாக, நாங்கள் தற்போது நிலையான பொருளாதாரத்தை நிறுவுவதற்கான பாதைக்கு பிரவேசித்திருக்கிறோம். அத்தோடு சர்வதேச நிதி நிறுவனங்கள் எங்கள் இலக்குகள் மற்றும் பயணம் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளன.

இருண்ட பொருளாதார சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த நாம் தற்போது சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தைக் காண்கிறோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பொருளாதாரம் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டு மக்கள் பலர் நினைத்துப் பார்க்க முடியாத இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சிலர் தொழில்களை இழந்தனர். மேலும் சிலர் தங்கள் வருமான வழிகளை இழந்தனர். சிலர் தொழில் வாய்ப்புகளை இழந்தனர். இன்னும் சிலர் உரிமைகளை இழந்தனர். பெரும்பாலான துன்பங்கள் சாதாரண மக்களுக்குத்தான் சொந்தமானது.

இழந்த வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு வழங்க தற்போது நாம் முயற்சிக்கிறோம். மக்களின் இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும் வேலைத் திட்டத்தை ‘உரித்து’ என்ற பெயரில் அண்மையில் ஆரம்பித்தோம். உரித்து வேலைத் திட்டத்தின் ஊடாக இரண்டு அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றோம். ஒன்று காணி மற்றது வீடு.

இங்கு காணி உரிமை பிரதான இடத்தைப் பெறுகிறது. 1897 தரிசு நிலச் சட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை காலனித்துவப் பிரித்தானிய அரசு பெற்றது. சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும், பறிக்கப்பட்ட காணி உரிமைகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த காணி உரிமையை மீள வழங்கும் பணியை நாம் ஆரம்பித்துள்ளோம். இரண்டு மில்லியன் மக்களை காணி உரிமையாளர்களாக எமது சமூகத்தில் இணைக்கின்றோம். இது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த மற்றும் புரட்சிகரமான நகர்வாகும். அரிசியில் தன்னிறைவு பெற பல தசாப்தங்களாக விவசாயிகள் அனுபவித்த கடின உழைப்பக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாகும்.

மேலும், இந்நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு முறையான வருமானம் கிடையாது. பொருத்தமான வீடு இல்லை. இந்த மக்களுக்கு வருமான வழி மற்றும் வீட்டு உரிமை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம். நகர்புர, குறைந்த வருமானமுடைய 50,000இற்கும் மேற்பட்டோருக்கு முழுமையான வீட்டுரிமை வழங்கப்படும்.

வெற்றிகரமான பொருளாதார அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் போது நாட்டின் அனைத்துத் தரப்பினர் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக வறிய மற்றும் நிர்க்கதியான மக்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்தோம்.

இந்த ஆண்டு அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி மானியம் வழங்கப்படவில்லை. வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும்.

2022 ஓகஸ்ட் மாதமளவில், ஜனாதிபதி நிதியம் முற்றிலும் செயலிழந்தது. 9,000இற்கும் மேற்பட்ட மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்கள், பணம் இல்லாமல் குவிந்திருந்தன. ஓகஸ்ட் முதல் டிசம்பர் வரை மேலும் 4,000 விண்ணப்பங்கள் வரை கிடைத்தன. அவை அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் 4,917 நோயாளர்களுக்கு 915 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

தற்போது பணம் செலுத்துவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மூன்று அல்லது ஜந்து வேலை நாட்களுக்குள் பணம் செலுத்தும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மருத்துவ உதவிகளையும் 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உதவித் தொகைகளுக்கு மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு நாம் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்கினோம். ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தை உயர்த்தினோம். 2016 முதல் 2020 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பள முரண்பாடு உள்ளது. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கும் போது அதற்கு சமாந்தரமாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் அடைந்துவரும் வளர்ச்சி சமூகத்தில் பேசப்படும் தலைப்புகளில் பிரதிபலிக்கிறது. சில காலம் முன்பு மின் வெட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசினோம். அப்போது, எவ்வளவு கொடுத்தாலும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று நாம் மின்சாரக் கட்டணத்தைப் பற்றி பேசுகிறோம். சில காலத்திற்கு முன்பு கறுப்பு சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 3000 ரூபாவிற்கு வாங்கப்பட்டது குறித்து பேசப்பட்டது. எரிபொருள் வரிசைகளில் மூன்று அல்லது நான்கு நாட்கள் செலவிடுவது பற்றி பேசப்பட்டது. இன்று நாம் இலங்கையில் முதலீடு செய்யும் புதிய எரிபொருள் நிறுவனங்கள் பற்றி பேசுகிறோம். காய்கறி வாங்க வழியில்லை என்று பேசிக்கொண்டனர். இன்று ஒரு கேரட்டின் விலை பற்றி பேசுகின்றனர்.

புத்தகம் அச்சடிக்க காகிதம் இருக்கவில்லை என்று அன்று கூறப்பட்டது. இன்று வற் வரி பற்றிப் பேசுகிறோம்.

ஆம். வற் வரி பலருக்கு சுமையாக உள்ளது. இந்தப் பிரச்சினையை நாம் உணராமல் இல்லை. அந்தப் பிரச்சினைக்கு நாம் படிப்படியாக தீர்வுகளை வழங்கி வருகிறோம். 2022 இல் 437,547 வரிக் கோப்புகள் இருந்தன. 2023 இறுதியில் வரிக் கோப்புகளின் எண்ணிக்கை 1,000,029 ஆக உயர்ந்துள்ளது. இது 130 சதவீத அதிகரிப்பு. வரி வலையமைப்பு விரிவடையும் போது, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ஏற்படும் வரிச்சுமை குறையும். மேலும், நமது பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதைத் தொடரும்போது, பொருளாதாரம் ஸ்திரமாகும்போது, வரிச்சுமையைக் குறைப்போம். “வற்” வரியின் சதவீதத்தை திருத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

மலையளவு கடனைச் சுமந்துகொண்டுதான் இதையெல்லாம் செய்கிறோம். கடந்த காலம் முழுவதும் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முறை குறித்து மீள் திட்டத்தைத் தயாரிப்பதில் நாங்கள் கடுமையாக உழைத்து வந்தோம். முதல் கட்டமாக, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக, வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு தொடர்பான கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது. தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த சிக்கலான மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம். இது நமது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படையாக அமையும். மேலும் கடன் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையின் மையமாக இது மாறிவிட்டது.

IMF, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இந்த ஆண்டு 2% முதல் 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்று கணித்துள்ளன. 2025இல் அதை 5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

2021 ஆம் ஆண்டில், தீயில் விழிந்திருந்த நாட்டை மீட்பதற்கான பணிகளை நாம் ஆரம்பித்தோம். 2021 ஐ விட சில விடயங்களை 2022ஆம் ஆண்டு மேம்படுத்திக் கொண்டோம். 2022 ஐ விட 2023 எல்லா வகையிலும் மேம்படுத்திக் கொண்டோம். 2024. இது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், 2025 இன்னும் சிறப்பாக இருக்கும்.


ஆனால் அதில் மாத்திரம் திருப்தி அடைய முடியுமா?

வெளிநாடுகள் மற்றும் வெளி வணிக தளங்களில் இருந்து பெற்ற எந்த கடனையும் நாங்கள் இன்னும் செலுத்தவில்லை. ஆனால் மறுசீரமைப்புக்குப் பிறகு நாம் கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டும். கடனை மீளச் செலுத்த ரூபாவைப் போன்று டொலர்களும் எம்மிடம் இருக்க வேண்டும்.

2023 செப்டெம்பர் மாத மளவில் மொத்தக் கடன் 91 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. இந்த கடன்களை செலுத்த நீண்ட காலம் அவசியப்படும். அதற்காக நாம் தேசிய மட்டத்தில் வருமானம் ஈட்ட வேண்டும். இல்லாவிட்டால் நாம் மீண்டும் கடன் பிடிக்குள் சிக்கிக்கொள்வோம்.

கடன் மறுசீரமைப்பு காரணமாக வருடமொன்றிற்காக நாம் செலுத்த வேண்டிய தொகையை குறைத்துக்கொள்ள முடியும். ஆனாலும் நாம் வருடத்திற்கு 3 பில்லியன் டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கடனில் சிக்கியிருக்க முடியாது. அதேபோல் கடன் பெறவும் முடியாது.

அதேபோல் எமது வரவு செலவுக்கு இடையிலான சமநிலையை உருவாக்குவதற்கான துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எமது வரவு செலவு திட்ட துண்டுவிழும் தொகை பாரதூரமானது. இவ்வருடத்தில் 4,127 பில்லயன்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியிருந்தாலும் அரசாங்கத்தின் செலவு 6,978 பில்லியன்களாக உள்ளது. அவற்றில் 2,651 பில்லியன்கள் கடனுக்கான வட்டியாக செலுத்துவதற்காகவே செலவிடப்படுகிறது. இதன்மூலம் எங்களின் கடன் சுமையை உணர முடியும்.

1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாங்கள் தொடர்ந்து கடன் வாங்கிவந்துள்ளோம். எல்லாவற்றுக்கும் கடன் வாங்கியுள்ளோம். ஆட்சியாளர்களும் கடன் வாங்கப் பழகினர். மக்களும் இந்தக் கடன் பொருளாதாரத்துக்கு ஏற்றார்போல் இசைவாக்கமடைந்தனர். அரிசி இலவசமாக வழங்கப்படும், மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும், சம்பளம் அதிகரிக்கப்படும், இலட்சக்கணக்கில் அரச வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும் அவை கடன் பெற்று நிறைவேற்றப்பட்டன.இந்தக் கடன் மனப்பான்மையில் இருந்து விடுபட வேண்டும். கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபடாவிட்டால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. எதிர்காலம் ஒன்று இல்லாமல் போகும்.

எனவே கடன் பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு நமக்கான வலுவான பொருளாதாரத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.

இவற்றை அடைவதற்கு ஏற்றுமதி வருமானத்தையும், வெளிநாட்டு முதலீடுகளையும் விரைவாக அதிகரிப்பது இன்றியமையாதது. அதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்து, பல பொருளாதார சீர்திருத்தங்களை தற்போது செயல்படுத்தி வருகிறோம். போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது பிரதான எதிர்பார்ப்பாகும். அதேபோல் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரத்தையும் உருவாக்க எதிர்பார்க்கிறோம்.ஊழலை ஒழித்தல் மற்றும் சமூக நவீன மயமாக்கல் என்பனவே இந்த செயல்முறையின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த நாட்டில் ஊழல் ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், முறைமையான சட்ட விதிகளால் மாத்திரமே ஊழலை ஒழிக்க முடியும் என்பதை பலர் உணரவில்லை. திருடர்கயைப் பிடியுங்கள் என்று கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை. அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய பயிற்சி பெற்ற அதிகாரிகளும் தேவை.

ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்தினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். இது ஒரு மாயை. ஊழலைத் தடுக்கவும் கடுமையான சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும் ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க இந்த இரண்டு விடயங்களும் ஒன்றாக செயல்படுத்தப்பட வேண்டும்.

அதற்காக, ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம். தற்போது சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் ஒருபோதும் அரசியல் அல்லது பிற அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டோம். அது தற்போது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக நவீனமயமாக்கலில் நாம் கவனம் செலுத்தும் சில முக்கிய விடயங்கள் குறித்தும் இந்த கௌரவ சபைக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

சுற்றுலாத்துறையை எம்மால் எளிதாக அபிவிருத்தி செய்ய முடியும். அந்தத் துறையில் முன்னேற்றத்திற்கு தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்தவும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை வருடத்திற்கு 05 மில்லியனாக அதிகரிப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நமது நாடு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் நிறைந்த நாடு. அந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச தொழில்நுட்பத்தைப் பெற்று, நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உற்பத்தி செய்தால், வலுசக்தி ஏற்றுமதி செய்யும் நாடாக அந்நியச் செலாவணியைப் பெறலாம்.

பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா உற்பத்தியில் நாம் உயர்ந்த நிலையை அடைய வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஆரம்ப கட்டத் திட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.

காலநிலை மாற்றம் குறித்து நாம் ஏற்கனவே கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் இருந்து தற்போது வரை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். பயிரிடுகின்றோம். ஆனால் இன்னும் காலாவதியான முறைகளையே பின்பற்றி வருகிறோம். பல தசாப்தங்களாக எந்த விவசாய நவீனமயமாக்கல் பணிகளையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை.

அடுத்த மூன்று, நான்கு போகங்களில் உலர் வலயத்தில் விவசாய நிலங்களின் உற்பத்தியை இரண்டு, மூன்று மடங்கினால் உயர்த்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்கான கொள்கை ரீதியிலான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இம்மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டு இப்பணிகள் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு, உலர் வலயத்தில் விவசாயப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், ஈரவலயப் பகுதியில் உள்ள நிலத்தை ஏனைய வர்த்தகப் பயிர்களுக்குப் பயன்படுத்தவும் வாய்ப்புக் கிடைக்கின்றது.

எழுபதுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பயனுள்ள பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தற்போது வீணாகிவிட்டன. சில நிலங்களில் உரிய பயனைப் பெறுவதில்லை. சில நிலங்கள் முற்றாகப் பயன்படுத்தப்படவில்லை. ஜனவசம, பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் போன்ற பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள் வீணாகி வருகின்றன. அது மாத்திரம் அல்ல. இந்த அரச நிறுவனங்களைப் பராமரிக்க பில்லியன் கணக்கான அரச பணம் செலவிடப்படுகிறது. இரு பக்கத்திலும் நாட்டிற்கு இழப்பு. பாரிய வீண்விரயம் இடம்பெறுகிறது.

இந்த நிலங்களிலிருந்து அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கு பயனுள்ள வேலைத் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த நிலங்கள் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி வணிக பயிர்ச்செய்கைக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.

அவசியம் ஏற்பட்டால், அந்த தொழில்முனைவோர் வெளிநாட்டு தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டைப் பெற அனுமதியும் வழங்குவோம். முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகப் போகும் நிலங்களை அந்நியச் செலாவணி ஊற்றுக்களாக மாற்றி பொருளாதார வளர்ச்சிக்கு வலுவாகப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கடந்த சுதந்திர தினத்திற்கு பிரதம அதிதியாக இங்கு வருகை தந்த தாய்லாந்து பிரதமர், தனது நாட்டில் முன்னெடுத்த விவசாய புரட்சி குறித்த விடயங்களைக் குறிப்பிட்டார். தாய்லாந்து பாரம்பரிய முறைகளில் சிறைப்பட்டிருக்காமல் நவீன தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவதால் விவசாயத்தின் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. அவற்றிலிருந்து நாமும் பாடம் கற்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். நமது பொருளாதாரத்தை விரைவாக வலுப்படுத்த வெளிநாட்டு முதலீடுகள் ஊடாக பாரிய உந்து சக்தி கிடைக்கிறது. ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரத் தயங்குகின்றனர்.

இலங்கையில் முதலீடு செய்வது ஒரு தலைவலி. பிரச்சினை. அனுமதி பெறுவதில் பல உத்தியோபூர்வ தடைகள் உள்ளன. அது மட்டும் அல்ல. சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாரிய அளவில் கவரும் வகையில் வேலைத் திட்டங்களை நாம் தற்போது தயாரித்துள்ளோம். ஒரு எளிய செயல்முறை மூலம் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதை இது சாத்தியமாக்குகிறது. இது ஊழலை மோசடிகளைத் தடுக்கிறது.

சீனா, வியாட்நாம் போன்ற நாடுகளில் முதலீடு செய்வதற்கான அனைத்து அனுமதிகளும் வசதிகளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஒரே கூரையின் கீழ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிலம் மட்டுமின்றி, மின்சாரம், நீர் வசதிகள், வீதிக் கட்டமைப்பும் மிக விரைவாக செய்து தரப்படுகிறது. பெரும்பாலான பணிகள் கணனி மூலம் செய்யப்படுவதால், சட்ட விரோத செயல்களுக்கு வாய்ப்பில்லை. இந்த அனைத்து விடயங்கள் மற்றும் சர்வதேச தரங்களின் அடிப்படையில், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான அடிப்படை பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பரந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படும் பலவிதமான முதலீட்டு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் இந்த ஆணைக்குழு மூலம் செயல்படுத்தப்படும்.

அதேபோல் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே இலங்கையின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் அடிப்படை சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அக்காலத்தில் நாம் காலணித்துவ நாடாக இருந்தோம். அப்போது நாம் மிகவும் வறுமையான நாடாக இருந்தோம். எனவே, அத்தகைய சமூகத்திற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி மற்றும் சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் நவீன உலகத்தை அணுகுவது சாத்தியமற்றது. இவற்றின் மூலம் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை சமாளிக்கவும் முடியாது.

அதனால் சர்வதேச அனுபவம், நடைமுறைகளின் அடிப்படையில், இரண்டு துறைகளுக்குமான புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய சட்டத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் மனித வளம் மேம்படுத்த வேண்டும். வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் பாதுகாப்பிற்காக துரித நவீனமயமாகக்கல் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விசேடமாக கல்வி மறுசீரமைப்புக்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

உலகின் எதிர்காலம் புதிய தொழில்நுட்ப அறிவின் மீதே தங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் திறன் மிக்க இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். அதற்காகவே உயர்தரத்தில் சித்திபெறும் மாணவருக்குசெயற்கைக் நுண்ணறிவுக் கல்வியை வழங்குவதற்கான கொள்கையைத் தயாரித்து வருகிறோம். அதற்கான பல அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களை நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சாதாரண தரம், உயர்தரத்தில் சித்தி பெறாத அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்லூரிகளை உருவாக்குவோம்.

புதிய அறிவு மற்றும் புதிய தொழில்நுட்பத் தெரிவுடன் கூடிய புதிய சந்ததியை உருவாக்குவதற்கு அவசியமான பின்னணியை நாம் ஏற்படுத்துவோம்.

அதேபோல் எமது நாடு ஒரு தீவாகும். அதற்கு உகந்த வகையிலான பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு வலையமைப்புக்களும் அதற்கேற்ப நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன. புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி முறைகள், படையினர், இராணுவ உபகரணங்கள், மூலோபாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும், நாட்டில் ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தி வருகிறோம்.

நமது வெளிநாட்டு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். அதே போல் பூகோள அரசியல் நகர்வுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப பொருளாதார வாய்ப்புக்களைப் பெறும் வகையில், உரிய பலன்களைப் பெறும் வகையில் மறுசீரமைக்க வேண்டும். எனவே, அனைத்து நாடுகளுடனும் அணிசேராக் கொள்கையுடனும் நட்புறவு அடிப்படையிலும் வெளிநாட்டு உறவுகளைத் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நமது வெளியுறவுக் கொள்கைகள் காலோசிதமானதாக மாற்ற வேண்டும்.

அதேபோல், பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கிகொள்ள புதிய முறையிலான வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கமைய எமது வெளியுறவுக் கொள்கைகளை காலத்திற்கேற்ற வகையில் மறுசீரமைத்துக் கொள்வோம்.

நமது தயாரிப்புகள் வெளிநாட்டு சந்தைகளைச் சென்றடைவதற்கு அவசியமான அனுமதியை பெற்றுத் தரக்கூடிய வகையில் பொருளாதார உறவுகளை கட்டமைப்போம். அதற்காக பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட ஆரம்பித்துள்ளோம். இதற்கமைய அண்மையில் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டோம். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், முழுமையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்படும். சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீனா, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோல் வலயத்தின் பரந்துபட்ட பொருளாதார கூட்டமைப்பான RCEP இல் இணையவுள்ளோம். அதேபோல் ஐரோப்பிய சங்கத்தின் வர்த்தகத்துக்கான பொது முறைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு பல்வேறு துறைகளை நவீனப்படுத்துவதன் பலனாக நாட்டு மக்களின் வாழ்க்தைத் தரம் மேம்படும். நாட்டின் அனைத்துப் தரப்பினருக்கும் பலன்கள் கிடைக்கும் வகையில் வெற்றிகரமான திட்டத்தைச் செயல்படுத்தும் அதேநேரம் நல்லிணக்கமும் சமூக நீதியும் உறுதிப்படுத்தப்படும்.

நாங்கள் மற்றொரு விடயம் குறித்து கவனம் செலுத்துகிறோம். இன்று எமது பொருளாதாரம் கொழும்பு நகரையும் மேல் மாகாணத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. நாட்டின் 46 வீதமான பொருளாதாரம் மேல் மாகாணத்திலிருந்தே முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். மேல் மாகாணத்திற்கு வெளியே பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட நகரங்களிலும் எமது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். தற்போதும் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

மேலும், ஒன்பது மாகாணங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசியலமைப்பில் மாகாண சபை அதிகாரங்களின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவோம். தொழிற்கல்வி, விவசாயம் போன்ற துறைகளை உதாரணமாகக் கூறலாம். அதன் மூலம் ஒவ்வொரு மாகாணத்திலும் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும். மாகாணங்களுக்கு இடையில் பொருளாதாரப் போட்டித் தன்மையை உருவாக்குவதன் மூலம், ஒன்பது மாகாணங்களும் ஒரே நேரத்தில் அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்பு உருவாகும்.

எமது நாட்டின் புவியியல் அமைவிடத்தை மையப்படுத்தி உயரிய பலனை அடைந்துகொள்ள எதிர்பார்க்கிறோம். அதற்காக மூன்று துறைமுகங்களில் புதுவிதமான அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். அதனால் இந்து சமுத்திரத்தின் சேவை மத்தியஸ்தானமாகவும் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றுவதற்கும் எதிர்பார்க்கிறோம்.

அதற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகரத்தை விசேட நிதி வலயமாக பிரகடனப்படுத்துவோம். அதற்குள் வெளிநாட்டு நிதி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சட்டத்திட்டங்களை உருவாக்குவோம்.

எமது நாட்டின் தேசிய வளம் எமது இளம் சமூகத்தினர் என்பதை அடிக்கடி நினைவுகூறுகிறேன். அந்த வளத்தைப் பாதுகப்பது எமது ஒருமித்த நோக்கமாகும். இளம் சமூகத்தின் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பிற்கு நிகரானதாகும். கடந்த காலங்களில் இளம் சமூனத்தினர் நாட்டை விட்டுச் சென்றனர். அந்த நிலை தற்போதும் உள்ளது. அதனால் எமது இளம் சமூகத்தினருக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்துள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை. பொருளாதார ரீதியான தீர்வே உள்ளது. அறிவியல் தீர்வை தேட வேண்டும். அதனைவிடுத்து சில அரசியல் குழுக்கள் பழைய அரசியல் தீர்வுகளை கூறி பிரசித்தமடைய முயற்சிப்பது கவலைக்குரியதாகும்.

இவ்விடத்திலிருந்து முன்னேறிச் செல்வதற்கு புதிய வலுவான பொருளாதாரத்திற்கு நாம் மாற வேண்டும். அதற்கான பொருளாதார மாற்றச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும். அதற்குரிய புதிய நிறுவனத்தையும் உருவாக்க வேண்டும்.

அரசியல் அபிலாஷைகளை மனத்தில் வைத்துக்கொண்டு, தேர்தலில் பெறும் வாக்குகளை இலக்காகக் கொண்டு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி அல்லது வீண்கதை பேசி எம்மால் முன்நோக்கிச் செல்ல முடியாது. மாறாக எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த மாற்றத்தைக் குறுகிய காலத்தில் செய்துவிட முடியாது. அதற்காக நீண்ட கால முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியப்படும். அதே பாதையில் தொடர்ந்து சென்றால் 2048 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறலாம். எந்த நெருக்கடிக்கும் குறுகிய கால தீர்வுகள் இல்லை. இரண்டு நாட்களில் எந்த இலக்கையும் அடைய முடியாது.

புத்த பெருமான் ஞானம் பெறுவதற்காக மிக நீண்டகாலம் ஆனது. ஞானம் பெற்ற பின்னரும் அவர் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதனைப் புரிந்து கொண்டு நாம் நிதானமாகவும் திட்டமிடலுடனும் முன்னேறிச் செல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் புத்தரின் பிரசங்கம் ஒன்றைக் கூறினேன். புத்தரின் பிரசங்கத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்துவுக்கு முந்தைய ஐநூறாம் ஆண்டுகளில் சீனாவில் வாழ்ந்த தத்துவஞானி கன்பூசியஸ் என்பவர்” உலகைக் கட்டியெழுப்ப முதலில் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முன் குடும்பத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

குடும்பத்தைக் கட்டியெழுப்பும் முன்னதாக எமது தனிப்பட்ட வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு முன்னதாக எமது மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

எனவே, இந்த சபையில் உள்ள அனைவரும் முதலில் மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க, அவர்களுக்கான சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப, நாம் அனைவரும் சரியான பாதையில் செல்ல வேண்டும். அதற்காக நம் மனதைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டால் மட்டுமே நமது பயணத்தைத் துரிதப்படுத்த முடியும். தமக்குக் கிடைக்கும் அந்தஸ்த்துகள் பற்றி கனவு காணும் சிலர், அந்த நாட்டை விடவும் பதவிகளை அதிகமாக நேசிக்கின்றனர். அந்த பதவிகளுக்காக நாட்டுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். நாட்டையும் மக்களையும் ஏமாற்றுகின்றனர். நடைமுறையை உணராமல் கனவுப் பாதையில் செல்ல முற்படும் பட்சத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்ள நேரிடும்.

நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். அதற்காக ஒற்றுமையாக கலந்துரையாடுவோம். நாங்கள் செயல்படுத்தும் முறையை விட சிறந்த மாற்று முறைகள் இருந்தால், அவற்றைக் கூறுங்கள். அவற்றை ஆழமாகப் ஆராய்வோம். அது குறித்தும் கலந்துரையாடுவோம். அவற்றில் நாட்டுக்குச் சிறந்தென கருதப்படும் யோசனையைச் செயற்படுத்துவோம். அவ்வாறான பேச்சுக்களில் கலந்துகொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம். அவ்வாறான பேச்சுக்களுக்குக்கு தயார் எனில், அந்தக் கலந்துரையாடல்களுக்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதானிகளையும் அழைப்பிக்க முடியும்.

கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் தொடர்பில் இரு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன்.

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் எழுத்தாளரும் பேச்சாளருமான எலன் கெல்லர் “தனியாக நாம் சில விடயங்களை மட்டுமே செய்ய முடியும். ஒன்று பட்டால் பல விடயங்களை செய்யலாம்.”

19 ஆம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் தனது நாடு பற்றி எழுதிய கவிதையொன்று நினைவிற்கு வருகிறது. அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன

”முப்பது கோடி முகமுடையாள்

உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்

எனில் சிந்தனை ஒன்றுடையாள்”

அவ்வாறான எண்ணம் எமக்கு ஏன் வரவில்லை? பல்வேறு எண்ணங்கள் இருந்தாலும் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், பல்வேறு பிரச்சினைகள், நம்பிக்கைகள் இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், எமது நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த எண்ணத்துடன் ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? எமது நாட்டு இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட முடியாதிருப்பது ஏன்?

மீண்டும் – மீண்டும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பொது நோக்கத்துடன் ஒன்றுபடுங்கள். மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமக்கு நாமே ஔியாவோம்.

இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர். நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர். நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்?

மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது. ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்?

இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது.

நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம். ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம்.

அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் – பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஔியாவோம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம். அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம். அதனால் புதிய பயணத்தைத் தொடர்வோம். புதிய எதிர்காலத்தை, புதிய நாட்டை உருவாக்குவோம்.

வாருங்கள் ஒன்றுபட்டு நாம் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்.⍐

Shame on India for its coercion of Sri Lanka

ENB Poster


Shame on India for its coercion of Sri Lanka: 

China Daily editorial                         


Some Indian media outlets seemed irrepressible when they reported "India beats China in diplomatic duel" earlier this week, referring to an Indian Navy submarine visiting Colombo, capital of Sri Lanka, on the weekend, shortly after the island country suspended its reception of Chinese research ships under New Delhi's pressure.

Their crowing exposes how New Delhi is setting up obstacles to obstruct the development of India-China relations while trying to pass the buck for the souring relations to Beijing.

To begin with, New Delhi has been smearing China's marine research ships that belong to the State Oceanic Administration of China as "spy ships" of the People's Liberation Army Navy. Deep sea research is a cradle for new findings and technologies. Many countries do it by themselves or under multilateral cooperation frameworks. As long as China follows relevant international laws and codes, India has no right to interfere in it, let alone by coercing small island countries to do it in its stead.

That marine research ships of different countries stop for fueling and supplies in foreign ports is a normal practice. Not to mention the Chinese marine research ships' mission can also be of high value to the engineering and biological security of the ongoing Colombo Port City construction project, which is being carried out and funded by Chinese companies despite the project being ceaselessly vilified and hindered by New Delhi since it started 10 years ago.

Under India's pressure, Colombo unilaterally suspended the hundreds of billions of dollars' project in 2015, citing the project's potential impact on the marine environment. After Sri Lanka realized how beneficial the project, which is tantamount to building the country a new city on the sea, would be and found no other country had the capability to complete it, it came back to China.

If India really thinks it can replace China in such projects, it should have helped Sri Lanka to complete the Colombo Port City project in 2015 soon after it pressured the country to dump China. The project will be completed in 20 to 25 years with even China's sizable input and world-class civil engineering efficiency.

To force Colombo to shut the door on Chinese research ships while China is still helping the country build its largest construction project in history is by no means a diplomatic success for India, but a shame. It only serves to show New Delhi's narrow-mindedness and lack of vision in handling relations with Beijing and its neighbors.

Those in New Delhi who view the Indian Ocean as India's sphere of influence should be reminded that a public square outside of one's door is not private property even if it bears one's name.

 chinadaily.com.2024-02-06

Tuesday, February 06, 2024

Has the JVP abandoned its ideological position on India for political expediency?

 



U-turns of Reds 

Tuesday 6th February, 2024

A JVP delegation, led by party leader Anura Kumara Dissanayake, is currently visiting India at the invitation of New Delhi. This visit signifies an ideological about-turn on the part of the JVP, which went on a killing spree in protest against India’s interference in Sri Lanka’s domestic affairs, in the late 1980s. Resistance to ‘Indian expansionism’ is a cornerstone of the JVP’s ideology.

There is no gainsaying that Sri Lanka has to maintain good relations with India. Sri Lankan governments and political parties that seek to capture power ought to heed India’s national security concerns and act accordingly. So, the JVP’s visit to India is welcome. But there are some questions the JVP should answer anent its volte-face.

One of the five classes or lectures the JVP conducted for new recruits was on ‘Indian expansionism’. Has the JVP abandoned its ideological position on India for political expediency?

In the late 1980s, the JVP plunged this country into a bloodbath, claiming that Indian expansionism had to be stopped at any cost, and its sparrow units brutally murdered political activists who supported the 13th Amendment and the Provincial Council (PC) system, trade unionists who refused to fall in line, and even ordinary people who exercised their franchise in defiance of its order that elections, especially the first PC polls (1988) be boycotted. Later, it had no qualms about having representation in the PCs. Will the JVP explain what led to its about-face?

The JVP opposed the open economy and made it out to be an evil that the country had to be saved from. But today it has come to terms with the very economic policies it rejected! Above all, it has softened its stand on the International Monetary Fund, which it used to demonise. It perpetrated heinous crimes as part of its campaign against the executive presidency. But it has chosen to remain silent on that undertaking.

Most political parties in Sri Lanka are notorious for signalling left and turning right, so to speak. The JVP has failed to be different. At the 1970 general election, it backed the SLFP-led United Front (UF), but took up arms against the UF government the following year. In the late 1970s, it was on good terms with the Jayewardene regime, which released its leaders from prison so much so that the JVP came to be dubbed the ‘Jayewardena-Vijeweera Peramuna’. Thereafter, it turned against the UNP government and staged its second uprising only to meet its Waterloo during Ranasinghe Premadasa’s presidency. It opted for a political marriage of convenience with the SLFP-led People’s Alliance (PA) under Chandrika Bandaranaike’s leadership, and even offered to prop up the crumbling PA regime in early noughties. That government collapsed, and the UNP recaptured power in Parliament. In 2004, the JVP joined the SLFP-led United People’s Freedom Front (UPFA). It went all out to prevent Mahinda Rajapaksa from becoming Prime Minister, but in vain. It pulled out of the UPFA, accusing President Kumaratunga of trying to share tsunami relief with the LTTE. The following year, it led its bete noire, Mahinda’s presidential election campaign from the front! Subsequently, it turned against the Mahinda Rajapaksa government, and joined the UNP and others in trying to defeat that administration’s budget during the war in 2007, only to suffer a split in its parliamentary group. It closed ranks with the UNP-led Opposition to defeat President Rajapaksa in the 2015 presidential race, ensured Maithripala Sirisena’s victory, and had representation in the executive council formed by the UNP-led Yahapalana government. Today, it has taken on Wickremesinghe’s UNP, Sirisena’s SLFP and the Rajapaksas’ SLPP!

Thus, it may be seen that the JVP’s history has been replete with numerous U-turns which smack of Machiavellianism. Machiavelli has advised rulers never to hesitate to navigate the complexities of politics at the expense of traditional moral, ethical norms and principles.

Doesn’t the JVP think that it owes the public an apology for its numerous ideological U-turns and terror, which provided the Jayewardene and Premadasa regimes with a casus belli, as it were, to set in motion the UNP’s ‘Caravan of Death’, which left thousands of youth including JVP activists dead?

One main reason why the JVP has failed to muster enough popular support to capture state power under its own steam is that it is widely seen as an outfit of dyed-in-the-wool Marxists espousing the Cold War era revolutionary shibboleth. Is the JVP facing an identity crisis arising from a conflict between its revolutionary core and seemingly flexible and pragmatic periphery? Or, has the JVP’s core ideology remained intact, and its about-turns are for the consumption of the public and aimed at garnering votes to win elections?⍐

Monday, February 05, 2024

We demand a comprehensive report from the JVP

 

Comrade Anura in Delhi: Untying the Marxist Facade?

 


Sri Lanka Guardian 05-02-2024 by A Special Correspondent

In diplomacy, the astute recognize that India boasts its foremost strategic mind in handling foreign affairs. Dr. S. Jaishankar, perceptive in gauging not just the pulse of the nation but also the intricacies of neighbouring countries, extended an official invitation to the ‘Marxist’ political party leadership. Ironically, this party, no longer tethered to Marxism or any discernible political ideology, seems to thrive on media attention.

Undeniably popular, the party captivates a considerable following, with many ardently believing in their ability to reshape the nation—a sentiment eerily reminiscent of the trust once placed in the former president, Gotabaya Rajapaksa.

However, our contention is rooted in the observation that Anura Dissanayake has forsaken his political theories, including those of the party founder Rohana Wijeweera, in favour of discussions with India’s top diplomat and National Security Adviser on Sri Lanka. What implications does this hold for future Marxists? Additionally, what awaits genuine Marxists in the presence of pseudo-Marxists? Consider how the sustenance of political instability is facilitated by the adoption of this comical false ideology, employed as a faux emancipationist strategy in the past to achieve narrow goals. Reflecting on these aspects is crucial. Moreover, it is essential to recognize that the erosion of social stability in Sri Lanka cannot be solely attributed to the wife of the Hindu god Shiva, Parvathi’s curse.

We wouldn’t be surprised if Comrade Dissanayake discards his ‘Marxist mask’ even before he sets foot in Delhi. Social media ‘superstars’ and influential figures in the National People’s Power laud their political idol’s recent visit to India, celebrating meetings with key figures in the Modi government. Unperturbed by their party members’ past actions, such as the contentious incident involving the late Rajiv Gandhi in Colombo, they pragmatically assert that was a matter concerning the Congress Party, and now, with the BJP in power, there is no cause for repentance.

Official reports indicated that there was a lengthy discussion between Comrade Dissanayake and India’s Minister of External Affairs, an encounter showcased on the Indian government’s website as, “External Affairs Minister Dr. S. Jaishankar met H.E. Mr. Anura Kumara Dissanayake, Leader of the National People’s Power (NPP) and Janatha Vimukthi Peramuna (JVP) of Sri Lanka in New Delhi.” We anticipate a comprehensive statement from the party elucidating the nuances of this visit and the topics discussed.

However, it is conceivable that among various matters, Dissanayake may have been briefed on India’s advocacy for power devolution and other political solutions—a stance vehemently rejected by the JVP throughout its history. A central committee member articulated the party’s stance on India in August 2012, dismissing the 13th amendment as a ploy by the late J.R. Jayawardena to appease the Indian government in 1987.

According to the committee member, the 13th Amendment was not a genuine solution to Sri Lanka’s national problem but a source of inter-ethnic strife. The super dominance by India, he claimed, brought issues like ‘human rights’ and the ‘problems of people in the north’ to the forefront, thereby threatening and paralyzing the Sri Lankan government.

Intriguingly, JVP central committee members expounded further on the party’s policy toward India, alleging that India, while posturing as a protector of Tamil rights, was engaged in a double game. They contended that India’s true motives were to dominate the local market, acquire land, control natural resources, and exploit the fisheries industry. Despite advocating for increased land ownership for Tamils, the JVP accused India of owning more land in the northeast, manipulating the labour force with Indian workers, and weakening the Tamil workforce.

Meanwhile, Comrade Vijitha Herath, a member of the Political Bureau, Propaganda Secretary of the People’s Liberation Front (JVP), and Member of Parliament, serving as the interpreter for Anura Kumara Dissanayake during his visit to India, discussed ‘Lessons Learnt and Reconciliation’ (LLRC) soon after the report published on public domain. He asserted that the commission did not aim to scrutinize contributions from imperialism or neighbouring India to the activities of separatist forces.

Fascinatingly, the party’s long-serving General Secretary, Tilvin Silva, posits that both India and other imperialist powers exploit the ongoing issues in Sri Lanka, particularly the national question and the associated human rights concerns. Silva underscores the severity of this interference, noting that the United States could potentially pass a resolution against Sri Lanka at the Geneva Human Rights Council with India’s support, highlighting the gravity of imperialists’ interventions.

Silva contends that the crisis arising from Sri Lanka’s National Question eventually prompted direct interference from India in the country’s internal affairs. Despite the JVP’s attempts to dissuade India, its friendly neighbour for centuries, from getting entangled in Sri Lanka’s political turmoil, the party was unsuccessful. Consequently, the JVP found itself opposing not only India but also the pro-US Sri Lankan government and separatists advocating for the creation of an ethnically cleansed entity named Tamil Eelam, jeopardizing the unity of the people.

Summarily, the JVP’s policy on India posits that the Indian central government, India’s intelligence arm Research and Analysis Wing (R&AW), and the Tamil Nadu state government directly supported separatist organizations in Sri Lanka, notably the LTTE. The JVP claims that in 1987, India, wielding military and political might, coerced the Sri Lankan government into signing the controversial ‘Indo-Sri Lanka pact,’ bringing over 100,000 Indian soldiers into Sri Lanka and introducing the 13th amendment, which aimed at partitioning the country and devolving power along communal lines. Since then, the JVP asserts, successive Indian capitalist governments have exploited the national question and the 13th amendment to interfere in Sri Lanka’s internal affairs.

This apparent contradiction raises a critical question: where is Marxism in this Marxist party? It seems akin to drinking coffee without caffeine or beer without alcohol—pretending to be something that, in reality, the party no longer represents. In other words, a glaring display of hypocrisy. This unsettling pattern, repeating itself throughout the island’s history, involves changing actors on the stage while staging the same drama, ultimately leading to catastrophes for the people.

Now, the pertinent question emerges: who is deceiving whom? Has Anura Dissanayake, now addressed as His Excellency Anura Kumara Dissanayake, betrayed his party to seize power by any means necessary and fallen under the influence of India? Or is he orchestrating a political drama to curry favour with India and secure victory in the next election? Anyone underestimating the complexity of deceiving India ought to delve into history and be prepared to face the consequences. In the words of Abraham Lincoln, ‘You can fool some of the people all of the time and all of the people some of the time, but you cannot fool all of the people all of the time.’

What a fascinating twist, Comrades.⍐

External Affairs Minister Dr. S. Jaishankar met H.E. Mr. Anura Kumara Dissanayake

Sri Lanka’s JVP-led alliance invited for talks in Delhi for the first time

Party leader Anura Kumara Dissanayake has emerged the most popular politician after Sri Lanka’s 2022 crisis, according to local polls 



February 04, 2024 10:33 pm | Updated 11:05 pm IST - COLOMBO The Hindu

The Indian government has invited a delegation led by Anura Kumara Dissanayake, leader of Sri Lanka’s leftist Janatha Vimukthi Peramuna (JVP or People’s Liberation Front), to New Delhi, in a significant outreach to the island nation’s most popular politician at the moment.

February 05, 2024

External Affairs Minister Dr. S. Jaishankar met 

H.E. Mr. Anura Kumara Dissanayake, Leader of the 

National People’s Power (NPP) and Janatha Vimukthi 

Peramuna (JVP) of Sri Lanka in New Delhi


JVP to make official visit to India

Sri Lanka's Marxist party to make official visit to India
PTI Last Updated 04 February 2024
COLOMBO: A delegation of the Janatha Vimukthi Peramuna (JVP), a Marxist–Leninist communist party which led an anti-India campaign in 1987-90 against the Indo-Lanka Accord, will on Monday start on an official visit to India.

“The delegation of JVP, the largest party under the broad entity National People’s Power (NPP), is to leave Colombo tomorrow (Monday) for India on an official invitation of the Indian government," a statement from the party said.

The delegation to India comprises JVP leader Anura Kumara Dissanayake, senior legislator Vijitha Herath, Secretary Nihal Abeysinghe and executive committee member Prof Anil Jayantha, the statement said.



The Hindu

Sri Lanka's Marxist party JVP to make official visit to India The JVP has a checkered record having led two bloody rebellions in 1971 and 1987-90.

PTI Last Updated 04 February 2024

Read more at: https://www.deccanherald.com/india/sri-lankas-marxist-party-jvp-to-make-official-visit-to-india-2879353

Sunday, February 04, 2024

பொசுங்கிப்போனது போலிச் சுதந்திரம்! பொது வாக்கெடுப்பு நடத்து!!



பொசுங்கிப்போனது போலிச் சுதந்திரம்!  பொது வாக்கெடுப்பு நடத்து!!

ற்றைக்கு சரியாக 18 மாதங்களுக்கு முன்னால், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி,  இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்து விட்டதாக பிரதமர் ரணில் உலகத்துக்கு அறிவித்தார்.மே மாதம் கட்டியிருக்க வேண்டிய கடன் தொகை 51 பில்லியன் அமெரிக்க டொலரைக் கட்டத் தவறி விட்டதாவும், ஆகப் பத்து நாட்கள் இறக்குமதிக்குப் போதுமான  2பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவாணியே கையிருப்பில் உள்ளதாகவும் கூறினார்,பிரகடனம் செய்தார்!

இது இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லி, தம்மைத் தாமே ஆண்டுவந்த 74 ஆண்டுகளின் விளைவாக நடந்தேறியது. மட்டுமல்ல அபிவிருத்திக்கு இடையூறாக இருந்த ``ஈழப் பயங்கரவாதத்துக்கு`` முடிவுகட்டிய 13 ஆண்டுகளின் பின்னால் நடந்தது.

இப் பொருளாதார வங்குரோத்து நிலை, தன்னியல்பான அறகலய கிளர்ச்சிக்கு வித்திட்டது.

அக்கிளர்ச்சியில், அதைக் கிளர்ச்சி எனச் சொல்லக் கூடிய பல நிகழ்ச்சிகள் நடந்தேறின.

அந்நாட்களின் சிகரமாக மன்னர் கோத்தா அரண்மனையில் இருந்தும், அவர் ஆட்சி செய்த நாட்டிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். பிரதமராக இருந்த மன்னரின் சகோதர பிரதானி ராஜபக்ச பதவி விலகினார்.நாடாளமன்றத்தில் அநாதரவாக தனி ஒருவராக இருந்த ரணில் பிரதமராகி பின்னர் நாட்டை ஆளும் சர்வ வல்லமை மிக்க ஜனாதிபதி ஆனார்.இன்றும் இருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட இக் கிளர்ச்சியைச் சாதித்த மக்கள், அரண்மனையை முற்றுகையிட்ட அந்நாளை `உண்மையான சுதந்திர தினம்` என்றும், நாடாள மன்றத்தில் உள்ள 225 திருடர்களும் பதவி விலகி `மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட புதிய பாராளமன்றம் அமையவேண்டும்-புதிய அரசியல் சட்டம் வரையவேண்டும் என  ஜூலை மாதம் 9ம் திகதி கோரினர்.

இவ்வாறு ஜூலை மாதம் 9ம் திகதியன்று, புதிய சுதந்திரப் போர் பிரகடனம் செய்யப்பட்டது, 1948 போலிச் சுதந்திரம் ( 74 ஆண்டுகளின் பின்னால்) பொசுங்கிப் போனது.

ஆனால் இவற்றுடன் கூடவே தன்னியல்பான அறகலய கிளர்ச்சியும் அடங்கிப்போனது. அதை ரணில் பக்ச ஆட்சிக்கு எதிராக உந்தித் தள்ள முயன்ற போதும் அது நிகழவில்லை.எனினும் நீறு பூத்த நெருப்பாக அது கனன்று கொண்டு இன்றும் இருக்கின்றது.  ரணில் பாசிசக் கரம் கொண்டு அதை நசுக்க முயன்று வருகின்றார்.

இந் நிலை, பல இலட்சம் செலவில் 2023 இல் `சுதந்திர தினம்` கொண்டாடுவதில் இருந்து ரணில் பக்ச பாசிஸ்டுக்களைத் தடுக்கவில்லை.

2024 இல் சுதந்திர தின `பெரு விழாவும்` பல தேர்தல் திரு விழாவும் நடக்கவுள்ளன, அதற்கு நாடு தயாரிக்கப்பட்டுவருகின்றது.

2024 சுதந்திர தின விழாவின் கருப்பொருள் `புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்` என்பதாகும். 75 ஆண்டுகள் கட்டி எழுப்பிய நாடு `பழைய` நாடானது எப்படி?

இச் சூழலில் தேசிய நலன் சார்ந்த, ஜனநாயக,முற்போக்கு சக்திகளின் முன்னால் உள்ள பிரதான கேள்வி, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழ விடுதலைப் போரை,அறகலய ஆரம்பித்த புதிய சுதந்திரப் போரை மீளக் கட்டியெழுப்புவது எவ்வாறு? இலங்கையில் ஒரு மக்கள் ஜனநாயக் குடியரசை அமைப்பது எவ்வாறு என்பதே ஆகும்.

0

இதற்கு விடை காணும் பொருட்டு இன்றைய உள்நாட்டு, பிராந்திய, சர்வதேசச் சூழ்நிலையை தனித்தும் அவற்றின் பரஸ்பர இடைத் தொடர்பிலும், இயக்க நிலையிலும் ஆராய்வோம்.

 உள்நாட்டுச் சூழ்நிலை:

இலங்கை, ஆளும் கும்பலின் 74 ஆண்டுகால ஆட்சியின் விளைவாக வங்குரோத்து நிலை அடைந்த போது முதலில் உதவ இந்திய நாடு முன்வந்தது.1983 இல் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவ  வந்த இந்திய அரசு 1987 இல் வற்புறுத்தி செய்து கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இலங்கையின் இறையாண்மையின் கடிவாளத்தை தன் கையில் எடுத்துக் கொண்டது. வங்குரோத்து உதவி மூலம் தனது விரிவாதிக்க அரசியல் அதிகாரத்தைச் செலுத்திவருகின்றது.வட கிழக்குத் தமிழரின் 13 வது திருத்த அமூலாக்கக் காவலன் என்பதாக இருந்து, இப்போது மலையகத்துக்கும் காவலனாகிவிட்டது.சீனாவிடமிருந்து இலங்கைக்கும் காவல் அரணாகிவிட்டது.ரணில் பக்ச பாசிசக் கும்பல் அந்நிய முதலீட்டுத் திட்டங்களை அதானி அம்பானி கும்பலுக்கு தாரை வார்த்து வருகின்றது.

இவ்வாறு இந்தியா தனது ஆதிக்கத்துக்கு மட்டுமல்ல அந்நிய நிதிமூலதன ஆதிக்கத்துக்கும் துணை நின்றது. இலங்கையில் IMF இன் கடன் மறு சீரமைப்பு, மற்றும் கடன்களுக்கு பிணை நின்றது.

இதன் மூலம் இலங்கை  IMF இன் கடன் பெற்றது. ஆனால் என்றுமில்லாதவாறு இந்த தவணைக் கடன்களுக்கு IMF பொருளாதார நிபந்தனைகள் மட்டுமின்றி எத்தகைய ஆட்சி நடத்த வேண்டும் என்று அரசியல் நிபந்தனையும் இட்டது.குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும், அதிக வரி அறவிட வேண்டும் என்றெல்லாம் `சுதந்திர இலங்கைக்கு` ஆணையிட்டது.அதைக் கால நிரலில் கண்காணித்தும் வருகின்றது.

ரணில் பக்சபாசிசக் கும்பல் இவற்றை நிறைவேற்ற, ஆட்சியை மேலும் பாசிச மயப்படுத்தும் பொருட்டு பல புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி காட்டுமிராண்டி அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகின்றது.

இவ்வாறு ரணில் பக்சபாசிசக் கும்பல் உள்நாட்டில் IMF, அதானி ஆட்சிக்கு காவல் காத்து வருகின்றது.

பிராந்தியச் சூழ்நிலை

நமது பிராந்தியம் முன்னர் இருந்தது போல் இந்து சமுத்திரப் பிராந்தியமாக இன்று இல்லை. சர்வதேசச் சூழ்நிலை காரணமாக-அமெரிக்க உலக மேலாதிக்கம் காரணமாக- அது இந்தோ பசிவிக் பிராந்தியமாக பரந்து விரிந்து உள்ளது.இதில் இந்திய விரிவாதிக்க அரசு அமெரிக்காவின் தொலை தூர நலத் துணையாளனாக உள்ளது.மேலும் உலகை இன்று வகைப்படுத்தும், வடகோளம்,தென் கோளம் என்ற வகைப்பாட்டில் நாம் தென்கோளத்தில் அடங்குகின்றோம்.விரிவாதிக்க இந்திய அரசு இத் தென் கோளத்தின் தலைவனாகும் பேராசை கொண்டு அலைகின்றது.தென் கோள சிறிய நாடுகள் அனைத்தின் மீதும் தனது செல்வாக்கை நிறுவ, ஒட்டுகின்ற அல்லது ஒட்டாத உறவைப் பேணிவருகின்றது.தென் கோள நாடுகளின் கூட்டமைப்புக்களுக்கு தலைவனாக தலைவிரித்தாடுகின்றது.இதன் பொருட்டு உள்நாட்டில் `இந்திய விரிவாதிக்க பாசிச அரசை` மென்மேலும் இந்துத்துவா மயப்படுத்துகின்றது.ராமர் கோவில் கட்டி முடித்து காந்தி தேசத்தை ராமர் தேசம் ஆக்குகின்றது. இலங்கையில் பிரகடனப் படுத்தாத ஒரு கவர்னர் ஆட்சி நடத்துகின்றது.சேது சமுத்திரத் திட்டத்துக்கு தயாராகுகின்றது. 

சர்வதேசச் சூழ்நிலை

குறைந்த பட்சம் 2007 இல் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து உலக ஏகாதிபத்திய பொருளாதாரத்தால் இன்று வரை மீள இயலவில்லை.எந்த பொருளாதார அரசியல் மீட்பு நடவடிக்கைகளாலும் மீட்க முடியவில்லை. இதனால் உலகமறுபங்கீடு ஒன்றே தீர்வாகிவிட்டது. அதிலும் அது பிரதானமாக யுத்த வடிவத்தை எடுத்துள்ளது.இவை பகுதியான, ஒரு நாட்டுக்கு எதிரான, அல்லது ஒரு பிராந்தியம் தழுவிய ஆக்கிரமிப்பு யுத்தங்களாகும்.இவை உலகப் போரைக் கருக் கொண்டுள்ளன.ஆனால் முழு அளவிலான உலகப்போர் அல்ல.மறு புறம் இவை பனிப்போர் அல்ல இரத்தம் சிந்துகின்ற, 2000 இறாத்தல் குண்டு வீசுகின்ற,பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்கின்ற நிஜப் போர்கள் ஆகும். அதேவேளை ஆட்சிக்கவிழ்ப்புகளாவும், மூலவள ஆதாரங்களுக்காகவும், வர்த்தக மோதல்களாகவும், பினாமி அதிகாரங்களாகவும் பனிப்போர்களும் தொடர்கின்றன.பனிப் போரும், சூடான போரும் (Cold and Hot wars) ஒரு சேர நிகழ்கின்றன.எனினும் யுத்தமே பிரதான போக்காக உள்ளது.எந்தளவுக்கு எந்தளவு யுத்தம் முன்னிலை பெறுகிறதோ, அந்தளவுக்கு அந்தளவு அரசுமுறை பாசிச மயப்படுகின்றது.

இச் சர்வதேசச் சூழ்நிலையானது எல்லாத் தனித் தனி நாடுகளிலும், எல்லாப் பிராந்தியங்களிலும், எல்லாப் பிராந்தியக் கூட்டுகள் மீதும் செல்வாக்குச் செலுத்தி அவற்றின் இயக்கப் போக்கை செதுக்கி செல் நெறிப்படுத்துகின்றன.

மேலும் முக்கியமாக இது, இரண்டாம் உலகப் போருக்கும் மூன்றாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட இக்கட்டம், அதன் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய மேற்கட்டுமானங்கள் அனைத்தையும் தகர்த்து தரைமட்டம் ஆக்குகின்றது.

ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் கூறுகின்றார்:

Excellencies,

Righting our troubled world depends on effective global action.

Yet the international system is out of date, out of time, and out of step, reflecting a bygone age when many of your countries were still colonized.

The United Nations Security Council is paralyzed by geopolitical divisions.

And its composition does not reflect the reality of today’s world.

It must be reformed.

And the global financial system, including the Bretton Woods Institutions, has failed to provide a global safety net for developing countries in distress, as it was created after the Second World War in a totally different global economic situation.

Yet, amidst all this gloom, there is hope.

Secretary-General's remarks to the Third South Summit-Kampala Uganda 2024 

சிந்தனை வழியில் ஒரு முதலாளித்துவ தாராளவாதி என்கிற முறையில் அவர் அடையாளம் காணும் பிரச்சனைகளை இம்முறைமைக்குள் தீர்க்க முடியும் என்று நம்புகின்றார். அவரே சுட்டிக்காட்டும் முரண்பாடுகளின் பகைமைத் தன்மையை ஒரு தாராளவாத சிந்தனையாளரால் காண இயலாமல் போவதில் வியப்படைய ஏதுமில்லை.

ஆனால் அவரளவுக்கு சர்வதேசிய மோதல்களை அறிந்து எதிர்கொள்ளும் பொறுப்பு நிலையில் உள்ள வேறொரு பதவியை-மனிதரைக் கண்பது அரிது. இதனால்;

1)``இன்றைய பல்வேறு நாடுகள் காலனிகளாக இருந்த போது உருவாக்கப்பட்ட இன்றைய சர்வதேச முறைமை காலத்துக்கொவ்வாது காலாவதியாகிவிட்டது``.

2) ``Bretton Woods உடன்படிக்கை உள்ளிட்டு, இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய உலகப் பொருளாதார நிலைமையில் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதி அமைப்புகள் வளரும் நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டன``.

3) ``பூகோள அரசியல் பிரிவுகளால் ஐ.நா.சபை முடக்கப்பட்டுவிட்டது``.

ஆகிய மதிப்பீடுகள் மதிப்பார்ந்த முக்கியத்துவம் உடையவை.

சுருக்கிச் சொன்னால் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய உலக ஒழுங்கமைப்பு அனைத்தும் இன்று பொருந்தாததாக மாறிவிட்டது.

காரணம் என்னவென்றால் ஏகாதிபத்திய அடிக்கட்டுமானம் எதிர்நோக்கும் நெருக்கடியாகும்.இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய ஒப்பீட்டில் அமைதியாக, சமாதான பூர்வமாக உலகம் மறுபங்கீடு செய்யப்பட்டுவந்த நிலைமை மாறி, ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட பகைமையும் போரும் பாசிசமும் முதன்மை பெறுகின்ற போது, பழைய மேற்கட்டுமானங்கள் பொருந்தாதவை ஆகிவிடுகின்றன.

இப்போக்கு கூர்மையாக ஈராக் போரில் ( 20 மார்ச்சு 2003 முதல் 15 டிசம்பர் 2011 வரை) தலை தூக்கியது.ஈராக் மீதான போரில் இங்கிலாந்து, பாராளமன்றத்தை ஏமாற்றியது.அமெரிக்கா ஐ.நா.வுக்குச் செல்லாமல் பொய்க் காரணம் சொல்லி போர் தொடுத்தது.இதனால் கோபி.அனான் ஈராக் போரை சட்டவிரோதமானது என்று அறிவித்தார். இன்று இஸ்ரேல் போரிலும் `பாலஸ்தீனப் படுகொலை` நேர்ந்ததாக ஐ.நா.நீதிமன்றம் வழக்காடி வருகின்றது.அநேகமாக ஆப்கான், ஈராக் போர் முதல், பிந்திய எல்லாப் போர்களிலும், போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றம், சமூக சுத்திகரிப்பு, சமூகப் படுகொலை போன்ற சர்வதேச சட்ட விரோத குற்றங்கள் இழைக்காத போர்களே இல்லை எனலாம்.Bretton Woods நிதி நிறுவனங்கள் நாடு நாடாக விழுங்கி ஏப்பமிட்டு விட்டன.அந்நியக் கடன் என்பது உலகில் அனைத்து நாடுகளுக்குமான பொதுப் பிரச்சனை ஆகிவிட்டது. அதாவது நிதி மூலதன மற்றும் சட்ட விரோத புல்லுருவி மூலதன, ஊழல் ஊதாரி சூதாடி நிதியாதிக்க கும்பலின்  பிடியில் உலகம் சிக்குண்டுவிட்டது.இந்தப் பொருளாதார ஆதிக்கம் அரசியல் ஆதிக்கமாக வளர்ந்துவிட்டது. ஆட்சிக் கவிழ்ப்பு அரசியல் ஆதிக்கத்தின் ஒரு கருவி ஆகிவிட்டது. மூலதனம் மென்மேலும் சுருங்கி குவிந்து விடுவதால் , `ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்` ஒன்று கலந்து விடுகின்றன. ஒரு கட்சி இறுதியில் ஒரு மனிதர் என்றாகிவிடுகின்றது. இதன் விளைவாக நாடாளுமன்றம் - தேர்தல் என்பவை பாசிசத்தை ஜனநாயகப் படுத்தும் போலித் திரைகள் ஆகி, நடைமுறையில் காலாவதியாகிவிட்டன.

மூலச்சிறப்புமிக்க முதலாளித்துவ ஜனநாயக நாடுகளிலேயே இது நடந்தேறி வருகின்றது.

முதலாளித்துவ தாராளவாத தொழிற்கட்சியை ரொனி பிளேயர் நியூ லேபர் ஆக்கியபோது அதை கொன்சவேர்ட்டிவ் கட்சியாக மாற்றினார். அது முதல் அக்கட்சிகளிடையே வேறுபாடு இல்லை.போலி நாடாளமன்ற முறைமையை நியாயப் படுத்துவதற்காக அவை இரு கட்சிகளாக உள்ளன.

அமெரிக்கா இதில் ஒரு படி மேலே சென்று, குடியரசுக் கட்சிக்குள் டிரம்ப் ஒரு தனிக்கட்சியை உருவாக்கிக் கொண்டுவிட்டார்.முதலாளித்துவ ஜனநாயகத்தின் அச்சாணிகள் அனைத்தையும் டிரம்ப் நிராகரிக்கின்றார். ஆனாலும் 2024 தேர்தலில் போட்டியிடுகின்றார்.இவர் மீது `கற்பழிப்பு` முதல் கலகம் நடத்தியது வரை 91 கிரிமினல் வழக்குகள் உண்டு!

இந்தியாவில் காங்கிரசும், பா.ஜ.க வும் இந்திய விரிவாதிக்க பாசிசத்தின் இரு முகங்களாகவே உள்ளன.பாபர் மசூதியை இடித்த போதுமட்டுமல்ல, அதில் மீள ராமர் கோவிலைக் கட்டியபோதும் இதை அவை நிரூபித்துள்ளன.

இலங்கையில் யு.என்.பி யும் சுதந்திரக் கட்சியும் அவ்வாறே. மொட்டுக் கட்சி தலை தூக்க இயலாதவாறு தறிக்கப்பட்டுவருகின்றது.தூக்கினால் கூட எஞ்சியவை அதன் துணைக் கட்சிகள் ஆகிவிடும்.பிரேமதாசாவின் புத்திர பாக்கியத்தின்-எதிர்க் கட்சிப்- பிதற்றல்கள் சொல்லி மாளாதவை.தாம் ஆட்சி அமைத்தால் IMF உடன் பேசி IMF திட்டத்தை நாட்டுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவோம், இணைய தடைச் சட்டத்தால் பாதிக்கப் படுவோருக்கு இலவச சட்ட உதவி வழங்குவோம்....இத்தியாதி...இத்தியாதி!

நிலையான ஆட்சி என்கிறார்களே அப்படி ஒன்று நிர்ணயித்த ஆட்சிக் காலத்துக்கு நீடித்திருப்பதில்லை.ஒன்று அந்த ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்கின்றன (ஜப்பான்), அல்லது பல சந்ததிகளுக்கு ஒரு கட்சி அல்லது ஒரு வம்சம் அல்லது ஒரு மனிதர் அதிகாரத்தை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றார்(ரசியா), இதையும் தேர்தல் மூலம் புதுப்பித்துக் கொள்கின்றார்! ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல `முன்னாள்கள்` ஆட்சிக்கால கிரிமினல் குற்றங்களுக்காக சிறை செல்கின்றனர், ஐரோப்பாவும் விதிவிலக்கல்ல (பிரான்ஸ்)! மத்திய ஆசிய,மத்திய கிழக்கு நாடுகளில் யுத்த மற்றும் எண்ணெய்ப் பிரபுக்கள் அரசாங்கம் இல்லாமலே ஆட்சி செய்கின்றன.சில நாடுகளில் இரண்டு அல்லது பல அரசுகள் உள்ளன.

அதன் எல்லா வடிவங்களிலும் முதலாளித்துவ  நாடாளமன்ற ஜனநாயகம், இந்த நிலையில் தான் உலகெங்கிலும் உள்ளது.

சர்வதேச பிராந்திய உள்நாட்டுச் சூழலின் பரஸ்பர இணைப்பும் இயக்கமும்.

உற்பத்தியின் சமூகமயமானது (உலகமயமானது) உலக நாடுகளை, உலக மக்களை இனியில்லையென்றவாறு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைத்து விட்டது.

இதனால் உலகின் இன்றைய பிரதான போக்கான உலக மேலாதிக்க, உலக மறுபங்கீட்டு மோதல்களின் விதியால் உலகின் அனைத்து நிகழ்வுகளும் ஆளப்படுகின்றன.இவ் விதியைக் கொண்டல்லாமல் இவ் உலகைப் புரிந்துகொள்ள இயலாது. புரிந்துகொள்ள இயலாது என்றால் மாற்றுவது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவு.

உலக மேலாதிக்கத்துக்கான மோதல் அமெரிக்க அணிக்கும் ரசிய சீன அணிக்கும் இடையே மூண்டுள்ளது.இதைச் சார்ந்தே உலக மறுபங்கீடு நிகழ்கின்றது. இவையிரண்டும் பிராந்திய ஆதிக்கத்தை மோதல்களைத் தூண்டுகின்றன. இவ்வாறு தான் இவை பரஸ்பரம் இயங்குகின்றன.

இலங்கையின் நிலை:

இலங்கை அதன் புவியியல் அமைவிடம் காரணமாக, இம்மோதல்களின் உலகளாவிய பல மையப் புள்ளிகளில் ஒரு முக்கிய புள்ளியாக உள்ளது. இதனால் உலக மறு பங்கீட்டு அரசியலின் களமாகவும், உலக மறு பங்கீட்டு போரின் களமாகவும் இரு புறவயத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.

இதன் இயக்கு சக்தி இந்திய விரிவாதிக்க அரசாகும்.அரசியல் ரீதியாக இலங்கை இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு பணிந்த ஒரு வெளிவாரி மாநிலமாக உள்ளது.உலக மறு பங்கீட்டு போரின் நோக்கில், அமெரிக்க இந்திய அணியின் போர்த்தளமாக மாற்றப்பட்டுவருகின்றது.

எனவே இருவகையிலும் இலங்கை சுதந்திரமாகவோ சுயாதீனமாகவோ இல்லை.

வங்குரோத்து நிலையில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதாக, `புதிய நாட்டைக் கட்டியேழுப்பு`வதாகக் கூறி ரணில் கும்பல் எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள் நாட்டை மென்மேலும் அந்நிய நிதி மூலத்தின் சுவாசக் காற்றில் வாழ வைக்கப்படுகின்றது.  IMF கடனை நிறுத்தினால் இலங்கை தனது மூச்சை நிறுத்திவிடும்.  IMF கடன் என்பது அரசியல் நிர்ப்பந்தத்துக்கான ஒரு பொருளாதாரக் கருவி ஆகிவிட்டது.

மறு புறம் சீனா ஏற்கெனவே ஹம்பாந்தோட்டையில் கால் பதித்துவிட்டது. இதன் மூலம் பட்டுப் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிட்டது.இதை யாரும் வெட்டி எறிய முடியாது.இவ்வாறு அரசியல், அபிவிருத்திக் கோணத்திலும் இலங்கை உலக மறுபங்கீட்டு போர்க் களமாகியுள்ளது.

ஒரு சொல்லில் இலங்கை உலக மறுபங்கீட்டு காலனி ஆகி உள்ளது.

INS ‘Karanj’ – a submarine of the Indian
Navy arrived at the port of Colombo today
(03rd February 2024)

https://www.dailynews.lk/

பிரபுத்துவ மன்னராட்சிக் காலத்தில் அந்நியப் படையெடுப்புகளுக்கு (சோழர்) பலியான, மற்றும் பணியாத ராஜ்ஜியங்களாக இருந்து ( பிரபுத்துவ இனத்துவ தமிழன் கூறும் தன்னுடைய `இறைமை` என்பது இத்தகைய ராஜ்ஜியம் ஒன்றை ஆண்ட மன்னனுக்கு இருந்த ``இறைமை`` யே ஆகும்!), பின்னால் ஐரோப்பிய படையெடுப்புகளின் காலனியாகி, ஐரோப்பியர் பிரியாவிடையின் பின் தொடர் காலனியாகி, இன்று உலக மறுபங்கீட்டு காலனி ஆகியுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு போதும் அது முழுச் சுதந்திர நாடாக  இருந்ததில்லை.அதை அண்டைய (தமிழ்!) மன்னர்களும் அனுமதிக்கவில்லை, ஐரோப்பிய மன்னர்களும் அனுமதிக்கவில்லை. இது தான் இலங்கையின் சுதந்திரத்தின் பொதுவான வரலாறு.

இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் `பாதுகாப்பில்`, இலங்கை தனது 76வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியதில் வியப்பில்லை!



05-02-2024

Monday, January 29, 2024

Three US troops killed in drone attack in Jordan, more than 30 injured

PRESS RELEASE | Jan. 28, 2024

UPDATE: U.S. Casualties in Northeast Jordan, near Syrian Border

USCENTCOM

Jan. 28, 2024
Release Number 20240128-02
FOR IMMEDIATE RELEASE

TAMPA, Fla. – On Jan. 28, three U.S. service members were killed, and multiple personnel were injured from a one-way attack UAS that impacted on a base in northeast Jordan, near the Syrian border. As an update to the earlier announcement, the number of U.S. personnel with injuries has increased to at least 34 service members, but we expect this number to fluctuate as service members continue to seek follow-on care. Eight personnel that received injuries required evacuation from Jordan to higher level care, but they are in stable condition. All other service members are being fully evaluated for follow-on care.

The attack occurred at the logistics support base located at Tower 22 of the Jordanian Defense Network. There are approximately 350 U.S. Army and Air Force personnel deployed to the base, conducting a number of key support functions, including support to the coalition for the lasting defeat of ISIS.

As a matter of respect for the families and in accordance with DoD policy, the identities of the service members will be withheld until 24 hours after their next of kin have been notified. U.S. Central Command will continue to provide updates as they become available.

US base attacked in Iraq hours after Iran vows revenge for Damascus attack

American soldiers are reportedly wounded in attacks allegedly by Iran-linked groups as fears grow of a wide regional conflict.


Iran-backed armed groups have targeted US troops in Iraq hours after Tehran vowed revenge and blamed Israel for a deadly attack on a building housing its elite forces in the Syrian capital Damascus, driving fears of wide regional conflict.


The attack caused one Iraqi and possible American casualties, the US Central Command (CENTCOM) said on Saturday, and came hours after Tehran vowed to take revenge against Israel for its strike targeting the Iranian Revolutionary Guards Corps (IRGC) in Syria. Al Jazeera 21 Jan 2024

___________________________________________________________________________

Three US troops killed in drone attack in Jordan, more than 30 injured


Three US Army soldiers were killed and more than 30 service members were injured in a drone attack overnight on a small US outpost in Jordan, US officials told CNN, marking the first time US troops have been killed by enemy fire in the Middle East since the beginning of the Gaza war.

“We shall respond,” President Joe Biden said while speaking in South Carolina on Sunday.

The killing of three Americans at Tower 22 in Jordan near the border with Syria is a significant escalation of an already-precarious situation in the Middle East. Officials said the drone was fired by Iran-backed militants and appeared to come from Syria. It is still being determined which militia group specifically is responsible.


US Central Command confirmed in a statement Sunday that three service members were killed and at least 34 injured in a one-way drone attack that “impacted at a base in northeast Jordan.” Eight injured service members were medically evacuated to receive higher-level care, CENTCOM said.

The number of wounded is expected to rise as service members seek treatment for symptoms consistent with traumatic brain injury, two US officials said.

Biden vowed Sunday to hold those responsible for the attack “to account,” saying that while facts are still being gathered, “We know it was carried out by radical Iran-backed militant groups operating in Syria and Iraq.”

“These service members embodied the very best of our nation: Unwavering in their bravery. Unflinching in their duty. Unbending in their commitment to our country — risking their own safety for the safety of their fellow Americans, and our allies and partners with whom we stand in the fight against terrorism. …  [H]ave no doubt – we will hold all those responsible to account at a time and in a manner our choosing.”

Iran on Sunday denied any involvement in the attack, state news agency IRNA reported, citing the country’s permanent mission to the United Nations.

Tehran sought to distance itself from the attack, calling accusations of Iranian involvement “baseless.”

Iranian foreign ministry’s spokesperson, Nasser Kanaani, said in a statement on Monday that “regional resistance” groups do not take orders from Iran. “We believe the region does not need more tension or a new war,” he added.

Tehran’s denial came after the Islamic Resistance in Iraq, an umbrella group of a number of Iran-backed militias in the country, said in a statement Sunday it attacked a number of targets along the Jordan-Syria border, including Al-Rukban camp. The camp is in close proximity to the US outpost Tower 22.

The statement, posted to the Islamic Resistance’s Telegram channel, came before the US announced the death of the three service members.

Wider conflict

Speaking at a church in South Carolina later Sunday, Biden asked for a moment of silence to honor the service members.

“I want to point out that we had a tough day last night in the Middle East. We lost three brave souls in an attack on one of our bases,” Biden said at the conclusion of his remarks.

As of Friday, there had been more than 158 attacks on US and coalition forces in Iraq and Syria, though officials have described the constant volley of drones, rockets, and missiles as unsuccessful as they have frequently not caused serious injury or damage to infrastructure.

Mapbox  OpenStreetMap Tower 22, Jordan

It’s unclear why air defenses failed to intercept the drone, which appears to be the first known attack on Tower 22 since attacks on US and coalition forces began on October 17. US forces at the outpost are there as part of an advise-and-assist mission with Jordan.

CENTCOM said later Sunday that “there are approximately 350 U.S. Army and Air Force personnel deployed to the base, conducting a number of key support functions, including support to the coalition for the lasting defeat of ISIS.”

The US has taken several retaliatory actions against the Iran-backed groups in Iraq and Syria, one as recently as last week, when the US struck three facilities in Iraq used by Kataib Hezbollah and other Iran-affiliated groups. The US has also been engaged with the Iran-backed Houthis in Yemen, carrying out multiple strikes — many unilaterally and some with the UK and other allies — on Houthi missiles and drones, radar systems, storage facilities, and more.

Meanwhile, Israel is continuing its campaign in Gaza against Hamas following Hamas’ terror attack on Israel on October 7. More than 25,000 people are estimated to have been killed and tens of thousands more injured – according to the Hamas-run Ministry of Health in Gaza, in the intense fighting since October 7. Israel is also targeting Hezbollah in Lebanon; on Sunday, the Israel Defense Forces said it struck Hezbollah sites in southern Lebanon with artillery and fighter jets.

The Biden administration has been criticized, primarily by Republicans, for not taking strong enough action against the Iran-backed groups for their attacks. In a statement on Sunday following the news of the three Americans killed, Sen. Lindsey Graham said the Biden administration’s “policy of deterrence against Iran has failed miserably.”

“The Biden Administration can take out all the Iranian proxies they like, but it will not deter Iranian aggression. I am calling on the Biden Administration to strike targets of significance inside Iran, not only as reprisal for the killing of our forces, but as deterrence against future aggression,” Graham said.

Sen. Roger Wicker, the highest-ranking Republican on the Senate Armed Services Committee, also called Sunday for a response “directly against Iranian targets and its leadership.” And House Armed Services Chairman Mike Rogers said it is “long past time for President Biden to finally hold the terrorist Iranian regime and their extremist proxies accountable.”

This satellite photo from Planet Labs PBC shows a military base known as Tower 22 in northeastern Jordan,
on Oct. 12, 2023. (Planet Labs PBC via AP)

Three American troops were killed and "many" were wounded Sunday, Jan. 28, 2024, in a drone strike in northeast Jordan near the Syrian border, President Joe Biden said. He blamed Iran-backed militia groups for the first U.S. fatalities after months of strikes against American forces across the Middle East amid the Israel-Hamas war. U.S. officials identified Tower 22 as the site of the attack. (Planet Labs PBC via AP)

Efforts to deescalate

Amid the increasingly high tensions on multiple fronts in the region, US officials have repeatedly said they do not want to see tensions boil over into a regional war. Asked last week whether the Pentagon assessed that Iranian proxies were stepping up their attacks on US forces, Deputy Pentagon Press Secretary Sabrina Singh said, “Not necessarily, no.”

In a previously recorded interview with ABC News that aired Sunday morning, Chairman of the Joint Chiefs of Staff Gen. CQ Brown said part of the US’ work is to “make sure as things have happened in the Middle East is not to have the conflict broaden.”

“The goal is to deter them and we don’t want to go down a path of greater escalation that drives to a much broader conflict within the region,” he said.

There have been dozens of injuries since the attacks began — a senior military official told reporters last week there were roughly 70 — but the Pentagon has classified most of them as minor, aside from one US soldier who was critically injured in an attack in Iraq on Christmas Day.

Chief Warrant Officer 4 Garrett Illerbrunn from the 82nd Combat Aviation Brigade was set to be sent back to the US for further treatment after he critically injured in a drone attack on Erbil Airbase.

The killing of three Americans also comes as the US and Iraq are expected to begin talks soon about the future of the US military presence in the country.

This story has been updated with additional information.

CNN’s Mostafa Salem contributed reporting.⍐

தீய வரிகள், தீய சட்டங்களை அகற்று! ISUF எதிர்ப்புப் போராட்டம்.




 ⭕மானியங்கள் இல்லை - பல்கலைக்கழகங்கள் மூடப்படுகின்றன

பல்கலைக்கழகங்களை காப்பாற்ற ஒன்றுபடுவேம் !

⭕உண்ண குடிக்க இன்றி மக்கள் துன்பத்திலே

தீய வரியை அகற்று !

⭕PTA ரத்து செய் !

ATA , சமூக ஊடக தடைச் சட்டத்தை அகற்று !

பெப் 01

எதிர்ப்பு போராட்டம் மற்றும்

விழிப்புணர்வு நிகழ்சி

கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால்...

-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் -

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...