Thursday 5 November 2009

150 வருடகாலம் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் நுவரெலியாவில் தகர்ப்பு.

150 வருடகாலம் பழமைவாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் நுவரெலியாவில் தகர்ப்பு.
இந்துக் கோவிலை அப்புறப்படுத்தியது ஏன்? : ம.மா. சபை உறுப்பினர் கேள்வி
வீரகேசரி இணையம் 11/4/2009 10:25:52 AM -
நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட கண்டி - நுவரெலியா வீதியில் டெல்வெஸ்ட் பாலத்திற்கு அருகில் அமைந்திருந்த முத்துமாரியம்மன் ஆலயத்தை யாருடைய உத்தரவுக்கமைய நுவரெலியா மாநகரசபை உடைத்து அப்புறப்படுத்தியது என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மத்திய மாகாண சபை அமர்வின்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று 3 ஆம் திகதி மத்திய மாகாணசபை அமர்வு சபைத் தலைவர் சாலிய திசாநாயக்க தலைமையில் நடைபெற்றபோதே இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார்.

"டெல்வெஸ்ட் முத்துமாரியம்மன் ஆலயம் 150 வருட கால பழைமைவாய்ந்தது. அவ்வாலயத்தை பம்பரகல P.W.D. தொழிலாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் உள்ள மூன்று ஆலயங்கள் இம்முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுத்து சென்றே திருவிழாவை நடத்தி வருகின்றன.

கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி இனந்தெரியாதவர்களால் இவ்வாலயத்தின் கூரைகள் சேதப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மீண்டும் கூரைகளைச் சரி செய்திருந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் விடுத்த உத்தரவின்பேரில் இவ்வாலயம் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள், குறிப்பாக இந்து மக்கள் பெருமளவில் வாழ்ந்துவரும் இப்பிரதேசத்தில் கடந்த 150 வருட காலமாக வழிபட்டு வந்த ஆலயத்தை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இனவாதத்தால் சீரழிந்து போயிருக்கின்ற நிலைமை போதாதென்று மதவாத பிரச்சினைகளை உருவாக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய மாகாண சபையின் இந்து கலாசாரத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வாழும் பிரதேசத்திலேயே இந்துக் கோவிலொன்று உடைத்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விடயம் பிரதேச இந்து மக்கள் மத்தியில் வேதனையையும்,விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய மாகாணசபை இந்தக் கோவில் உடைக்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவேண்டும். மீண்டும் இக்கோவிலை நிர்மாணித்து இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பாக நேற்று நடைபெற்ற நுவரேலிய மாநகரசபை கூட்டத்தில் மாநகரசபை உறுப்பினர் எஸ். விஜயகுமார் பேசும்போது, "டெல்வெஸ்ட் முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக ஆலயத்தை நிர்மாணித்து மக்கள் வழிபட வழிசெய்ய வேண்டும்.

ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற பல்வேறு மதப்பிரிவினரிடையே பிளவுகளை ஏற்படுத்த மாநகர சபையின் உயர் அதிகாரிகள் முயலக்கூடாது. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் மாநகரசபைக்கு எதிராக இப்பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கமுடியாது" எனத் தெரிவித்தார்.
குறிப்பு : அழுத்தம் நமது

U.N. Relocates Foreign Staff in Afghanistan

U.N. Relocates Foreign Staff in Afghanistan
By ALISSA J. RUBIN
KABUL, Afghanistan — The United Nations mission in Afghanistan announced plans on Thursday to relocate hundreds of foreign staff members, sending some out of the country, in the wake of a lethal attack on its workers at a guesthouse last week.

The relocation of its workers here, while temporary, was one more signal of mounting pressure on United Nations operations as security deteriorates around the region. The move comes just four days after the United Nations announced it was withdrawing its international workers from northwestern Pakistan, where insurgents are fighting Pakistani troops and have carried out a string of terrorist attacks.

In recent weeks, United Nations workers on both sides of the border have been singled out in deadly attacks, in what appears to be a deliberate campaign by insurgents to undercut international support for the embattled Afghan and Pakistani governments.

Five United Nations workers for the World Food Program were killed in a suicide attack at the program’s offices in the Pakistani capital, Islamabad, in early October. Last week in Kabul three insurgents dressed in police uniforms scaled the front gate of a guesthouse housing United Nations personnel to mount a terrifying two-hour siege.

Five of the United Nations’ international staff members were killed, along with two Afghan security officials and the brother-in-law of a prominent Afghan politician, before the attackers were shot and killed. The strike was the biggest on the United Nations in Afghanistan in its half-century of work here and forced the organization to lock down its operations as it reviewed security across the country.

A United Nations spokesman, Adrian Edwards, said Thursday that about 600 international staff members would be temporarily relocated either to other places in Afghanistan or outside the country, primarily Dubai and Central Asian countries.
More

"ஐக்கிய தேசிய முன்னணி"யில் இணைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை முடிவு

"ஐக்கிய தேசிய முன்னணி" என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு உதயம்
2009-11-04 06:58:41
"ஐக்கிய தேசிய முன்னணி" என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டமைப்பு நேற்று உதயமாகியது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜன நாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுகந்திரக்கட்சி மக்கள் பிரிவு ஆகிய கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இணைந்து நேற்று புதிய அணியை உருவாக்கியிருக்கின்றன.
இந்தப் புதிய அணியில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கிடையே நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத் திடப்பட்டது. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றில் இந்தக்கூட்டணி ஆளும் தரப்பிற்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வகிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முற்பகல் 11.30 மணிக்கு சுப முகூர்த்தத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் எதிர்கட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
Source: Yal Uthayan
========
ஐக்கிய தேசிய முன்னணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையுமா?:நாளை முடிவு
வீரகேசரி இணையம் 11/4/2009 12:06:51 PM
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி அணி திரண்டுள்ளது. இதில் ததேகூ இணைவது குறித்த முடிவு நாளை தெரியவரும் என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இந்தப் புதிய கூட்டு முன்னணியில் இணைவது என தமிழ்த் தேசிய கட்சியின் சார்பில் கொள்கையளவில் முடிவு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை கொழும்பில் கூடி, இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அந்த முக்கியஸ்தர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகின்ற போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முதன்மைப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் எந்த வகையில், என்ன வகையான முடிவோடு இணைந்து செயற்படுவது என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...