Monday 12 August 2013

எட்டு முஸ்லிம் அமைச்சர்களும் எரியும் பள்ளி வாசல்களும்!

 சுயாதீனமான விசாரணையொன்றை உடனடியாக நடாத்துமாறு நாம் அரச தலைவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
 
 முஸ்லிம் அமைச்சர்கள்
 
 
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு மிக்க முஸ்லிம் அமைச்சர்கள் என்ற வகையில் பள்ளிவாசலொன்றின் புனிதம் மிக்க புகலிடத்தில் அமைதியான முறையில் தொழுவதற்கென ஒன்று கூடியிருந்த அடியார்கள் கூட்டமொன்றை மனக்கிலேசம் அடையச் செய்யும் வகையில் மிருகத்தனமாகவும் கோழைத்தனமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துயர் மிகு வன்முறைச் செயற்பாடு குறித்து சுயாதீனமான விசாரணையொன்றை உடனடியாக நடாத்துமாறு நாம் அரச தலைவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
முஸ்லிம் அமைச்சர்கள்




மிருகத்தனமான கோழைத்தனமான தாக்குதல் குறித்து விசாரணை வேண்டும்: முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள்

2013-08-12 10:09:51

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகச் சேர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது வணக்கத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் கொழும்பு -14 கிராண்ட்பாஸில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது முன்னேற்பாடான வகையிலும் நன்கு திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம் அமைச்சர்களாகிய நாம் தெட்டத் தெளிவானதும் வெளிப்படையானதுமான எமது பலத்த கண்டனத்தை வெளிப்படுத்த விளைகின்றோம்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு மிக்க முஸ்லிம் அமைச்சர்கள் என்ற வகையில் பள்ளிவாசலொன்றின் புனிதம் மிக்க புகலிடத்தில் அமைதியான முறையில் தொழுவதற்கென ஒன்று கூடியிருந்த அடியார்கள் கூட்டமொன்றை மனக்கிலேசம் அடையச் செய்யும் வகையில் மிருகத்தனமாகவும் கோழைத்தனமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த துயர் மிகு வன்முறைச் செயற்பாடு குறித்து சுயாதீனமான விசாரணையொன்றை உடனடியாக நடாத்துமாறு நாம் அரச தலைவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தச் சம்பவமானது நாட்டில் கடந்த பல மாதங்களாக சங்கிலித் தொடராக நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களின் சமீப கால நிகழ்வாகவே நோக்கப்படுகின்றது. முன்னைய சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்தினர் மற்றும் பள்ளிவாசல்கள் மீது வேண்டுமென்றே நடாத்தப்பட்டிருந்த தாக்குதல்கள் குறித்து சட்டத்தை அமுல்படுத்துவோரால் எடுக்கப்பட்டிருந்த அரை மனதான (அக்கறையற்ற) பலனளிக்காத நடவடிக்கைகள் நீண்ட கால யுத்தமொன்றை அடுத்து தேசிய நல்லிணக்கத்தை இன்னும் அதிகளவில் தேடிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் குழப்பங்களை உருவாக்குவதென கங்கணங்கட்டிக் கொண்டுள்ளதாகக் காணப்படும் சில தீவிரவாதக் குழுக்களுக்கு தைரியமூட்டியுள்ளவையாகவே காணப்படுகின்றதெனலாம். தண்டனைப் பயமின்மை உணர்வுடன் செயற்படக்கூடிய சில சக்திகள் இருப்பதான எண்ணம் பொதுமக்கள் மனங்களில் வேரூன்றியுள்ள மாய எண்ணம் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும்.

ஆகப்பிந்தியதாக பதிவாகியுள்ள இந்தச் சம்பவமானது பல மணி நேரத்தின் பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பிய கொழும்பு வடக்கும் மற்றும் கொழும்பு மத்தியில் உள்ள கிராண்ட்பாஸ் மாளிகாவத்தை மருதானை மற்றும் கெத்தாராமை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினை நோக்கிய மதம் சார்ந்த குரோத மனப்பான்மையை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்தப் போக்கை தடுத்து நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்குமாறு நாம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை மற்றும் யுத்தத்தை முடிவு கட்டியமை ஆகியவை அனைத்துப் பிரஜைகளினதும் சமாதான சகவாழ்வுக்கு வழி கோல வேண்டுமே தவிர தனித்த ஒரு மக்கள் குழுவின் மேலாக்கத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமொன்றாக அர்த்தப்படுத்தப்பட்டு விடக்கூடாது. அரசின் அமைச்சர்கள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் தங்களை விநயமாக வேண்டுகின்றோம்.

மதங்களுக்கிடையே இணக்க செயற்பாட்டை உறுதிப்படுத்த வல்ல நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனம் சார்ந்த பொறி முறையொன்றை உருவாக்குமாறு நாம் தங்களை வலியுறுத்துகின்றோம். பல்லின மற்றும் பல் மதங்களைக் கொண்டுள்ள இந்த நாட்டில் எமது மத சுதந்திரம் பேணிப்பாதுகாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான கடமையொன்றை அரசாங்கம் கொண்டுள்ளது. சிறுபான்மையின மதமொன்றின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதென்பது இன்னுமொரு மதத்தை மேம்படுத்தும் அல்லது பாதுகாக்கும் நடவடிக்கையாக எவ்வாறு அர்த்தப்படுத்த முடியுமென்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நாட்டில் பரவி வரும் கும்பல் வன்முறை மற்றும் அளவுக்கு மீறி ஆர்வங்காட்டும் பித்துப்பிடித்துப் போயுள்ள செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொருத்தான நடவடிக்கையை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்கள் என்ற வகையில் நாம் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் வணக்கத்திற்குரிய பெளத்த மத குருமார் ஆகியோரை வேண்டிக் கொள்கின்றோம்.

1) ஏ.எச்.எப்.பெளஸி        சிரேஷ்ட அமைச்சர்
2) ரவூப் ஹக்கீம்     நீதி அமைச்சர்
3) ரிசாத் பதியுதீன்   கைத்தொழில் வர்த்தக அமைச்சர்
4) ஏ.எல்.அதாவுல்லா  உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர்
5) பஷீர் ஷேகுதாவூத்,உற்பத்திறன் ஊக்குவிப்பு அமைச்சர்
6) எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
7) பைசல் முஸ்தபா  முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர்
8) ஏ.ஆர்.எம்.ஏ.அப்துல்காதர்சுற்றாடல் புதிப்பிக்கக்கூடிய சக்திவள பிரதி அமைச்சர்

கிரேண்ட்பாஸில் இருப்பது பள்ளிவாசல் அல்ல;அதனை அகற்றியே தீருவோம்; அப்பகுதி விகாராதிபதி

சிங்கள பெளத்த பாசிஸ்டுக்கள் பகிரங்க முழக்கம்!

கிரேண்ட்பாஸில் இருப்பது பள்ளிவாசல் அல்ல;அதனை அகற்றியே தீருவோம்; அப்பகுதி விகாராதிபதி

2013-08-11 18:23:06 | வீரகேசரி

ந.ஜெயகாந்தன்

கிராண்ட்பாஸிலுள்ளது பள்ளிவாசலேயல்ல. எனவே அதனை அகற்றியே தீரவேண்டுமென அப்பகுதியிலுள்ள ஜயதிலக்கராமய விகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;
கிராண்ட்பாஸில் அமைந்துள்ளது பள்ளிவாசல் அல்ல. அது ஒரு தொழிற்சாலையாகவே ஆரம்பிக்கப்பட்டது. நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் ரமழான் காலத்தை முன்னிட்டு 10.08.2013 வரை அதனை பயன்படுத்த அனுமதி கொடுத்தோம்.

ஆனால், அக்கட்டிடத்தை தொடர்ந்தும் பள்ளிவாசலாக பயன்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இதற்கு ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம். அது பள்ளிவாசலே அல்ல என்பதனால் அதனை அகற்றியே தீர வேண்டும்.
நாம் எதிர்க்கும் இக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ளதுதான் பள்ளிவாசல். அதனை நாம் எதிர்க்கவில்லை. அதற்கு தேவையானால் நாம் உதவிகளை வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/geragr2uzp2330619205da515860msvpc4e83f869515c782a328d3culntb#sthash.s3C0Wl7i.dpuf
================

கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்தை பள்ளிவாயல் மீது சிங்கள பெளத்த பாசிச வெறியர்கள் தாக்குதல்!

* பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த சிலரும் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர்.

* பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

* இந்நிலையில் இன்று காலை சிஹல ராவய இயக்கத்தினர் பாதிப்பை உண்டாக்க வந்தார்கள்.

* இந்த பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம் எம்.பி. அமைசர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டிய நிலை உருவாகும்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
---------------------------------------------------------------

பள்ளிவாசலை அகற்ற கூடாது, சம்பிக்க காட்டமான வார்த்தைகளை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டும்: தவ்ஹீத் ஜமாத்

2013-08-11 16:29:09 வீரகேசரி

கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்தை பள்ளிவாயலை அவ்விடத்திலிருந்து எக்காரணம் கொண்டும் அகற்ற கூடாது. மேலும் இந்த பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம் எம்.பி. அமைசர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டிய நிலை உருவாகும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்ததாவது,நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த சிலரும் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர்.

மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும் அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள்.பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும் வரை அவர்கள் எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.இதனால் பள்ளிவாயலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கேட் அகற்றப்பட்டு அருகில் இருந்து அழுக்கு ஓடைக்குள் வீசியெறியப்பட்டுள்ளது. பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும் முயற்சியில் குறித்த குழுவினர் முகாமிட்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்த அக்குழுவினரை பொலிசார் வெளியேற்றாமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு சென்ற தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின் இடத்தை விட்டும் அவர்களை அப்புரப்படுத்துமாறு பொலிசாரிடம் வேண்டிக் கொண்டார்கள். இருப்பினும் போலிசார் அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேற்றவோ முயலவில்லை.

ஆனால் பள்ளியை உடைக்க வந்த காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளியை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் பொலிஸார் கருத்தாக இருந்தார்கள்.பல தடவை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுடன் கலைந்து செல்லுமாறு பொலிசார் பேச்சுவார்தை நடத்தினார்கள். இருப்பினும் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள் உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்து குரல் கொடுத்தார்கள்.

இந்நிலையில் இன்று காலை சிஹல ராவய இயக்கத்தினர் பாதிப்பை உண்டாக்க வந்தார்கள். பொலிசார் அவர்களை தடுத்து அனுப்பினார்கள். எனினும் இந்த தாக்குதல் பின்னணியில் சிங்கள ராவய இருக்கின்றதோ எனவும் எமது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் சம்பிக்க சம்பவத்தை பெரிதும் படுத்தும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார். இன உறவை பாதிக்கும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகிப்பதை அமைச்சர் சம்பிக்க உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...