SHARE

Saturday, November 17, 2018

வேண்டாப் பிண்டத்தை வெட்டிச் சரிப்போம்!

முதலாளித்துவ நாடாளுமன்றம் நடைமுறையில்

காலாவதி ஆகியதன் விளைவே சிங்களத்தில் நிகழ்ந்த கலகம்.

`தாமரைக் களத்தில்` சில மொட்டுக்கள்!

சிங்கள நாடாளுமன்றம் சோல்பரி அரசியல் யாப்பால்
உருவாக்கப்பட்ட அரைக்காலனிய அந்நிய மன்றமாகும்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது
அதன் செங்கோல் வளைந்து விட்டது.
1972,1978 யாப்பும் 6வது திருத்தமும் வந்த போது செங்கோல்
முழுதாக முறிந்து விட்டது.
பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட
கறுப்புச் சட்டங்கள் வந்து, இனப்படுகொலை யுத்தம்
சட்ட பூர்வமாக்கப்பட்ட போது எரிந்து சாம்பராய் விட்டது.
19வது திருத்தம் அதை உயிர்ப்பிக்கவில்லை, மாறாக 19
திருத்தங்களும் பாசிசப் பேயாக வளர்ந்து நிற்கின்றன.
ஒரு ஆயிரம் பேர் வடகிழக்கில் 6வது திருத்தத்தை நீக்கக்
கோரி ஆர்ப்பரித்தால், அல்லது இராணுவ முகாம் முன்னால்
ஒரு `பட்டாசு` வெடித்தால் அந்தக்கணமே இவர்கள்
ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
இந்த வேண்டாப் பிண்டத்தைக் கட்டிக் காப்பது அல்ல,
வெட்டிச் சரிப்பதே ஜனநாயகம்!

Thursday, November 15, 2018

மாவீரர் நாள் முழக்கங்கள்-2018



மாவீரர் நாள் முழக்கங்கள் - 2018

ஏகாதிபத்தியவாதிகளே:

அமெரிக்க இந்திய முகாமோ, ரசிய சீன முகாமோ
இலங்கையை மறுபங்கீடு செய்ய ஒருபோதும் அனுமதியோம்!

இந்திய விரிவாதிக்கத்தின் தமிழகத் தரகு - இனமானத் தூண்களே:

ஈழத்தமிழர் பிரச்சனையில், இனப்படுகொலை இந்திய அரசு
தலையீடு செய்ய அழைப்பு விடாதீர்!
``தொப்புள்க் கொடி உறவுகளே``,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவீர்!

சிங்களமே:

`ஒரே நாடு` பேசி ஒட்டுமொத்த நாட்டையும் அந்நியருக்கு தாரை வார்க்காதே!
அனைத்து அந்நிய அநியாயக் கடன்களையும் ரத்துச் செய்!
அந்நிய மூலதன உலகமயத்தைக் கைவிடு,  உள்ளூர் உற்பத்திக்கு வழிவிடு!
சிங்கள விவசாயிகளுக்கு நிலம் வழங்கு!
மலையக மக்களுக்கு மாநிலம் வழங்கு!
முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி வழங்கு!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டின் `இறையாண்மைக்கு` எதிரான
அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் கிழித்தெறி!

யுத்தத்தால் கொன்றொழித்த தேசத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்!
தமிழ் விவசாயிகளின் தனியார் நிலத்தைத் திருப்பிக்கொடு!
அனைத்து யுத்த-அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
ரோகண விஜேவீராவுக்கு பதில் சொல்!

புலம் பெயர் ஏகாதிபத்திய தாச, இந்தியக் கைகூலிகளே:

புலிக்கோடு போட்டு `தமிழ்த் தேசியம்` பேசி, ஈழவிடுதலைப் புரட்சியைக் காட்டிக் கொடுக்காதீர்!

தமீழீழ மக்களே:

அனைத்து `தமிழ்க் கட்சி` ஒட்டுக்குழுக்களையும், NGO களையும் நிராகரிப்பீர்!
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பீர்,
பொது வாக்கெடுப்புக்கு போராடுவீர்!

மாண்ட நம் மக்கள் வாழ்க!                       மாவீரர் நாமம் வாழ்க!!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.

புதிய ஈழப்புரட்சியாளர்கள்.                                                                                               Eelam New Bolsheviks
                                                                                                                      (14-11-2018)

Monday, May 14, 2018

enb-news.com




வருக, வருக, என வரவேற்கின்றோம்!

ENB இணைய அறிவித்தல்



அன்பார்ந்த ENB வாசகர்களே,

கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக எமது அரசியல் பிரச்சாரம் அச்சுத் தளத்தில் -1993 ஜூலையில்- இருந்து மாறி  ON LINE இல் இயங்கியது. புதிய சாதனத்தைக் கையாளுவதில் ஆர்வம் இருந்த அளவுக்கு அறிவோ,அநுபவமோ இயல்பாகவே இருக்கவில்லை.இதனால் முதல் 5 ஆண்டு முயற்சிகள் ஆதாரமே இல்லாமல்-சில அநுபவங்களைத் தந்துவிட்டு- அழிந்துவிட்டது!

பின்னர் Blogger இல் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கினோம். தேவையின் நிமித்தம் பல தளங்களை Blogger இல் உருவாக்கினோம், எனினும் ஒரு சிலவற்றையே பரவலாக்கி வந்தோம்.

இதில் `தமிழீழச் செய்தியகம்`,  Tamil Eelam News Network (ENB TENN) செய்தித் தளமாக இயங்கியது.

இன்று 14-05-2018 முதல் நமது செய்தியகம், World Wide Web இல்
enb-news.com எனும் முகவரியில் தொடரவுள்ளது என்பதை வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.

தங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும், தொடர்ந்தும் பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்புக்கு: eelamnewsbulletin@googlemail.com

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

என்றும் தோழமையுடன்
சுபா.
14-05-2018

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...