SHARE

Thursday, March 27, 2025

டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய நூல் வெளியீடு

டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் நூலின் தமிழாக்கம் தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு

Thinakkural Digital News Team  

 டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் “இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க” என்ற நூல் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டது.

இதன் போது தலைமை உரையை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வீரகத்தி தனபால சிங்கம் நிகழ்த்தியதோடு நூல் விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர் அனந்த் பாலகிட்ணர் நிகழ்த்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் வெளியிட மூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் அவர்கள் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்தும் நிகழ்வில் சட்டத்தரணி மற்றும் சமூக, அரசியல் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருள்லிங்கம் மற்றும் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் ஆகியோரும் சிறப்புரைகளை வழங்கியிருந்தனர்.🔺

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...