Monday 2 June 2014

`கொள்ளை போகும்` ஈழ தேசம்!


படையினரால் நிலஅபகரிப்பு : அச்சுவேலியில் போராட்டம்  

இராணுவத்தினர் முன்னெடுக்கும்  நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை   எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.குடாநாட்டினை படையினர் கைப்பற்றிய காலம் முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு தலைமை அலுவலக கட்டிடத்தொகுதி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் பத்து ஏக்கர் வரையிலான நிலப்பரப்பினை நிரந்தரமாக சுவீகரிக்க தற்போது இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

குறித்த காணியில் பெருமளவிலான நிலப்பரப்பு படையினரது விளையாட்டு மைதானமாகவே அமைந்துள்ளதுடன் யாழ்ப்பாணம்- அச்சுவேலி வீதி மற்றும் நிலாவரை வீதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் அமைந்துள்ளது.

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகள் நடைபெற்றவேளை அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர், உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும்  பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை வடக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும் அதனை தாண்டி தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்பு தொடர்வது குறிப்பிடத்தக்கது.

காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
------------------
புதன், மே 28, 2014 - 13:02 மணி தமிழீழம் | தவராசா, கிளிநொச்சி

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மற்றும் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் உட்பட பல பகுதிகள் இன்னமும்இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் வீடுகளுக்குச் சொந்தமான மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனார்.

அந்த மக்களுக்குச் சொந்தமான காணகள் வீடுகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுடன் அவை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படல்  வேண்டும் எனவும்  வலியுறுத்தியும்,

மேற்படி மக்களுக்குகாக நீதி கேட்டுப் போராட முற்பட்ட கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் விடுவிக்கப்படல் வேண்டும் என வலியுத்தியும்,

கிழக்கு மாகாணத்தில் சம்புர் கிராமம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு கிராமம், யாழ் மாவட்டத்தில் வலி வடக்கு, வளலாய், கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், மருதநகர், பாரதிபுரம், இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள வீடுகள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோாிக்கைகளை வைத்தே மேற்படி போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை கிளிநொச்சி கச்சோிக்கும் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கடுமையான இராணுவ அச்சுறுத்தல்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளார் விசுவலிங்கம் மணிவண்ணன் உட்பட மாவட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனார்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட உரிமையாளார்கள் போன்றோரும் கலந்து கொண்டனா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுரேஸ்பிறேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, ரவிகரன், சிவாசிலிங்கம், ஐங்கரநேரசன், குருகுலராசா, பிரதேச சபை உறுப்பினர்களான சஜீவன், சதீஸ், கிளி பிரதேச சபைத் தலைவர் குகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்களை கைது செய்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அடைப்பதன் மூலம் இப் போராட்டத்தினை குழப்பிவிடலாம் என்று அரசு செயற்பட்டது.

எனினும் கைது அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிகரமாக மேற்படி போராட்டத்தினை நடாத்தி சர்வதேச சமூகத்திற்கு கிளிநொச்சி மக்களின் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது.
===================
 சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் நில அபகரிப்பு எதிர்ப்புப் போராட்டம்

காணிகளை படையினருக்கு தாரைவார்க்க உரிமையாளர்களுக்கு அழைப்பு
இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் இன்று காலை 10 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாவகச்சேரி, நுணாவில் வைரவர் கோவிலுக்கு அருகாமையில் J/312 கிராமசேவகர் எல்லைக்குற்பட்ட 11 தனி காணி உறுதிகள் கொண்ட 7 ஏக்கர் காணிகளை கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கு திருநெல்வேலி பிரதேச நிலஅளவை காரியாலயத்தால் அறிவித்தல் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது அதில்:-

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகளை மேற்கொள்ள வந்த திணைக்கள அதிகாரிகளை அங்கு கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர்,உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும்  பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

முல்லைத்தீவில் விவசாய, மீனவர்கள் பிரச்சனை.

விவசாய நிலங்கள் சிங்களவர்களால் பறிமுதல்.
கடற்தொழிலில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு.
அனைத்துக்கும் இராணுவம் பக்க பலம்.
வடக்கு முதலமைச்சர் விக்கிக்கு முல்லை மக்கள் முறையீடு.
அதிகாரம் இல்லையென்று அரசர் அலறல்!
BBC Tamil


``எங்கள் நிலம், எங்கள் மனை எமக்கு வேண்டும்``

எங்கள் நிலம் எமக்கு  வேண்டும் 
03 ஜூன் 2014


கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த நான்கு வருடங்களாக தங்கள் சொந்த இடத்தை தங்களிடம் மீள கையளிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னமும் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட நிறைய பிரதேசங்கள் இராணுவத்தினால் விடுவிக்கப்படவில்லை. மாறாக இன்னும் இன்னும் நிலங்களை இராணுவத்தினர் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தபோது தான் முன்னெடுக்கும் நல்லிணக்கம், மீள் கட்டமைப்பு, அபிவிருத்தி தொடர்பில் மகிந்த ராஜபக்ச அவருக்கு விளக்கம் அளித்தாக  இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போருக்குப் பின்னர் மீள் கட்;டமைப்பு, இன நல்லிணக்கம், அபிவிருத்தி என்ற பெயரில் என்ன நடக்கிறது என்பதை கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம் உலகுக்குச் சொல்லியிருக்கிறது.

கிளிநொச்சிப் பரவிப் பாஞ்சான் பகுதி மக்கள் மீள்குடியேற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முற்பகுதியில் அழைத்துவரப்பட்டார்கள். அவர்கள் இன்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் காணிகளில் விடுதலைப் புலிகள் முகாமிட்டிருந்தார்கள் என்று சொல்லியே அவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியிலிருந்து கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பின் பகுதிவரையான காணிகள் இராணுவத்தின் வசம் இருக்கின்றன.

இந்தப் பகுதியை உயர்பாதுகாப்பு வலமயமாக இராணுவத்தினர் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதிக்குள் யாரும் அனுமதியின்றி நுழைந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. எனது வீட்டுக்குள் இருந்து கொண்டு எனது காணியை பிடித்துக் கொண்டு நுழைந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்று எழுதியுள்ளார்களே என்று அந்தப் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் புலம்பிக் கொண்டு நின்றார். எல்லோரும் அவரவர் ஊர்களில் அவரவர் வீடுகளில் சந்தோசமாக இருக்கிறார்கள் நாங்கள்தான் வீடற்று அலைந்து கொண்டிருக்கிறோம் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த ஐந்து ஆண்டுகளும் பரவிப்பாஞ்சான் மக்கள் இராணுவமுகாம்களுக்கும் அரசியல்வாதிகளிடமும் அரச அதிகாரிகளிடமும் செல்லாத பொழுதுகள் இல்லை. அண்மையில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது அலுவலகத்திற்கும் மக்கள் ஒன்று திரண்டு சென்று தமது காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். 2010ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் இந்த மக்கள் உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அங்கும் இங்கும் என்று காலத்தை கழித்து வருகிறார்கள். வளமும் எழிலும் நிறைந்த தங்கள் காணிகளை இராணுவம் ஆள்வதைப் பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

குறித்த காணிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலடி பட்ட இடமென்றும் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் அங்கு அவர் மாவீரர் தின உரை ஆற்றி வந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் ருவாண்; வணிகசூரிய சொல்லுகிறார். பிரபாகரனின் காலடி பட்ட மண்ணெல்லாம் வேண்டும் என்று இராணுவத்தினர் நினைத்தால் ஒட்டுமொத்த ஈழமண்ணையும் இராணுவமுகாமாக்க வேண்டும். பிரபாகரனுக்கு பரவிப்பாஞ்சானில் காணிகள் இருப்பதாக எந்த விபரங்களும் இல்லை. அவர் ஒரு கிராமம் முழுவதிலுமா இருந்து மாவீரர் தின உரையாற்றினார்?

இந்தக் காரணத்தைச் சொல்லி பரவிப்பாஞ்சான் கிராமத்தின் முழுப்பகுதியையும் இராணுவத்தினர் அபகரிக்க முயல்வதைப் போல அநீதி வேறில்லை. அவை மக்களின் காணிகள். அதற்கான உறுதிகள், காணி ஆதாரங்கள் மக்களின் கையில் உள்ளன. ஆனால் அவை மக்களின் காணிகள் இல்லை என்றும் அவர்களிடம் ஆதாரம் இல்லை என்றும் இராணுவம் சொல்கிறது. கிளிநொச்சியிலும் வடக்கு கிழக்கிலும் என்ன நடக்கிறது எப்படி நிலம் விழுங்கப்படுகிறது என்பதற்கு கிளிநொச்சியின் இந்தக் கதையும் நல்லதொரு எடுத்துக்காட்டு.

கிளிநொச்சியில் நிலத்தைக் கோரும் போராட்டத்தை நடத்த இலங்கை இராணுவமும் காவல்துறையும் பல்வேறு தடைகளை உருவாக்கின. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அந்த ஏற்பாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான ஜெகதீஸ்வரனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்திருந்தது.

இராணுவத்தினர் கிளிநொச்சியில் மாத்திரமல்ல வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டு இராணுவமுகாம் அமைத்துள்ள காணிநிலங்கள் எல்லாமே மக்களினுடையவை. அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் நிலமற்று வீடற்று அகதியாக அலைந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இராணுவமுகாமிற்காக உதிரிகளாக காணிகளை இராணுவத்தினருக்குப் பறிகொடுத்துள்ளவர்கள் இந்த மாதிரியான போராட்டங்களையும் செய்ய முடியாமல் இராணுவமுகாங்களை சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காணாமல்போன தனது மகனை கேட்டுப் போராடிய ஜெயக்குமாரியும் தனது அண்ணனைக் கேட்ட விபூசிகாவும் எப்படி கைது செய்யப்பட்hர்களோ அப்படியே மக்களின் நிலத்தை கேட்டுப் போராட்டம் செய்யத் தயாரான ஜெகதீஸ்வரனும் கைது செய்யப்பட்டார். காணாமல் போனவர்களை தேடுவதும் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க போராடுவதும் பயங்கரவாதம் என்று கருதும் இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கு மக்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர் மண்ணை ஆக்கிரமிக்கவும் தமிழர்களை ஒடுக்கவும் இவ்வாறான காரணங்களே தேவைப்படுகின்றன.

நாங்கள் வேறு எதையும் கேட்கவில்லை. எங்கள் நிலத்தில் வாழ வேண்டும். எங்கள் வீட்டில் வாழ வேண்டும் இதைத்தான் கேட்கிறோம் என்று பரவிப் பாஞ்சான் மக்கள் மனம் உருகிச் சொல்கிறார்கள். எங்கள் மக்கள் எதுவரை அகதிகளாக வாழ வேண்டும்? அவர்களின் காணிநிலங்கள் எதுவரை அபகரிக்கப்படும்? இவ்வாறான பல்லாயிரம் கேள்விகளுடன் அபகரிக்கப்பட்ட நிலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட அரசியல் சூழலில் நிம்மதியாக வாழும் ஒரு வாழ்க்கைக்கான போராட்டத்தை ஈழ மக்கள் இன்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சியில் நடந்த நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். தம்முடைய வலுவான கண்டனங்களையும் பதிவு செய்தார்கள். விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியில் ஒரு சமாதான நகரமாக உலகின் பல்வேறு பிரதிநிதிகளும் வருகை தந்த கிளிநொச்சியில் நடந்த இந்த நில அபகரிப்புக்கு எதிரான நீல மீட்புக்கான போராட்டம் இன்று ஒட்டுமொத்த ஈழ மண்ணின் நிலவரத்தையும் உலக சமூகத்தை நோக்கி உரத்த குரலில் சொல்கிறது.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் என்று யாருமில்லை. அகதிகள் எனப்படுவர்கள் யாரும் இல்லை என்று ஒருமுறை கிளிநொச்சியில் வைத்து ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய குறிப்பிட்டார். அப்படி என்றால் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களை எப்படி அழைப்பது? இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்விடமற்று  அலையும் இந்த மக்களை எப்படி அழைப்பது?

தங்கள் நிலத்தை மீட்க, செல்லாத இடமெங்கும் சென்று அலைந்து களைத்துப்போய்விட்ட பின்னரும் கேட்காத இடமெங்கும் கேட்டு, குரல் வற்றி காய்ந்துபோன பின்னரும் இன்னமும் உக்கிரம் குறையாமல் இருக்கிறார்கள் பரவிப்பாஞ்சான் மக்கள். ஏனெனில் அந்த நிலம் அந்த மக்களுக்குச் சொந்தமானது. அந்த நிலம் இல்லை எனில் அந்த மக்கள் இல்லை. தாங்கள் வாழவும் தங்கள் சந்ததி வாழவும் தங்கள் நிலத்திற்காய் போராட வேண்டியது பரவிப்பாஞ்சான் மக்களுக்கு தவிர்க்க முடியாதது. ஒட்டுமொத்த தேசமும் இராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள நிலையில் ஒட்டுமொத்த ஈழ மக்களதும் தங்கள் நிலத்திற்காய் போராட வேண்டிய காலம் இதுவாகும்.

நன்றி: தீபச்செல்வன்/ (குளோபல் தமிழ் செய்தி)

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கை `13அமூல்`.

ஜனாதிபதியிடம் மோடி விடுத்த கோரிக்கையை முழு உலகமும் அறியும்!- தயான் ஜயதிலக
Posted By Thara On May 31st, 2014 02:39 PM | செய்திகள், பிரதான செய்திகள்

இலங்கை தமிழர் பிரச்சினை தீர்க்க இந்தியாவின் உதவியை பெற இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி மிக தெளிவாக கூறியுள்ளதாக முன்னாள் இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுடனான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அதற்கான 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறும் மோடி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாக இந்திய வெளிவிவகார செயலாளர் தெரிவித்திருந்தார்.

மோடி கூறியதை இலங்கை செய்யுமா இல்லையா என்பது வேறு பிரச்சினை.

எனினும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவின் உதவியை பெற வேண்டுமாயின் இலங்கை நிறைவேற்ற வேண்டிய அடிப்படையான நிபந்தனையை இந்தியாவின் புதிய பிரதமர் தெளிவாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர், இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று ஜனாதிபதி மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோருடன் நேர்காணலை நடத்தியது.

இதன் போது மோடி, ஜனாதிபதி இடையிலான சந்திப்பில் சொல்லப்பட்ட சில விடயங்களையும் கூறினார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு மோடி, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக யாழ் மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார்.

மோடி இப்படியான கோரிக்கையை விடுத்தது இரகசியமான ஒன்றல்ல. இதனை முழு இந்தியா மட்டுமல்ல முழு உலகமும் அறியும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

13 குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே முடிவு செய்யும்

[ வெள்ளிக்கிழமை, 30 மே 2014, 02:44 GMT ] [ கார்வண்ணன் ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் செல்லுமாறும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தினாலும், அதுகுறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே முடிவு செய்யும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,

“சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் எல்லா விடயங்களிலும் ஒத்துழைத்துச் செயற்படும்.

ஆனால் எவரும் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், 13வது திருத்தச்சட்டம் நாட்டின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது. 

இதனை முழமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அதனை முழுமையாக மீளாய்வு செய்வதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளது.

13வது திருத்தச்சட்டம் கட்டம் கட்டமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆனால் சில பகுதிகள் நாடாளுமன்றத்தினால் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு.

இந்தியாவுடன் முரண்பாடு ஏற்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் நினைக்கவில்லை.

எல்லாப் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்கவே விரும்புகிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளதால், தமிழ்நாட்டின் தாளத்துக்கு மத்திய அரசு ஆடவேண்டிய தேவையில்லை.

நாம் மத்திய அரசாங்கத்துடன் மட்டும் தான் தொடர்புகளை வைத்துள்ளோமே தவிர, மாநில அரசாங்கங்களுடன் அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-------------------

மோடி RSS காவிப் பாசிசப் பாதையில் போதிப் பக்ச பாசிஸ்டுக்கள்!


கத்தோலிக்க, இஸ்லாமிய மத சிறுபான்மையினருக்கு எதிராக  `இந்து பொதுபல சேன` கூட்டணி!


Posted By Tamil24 On May 25th, 2014 11:10 AM | செய்திகள்


இலங்கையில் முறையற்ற மதமாற்றங்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும், அந்த அமைப்பின் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்து மத தலைவர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

====================
பொதுபல சேனாவினால் வெளியிடப்பட்டுள்ள “ அழிவுக்கான விளிம்பில் ஓர் இனம்

This entry was posted on 01/06/2014, in தேசிய செய்தி.

-ஏ.ஆர். ஏ. பரீல் -

பொதுபல சேனாவினால் வெளியிடப்பட்டுள்ள “ அழிவுக்கான விளிம்பில் ஓர் இனம் (வங்சயக விநாயச அபிமுவ) என்ற சிங்கள மொழியிலான நூலில் இந்நாட்டு முஸ்லிம்கள் தொடர்பில் இனவாத ரீதியிலானதும் உண்மைக்குப் புறம்பானதுமான பல கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றினை மட்டும் கீழே தருகிறேன்.

1. வஹாபிஸத்தை பரப்புவதற்காக முஸ்லிம்கள் அரபுக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களை நிறுவி வருகின்றனர்.

2.மிகவும் இரகசியமான முறையில்  சிங்களவர்களின் காணிகள் மற்றும் சொத்துகளை அபகரித்து வருகின்றனர்.

3. நாட்டில் தங்களது சனத்தொகையை அதிகரித்து வருகின்றனர்.

4. வர்த்தகத் துறையும் திட்டமிட்டு அபகரிக்கப்படுகிறது.

5.தங்களது கலாசார உடைகள், உணவுகள் போன்றனவற்றை பிற இனத்தின் மீது பலாத்காரமாக திணிக்க முயல்கின்றனர்.

6. இந்த நாட்டில் 10 சத வீத்த்தைக கொண்ட முஸ்லிம்களுக்கு 6300 பள்ளிவாசல்கள் உள்ளன. 71 சதவீதமான பௌத்தர்களுக்கு 9800 விகாரைகளே காணப்படுகின்றன.

7. 2040 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறும் நிலைமை.

8. வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதியைக் கொண்டு சிங்களவர்களின் சொத்துகளை கொள்வனவு செய்கிறார்கள்.

9. நாட்டின் பல இடங்கள் இன்று முஸ்லிம்களின் பொருளாதார மையமாக மாறியுள்ளதுடன், தொழிற்சாலைகள், கைத்தொழிற் பேட்டைகளும் அவர்கள் வசமே உள்ளன.

10. ஒரு முஸ்லிம் துறைமுக அமைச்சராகியதால் அங்கு 12.000 முஸ்லிம்களுக்கு தொழில் வழங்கப்பட்டுள்ளது.

11.பதியுதீன் மஹ்மூத் கல்வியமைச்சராகவிருந்த போது வரலாற்றுப் பாடம் பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த்து.

12. நீதியமைச்சராக ஒரு முஸ்லிம் இருப்பதால் சட்டக் கல்லூரி மாணவர் அனுமதி மிக அதிகளவில் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுகிறது.
==================

Sri Lanka opens London Stock Exchange



Sri Lanka opens London Stock Exchange
Published : 12:02 am  June 2, 2014 

Sri Lanka on Friday livened up the London Stock Exchange (LSE) as the country was symbolically partnered for the market opening at 8 a.m. The move by the LSE was to mark the highly-successful Investor Forum in London, in which it was also involved. LSE’s ties with Sri Lanka got a big boost when it acquired 

MillenniumIT, the capital markets software specialist. The LSE is powered by solutions developed by MIT as well. SEC Chairman Dr. Nalaka Godahewa, Sri Lanka’s High Commissioner in UK Dr. Chris Nonis, LSE CEO Alexander Justham, CSE Chairman Krishan Belandra, Director and incoming Chairman Vajira 

Kulatilaka, CEO Rajeeva Bandaranaike, SEC Commissioners Zuraish Hashim and Lolitha Abeysinghe and MIT Sri Lankan executives and Sri Lanka High Commission officials were among others present at the market opening of the LSE, which was followed by logos of the CSE and SEC flashed across the main trading screen of the LSE – Pix by Nisthar Cassim in London

தொடரும் இன அழிப்பு: திருமலையில் சேதமாக்கப்பட்ட தமிழ் சமாதிகள்

இருப்புக்கும் அடையாளம் இல்லை, இறப்புக்கும் அடையாளம் இல்லை என்பது இன அழிப்பு தவிர வேறெதுவும் இல்லை.ENB



திருகோணமலை அன்புவழிபுரம் பொது மயான சமாதிகளிலுள்ள தமிழ்ப் பெயர்களடங்கிய கல்வெட்டுக்கள் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன. 


குறித்த கல்வெட்டுக்களிலுள்ள பெயர்கள் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பவையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினைத் தொடர்ந்து திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். 


NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...