SHARE

Wednesday, March 21, 2012

Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka (3/6/12)

Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka (3/6/12)

=======================================================================
Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the
International Covenants on Human Rights, and other relevant instruments,

Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with
their obligations under international law, in particular international human rights, refugee and
humanitarian law, as applicable,

Noting the Report of Sri Lanka’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and its
findings and recommendations, and acknowledging its possible contribution to Sri Lanka’s national reconciliation process,

Welcoming the constructive recommendations contained in the LLRC report, including the need to
credibly investigate widespread allegations of extra judicial killings and enforced
disappearances, de militarize the north of Sri Lanka, implement impartial land dispute resolution mechanisms, reevaluate detention policies, strengthen formerly independent civil institutions, reach a political settlement involving devolution of power to the provinces, promote and protect the right of freedom of expression for all, and enact rule of law reforms,

Noting with concern that the LLRC report does not adequately address serious allegations of
violations of international law,

1. Calls on the Government of Sri Lanka to implement the constructive recommendations in the
LLRC report and take all necessary additional steps to fulfill its relevant legal obligations
and commitment to initiate credible and independent actions to ensure justice, equity,
accountability and reconciliation for all Sri Lankans,

2. Requests that the Government of Sri Lanka present a comprehensive action plan as
expeditiously as possible detailing the steps the Government has taken and will take to implement the LLRC recommendations and also to address alleged violations of international law,

3. Encourages the Office of the High Commissioner for Human Rights and relevant special
procedures to provide, and the Government of Sri Lanka to accept, advice and technical
assistance on implementing those steps and requests the Office of the High Commissioner for Human Rights to present a report to the Council on the provision of such assistance at its twenty-second session.

Sri Lanka News Debrief - 21-03-2012

Tuesday, March 20, 2012

India was still negotiating the final text with the U.S. and Sri Lanka



India inclined to vote in favour of Sri Lanka resolution: Manmohan
Special Correspondent The Hindu

Dr. Singh is keen that the future of Tamils is marked by equality, dignity, justice and self-respect.
 
 Prime Minister Manmohan Singh announced on Monday that India was “inclined to vote in favour” of a resolution on promoting reconciliation and accountability in Sri Lanka at the ongoing
19{+t}{+h} session of the U.N. Human Rights Council in Geneva.
“That, we hope, will advance our objective, namely the achievement of the future for the Tamil community in Sri Lanka that is marked by equality, dignity, justice and self-respect,'' Dr. Singh told the Lok Sabha.
 The government, though, did not yet have the final text of the resolution initiated by the United States. Highly placed sources told The Hindu that India was still negotiating the final text with the U.S. and Sri Lanka and would vote for the resolution depending on what it eventually said. Dr. Singh's statement, during his reply to the debate on the Motion of Thanks to the President's address to Parliament, was greeted by members of the AIADMK, the DMK and other parties,
with the thumping of desks.

Last week, External Affairs Minister S.M. Krishna's suo motu statement in both Houses of Parliament on the state of Tamils in Sri Lanka had failed to satisfy the AIADMK, the DMK, the CPI
and the BJP.

Responding to concerns raised by some members, Dr. Singh assured them that the government fully shared their sentiments regarding the welfare of Sri Lankan Tamils. The Prime Minister said that since the end of the conflict in Sri Lanka, the government's focus had been on the welfare and
wellbeing of the Tamil citizens.
 “Their resettlement and rehabilitation has been of the highest and most immediate priority for our government.”
As a result of India's constructive engagement with the Sri Lankan government and its assistance programme, “a modicum of normalcy is beginning to return to the Tamil areas in Sri Lanka, ” he said. India had emphasised to the Sri Lankan government that there should be a “genuine process” of reconciliation to address the grievances of the ethnic Tamils and implement the
recommendations of a high-level committee, whose report was tabled in that nation's Parliament, he said. For lasting peace, India had asked the Sri Lankan government to stand by its commitment to broaden the dialogue with political parties, including the Tamil National Alliance, to achieve a
forward looking and meaningful devolution of power and genuine national reconciliation, Dr. Singh said.

Wednesday, March 14, 2012

ஒற்றையாட்சிச் சிங்களம் ஒழிக! சுயநிர்ணய தமிழீழம் மலர்க!!


ஒற்றையாட்சிச் சிங்களம் ஒழிக! சுயநிர்ணய தமிழீழம் மலர்க!!
Sri Lanka's Killing Fields : War Crimes UnpunishedNext on Channel 4: Wednesday 14 Mar 2012 at 10.55pm(gmt)
====================================
படியுங்கள்! பரப்புங்கள்!!
“ஸ்ரீலங்கா கொலைக்களம்`` போர்க்குற்ற ஆவணப்படம் -2011- ஒரு மீளாய்வு http://senthanal.blogspot.com/2011/12/blog-post_21.html

பெண் போராளிகளைக் களங்கப்படுத்துவது உடன் நிறுத்தப்படவேண்டும்!

நிமிடத்திற்கு நிமிடம், தமிழ் இணைய ஊடகங்களால் நிர்வாணப்படுத்தப்படும் பெண் போராளிகள்!

சிங்களவன் செய்த கொடூரத்திலும் பார்க்க, இவர்கள் நடாத்தும் வியாபாரம் மிக... மிக... அதிகமாக உள்ளது...' என்று கலங்குகின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

'புதிய போர்க் குற்றப் படங்கள் காட்டுகின்றோம்... எங்கள் இணைய தளத்திற்கு வாருங்கள்...' என்று வலிந்திழுக்கும் வர்த்தக நோக்கத்துடன் தமிழ் இணையங்கள் சில வெளியிடும் சிங்களப் படைகளால் கோரமாகக் கொல்லப்பட்ட போராளிகளது படங்களும், அவலக் காட்சிகளும் தமிழ் நெஞ்சங்களைக் கோபமூட்டி வருகின்றன. அதுவும், பெண் போராளிகளது நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவுகளை 'ப்ளாஷ்' தொழில் நுட்ப உதவியுடன் தொடர் மின்னல் காட்சிகளாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மிகக் கொடூரமான ஈனச் செயலாகவே நோக்கப்படுகின்றது.

போர்க் குற்றப் படங்கள் தமிழ் மக்களுக்கான காட்சிப்படுத்தல்களுக்குரியவை அல்ல என்பதை பொறுப்பற்ற சில இணையத் தளங்கள் புரிந்து கொள்வதில்லை. கோரமான, கொடூரமான படங்களை இணைத் தளங்களில் பார்வைக்குப் பதிவு செய்வதை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும்  சிலரால் நடாத்தப்படும் இணையத் தளங்கள் தமிழ்ப் போராளிகளது கோரமாகக் கொலை செய்யப்பட்ட படங்களையும், பெண் போராளிகளது சீரழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆடைகள் அற்ற உடல்களையும் காட்சிப் பொருட்களாக்கியுள்ளன.

இந்த இணையத் தளங்களால் மின்னும் காட்சிகளாக்கப்பட்ட அந்தப் பெண் போராளி ஒருவேளை அதன் பொறுப்பாளர்களது தங்கையாக இருந்திருந்தால், தாயாக இருந்திருந்தால் இப்படித்தான் காண்பித்து நிறைவடைந்திருப்பார்களா? என சமூக அக்கறையுள்ள மனிதர்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.

போர்க் குற்றத்திற்காக அடையாளப்படுத்த வேண்டிய காட்சிகளாக இருந்தால், குறைந்தபட்சம் அவர்களது முகங்களையாவது மறைத்திருக்க வேண்டும். நாகரீகமடைந்த ஊடகவியலாளாகள் கோரமான காட்சிகளை வண்ணமிழக்கப்பண்ணி, கறுப்பு வெள்ளையாகக் காட்சிப்படுத்துவதும் உண்டு. ஆனால், சில தமிழ் இணையங்கள் மனங்களில் எந்தவித சலனமும் இன்றி எங்கள் தேசத்தின் ஆன்மாக்களை நிர்வாணமாகவே காட்சிக்கு விடுவதில் போட்டி போடுவதைத்தான் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் இணையத் தளங்களை நடாத்துபவர்கள் தயவு செய்து மனம் கோணாமல் எங்கள் மக்களது மன வருத்தங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் கிடைக்கக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்களை அதற்குரிய இடங்களில் சமர்ப்பியுங்கள். உங்கள் இணையத் தளங்களில் அந்தப் படங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை, உங்கள் உடன் பிறந்தவாகளது படங்களாக எண்ணி, அதற்குரிய மரியாதையை வழங்குங்கள். கண்ணியத்துடன் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ எங்கள் மனங்களை ரணப்படுத்துகின்றீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். எங்களில் பலர் அந்தப் படங்களில் உள்ளவர்களது இரத்த உறவுகள், தோழர்கள், பெற்றவர்கள், வளர்த்தவர்கள் என அத்தனை நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எங்கள் போராளிகளை உங்களுக்கான விளம்பரப் பொருட்களாக்கிவிடாதீர்கள். மரணித்த எங்கள் பெண் போராளிகளை நிமிடத்திற்கு நிமிடம் நிர்வாணப்படுத்தாதீர்கள்!

- ஈழநாடு
==================
பிற்குறிப்பு:
இந்த இழிசெயலில் இறங்கியிருப்பவை  இணையங்கள் மட்டுமல்ல இனமானத் தமிழ்ச் சிங்கங்களும்தான். மேடைப்பேச்சுக்களில் இருந்து ஆவணப்படங்கள் வரை இந்த அயோக்கியத்தனம் மலிந்து கிடக்கின்றது. வை.கோவின் ஆவணப்படம் இதற்கு சிகரமாகவுள்ளது.
ஒரு ஆதாரத்துக்காக இவை தேவைப்பட்ட காலம் முடிந்துவிட்டது.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. `கற்பழிப்புக் காட்சியில் ` சுகம் காணுவது அற்ப  அரை  நிலப்பிரபுத்துவப் பண்பாடாகும்.

Monday, March 12, 2012

மக்களுக்கு கூற முடியாத சம்பந்தனின் ஜெனீவா ரகசியம்?

``மக்களுடைய உணர்வுகள், விருப்பங்களை சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்த முயாது, அந்த நகர்வுகள் பற்றிய செயற்பாடுகளை எல்லாம் விரிவாக   ஊடகங்களுக்கும், மக்களுக்கும் பகிரங்கமாக கூறமுடியாது, ரகசியத்தன்மை என்பது ஜெனீவா விவகாரத்தில் முக்கியமானதாக உள்ளது.``  இரா.சம்பந்தன்.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கம் முயற்சி – இரா.சம்பந்தன்.
12. Mar, 2012 Categories: Srilankan News

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதப்புரைகளில் திருத்தங்களை செய்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியை பெற இலங்கை அரசாங்கம் முயற்சி
எடுத்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதனால் ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடையும் வரை அரசாங்கத்தை
சந்திக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறிய சம்பந்தன், அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை தொடர்பான விவகாரங்களை கையாள ஜெனீவாவில்
கூட்டமைப்பின் சார்பில் பிரதிநிதி ஒருவர் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள் தமிழ் நாளேடுகளின் பிரதம ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள் மற்றும் கொழும்பிலுள்ள மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் ஆகியோரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியபோதே சம்பந்தன் இவ்வாறு கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமிழத் தேசிய கூட்டமைப்பு ஏன் பங்குகொள்ளவில்லை என்பது குறித்து விளக்கமளித்த சம்பந்தன் சர்வதேச
நாடுகளினுடைய ஆலோசணைகளை மீறி செயற்பட முடியாது என்று குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டம் மற்றும் சர்வதேச கூட்டங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் அழுத்தங்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு என்று கூறிய சம்பந்தன் அதன் ஓரு கட்டமாகவே அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். ஜெனீவாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சென்றிருக்கலாம் என தமிழ் மக்களில் அனேகமானவர்கள் கூறுவது நியாயமானதுதான் என்று தெரிவித்த அவர், அவர்களுடைய உணர்வுகளை கூட்டமைப்பு மதிக்கின்றது என்றும் தெரிவித்தார். ஆனால் மக்களுடைய உணர்வுகள், விருப்பங்களை சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பயன்படுத்த முயாது என்று குறிப்பிட்ட அவர், அந்த நகர்வுகள் பற்றிய செயற்பாடுகளை எல்லாம் விரிவாக ஊடகங்களுக்கும், மக்களுக்கும் பகிரங்கமாக கூறமுடியாது என்றும், ரகசியத்தன்மை என்பது ஜெனீவா விவகாரத்தில் முக்கியமானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கும் என்று
கூறமுடியாது என்று தெரிவிக்கும் சம்பந்தன், ஆனாலும் முதன் முறையாக சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்துக்கு பொறுப்புக்கூறு வேண்டிய
கடப்பாடு ஒன்று உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இவ்வாறான ஒரு இடத்தில் இருந்துதான் தமிழர்தரப்பு மேலும் பல முன்னேற்றகரமான
செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மீது உள்ள கோபங்களை
உடனடியாக தீர்ப்பதற்கு மனித உரிமைச் சபையின் கூட்டத்தை பயன்படுத்த முடியாது என்றும் கூறினார்.

அதற்கு மேலும் சில நகர்வுகள் தேவைப்படுவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். அதேவேளை இலங்கையிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளை பிளவு
படுத்தியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிளவு படுத்த அரசாங்கம் முயற்சித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனாலேயே தமிழ்
தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஒரேயொரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரான பியசேனவை அரசாங்கம் களவாடியதாக குற்றமச்hட்டிய
சம்பந்தன், அத்துடன் நின்றுவிடாது தொடர்ந்தும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயன்றுவருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி: தீபம் தொலைக்காட்சி இணையம்.

Saturday, March 10, 2012

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வடக்கில் அதிகரிப்பு

பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை வடக்கில் அதிகரிப்பு; வரணியில் இறந்த சிறுமி தொடர்ந்து துஸ்பிரயோகத்துக்கு உள்ளானார்

வரணி இடைக்குறிச்சியில் தற்கொலை செய்தார் என்று கூறப்படும் சிறுமி கடந்த மூன்று வருடங்களாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வன்னியில் நடந்த இறுதிப் போரில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். வறுமை காரணமாக தாயார் சிறுமியை ஹற்றனில் கிறிஸ்தவ மதகுரு இயக்கி வந்த சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த இல்லத்தில் சிறுமியைச் சேர்க்கும் போது அவருக்கு வயது 15 என்று அவரது தாயார் தெரிவித்தார்.

ஹற்றன் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த போது சிறுமி பாலியல் ரீதியாகத் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் கருத்தரித்தார். பின்னர் அவருக்கு கருக்கலைப்புச் செய்யப்பட்டது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

 இந்தச் சிறுமி மீதான துஸ்பிரயோகம் தெரிய வந்ததை அடுத்து மதகுரு நடத்தி வந்த சிறுவர் இல்லம் அதிகாரிகளால் மூடப்பட்டது என்றும்
தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே அந்த மதகுரு இடைக்குறிச்சியில் தனது இல்லத்தை ஆரம்பித்துள்ளார்.

தனது பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும் இறந்து போனதற்கும் மதகுருவே பொறுப்புக்கூற வேண்டும் என்று சிறுமியின் தாயார் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

வரணியில் தங்கியிருந்தபோது திருமணமான ஆண் ஒருவருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் ஏற்பட்டது என்றும் அது கைகூடாத நிலையிலேயே
அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

 சிறுமியை சக பெண்ணாக மதிக்காமல் காமப் பொருளாகப் பார்க்கப்பட்டமையும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தமையும் உரிய அன்பு
கிடைக்காமையுமே சிறுமியின் இந்த துயர முடிவுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, போரின் பின்னர் வடக்கில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் கூடியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடத்தில் இது வரையிலும் சிறுமிகள் மீதான 24 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையைச்
சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

இதேகாலப் பகுதியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பாக 32 சம்பவங்கள் பற்றி முறையிடப்பட்டிருக்கின்றது. 2010 ஆம் ஆண்டு இந்த
எண்ணிக்கை 102 ஆக இருந்து. 2011ஆம் ஆண்டு இது 182 ஆக அதிகரித்திருக்கின்றது.

பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இப்போது இடம்பெற ஆரம்பித்துள்ளதாக மருத்துவர் சிவரூபன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இத்தகைய வன்முறைப் போக்கிற்கு மக்களிடையே அருகியுள்ள விழிப்புணர்வு, சிவில் நிர்வாகத்தில் காணப்படுகின்ற மென்மைப் போக்கு, ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் என்பன முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றது. அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும் என மருத்துவர் சிவரூபன் குறிப்பிடுகின்றார்.

"சிறுமிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் தொடர்பாக பரபரப்பாகத் தகவல்கள் வெளியிடப்படுகின்ற அளவு வேகத்திற்கு குற்றச்
செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைப்பதாகத் தெரியவில்லை'' என்கிறார் அவர்.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள்
அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.

நன்றி: யாழ் உதயன்

Wednesday, March 07, 2012

சிங்களமே, செங்களமாடிய புலிப் பெண் போராளிகளை விடுதலை செய்!

சர்வதேசப் பெண்கள் தினம்
மார்ச் 8 2012


சிங்களமே,
தமிழினி உள்ளிட்ட யுத்தக் கைதிகளானஅனைத்து விடுதலைப் புலிப் பெண் போராளிகளையும் நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

 == புதிய ஈழப்புரட்சியாளர்கள் ==

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...