Wednesday 4 April 2018

கூட்டமைப்பு, மு.காங்கிரஸ் ஆதரவு-ரணில் வெற்றி!

நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கடிப்பு!


ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதேவேளை, 26 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அந்தவகையில், 46 மேலதிக வாக்குகளால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மு.காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்டவை பிரேரணையை எதிர்த்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்!  பேரா.எஸ்.இசட்.ஜெய்சிங் ஜனவரி 2, 2020 தீக்கதிர் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்...