SHARE

Tuesday, August 04, 2015

``காணாமல் போனோரின்`` உறவுகள் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிக்கை!

தேர்தலை புறக்கணிக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் 


திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து நடத்திய
கண்டனப் போராட்டத்தில் இக் கோரிக்கையை பிரகடனப் படுத்தினர்

திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் மற்றும் திருகோணாமலை மாவட்ட காணாமல் போனோர் சங்கத்தினால் இக்கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
புதிய அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
தமது உறவுகளை மீட்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறும், தமது கோரிக்கை தொடர்பில் விரிவான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. பல அரசியல்வாதிகள் காணாமல்போனோர் தோடர்பில் கதைக்கின்ற போதிலும் இதுவரை காலமும் எந்தவிதமான முடிவுகளையும் பெற்றுத் தரவில்லை. 
எனவே இம்முறை தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளோம்!
என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ,வவுனியா, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து உறவுகளை இழந்தவர்கள் பங்கேற்றனர்.



Sunday, August 02, 2015

புதிய ஈழம்: யார் இந்த TNA?

புதிய ஈழம்: யார் இந்த TNA?:



யார் இந்த  –TNA (Tamil National Alliance)? தமிழ்க் கூட்டமைப்பா, இந்திய நாட்டமைப்பா? 
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடும் ஆற்றும் பாத்திரமும்

புதிய ஈழம்
Sunday, 29 January 2012

Saturday, August 01, 2015

பரமசிவானாருக்கு பல்லாண்டு காலத்தவம் கலைந்தது!


வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சாவடியில் ஒரு வரவேற்பு கீதம்!

TNA தேர்தல் விஞ்ஞாபனத்தின் முடிவுரைப் பந்திகள்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இந்த விஞ்ஞாபனத்தில் முன் மொழியப்பட்டிருக்கும் செயற்திட்டங்கள் எவை?

சமரன்: நாடாளமன்ற முறை குறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும்

நாடாளமன்ற முறைகுறித்த பாட்டாளிவர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும் செயல்தந்திரங்களும்






Wednesday, July 29, 2015

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...