SHARE

Monday, February 03, 2025

ஜனாதிபதி சுதந்திர தின அறிக்கை

தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்

இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம். கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் – ஒரு அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் இப்போது ஒன்றாக போராடுகிறோம்.

நமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும். இரத்தம், கண்ணீரால் போராடிய வரலாற்றின் அனைத்து தலைவர்களினதும் தியாகத்தின் எதிர்பார்ப்பு அதுவேயாகும். அதற்கிணங்க, நாம் தனித்தனியாகவும், கூட்டாகவும், ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பாக, சுற்றாடல் மற்றும் ஒழுக்கநெறியூடாக அபிவிருத்தியடைந்த நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

புதிய அரசாங்கம் என்ற வகையில், கடந்த நான்கு மாதங்களில், வலுவான பொருளாதார அடிப்படையில் நாட்டை ஸ்திரப்படுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தை நடைமுறைப்படுத்துதல், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பிலான புதிய முன்னுதாரணத்துக்காக அர்ப்பணித்தல், இனவாதம், மதவாதம் இன்றி மற்றவர்களை சமத்துவம், கௌரவம்,கரிசனையுடன் பார்ப்பது, நடத்துவது மற்றும் சட்டத்தை அமுல்படுத்துதல், ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

கிராமப்புற வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான எமது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை உறுதிப்படுத்தி, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களை கைவிடாத அணுகுமுறையை உறுதிப்படுத்தும் நலன்புரி பொறிமுறையை உருவாக்குதல், நாம் தவறவிட்ட புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் அடைந்துகொள்ள பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்க தேவையான முதல் நடவடிக்கைகளை எடுத்தல், ஊழல் ஆட்சியாளர்கள் நிறைந்த நாடு என்று முன்பு காணப்பட்ட பிம்பத்தை தவித்து, உலகின் அனைத்து நாடுகளுடனும், நாடுகளுடனும் மிகவும் நம்பகத் தன்மையுடன் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய நாடென சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையை மீள அடையாளப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறாக, ஊழல் ஆட்சியாளர்களின் ஆயிரம் அவதூறுகள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்த நாட்டின் பொது மக்களால் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கம் சீராக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எமது வாக்குறுதியின்படி இலங்கையை தேசிய மறுமலர்ச்சி யுகத்தை இட்டுச் செல்வதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். அதன்படி, மேற்கூறிய அடிப்படையில், பல நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவை நனவாகிக்கொள்ள வரலாற்றில் மிகவும் ஆக்கபூர்வமான பணிகளை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லவேண்டியுள்ளது.

அதற்காக, அனைத்து இலங்கை மக்களையும் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறும், 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில்,சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், அனைத்து இலங்கை மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.⍐

மூலம்: ஜனாதிபதி செயலகம்

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!


நாடாளமன்றம் சட்டம் இயற்றும்,  போலிச் சுதந்திரம் நாட்டை விற்கும்போதும் போதும் எழுபத்தேழாண்டுகள்!

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! 

உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

பெப்ரவரி 4, 2025 இல்  77 ஆண்டு போலிச் சுதந்திரத்துக்கு விழா எடுக்க அனுராவின் டொலர் ஆட்சி ஆயத்தமாகி வருகின்றது. System Change என்று கூறி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது JVP. ஒரு புறம் போலிச் சுதந்திரத்துக்கு விழா எடுத்துக் கொண்டு, மறு புறம், அந்த தொடர் காலனிய அடிமைத்தனத்தை, சுரண்டலை, ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசுமுறையை (System) மாற்றப் போவதாக JVP - அனுரா ஆட்சி கூறுவது கடைந்தெடுத்த அயோக்கித்தனமா இல்லையா?

அறக(ga)லயவும் சுதந்திரமும்:

தன்னியல்பான அறக(ga)லய கிளர்ச்சியின் உணர்ச்சியை அறுவடை செய்து 50% வாக்குகள் பெற்று, நாடாளமன்ற ஜனநாயகத்தின் புண்ணியத்தில் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி அமைத்தது அனுரா-சில்வா ஜே.வி.பி கும்பல்.

தன்னியல்பான அறக(ga)லய கிளர்ச்சி ( 2022 மார்ச்), அது தானே பிரகடனப்படுத்தியவாறு 75 ஆண்டுகால ஆட்சியின்  தொடர் துன்பங்களின்  தவிர்க்கவியலாத விளைவாகும்.

முதலாவதாக: இந்த 75 ஆண்டுகால ஆட்சியின் சுமார் 40 ஆண்டுகள், இருந்த இந்த அமைப்பு முறையில் தேர்தலில் பங்கேற்று வந்த கட்சி ஜே.வி.பி.1979 இல் கொழும்பு மாநகர சபை, 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை, 1982 இல் ஜனாதிபதித் தேர்தல், 1983 பொதுத் தேர்தல் பல ஆண்டுக்கு ஜே.ஆர் ஆட்சியால் பின்போடப்பட்டதால் பங்கு கொள்ள  இயலவில்லை.1994 பொது தேர்தலில் பங்கு கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா வெற்றி பெற தன்னை அர்ப்பணம் செய்தது. 

2002 இலிருந்து இந்த அமைப்பு முறையின் காவலராக இருந்த ஆளும் கும்பலுடன், அந்த ஆட்சியாளர்களோடு அவர்களது ஆட்சிகளோடு,  கூடிக் குலாவி ஆட்சி சுகம் அனுபவித்து வந்த கட்சி ஜே.வி.பி.

இரண்டாவதாக: இலங்கை அரசியல் அதிகாரத்தின் அசைக்க இயலாத சமூகத் தூணான பெளத்த மத பீட சமூக சக்திகளின் அரசியல் குரலாக, போர் வாளாக இருந்த, இருந்துவருகின்ற கட்சி ஜே.வி.பி.

மூன்றாவதாக: இந்த 75 ஆண்டுகால ஆட்சி என்பது ஈழதேசிய ஒடுக்கு முறையில் தங்கியிருந்து, அதன் மீது தேசிய ஒடுக்குமுறை அரசு ஒன்றைக் கட்டியமைத்து, அதனை பாசிச மயப்படுத்திய காலமாகும். இந்தக் கட்டிடத்துக்கு மண் சுமந்த கட்சி ஜே.வி.பி. குறிப்பாக 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை ஈழ தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தைத் தொடர-பேச்சுவார்த்தையை முறியடிக்க- மூர்க்க வெறியோடு முன்னின்று உழைத்த கட்சி ஜே.வி.பி

``ரணில் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்`` என்ற கண்டுபிடிப்பை சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து யுத்தத்துக்கு ஆதரவு திரட்டிய இழி செயலை தனது வரலாற்றுப் பெருமையாக இன்றும் கூறி வருகின்ற கட்சி ஜே.வி.பி. 

2022-1965 தனது 57 ஆண்டு வாழ்க்கையில் முதல் 17 ஆண்டுகள் ஜே.வி.பி தன்னை ஒரு அரசியல் கட்சியாக கட்டியமைக்க செலவிட்டது. எஞ்சிய 40 ஆண்டுகளும் இந்த அமைப்பு முறையில் தான் ஜே.வி.பி அரசியல் நடத்தியது.

1972-1987 கிளர்ச்சிகளின் ஊடாக அரசிதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற கனவு முயற்சிகளும் இந்த அமைப்பு முறையை அங்கீகரித்தே அமைந்திருந்தன. 

இரண்டு கேள்விகள்;

1) ஆக 2022 இல் ஜே.வி.பி இந்த `அமைப்பு முறை மாற்றம்- System Change` என்கிற நிலைப்பாட்டிற்கு எப்படி வந்தது?

இது களவாணி ஜே.வி.பி அறக(ga)லய இயக்கத்திடமிருந்து களவாடியது. 

அறக(ga)லய இயக்கம் எதையெல்லாம் எதிர்த்ததோ அவை அனைத்தினதும்  பங்காளிக் கட்சியாக இருந்தது  ஜே.வி.பி.

2) அப்போ எப்படி ஜே.வி.பி அற(ga)லயவுக்கு தலைமை தாங்கியது?

மேலெழுந்தவாரியான பார்வைக்கு அபத்தமாகத் தோன்றக்கூடிய இந்த முரண் உண்மை உலகமெங்கும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளது.

இதைத் தொடர்வதற்கு `நாடாளமன்ற ஜனநாயகம்` ஆளும் வர்க்கங்களுக்கு மிகச் சிறந்த சாதனமாக உள்ளது.

இதன் மர்மத்தை விளக்கி லெனின் பின்வருமாறு கூறினார்: 

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித்தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

அற(ga)லய ஒரு தன்னியல்பான கிளர்ச்சியென்பதால்  அது தானே தனது விடுதலைக்கு , விமோசனத்துக்கு எதிரான வர்க்கத்தின் நலனை சுமந்து கொண்டிருந்தது. ஜே.வி.பி வசதியாக இதற்குள் ஒழிந்து கொண்டது.

இதனால் எந்த வரையறையும் செய்யப்படாத சூக்குமான சூத்திரங்களைக் கொண்டு-``அமைப்பு மாற்றம்``, ``சுத்தமான சிறீ லங்கா`` என்றவாறு- மக்களின் உணர்வுக்கு வடிகால் அமைக்க முடிந்தது. இத்தைகைய ஒரு தலைமையின் கீழான தன்னியல்பான கிளர்ச்சியை அமெரிக்க இந்திய அந்நிய சக்திகள் `கோத்தா ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துக்கு-ஜே.வி.பி உடன் செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தத்துக்கு அமைய- பயன்படுத்திக் கொண்டனர். இராணுவ அடக்குமுறையைச் சந்திக்காமலே அரக்களையவினரால் கோத்தா தடாகத்தில் நீராட முடிந்தது. அவர்கள் நீராடிய அழகை உலகமே பார்த்து வியந்தது!   

இவ்வாறாகத்தானே ஜே.வி.பி அந்நிய ஆதரவுடன் நடத்தி முடித்த  அற(ga)லய  ``புரட்சி``, பொல்லை ரணிலிடம் கொடுத்து, தேர்தல் ஒன்றை நடத்தி அநுராவின் கைக்கு மாற்றிக்கொண்டது.

அநுரா தேர்தலில் வெல்வார் என்று முதன் முதலில் மோடி மாந்திரீகம் கண்டுபிடித்து, அரசமரியாதை விருந்தளித்து `விபரங்களை` சொல்லி அனுப்பி தேர்தலில் வெல்ல வைத்தது.

களத்தில் பலர் குதித்து ஜனநாயகம் களைகட்டி இருந்தபோதும் ஆடுகளம் அநுரா வெற்றிக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது.

அநுரா அரியணை ஏறினார்.

எவ்வளவுதான் அற(ga)லய ஒரு தன்னியல்பான கிளர்ச்சியாக இருந்த போதும் அது நெடுங்கால வெஞ்சினத்தின் வெளிப்பாடாக இருந்தது.

அதிலிருந்து ( இயல்பாகவே பருண்மையான ஆய்வில், தத்துவ பரிசீலனையில், சர்வாங்க வர்க்கப் போராட்டம் தழுவிய வகையில், வகுக்கப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள், முழக்கங்கள் என அரசியல் போர்த்தந்திர வழியில் அமைந்தவையாக இல்லாத போதும்) வெளிப்பட்ட ஒரு பொது உணர்வு புரட்சியின் அடி நாதமாகும்.

அதை அவர்கள் வரையறை செய்யாமல் `அமைப்பு முறை மாற்றம்- System Change' என்று அழைத்தார்கள், கூடவே

1) கோத்தா மட்டுமல்ல `225 Go Home`என்றார்கள்; கைத்தடி ரணிலுக்கு மாறிய போது `Ranil Go Home' என்றும் பரிதாபமாகச் சொன்னார்கள்.ரணில் ஆட்சி சத்தம் சந்தடி இல்லாமல் இயக்கத்தை நசுக்கியது.

2) கோத்தாவின் அரண்மனைக்குள் புகுந்த போது இன்று தான் எமக்கு ``உண்மையான சுதந்திரம் கிடைத்தது `` என்று கூறி தேசியக் கொடியை முத்தமிட்டார்கள்;

3) மக்களுக்கு விசுவாசமானவர்கள், அறிவு மிகுந்தவர்கள், திருடர்கள் அல்லாத நல்லவர்களை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்கள்.

4) இலங்கையருக்குள் உருவாக்கப்பட்டிருந்த பாகுபாட்டை புறந்தள்ளி இருந்தார்கள்.

மறுபுறம் சர்வதேசக் காரணிகள் என்ற வகையில்

1) அமெரிக்கா திருமலைத் துறைமுகத்தை  அபகரிக்க இடமளிக்க மறுத்தது, 

2) சீன ஆதரவுப் பாதையை எடுத்தது, 

என்பன அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும், `கோத்தா ஆட்சிக் கவிழ்ப்புக்கான` பொது அடிப்படையை வழங்கின.

உள்நாட்டுக் கிளர்ச்சியின் அரசியல் பலவீனம், புறவயமாக சாதகமாக அமைந்த கோத்தா ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் இறுதியாக  அநுரா-சில்வா ஆட்சி அமையக் காரணமாய் அமைந்தன.

காலை முரசு 23-01-2025


அனுரா ஜனாதிபதியானார், நாடாளமன்றம் கூடி அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது, அமைச்சுக்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுவிட்டன, கணிசமான அளவுக்கு படைத்தரப்பும், உளவுப்பிரிவும் சுத்தம் செய்யப்பட்டுவிட்டன, முதலாவது வரவு செலவுத் திட்ட முனைவுகள் விவாதத்துக்கு வந்துவிட்டன, இரண்டு முக்கிய வெளிநாட்டு விவகாரம் சார்ந்த அரசு முறைப் பயணங்கள் முடிந்து விட்டன, IMF வலை விரித்தபடி உள்ளது, பங்குச் சந்தை தலை தெறிக்க ஓடுகின்றது;

அந்த உண்மையான சுதந்திரம்?

ஜே.வி.பி மந்திரஜால இயக்கம் அல்ல என்பதால் மக்கள் கால அவகாசம் அளித்து காத்திருக்கின்றனர்.கோரிக்கையைக் கைவிடவில்லை.மறக்கவும் இல்லை, மறக்கப் போவதும் இல்லை. போதுமான காலம் முடிகிற போது சுதந்திரம் கிடைத்திருக்குமா? கிடைக்குமா??

இதற்கு விடைகாண ஏற்கெனவே இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தை அதன் தன்மையை ஆராய்ந்து கண்டறிய வேண்டும்.

போலிச் சுதந்திரமும் வரலாற்றுப் பொய்மையும். 

1948 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட  சுதந்திரம் ஒரு தனி நிகழ்வு அல்ல.அது இலங்கை என்கிற தனி ஒரு நாடு மட்டும் சுதந்திரம் பெற்றுக் கொண்ட கதை அல்ல.

அது பிரபுத்துவ மன்னராட்சி சாம்ராஜ்ய காலனித்துவம், முதலாளித்துவ உதய கால காலனித்துவம், ஏகாதிபத்திய காலனித்துவம் என குறைந்தது சுமார் 500 ஆண்டு வரலாறு கொண்ட  காலனித்துவ அமைப்பு முறையின் தகர்வின் விளைவாக விளைந்தது ஆகும்.

இந்த அமைப்பு முறையின் தகர்வின் விளைவாக அது கட்டியாண்ட அத்தனை காலனி நாடுகளும் ஏறத்தாழ ஏக காலத்தில் நேரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டன.

எல்லாக் காலனித்துவ நாடுகளும் தமது காலனிகளை  நேரடியாக ஆட்சி செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு காலனிகளை தளர விட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

காலனித்துவ ஆட்சியின் கொடுங்கோன்மை, அதை எதிர்த்து காலனி நாடுகள் அனைத்திலும் சினங்கொண்டெழுந்த மக்களின், குறிப்பாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் கலகங்கள், மார்க்சியத்தின் பரவல், ரசிய சீனப் புரட்சிகளின் தாக்கம்,இரண்டு உலகப் போர்கள், பாசிசத்தின் விழ்ச்சி போன்ற வரலாற்று வர்க்கப் போராட்ட நிகழ்வுகள் இந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கின.

இதன் விளைவாக, போர்த்துக்கல்,ஒல்லாந்து, ஸ்பெயின், பிரான்சு, பெரிய பிரித்தானியா (ஆங்கிலேயர்) ஆகிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க காலனிகளில் இருந்து முன்கதவால் வெளியேறினர்.

இந்த வரலாற்று நிகழ்வுதான் `சுதந்திரம்` என நடைமுறையிலும்  காலனித்துவ நீக்கம்` என கோட்பாட்டு வழியிலும் பெயர் சூட்டப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. 

காலனி நாடுகளில் இருந்து அவர்கள் அடைந்த ஆதாயத்தை, அடித்த கொள்ளைகளை, தூர நோக்கில் கட்டியெழுப்பிய கோட்டை கொத்தளங்களை தட்டில் வைத்து தமக்கு வழங்கி விட்டுச் சென்றதாக எமக்குச் சொல்லப்பட்டு வருகின்றது.

பள்ளிப் பாடப் புத்தகங்களில் கல்வி என்று போதிக்கப்பட்டுவருகின்றது.

இதன் விளைவாக  உருவான ஒரு அடிமை அறிவாளிக் கூட்டம்  இந்த அதிகாரக் கைமாற்றத்தை சுதந்திரம் என்று போற்றித் துதித்து வாதிட்டு வருகின்றது.

மாபெரும் விவாதம், `இவ்வாறு முன்கதவால் சென்றவர்கள் பின்கதவால் மீண்டும் உள் நுழைந்து காலனியாதிக்கத்தை தொடர்கின்றனர்` என வரையறை செய்தது.

இது முதல், ஏகாதிபத்திய தாச `சுதந்திர` முகாமும், ஏகாதிபத்திய விரோத தேசிய முகாமும் ஆக வர்க்கப் போராட்டம் முன்னேறி வருகின்றது.

இவ்வாறு சுதந்திரம் அடைந்த நாடுகளில் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்ட வர்க்கங்களுடன் இணைந்து தொடர் காலனிய பொருளாதரச் சுரண்டலுக்கு, அரசியல் ஆதிக்கத்துக்கு உறிஞ்சு குழலாக இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அரசுகள் இயல்பாகவே ஜனநாயகமற்றவையாக இருந்து தீர வேண்டியது அவசியமாகும்.

இந்த ஜனநாயகமற்ற அரசுமுறை இந்நாடுகளில் எல்லாம் தேசியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்தின.இதனால்தன் தேசியப் பிரச்சனை கொதித்துக் கொந்தளிக்காத, ஒரு போலிச் சுதந்திர நாட்டைக்கூட உலகின் எந்த மூலையிலும் காணமுடியாது.  

ஏகாதிபத்திய தாச `சுதந்திரம்` போலியும், வரலாற்றுப் பொய்மையுமாகும் என்பதை கடந்த நூற்றாண்டும் சமகால வரலாறும் ஐயம் திரிபற நிரூபித்துள்ளன.

போலிச் சுதந்திரமும் இலங்கையின் தேசியப் பிரச்சனையும்:

போலிச் சுதந்திர நாடுகளில் ஜனநாயகமற்ற அரசுகளை நிறுவிய போக்கு மிக நீண்டகாலம் கொண்டதும், நேரடிக் காலனிய ஆட்சியின் தொடர் விளைவாக ஏற்படுத்தப்பட்டதும் (இது ஒன்றே போதும் இது சுதந்திரம் அல்ல என்பதை நிரூபிக்க!),  நாட்டுக்கு நாடு தனித்தன்மை வாய்ந்ததும் ஆகும். 

இலங்கையின் தேசியப் பிரச்சனையின் இரண்டு அம்சங்கள்:

இலங்கையில் காலனித்துவ ஆதிக்கம் தொடர்வதின் விளைவாக முழு நாடும் தொடர் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறவேண்டியது ஒரு அம்சம்.

இலங்கையில் தொடர் காலனிய ஆதிக்கத்துக்கான ஜனநாயகமற்ற அரசுமுறை ஈழதேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டு இருப்பதனால், ஈழ தேசம் விடுதலை அடைவது-சுய நிர்ணய உரிமை அரசியல் அமைப்பிலும், நடைமுறையிலும் அங்கீகரிக்கப்படுவது  இரண்டாம் அம்சமாகும்.

இதனால் ஈழ தேசிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் ஒரு ஜனநாயகத் தீர்வு மட்டும் தான், நிலவும் அரசுமுறையைத் தகர்க்கும். இதன் மூலம் தான் தொடர் காலனிய ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட முடியும்.

எனவே இந்த இரண்டு அம்சங்களிலும், தேசிய சமத்துவமே பிரதானமானதாகும்.

இலங்கையில் 'System Change' என்பது தேசிய ஒடுக்குமுறை அரசை, தேசிய சமத்துவ ஜனநாயகக் குடியரசாக மாற்றுவது தவிர வேறெதுவும் இல்லை. அல்லாத எதுவும் வெறும் பிதற்றலும் பித்தலாட்டமுமே ஆகும்.

அநுரா ஆட்சியின் `சுத்தம்` என்கிற அடுத்த முழக்கம், சுத்தமான அசுத்தமாகும்.

அற(ga)லய இயக்கம் `நாட்டைச் சுத்தப்படுத்துவது என்பதன் பேரால்` என்ன கருதியது என்றால், நாடாளமன்ற தொடர் காலனிய நாடு என்ற ஒரே காரணத்துக்காக ஒரு நாடு, 2022 இல் இலங்கை அடந்திருந்த நிலையை எட்டியிருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதற்கு இட்டுச் சென்ற காரணிகளை சுத்தம் செய்யவேண்டுமென்றே கருதினார்கள்.அந்தக் காரணிகள் என்ன என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பதைக் கீழே காண்போம்.

JVP என்ன செய்ததென்றால் மீண்டும் அற(ga)லய `சுத்தத்தைக்` கடன் வாங்கி தேர்தல் மேடையில் பேசி வாக்குப் பொறுக்கியது. அதிகாரத்தைக் கைப் பற்றியதும் சுத்திகரிப்பை சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதிலும், அரசாங்கம்,மற்றும் அரசதிகாரிகளை ( ஊழலற்ற, ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடானவர்களாக) சிறந்த சேவகர்களாக மாற்றுவதிலும் செலவிடுகின்றது. மக்களை ஏமாற்ற தெரிந்தெடுத்த சில சில்லறை அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை என்கிற பாசாங்கு, உல்லாசப் பயணிகளைக் கவர `டெங்கு ஒழிப்பு பாணி` சுற்றுச் சுகாதாரம் என நாடகமாடி வருகின்றது.

 அற(ga)லய இயக்கம் எதிர்பார்த்த அளவுக்குக் கூட செல்லத் தயாராக இல்லை. வங்குரோத்துக்கு காரணமான குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தவர்கள் மீது கூட அனுரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. (டொனால் ரம்ப் பாணியில் கோத்தா மீண்டும் ஜனாதிபதி ஆகவும் கூடும்!) நெல் விவசாய-மற்றும் பல-சட்ட விரோத மாபியாக்களுக்கு அஞ்சி அடிபணிந்து ஆட்சி நடத்தி வருகின்றது. நெல்லுக்கு உத்தரவாத விலை  நிர்ணயிக்காமல் மாபியாக்களின் பிடியில் விவசாயிகளைத் தள்ளியுள்ளது. இவர்கள் தான் அனுராவின் ஒளிரும் ஆட்சிக்கு வாக்களித்த பெரும்பான்மையான சமூகப் பிரிவினர்.அனுரா ஆட்சி நெருப்போடு விளையாடுகின்றது!

யுத்தக் கறை சுத்தம் செய்! 

சுத்தம் பற்றிய பிரச்சனை அற(ga)லய இயக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பாரியது, பாரதூரமானது. சுத்தம் செய்வதற்கு முன்னால் அசுத்தத்தை வரையறை செய்யவேண்டும்.அது வளர்ந்த வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். அறியாத ஒரு பொருளை எவராலும் மாற்ற முடியாது, அதிக பட்சம் முட்டி மோதத்தான் முடியும்!

அரசியலில் அசுத்தம் என்பது அதிகார துஸ்பிரயோகம். அதிகார துஸ்பிரயோகம் சாத்தியம் இல்லையென்றால், சட்டமும் சட்டத்தின் ஆட்சியும் எந்தளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்தளவுக்கு நாடும் சுத்தமாக இருக்கும். நாடாள மன்ற ஜனநாயகத்தில், அதுவும் திருப்பி அழைக்கும் உரிமை இல்லாத ஜனநாயகத்தில் இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு, ஆனாலும் 2022 இலங்கை நிலைமையை தடுத்திருக்க முடியும்.

அது இலங்கையின் நாடாளமன்ற ஜனநாயகத்தின் கீழ் 77 (ஆம் இன்றுவரை), ஆண்டுகள் இருக்கவில்லை இயலவில்லை.

பல காரணிகள் மத்தியில் அவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்ட ஒரு காரணம், அதுவே அதிகாரத்தைக் கைப்பறுவதற்கு காரணமாக அமைந்தது.

ஏகாதிபத்திய தொடர் காலனிய ஆதிக்கமும் சுரண்டலும் நீடித்தாலும், எந்தளவுக்கு அதிகார துஸ்பிரயோகமும், ஊழலும் அடக்குமுறையும், வறுமையும் தலைவிரித்தாடினாலும். ஈழ தேசிய ஒடுக்கு முறையில் அதிகம் தீவிரமானவர் அதிகாரத்தைக் கைப்பற்றி விடமுடியும். வேறு எதற்கும் அந்த ஆட்சி பொறுப்புக் கூற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

ஏறத்தாழ முதல் முப்பது ஆண்டுகள் இது பிரதானமாக இரத்தம் சிந்தாமல் நடந்தேறியது, அடுத்த முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தி நடந்தேறியது. யுத்தம் ஓய்ந்த அடுத்த பதினைந்து ஆண்டுகளும் யுத்த வெற்றியே அதிகாரத்தைக் கைப்பற்ற வழி கோலியது.

இவ்வாறு அதிகாரம் கைப்பற்றப்படும் போது அதிகார துஸ்பிரயோகத்தை தடுக்க முடியாது. இப்படித்தான் அடுக்கடுக்காக அசுத்தப் படை நம் நாடு மீது படிந்து யுத்தக் கறையாக வளர்ந்துவிட்டது.

இந்த யுத்தக் கறையை யுத்தத்தின் தீவிர பங்காளியான JVP ஒரு போதும் சுத்தம் செய்யத் தலைப்படாது.

அதிசயமாக ஒருவேளை பகவான் கருணையில் விரும்பினாலும் கூட, அதை இந்த அரசுமுறையின் உள்ளிருந்து, அதனுடைய அரசாங்கத்தில் இருந்து, நாடாளமன்றத்தில் இருந்து செய்ய முடியாது.

``மிளகாய்த் தூள் வீசுகின்ற அளவுக்கு எமது நாடாளமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்திவிட்டார்கள்`` என்று அங்கலாய்க்கிற அநுரா என்கிற மார்க்சிஸ்ற் இதை எண்ணுவார் என்பது சற்று அதிகமான கற்பனைதான்!

ஆட்சியின் இதுவரையான குறுகிய நாட்களிலும் JVP தேர்தலில் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராக செயற்படுவது அப்பட்டமான அதிகார துஸ்பிரயோகமே ஆகும்.இதைத் தொடர்ந்து படிப்படியாக அசுத்தம் வருமே ஒழிய சுத்தம் வராது.

பொய் சொல்லத் தொடங்கி விட்டது. மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என ஜனாதிபதி யாழ்-வல்வெட்டித் துறையில் பச்சைப் பொய் கூறியுள்ளார். இந்தியப் பயணத்தில் மீனவர் பிரச்சனையை `` மனிதாபிமான ரீதியாக`` அணுகுவோம் என்று உடன்பாடு செய்துவிட்டு  பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம் தவிர வேறென்ன?

அது என்ன இந்த `` மீனவர் பிரச்சனையை மனிதாபிமான ரீதியாக அணுகுதல்`` என்பது? இந்த வார்த்தைகளை வைத்து இதற்கு ஏதாவது பொருள் காணமுடியுமா? இல்லவே இல்லை. (ஆங்காடிகளில் இருக்கும்; ``உங்கள் பொக்கெற்றுக்களை நிறையுங்கள்``, `` சேமியுங்கள் $$$ `` என்பது போன்றது இது. குறிப்பான அர்த்தம் எதுவுமில்லாத வெற்று ராச தந்திர சொல்லாடல் இது. 

`பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும்` என நாம் இந்தியாவுக்கு ஆலோசனை சொல்லலாமா?

ஆனால் உடன் பாடு என்னவென்றால் இலங்கைக் கடலில் இந்தியர்-தமிழக திராவிடர்- தொழில் செய்வதை தடுக்கக் கூடாது. அது இந்தியாவின் உரிமை. அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான இந்திய அரசின் பதில் நடவடிக்கை இதனையே நிரூபிக்கின்றது.

ஒரு கட்டத்தில் இந்தப் பொய்களைச் சகிக்காமல் மக்கள் மீண்டும் தெருவில் இறங்குவார்கள். அப்போது மக்களை நசுக்க அடக்குமுறை எந்திரம் தயாராக இருக்க வேண்டும், இதற்குத் தான் கால அவகாசம் கோருகின்றது அனுரா ஆட்சி.

கால அவகாசம் அனுராவின் ஆட்சித் தந்திரம்.

எதை நிறைவேற்றுவதற்கும் ஒரு கால நிர்ணயம் உண்டு என்பது எல்லோரும் அறிந்த மிக எளிமையான உண்மையே!

சமஸ்டிக் கட்சி அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்வுகாண சிங்கள ஆட்சியாளர்களுக்கு 75 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தது;

இந்தியப் பேரரசு 13வது திருத்தத்தை-முழுமையாக!_நிறைவேற்ற 38+ ஆண்டுகள் அவகாசம் கொடுத்து வருகின்றது;

ஐ.நா.சபை போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற 16+ ஆண்டுகள் அவகாசம் கொடுத்து வருகின்றது;

இவை எதையும் நிறைவேற்ற கொள்கை அளவில் JVP தயாராக இல்லை.

இது போலத்தான் நாடு தழுவிய பிரச்சனைகளிலும்:

1- IMF பிரச்சனையில் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக ரணில் விட்ட இடத்தில் இருந்து அதே திட்டத்தைத் தொடர்கின்றது.

2- புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாதச் சட்டத்தை நீக்க மாட்டோம் என்கின்றது.இதன் பொருள் என்ன? புதிய சட்டம்  பயங்கரவாதச் சட்டம் போலல்லாது சிறந்த சாதாரண சட்டமாக இருக்குமானால் அதுவரை இது இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதே போலவே இருக்குமானால் அப்படி ஒரு ``புதிய சட்டம்`` தேவை இல்லை!

அப்போ எதற்கு  திட்டமிடுகின்றது JVP ?, இதை விட மோசமான ஒரு சட்டத்தால் இதைப் பிரதியீடு செய்யப் போகின்றது. இதற்குத் தான் கால அவகாசம் தேவைப்படுகின்றது.

அல்லாமல் கொள்கை அளவில் தயாரில்லாத ஒரு பிரச்சனைக்கு கால அவகாசம் கோருவது கள்ளத் தந்திரம்.

அதாவது கால அவகாசம் கேட்டு மக்களைச் சாந்திப்படுத்துவது. அதே நேரத்தில் மக்கள் விரோதக் கொள்கைகளை நிறைவேற்றுவதும், அடக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதும்.

சாந்தியின் எல்லை கடந்து மக்கள் அரசைச் சந்திக்கும் போது அரசின் இயல்பை-புத்தியைக் காட்டுவது அடக்குமுறையை ஏவுவது.

இவ்வாறுதான் கால அவகாசம் என்பதை ஒரு நடைமுறைத் தேவை என்கிற வகையில் அல்லாமல்  ஆட்சித் தந்திரமாக கையாளுகின்றது அனுரா ஆட்சி.

அனுரா ஆட்சி எதிர்கொள்ளும் உலகப் புறச் சூழலும் உள் நாட்டு நிலைமையும்.

உலகப் புறச் சூழல்:

நாம் வாழுவது ஏகாதிபத்தியத்தினதும்,பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தினதும் சகாப்தம் ஆகும்.இது தான் எமது அரசியல் முகவரி, இது தான் உலகின் சர்வாங்கமான விதி, இதனால் தான் உலகம் ஆளப்படுகின்றது.

எனினும் இந்தப் பொதுவான வரையறையும் குறிப்பான நிலைமையும் ஒன்றல்ல. ஏகாதிபத்தியத்தின் இன்றைய குறிப்பான நிலைமையின் குணாம்சங்கள் வருமாறு;

1) அமெரிக்காவின் முதன்மைப் பாத்திரம் நீடிக்கின்ற அதேவேளையில் பல் துருவ உலக ஒழுங்கமைப்பு உருவாகி வருகின்றது.

2) ரசிய, சீன ஏகாதிபத்திய நாடுகளோடு மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடும் அமெரிக்கா முரண்பாடு கொண்டுள்ளது.

3) முதலாளித்துவம் சந்தித்த நிதி நெருக்கடி, நிதி மூலதன ஏற்றுமதி சந்திக்கும் இடர்கள், நவீன தொழில் நுட்பங்களும் அதன் சர்வவியாபகமான தன்மையும், உலகமயம் உருவாக்கிய ஒரு புல்லுருவி வர்க்கம் இவை அனைத்தினதும் சேர்க்கையான சமூக சக்தி ஒன்று தோன்றியுள்ளது. 

4) நெருக்கடியின் தீவிரம் காரணமாக- ஒழுங்குமுறைகள் தடை என்று கருதுவதன் காரணமாக இச்சக்தி பாசிச சக்தியாக வளர்ந்து வருகின்றது.

5) ரம்ப் எலான் தலைமையிலான அமெரிக்கா இப் போக்குக்கு தலைமையேற்க, ஐரோப்பா எங்கும் நாடாளமன்ற முறைமை ஊடாக பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றது.

6) இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கமைப்பு அனைத்தையும் இது தகர்த்துவருகின்றது.புதிய நிதி மூலதன பாசிச உலக ஆதிக்க சக்திக்கு பழைய மேற்கட்டுமானங்கள் பொருந்தாதவை ஆகியதன் விளைவு இது.

7) நாடாளமன்ற ஜனநாயகமும் நடைமுறையில் காலாவதியாகி பாசிசத்துக்கான படிக்கட்டாக மாறிவிட்டது.

8) இவை அனைத்திற்கும் தீர்வுகாண உலக மறு பங்கீடு மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இணைந்துவிட்டது.

9) உலகமறுபங்கீடு என்பது இறுதியில் உலகப் போரிலேயே -உலக ஜனநாயக, சோசலிச பாட்டாளி வர்க்க சர்வாதிகார, தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி இயக்கங்கள் ஒன்றிணைந்து முறியடித்தால் ஒழிய-சென்று முடியும்.

10) ஈராக் போர் முதல் தொடர்ச்சியான போர்களின் இராணுவத் தோல்விகளாலும், பொருளாதாரச் செலவுகளாலும் பலவீனமடைந்துள்ள அமெரிக்கா, தன்னை மீளக் கட்டியெழுப்ப MAGA-Make America Great Again- இயக்கத்தைக் கட்டியமைத்து சமாதான நாடகம் ஆடி வருகின்றது. இக் காலத்தில் உலகப் போருக்கு தன்னை தயார் செய்கின்றது. 

அணிசேர்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்.

ஏகாதிபத்திய உலக ஒழுங்கமைப்பில் ஏற்படும் மேற்கண்ட மாறுதல்கள் - புதிய குணாம்சங்கள் நாடுகளுக்கு இடையேயான உறவுகளையும் மாற்றிவருகின்றன. அனைத்து நாடுகளையும் இவை பாதிக்கின்றபோதும் குறிப்பாக பிராந்திய ஆதிக்க நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை ஆகும்.

அயலவருக்கு முதன்மை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.இதனால் இயல்பாகவே நமது முதன்மையான கரிசனைக்கு உரிய நாடு இந்தியா!

இந்திய அமெரிக்க உறவு:

1) உலக மறுபங்கீட்டில் இந்தியா அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியாக உள்ளது.

2) இதன் நிமித்தம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான, அமெரிக்காவின் நம்பிக்கைத் தளமாக உள்ளது.

3) உலகமய வளர்ச்சிக்கும், கீழை நாடுகளின் தலைமைப் பாத்திரத்துக்கும் அமெரிக்க ஆதரவை பிரதியுபகாரமாக பெற முனைகின்றது.

4) தென்னாசியாசியாவில் இந்தியாவின் விரிவாதிக்க தலைமை நிலை இதற்கு வலுச்சேர்க்கின்றது.(2025-26 வரவு செலவுத்திட்டத்தில் சீத்தா, இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கியுள்ளார்!) 

5) அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எழும் ( ரசியா,சீனா தொடர்பான, மற்றும் ) பிரச்சனைகள் பொருளாதார வர்த்தக ரீதியானவை. எல்லா நாடுகளுக்கும் இடையே உள்ளவை போன்று செயல் தந்திர ரீதியானவை. ( ஐரோப்பியன் ஜூனியனில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே கூட NATO தொடர்பில் முரண்பாடுகள் உண்டு).

6) அமெரிக்க இந்திய உறவின் மையம், QUAD அமைப்பில் இந்தியா வகிக்கும் பாத்திரத்தில் அடங்கியுள்ளது (பங்குச் சந்தை மோசடிக்காரன் கையும் களவுமாக அகப்படுவதில் இல்லை!).

இலங்கை எதிர் நோக்கும் பிரச்சனை:

மேற்கண்ட ஏகாதிபத்திய, பிராந்திய விரிவாதிக்க உலக மறுபங்கீட்டுச் சூழல் தான் இலங்கையின் புறச்சூழல் ஆகும். உள்நாட்டு நிலைமைகளே தீமானகரமான சக்தி எனினும் அவை இப் புறச்சூழலுக்கு கட்டுப்பட்டவை.

இலங்கையின் எதிர்காலம் இந்த உலகமறுபங்கீட்டு போர்த் தயாரிப்பில் அமெரிக்க-இந்தியக் கூட்டின் இராணுவத் தளமாக அமையுமா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளது.உண்மையான சுதந்திரத்துக்கான சமுதாய அவசியம் இதில் தான் அடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சனை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இது சார்ந்து ( JVP உட்பட) மூன்று ஆட்சி மாற்றங்கள் நடந்துவிட்டன.

இலங்கையின் எதிர்காலம் குறித்த எந்தத் திட்டங்களும் இந்த அபாயத்தை எதிர்கொள்ள, தடுத்த நிறுத்த வல்லமை உள்ள நாடாக இலங்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இலங்கையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இன்று Fashion ஆகிவிட்ட இந்த Geopolitics இல் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும்.

இந்த நாடுகள் இலங்கையை தூண்டில் போட்டுப் பிடிக்கவில்லை. இலங்கை ஆட்சியாளர்கள் தான் அந்தத் தீயில் இலங்கையை வீழ்த்தினார்கள்.

இந்தியா 1983 ஜூலைப் படுகொலையை சாட்டாக வைத்து `தமிழரைக் காப்பதாகக் கூறி தலையிட்டு, போராட்ட அமைப்புகளுக்கு எல்லை தாண்டி பயிற்சி அளித்து இலங்கை அரசைப் பணிய வைத்து 1987 ஜூலை ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை செய்தது.அது இன்னும் அமூலில் உள்ளது.

யுத்தத்தை ஒரு தேசியப் படுகொலை மூலம் முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்துக்காக சீனாவிடம் பட்ட கடனில் இருந்து தான் சீனத் தலையீடு ஆரம்பித்தது.

இன்று இது இந்தியாவும் சீனாவும் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக வளர்ந்து, உலகமறுபங்கீட்டுப் புறச்சூழலைச் சார்ந்து அமெரிக்க இராணுவத்தளமாகும் நிலைக்கு இட்டுவந்திருக்கின்றது.

இத்தனைக்கும் காரணமாக அமைந்த `ஈழ தேசிய ஒடுக்குமுறையை`, இலங்கையின் இறையாண்மையைக் காப்பதற்கான போர் என்று சொல்லித் தான் 30 ஆண்டுகள் நடத்தி தேசியப் படுகொலையில் முடித்தார்கள்.

இலங்கையின் இறையாண்மை எப்படிக் காப்பற்றப் பட்டிருக்கின்றது என்பதற்கு, திறை சேரியும், இத்தீவைச் சுற்றியுள்ள கடலும் சான்று!

இதற்குப் பதில் சொல்ல இதய சுத்தியுள்ள ஒரு மனிதர் கூட ஒடுக்கும் தேசத்தில் உண்டா? மகா சங்கங்களுக்கு மனச்சாட்சியாவது உண்டா?

அனுரா ஆட்சி ஈழ தேசிய ஒடுக்குமுறையைத் தொடர்ந்தவண்ணம் `இலங்கையராக` ஒன்றுபட அழைப்புவிடுகின்றது. ``நான் கணவனாக நடக்க மாட்டேன், ஆனால் நீ `சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெத்தியில் பொட்டு வைத்து` வீதி வலம் வந்து  நீதியாக என்னோடு குடும்பம் நடத்த வேண்டும்`` என்று கோருவது போன்றது இது. (சம்பந்தப்பட்டவர்கள் சொந்த வீடுகளில் விசாரித்துப் பார்ப்பது எதற்கும் நல்லது!)

இது மட்டுமல்ல பொருளாதாரத் துறையிலும் ஒரு விவசாய நாடான இலங்கையை, அந்நிய பண்ட உற்பத்திக்கான தொழில் நிலையமாக மாற்றுகின்றது.பங்குச் சந்தை, உல்லாசத்துறை, டிஜிற்றல் தொழில் நுட்பம்,கல்வித் துறை சீர் திருத்தம் என அனைத்தும் அதே சுமார் 50 ஆண்டு கால உலகமயத் திட்டங்களே. காலாவதியான திறந்த பொருளாதாரக் கொள்கைகளே.

இலங்கை எதிர் நோக்கும் அபாயத்தை தடுக்க ஒரே வழி இலங்கை மக்கள் ஜனநாயகத் திட்டத்தில் ஒன்று சேருவது மட்டுமே. இதற்கு ஈழ தேசிய சமத்துவம் முன் நிபந்தனை. அல்லாமல் இந்த `இலங்கையர்` என்பது வெற்றுக் கூச்சலும், ஏமாற்று மோசடியுமே ஆகும்.

இதன் விளைவு என்ன ஆகப் போகின்றது என்றால், எஞ்சி ஏதாவது ஒன்று இருக்குமானல் அதையும் இழந்து இலங்கை நாடு அடிமைப்படும்.

எனவே போலிச் சுதந்திரத்துக்கு திரை போட்டு விழா எடுப்பது  அல்ல, உண்மையான சுதந்திரத்துக்கு அறைகூவல் விடுப்பதுதான் இன்றைய தேவை.

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! 

உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

போலிச் சுதந்திரம் பொசுங்கட்டும்!

உண்மைச் சுதந்திரம் ஓங்கட்டும்!!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே.

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

ஈழம்                                                                                                     03-02-2025

Sunday, February 02, 2025

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி

``மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும்``

யாழ்ப்பாணத்தில்  ஜனாதிபதி 

வடக்கில் காணி பிரச்சினை மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கான காணிகளை மீள வழங்குவது துரிதப்படுத்தப்படும்.

– யாழ்ப்பாண மக்களுக்கான மிகவும் பயனுள்ள திட்டமொன்றிற்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முழுமையாக விடுவிக்கப்பட தயார்

– பொலிஸ் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு அதிக வாய்ப்பு

– பரந்தன்,மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை பிரதேசங்களில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

– மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரச அதிகாரிகள் தரப்பும், அரசாங்க பொறிமுறையும் இணைந்து செயல்பட வேண்டும்

– வடமாகாண கிராமிய வீதி அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீடு

– வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம்

 யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்று காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும் , அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கடற்றொழில், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு, போக்குவரத்து பிரச்சினைகள்,ஆளணி குறைபாடு,காணிவிடுவிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. யாழ் மாவட்டத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு முன்வைத்தனர். அதில் அநேக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனுக்குடன் தீர்வு வழங்கியதோடு அவை தொடர்பில் கலந்து கொண்ட வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரைகளை வழங்கினார்.

பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதற்கு 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம் கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.

இதில், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் மீது விசேட அக்கறை செலுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

தீவுப் பகுதிகளில் போக்குவரத்து சீராக இல்லை எனவும் கிராமப் புறங்களில் சிறுவீதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் இங்கு தெரிவித்தார். கிராமப் புறங்களில் கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் தீவுகளுக்கான போக்குவரத்து குறைபாடுகள் குறித்தும் படகு சேவைகள் ஆரம்பிப்பது பற்றியும் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்த வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இணைந்து செயற்படும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வட. மாகாணத்திற்கான புகையிரத சேவைகளை அதிகப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய புதிய சுற்றுலாத் தலங்கள் இனங்காணப்பட்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க 

நடவடிக்கை எடுப்பதாகவும், அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

கடற்றொழில் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டதோடு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வுகாண இராஜதந்திர ரீதியில் அதிகபட்சமாக தலையீடு செய்வதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

மீன்பிடித்துறைமுகம்,மீனவர்களுக்கான வீட்டுத்திட்டம்,தீவுகளுக்கான படகுச் சேவைகளில் உள்ள குறைபாடுகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நீர்ப் பிரச்சினை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டிருந்ததோடு நீர்விநியோக திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி முன்னேடுப்பது குறித்து வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை முன்வைத்தார். நாட்டிலேயே மிகக் குறைந்த அளவு குழாய் நீரை பயன்படுத்தும் மாகாணமாக வடமாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்பதுடன், இம்முறை வரவு செலவு திட்டத்தில் புதிய நீர் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஜனாதிபதி, வடக்கின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் உட்பட முழு அரச சேவையையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகார தரப்பும் அரச பொறிமுறையும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதோடு தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரியில் காணப்படும் குறைபாடு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டார். சீரீ ஸ்கேனிங் இயந்திரம் ,அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற குறைபாடுகள் தொடர்பில் அவர் உரையாற்றியதோடு அவை அவசர தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் புற்றுநோயாளர் மகரகமையில் இருந்து இங்கு அனுப்புவதில் ஏற்படும் சில சிக்கல்கள் குறித்தும் சிறிய ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக வைத்தியர் ராமநாதன் அச்சுனா எம்.பி கருத்து முன்வைத்தார். வைத்தியர் இடமாற்றங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எஸ்.ஶ்ரீதரன் எம்.பி மற்றும் வைத்தியர் சரவணபவநந்தன் சண்முகநாதன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கிராமிய வீதிகளை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதோடு 180 கிலோ மீட்டரை விட அதிக வீதிகளை திருத்த வேண்டியுள்ளதாகவும் தீவுகளில் உள்ள வீதிகளே அதிகம் சேதமடைந்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். வீதி அபிவிருத்தி தொடர்பில் வடமாகாண எம்.பிகள் சிலரும் கருத்து வெளியிட்டனர்.

வடக்கிலுள்ள கிராமிய வீதிகளை புனரமைக்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அதனை முழுமையாக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ் நகர மண்டப எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது குறித்தும் ஆராயப்பட்டது. இதற்கான இந்த வருடம் 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டடத்தை பயன்படுத்தக் கூடிய வகையில் அதனை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாற்றுத் திரனாளிகளுக்கு அரச நியமனம் வழங்குகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதேசவாசி ஒருவர் கோரினார்.தொழில்வாய்ப்பு வழங்குகையில் மாற்றுத்திரனாளிகளுக்கு குறிப்பிட்ட ஒதுக்கீடொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த யாழ். மாவட்ட சுகாதார, போக்குவரத்து, நீரியல் வளத்துறை, போக்குவரத்து துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி சாதகமான தீர்வுகளை கூறினார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் கருணானந்தன், வைத்தியர் சரவணபவநந்தன் சண்முகநாதன், ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வடமாகாண பிரதமச் செயலாளர் எல். இளங்கோவன், யாழ்.மாவட்டச் செயலாளர் எம். பிரதீபன் ஆகியோருடன் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் வட பிராந்தியத்திற்குப் பொறுப்பான முப்படை அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.⍐

Economist-The Quad finally gets serious on security

Illustration-ENB 

The Quad finally gets serious on security

The Indo-Pacific coalition signals a tougher approach to China

The Economist 

AN IDENTITY CRISIS has long afflicted the Quad, a coalition that groups America, Australia, India and Japan. It began in 2007 as a security partnership of countries wary of China’s rise. But it has largely shied away from explicit military co-operation. Its summits usually exclude defence officials and uniformed officers. It does not officially do military drills

(although the four countries exercise together). And recently, it has focused more on areas such as vaccine distribution and disaster relief.

Such pussyfooting is apparently out of fashion now that Donald Trump is back. On January 21st, a day after his inauguration, his secretary of state, Marco Rubio, hosted a Quad foreign ministers’ meeting in Washington. They issued an unusually brief joint statement that was squarely focused on security and, without mentioning China, left little to the imagination.

The quartet reaffirmed its commitment to a “free and open Indo-Pacific where the rule of law, democratic values, sovereignty, and territorial integrity are upheld and defended”. It strongly opposed “unilateral actions that seek to change the status quo by force or coercion” and pledged to bolster security across multiple domains. The Quad would meet regularly before its next leaders’ summit in India, it said.

Mr Trump and Narendra Modi, India’s prime minister, also affirmed their commitment to the Quad in a call on January 27th. Many China hawks were delighted. They saw clear signals that Mr Trump remains committed to the coalition, despite his scepticism of American alliances.

Many involved with the coalition felt that the Quad had recently deferred too much to concerns about provoking China (which denounces it as an “Asian NATO”). America’s previous president, Joe Biden, elevated the Quad’s status by holding six meetings of its leaders but steered it towards providing “public goods”. Members avoided using its original title: the Quadrilateral Security Dialogue.

Still, a punchier Quad will prompt familiar concerns, especially for India. Mr Modi gets on well with Mr Trump and boosted defence ties with America following a deadly clash on the India-China border in 2020. But after reaching a deal on that border dispute in October 2024, Mr Modi wants to rebuild economic ties to China. The two countries just agreed to resume direct air links, for example.

Indian officials also worry that Mr Trump might strike a bargain with China on trade, or even Taiwan. “It is not very clear what intention Trump has in managing that relationship,” says Shyam Saran, a former Indian foreign secretary. “If there’s a tactical accommodation, obviously it will have its impact on the Quad.” Like many world leaders, Mr Modi is keen to please Mr Trump, not least to avoid tariffs. And India’s leader wants to make a success of the Quad summit in Delhi, which will probably happen in September and be Mr Trump’s first visit to India in his second term (Mr Modi may go to Washington in February).

But India remains firmly opposed to anything resembling a formal alliance with America. That could make it hard to upgrade quadrilateral military exercises. Sharing more intelligence with India via the Quad, as suggested by the Heritage Foundation’s “Project 2025” blueprint for Mr Trump’s second term, could also be complicated by India’s close ties to Russia. And though Mr Trump urged Mr Modi on their call to buy more American security equipment, India has to balance that with its limited budget and desire to make more arms domestically.

A more promising area is the Indo-Pacific Partnership for Maritime Domain Awareness, which was launched in 2022 at the second in-person Quad leaders’ summit. It contracts private companies to provide Indo-Pacific governments with near-real-time data to help monitor coastal waters and use naval and coastguard resources more effectively, particularly against Chinese incursions. The Quad began by sharing such data in South-East Asia and the Pacific and says it is expanding to the Indian Ocean region via a data centre near Delhi.

Enlisting more partners and adding more data to that programme will help to refocus the Quad on security. Enhancing “Quad Plus” activities involving other countries will help, too. The coalition will have to do much more to fulfil the promise of its January meeting. Achieving that may push India beyond its comfort zone. But it could finally transform the Quad into an effective check on China’s ambitions. ■

Thousands across Germany protest against CDU and AfD and far-right policy

Thousands across Germany protest against CDU and AfD and far-right policy

By Euronews with EBU

Published on 

Tens of thousands of people took to the streets of Germany to protest against the CDU's migration policy and its voting behaviour in the Bundestag.

Tens of thousands took to the streets of several German cities on Saturday – demonstrating against cooperation between the Christian Democratic Union (CDU) and Alternative for Germany (AfD) parties. 

Protests drew large crowds in the cities of Aaachen, Augsburg, Braunschweig, Bremen, Cologne, Essen, Frankfurt, Hamburg, Karlsruhe, Leipzig and a number of smaller cities. 

Further rallies are planned for Sunday, with the largest expected in Berlin. 

Many protesters focused on CDU candidate for German Chancellor Friedrich Merz – who proposed two anti-immigration bills to the German parliament last week. 

enb news poster

Merz — the front-runner in Germany's election on February 23rd — broke a long-standing pledge to not cooperate with the far-right Alternative for Germany (AfD) party on Wednesday, when he accepted its votes in order to pass his migration proposal. 

The AfD party is classified by German authorities as a “suspected” far-right extremist organisation. 

Europe’s largest economy was shaken after Chancellor Olaf Scholz’s three-party governing coalition collapsed late last year in a dispute over how to revitalise amid stagnation. ⍐

Saturday, February 01, 2025

The inside story of the pardon of Marcus Garvey

The inside story of the pardon of Marcus Garvey

Garvey in August 1924. (Library of Congress)
 

President Joe Biden pardoned him posthumously, more than 100 years after the conviction of Garvey, a champion for the liberation of people of African descent around the world.

KINGSTON, Jamaica — The quest for a U.S. presidential pardon for revolutionary Black nationalist leader Marcus Mosiah Garvey began more than 100 years ago, immediately after Garvey was convicted on racially motivated charges of mail fraud filed by the U.S. government.

On July 1, 1923, two months after his conviction, more than 2,000 people gathered in a mass protest meeting at Liberty Hall in New York. During the meeting, a speaker read a letter Garvey had written from jail:

“I have been ‘framed up’ and sacrificed because of prejudice and the political and organization designs of my enemies. I believe that when my cause is properly presented to the higher and responsible officials of our government they will see that justice is done, and that they will not hesitate in upholding the sacred principles of the Constitution.”


By DeNeen L. Brown

Over the succeeding decades, dozens of lawyers, attorneys general, prime ministers, members of Congress, historians, justice activists and Garvey’s descendants sent requests to U.S. presidents to grant a pardon and to Congress to grant an exoneration.

Many of the requests were met with cold silence. Finally, in the waning hours of his administration, President Joe Biden granted a posthumous pardon for Garvey.

The news reverberated around the world. In Jamaica, where Garvey is the first national hero, and his portrait is painted on schoolhouse walls, Prime Minister Andrew Holness called the pardon a “first step toward the total exoneration and expungement of this historical injustice.”

The road to Garvey’s presidential pardon is a story of tireless activism by human rights leaders, Garvey’s descendants and members of Congress, some of whom died before they could see their efforts come to fruition.

Marcus Garvey was born on Aug. 17, 1887, in St. Ann’s Bay, Jamaica. In 1914, he founded the Universal Negro Improvement Association. Two years later, he traveled to the United States where his speeches advocating Black pride were electrifying. The Rev. Martin Luther King Jr. once said Garvey “was the first man of color in the history of the United States to lead and develop a mass movement. He was the first man on a mass scale and level to give Negroes a sense of dignity and destiny.”

Garvey’s rising movement made him a target of J. Edgar Hoover, then a lawyer in the Justice Department who would rise to become FBI director. The FBI later acknowledged it targeted Garvey to find reasons to “deport him as an undesirable alien.” Hoover pursued him with a vengeance, as Garvey delivered speeches against the backdrop of race massacres in East St. Louis, Houston and Tulsa.

Garvey advocated for Black economic independence, opening businesses including the Negro Factories Corporation, the Universal Steam Laundry, Liberty Grocery Stores, the Negro World newspaper and the Black Star Line shipping and passenger company to facilitate the travel of Black people to Africa.

“It was the audacity of founding the Black Star Line that drew the attention of federal investigators,” Anthony T. Pierce, a partner at the law firm Akin Gump, told The Washington Post in 2021. “And ultimately, the company’s financial downfall led to Garvey’s prosecution for mail fraud in a trial replete with reversible errors and questionable evidence.”

When, in 1921, Garvey’s company told stockholders it would buy two more ships, a newspaper published an investigation claiming the U.S. Commerce Department had no record of those ships. A year later, Garvey and three business associates were indicted on charges of “conspiracy to use the mails in furtherance of a scheme to defraud,” records show.

On June 21, 1923, Garvey was convicted of mail fraud, fined $1,000 and sentenced to five years imprisonment. The three other defendants were acquitted.

Millions of Garvey’s followers gathered a petition demanding his release. They wrote to President Calvin Coolidge, requesting a presidential pardon. Because of this massive outpouring of concern, on Nov. 18, 1927, Coolidge commuted Garvey’s sentence.

Nine of the 12 White jurors who voted to convict Garvey supported the commutation. Garvey was released from prison and deported to Jamaica. He later traveled to London, where he died in June 1940.

After Garvey’s death, his followers continued to fight for justice. The movement picked up steam after the Congressional Black Caucus was founded in 1971.

“Efforts to clear Garvey’s name have persisted for decades,” Rep. Yvette D. Clarke (D-New York) said in a statement in December, noting that then-Rep. John Conyers Jr. (D-Michigan) convened the House Judiciary Committee in 1987 to hear evidence to exonerate Garvey. Among those who testified were Garvey’s sons. Then-Rep. Charles B. Rangel (D-New York) testified: “Mr. Hoover, in his role as director of investigations on ‘Negro Activities,’ became obsessed with extinguishing the flames of the man who had become known as the ‘Negro Moses.’”

Beginning in 1987, Rangel introduced congressional resolutions demanding justice. In 2023, Clarke and Rep. Hank Johnson (D-Georgia) introduced legislation calling for Garvey’s exoneration.

Last December, Clarke and 20 members of Congress wrote a letter to Biden urging Garvey’s exoneration.

Pierce, an attorney for Garvey’s family, began working with Garvey’s son Julius W. Garvey in 2008, at the end of the George W. Bush administration. He filed requests for presidential pardons from President Barack Obama.

Also that year, Justin Hansford, now a Howard University professor of law and executive director of the Thurgood Marshall Civil Rights Center, began working on Garvey’s pardon request. In 2024, Hansford published the book “Jailing a Rainbow: The Unjust Trial and Conviction of Marcus Garvey.”

Obama didn’t grant a pardon.

In 2019, Roger Stone, an adviser to President Donald Trump, said he sought a pardon for Garvey. The request went unanswered.

The case for Garvey’s pardon seemed airtight and powerful. Still, it was unclear why the requests had encountered rejections.

“There were long-term obstacles thrown at us,” Hansford told The Post. The big question among those working on the pardon request was, why the obstacles?

Then in the final days of Biden’s administration, Hansford was told why.

“This time around, we had relationships in the White House,” he said. Some were long-term colleagues and classmates. Hansford, who had been elected to the United Nations Permanent Forum on People of African Descent, was often called to the White House for meetings where he ran into former colleagues. That provided opportunities to press the case for Garvey.

Marcus Garvey during a parade in Harlem in 1922. (AP)

“They told me what the holds were,” Hansford recalled. “One said they think Garvey is antisemitic.”

With that information, Hansford called Julius Garvey. He rebutted the claim, pointing out the history of Marcus Garvey’s relationships with the Jewish community in Jamaica. Julius Garvey put Hansford in touch with family members of Marcus Garvey’s lifelong friend, Lewis Joseph Ashenheim, a prominent Jewish lawyer in Jamaica.

Time was of the essence. On Jan. 5, Hansford called Ashenheim’s great-grandniece, Lynda Edwards, an author and screenwriter of a film about Garvey and Ashenheim.

“Justin said to me the reason they are turning down a pardon is because they think Marcus Garvey was antisemitic,” Edwards told The Post. “I said we can prove that is not true.”

They were surprised that was the reason blocking the pardon. “It was an affront and an injustice,” Edwards said.

Hansford asked Edwards whether her family would be willing to write a letter to the White House. She called her brother, who told her to call their cousin Michael Ashenheim, the great-grandson of Lewis Ashenheim, who lives in England.

“We gave ourselves 24 hours to get the letter done,” Edwards said. “We knew Biden would be out of office within two weeks.”

They wrote through the night, using research done for the film.

Their letter dated Jan. 6 reads in part: “My cousin, Michael Ashenheim, and I, Lynda Edwards, are writing to address the widespread misunderstanding that Marcus Garvey was an anti-Semite. We firmly believe this false characterization should not hinder his deserving a posthumous pardon. The judgment against his character is based on misconceptions we seek to correct.”

They gave examples of Garvey’s speeches about the Jewish struggle. They explained that after Garvey returned to Jamaica, Lewis Ashenheim successfully represented him in a case brought to the Supreme Court in Jamaica.

“A historic court battle ensued, bringing together Marcus Garvey and Lewis Ashenheim, a Jew and one of Jamaica’s most influential lawyers,” they wrote.

Ashenheim won the case. He and Garvey became lifelong friends. Garvey supported Ashenheim when he entered politics in Jamaica.

Edwards and Ashenheim said they did not hear directly from the White House. But they were elated to hear the news that Biden had finally signed Garvey’s pardon.

A number of people impressed upon Biden “why he needed to do this. There were demonstrations in Delaware,” said Julius Garvey, 93. “We were happy it happened.”

Added Pierce, the family’s lawyer: “It took too long, but we are glad it came.”⍐

Musk aides gain access to sensitive Treasury Department payment system

 Musk aides gain access to sensitive Treasury Department payment system

The access — granted by Scott Bessent, Trump’s newly confirmed treasury secretary — comes after the ousting of the agency’s top career official.


Elon Musk walks through the Capitol complex with his son on his shoulders during meetings about the
“Department of Government Efficiency” in December. Musk allies now have access to sensitive payment
systems run by the Treasury Department. (Maansi Srivastava for The Washington Post)



By Jeff Stein The Washington Post 01-02-2025


Billionaire Elon Musk’s deputies have gained access to a sensitive Treasury Department system responsible for trillions of dollars in U.S. government payments after the administration ousted a top career official at the department, according to three people who spoke on the condition of anonymity to describe government deliberations.


On Friday, Treasury Secretary Scott Bessent approved access to the Treasury’s payments system for a team led by Tom Krause, a Silicon Valley executive working in concert with Musk’s “Department of Government Efficiency,” the people said.


David A. Lebryk, who served in nonpolitical roles at Treasury for several decades and had been the acting secretary before Bessent’s confirmation, had refused to turn over access to Musk’s surrogates, people familiar with the situation told The Washington Post. Trump officials placed Lebryk on administrative leave, and then he announced his retirement Friday in an email to colleagues.


Spokespeople for Treasury and DOGE declined to comment.


The sensitive systems, run by the Bureau of the Fiscal Service, control the flow of more than $6 trillion annually. Tens of millions of people across the country rely on the systems. They are responsible for paying Social Security and Medicare benefits, salaries for federal personnel, payments to government contractors and grant recipients, and tax refunds, among tens of thousands of other functions.


Typically, only a small group of career employees control the payment systems, and former officials have said it is extremely unusual for anyone connected to political appointees to access them.


Musk has sought to exert sweeping control over the inner workings of the U.S. government, installing longtime surrogates at several agencies, including the Office of Personnel Management, which essentially handles federal human resources, and the General Services Administration, which manages real estate. DOGE is now housed in a White House office formerly known as the U.S. Digital Service but now called the U.S. DOGE Service and has broad visibility into technology across the government.


The New York Times was first to report that Musk’s deputies had gained control of the systems.


Democrats have strongly criticized the idea of giving Musk surrogates access to the payment systems.


“To put it bluntly, these payment systems simply cannot fail, and any politically motivated meddling in them risks severe damage to our country and the economy,” Sen. Ron Wyden (D-Oregon) said in a letter to Bessent on Friday. “I can think of no good reason why political operators who have demonstrated a blatant disregard for the law would need access to these sensitive, mission-critical systems.”⍐

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...