SHARE

Monday, January 30, 2017

மெரினா மாணவர் எழுச்சி கழகம் கண்டன அறிக்கை

மெரினா ஜெல்லி ராணி
மாணவர் எழுச்சியை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு
 விவசாய தேசிய இயக்கமாக முன்னெடுப்போம்.
 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்                        People Democratic Youth Association PDYA 
 
* மெரினா மாணவர் எழுச்சி ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. மோடி அரசின் மக்கள் விரோதக் கொளகைகளை எதிர்த்த அனைத்து மக்களின் போராட்டத்தின் தொகுப்பேயாகும்!

* ஜல்லிக்கட்டுக்கான மாணவர், இளைஞர் போராட்டம் , ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தத்தின் மூலம் வெற்றிப்பெற்றுள்ளது. அதற்காக தீரமாக
போராடிய மாணவர் – இளைஞர்களை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்!

*அதேசமயம், மாணவர்களின் எழுச்சியை அடக்கும் நோக்கத்துடன் மோடி அரசும், தமிழக அரசும் இறுதி கட்டத்தில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இத்தகைய மக்கள் எழுச்சி இனி ஏற்படக் கூடாது
என்று திட்டமிட்டே காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமிழக காவல் துறை தொடுத்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

*தமிழக சட்டமன்றத்தின் சட்டத் திருத்தத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின் ஒரு கட்டம் முடிவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாகத் தடையை நீக்க மறுத்து மத்திய அரசோ,
உச்சநீதிமன்றமோ முடிவு செய்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்!

*ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழர் தேசிய பண்பாட்டுக்கான போராட்டம் என்று சொன்னால் (மட்டும் Ed) போதாது. உண்மையில் தமிழர்களின் பொதுவான பண்பாட்டு இயக்கமாக ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.
 
* ஜல்லிக்கட்டு போராட்டம் (Ed), ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடமை எதிர்ப்பு என மாணவர் எழுச்சியாக தொடர வேண்டும்!
 
* ஜல்லிக்கட்டு போன்ற நிலப்பிரபுத்துவ
வர்க்கங்களின் சாதி ஆதிக்கத்தில் உள்ள பண்பாட்டை ஒரு பொதுப் பண்பாடாக, அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய, ஆணாதிக்கத்தை ஒழிக்கக் கூடிய ஜனநாயகப்
பண்பாடாக வளர்க்க போராடுவோம்!
 

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
ஜனவரி                                                            2017

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...