Tuesday 26 November 2013

கார்த்திகை 27

சிறப்புச் செய்தி: மாவீரர் நாள் கார்த்திகை 27 2013


செங்கல்ப் பட்டு சிறை முகாம் கைதிகள் கட்டியெழுப்பிய தமிழீழ மாவீரர் மண்டபத்தைத் தகர்த்து தரைமட்டமாக்கி, நினைவு நடுகல்லை இடித்து விழுத்தி காலால் உதைத்துத் தள்ளும் ஜெயா அரசின் `நம் தமிழ்` காவல் படை!

`` மாவீரர் தினம் மக்கள் உரிமை `` : யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மீது பாய்ந்தது பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மீது பாய்ந்தது பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு
[ செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2013, 10:33.21 AM GMT ]

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இ.இராசகுமாரன் பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விசாரணை இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகை ஒன்றில் இருந்து வெளியான செய்தி தொடர்பிலேயே தம்மிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தலைவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாகவே அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆசியரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரான் இன்று மாலை சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

யாழ்.பல்கலைக்கழக ஆசியரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரான் இன்று மாலை சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரும், காவலதுறையினரும் மாவீரர் தினத்தினை மக்கள் அனுஸ்டிப்பதை தடுத்து நிறத்த முடியாது என்று கூற முடியாது என்றும், அனைத்து தமிழ் மக்களுக்கும் மாவீரர்களை நினைவுகூற உரிமை உள்ளது என்றும் நேற்று முன்னதினம் யாழ்.ஊடகங்களில் அறிக்கை விடுத்திருந்தார்.

இதன் எதிரோலியாகவே அவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மாலை 3 மணியளவில் யாழ்.நாவலர் வீதியில் அமைந்துள் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அவர், இரவு 7 மணியாகியும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நாளை மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையே இது என்று தெரியவந்துள்ளது.

மாவீரர் தினத்தையொட்டி தமிழ்ச் செய்தி இணையங்கள் மீது சிங்களம் தாக்குதல்!

ஊடகங்கள் மீதான தாக்குதலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
பதிவு இணையம்

தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் சிறீலங்காவின் வழிநடத்தலில் அவர்களின் அனுசரணையாளர்களாக விளங்கும் ஐரோப்பாவில் உள்ள தமிழர் தொலைபேசி நிறுவனத்தின் நிதியிலும் கட்டளையிலும் இந்தியாவிலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமது தொழில்நுட்பவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை இந்தத் தொலைத் தொடர்பு குழுமத்தின் உள்ளகத் தொடர்புகள் உறுதி செய்துள்ளன. இந்தக் குழுமத்தின் சிறீலங்காத் தொடர்புகள் பற்றியும் இராஜபக்ச குடும்பத்துடனான தொடர்புகள் பற்றியும் தமிழ்த் தேசிய ஊடகங்கள் எழுதி வந்தமை தெரிந்ததே. தமிழ்தேசிய ஊடகங்கள் தவிர்ந்த வேறு சில இணைய ஊடகங்களும் நேற்று இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

மேலும், தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது நாளையும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்துமாறு கட்டளையிடப்பட்டுள்ளது எனவும் இக் குழுமத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாவீரர் நாளில் தாயக, தமிழக, புலம்பெயர் தேசத்து மக்களின் எழுச்சியையும் இன உணர்வையும் தடுக்கத் தனது சக்திவளம் முழுவதையும் சிறீலங்கா அரசு பிரயோகிக்க அவர்களுக்குத் துணையாகத் தமிழ்த்தேசிய ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையில் இந்தத் தொலைபேசிக் குழுமம் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

ஜெயா அரசின் பண்பாட்டுப் படுகொலை! செங்கல்ப்பட்டு சிறைமுகாமில் மாவீரர் தினத்துக்கு தடை!!

செங்கல்பட்டு சிறைமுகாமில் மாவீரர் தின அலங்காரங்கள் கிழிப்பு! மாவீரர் நினைவு மண்டபம் கடற்பாரை கொண்டு தகர்ப்பு!

பிரமாண்டம்: செங்கல்ப்பட்டு கைதிகள், 
சிறைமுகாமுக்குள் கட்டியெழுப்பிய மாவீரர் நினைவு மண்டபம்

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மாவீரர் நாள் அனுசரிக்க தடை. சின்னங்களை இடித்து அகற்றிய காவல்துறை!  

Top News [Tuesday, 2013-11-26 22:31:07]

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் ஆண்டுதோறும் மாவீரர் நாளில் போரில் இறந்த சொந்தங்களை நினைவு கூர்வது வழக்கம். அதற்காக அவர்கள் சிறப்பு முகாமில் உள்ளேயே நினைவு சின்னம் அமைத்து நவம்பர் 27 நாளில் மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துவர். அணி அணியாக விளக்குகள் வைத்து மாவீரர்களுக்கு சுடர் வணக்கம், மலர் வணக்கம் செய்து வந்தனர். மஞ்சள் சிகப்பு வண்ண தோரணங்களை நினைவு சின்னம் சுற்றிலும் கட்டியிருந்தனர் . சென்ற ஆண்டும் மாவீரர் நாளை
சிறப்பு முகாமில் இருந்த அனைவரும் அனுசரித்தனர். இதனால் யாருக்கும் இடையூறு இல்லை. காரணம் இது அவர்கள் தனிப்பட்ட நிகழ்வாகவே அனுசரித்து வந்தனர் .

அச்சம்: அலங்கார வண்ணக் கொடிக்கம்பத்தை பிடுங்கி 
செம்மஞ்சள் கொடிகளைக் கிழித்தெறியும் அரச படை

இந்நிலையில், மாவீரர் நாளை அனுசரிக்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில் , இன்று தமிழக காவல்துறை மாவீரர் நாளை அனுசரிக்க தடை விதித்தது. இறந்த உறவுகளுக்கு முகாமில் அஞ்சலி செலுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது . அதை தொடர்ந்து மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரடியாக இடிக்கத் தொடங்கியது . இதை பார்த்த ஈழத் தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காவல்துறையை கண்டித்து முழக்கமிட்டனர். ஆனால் எதையும் காதில் வாங்கிப் போட்டுக் கொள்ளாத தமிழக காவல்துறை , மாவீரர் நாளுக்காக அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கொடிக் கம்பங்களை இடித்து அகற்றியது. தோரணங்களை கிழித்து எறிந்தது.இறந்த சொந்தகளுக்கு கூட அஞ்சலி செலுத்த இந்த அரசு தடை விதித்துள்ளதை முகாம் வாசிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

நீசத்தனம்: சிறைக்கைதிகள் கட்டியெழுப்பிய நினைவு மண்டபம் தகர்ப்பு

காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்து நாளை 45 ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாம் தமிழர்: மாவீரர் நடுகல்லை தகர்க்கும் முயற்சி

தமிழக அரசு இப்போது ஈழத் தமிழர்களுக்காக அனுசரிக்கப்படும் அனைத்து நிகழ்வுகளையும் தடை செய்து வருகிறது . முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுப் புற சுவரை அண்மையில் தமிழக அரசு இடித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடற்பாரைத் தாக்குதல்: காக்கிச் சட்டைக் காலடியில் கற்சிலை!
நன்றி: செய்தி புகைப்படங்கள் http://www.seithy.com/briefTopNews.php?newsID=97747&category=TopNews&language=tamil 
தலைப்பு புகைப்படக் குறிப்புகள் ENB

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...