Monday 3 April 2017

சிங்களக் குடியேற்றத்தால் தனித்துவத்தை இழக்கும் ஈழத் தமிழர்கள்



குடியேற்றத்தால் தனித்துவத்தை இழக்கப்போகும் தமிழர்கள்

முல்லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள நாயா­றுப் பகு­தி­யில் பெரி­ய­ள­வி­லான சிங்­க­ளக் குடி­யேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முழு­வீச்­சில் இடம்­பெற்று வரு­வ­தாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்­கின்ற வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டின் எந்­தப் பாகத்­தி­லும் வசிப்­ப­தற்கு இலங்­கைக் குடி­ம­கன் ஒரு­வ­னுக்கு உரிமை உண்டு. இதை எவ­ரும் தடுத்து நிறுத்­தி­விட முடி­யாது. ஆனால்  ஓர் இனத்­த­வர் வாழு­கின்ற பகு­தி­யில் அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை அடாத்­தா­கப் பிடித்­து­வைத்து வேறொரு இனத்­த­வ­ரைக் குடி­யேற்­று­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. காணி அதி­கா­ரங்­கள்  கொழும்பு அர­சி­டமே உள்­ளது என்­ப­தற்­காக எதை­யும் செய்­து­விட முடி­யாது.

அண்டை நாடான இந்­தி­யா­வில் மாகாண அர­சு­க­ளுக்­குப் பொலிஸ், காணி அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. காணி அதி­கா­ரத்­தின் மூல­மாக சட்­ட­வி­ரோ­தக் குடி­யேற்­றங்­க ளைத் தடுப்­ப­தற்கு அங்­குள்ள மாகாண அர­சு­க­ளால் முடி­கின்­றது. ஆனால் இலங்­கை­யில் அது முடி­வ­தில்லை. இத­னால் சட்ட விரோ­த­மாக இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றத் திட்­டங்களை  மாகாண அர­சு­க­ளால் தடுக்க முடி­வ­தில்லை.

முல்­லைத்­தீவு நாயாறுப் பகு­தி­யில் இடம்­பெ­று­கின்ற குடி­யேற்­றத்திட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பத்­தி­லேயே தடுக்­காது விட்­டால் காலப்­போக்­கில் இது­வொரு பெரும் பிரச்­சி­னை­யாக மாறி­வி­டும்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஏற்­க­னவே வெலி­ஓயா என்ற சிங்­க­ளப் பெய­ரி­லான மிகப் பெரிய குடி­யேற்­றத்­திட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழர்­க­ளின் பாரம்­ப­ரிய  பிர­தே­சங்­க­ளான வடக்­கை­யும், கிழக்­கை­யும்  துண்­டித்து விடு ­கின்­ற­தொரு நட­வ­டிக்­கை­யா­கவே முல்­லைத்­தீ­வி­லி­ருந்து திரு­கோ­ண­ ம­லைக்­குச் செல்­லும் முக்­கிய பகு­தி­யைத் துண்­டாடி இந்­தக் குடி­ யேற்­றத்­திட்­டம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் வடக்­கி­லி­ருந்து கிழக்கு மாகா­ணத்­துக்­குப் பாது­காப்­பான பிர­யா­ணத்தை மேற்­கொள்ள முடி­யாத நிலை­யில் தமிழ் மக்­கள் இன்­னல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

தமி­ழர்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பல இடங்­கள் இன்று கைந­ழு­விப் போன நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன. தென்­ன­ம­ர­வாடி, பத­வியா, கொக்­கி­ளாய், மண­லாறு ஆகிய இவற்­றுள் சில­வா­கும்.

இன்று நாயா­ றும் பறி­போ­கும் நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு தமி­ழர்­க­ளின் பூர்­வீ­க­மான நிலங்­கள் கண்­ணெ­திரே பறி­போ­வதை வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்­கவே எம்­மால்
முடி­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் கூட எது­வுமே செய்ய முடி ­யாத நிலை­யில் கைக­ளைக் கட்­டிக் கொண்டு நிற்­கின்­ற­னர்.

நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­வு­டன் நாட்­டின் முத­லா­வது தலைமை அமைச்சரான டி.எஸ்.சேன­நா­யக்க கிழக்கு மாகா­ணத்­தில் மிகப் பெரி­ய­தொரு சிங்­க­ளக் குடி­யேற்­றத் திட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­னார். கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள வள­மான பிர­தே­சங்­க­ளில்  காலூன்­று­வ­தும் தமி­ழர்­களை அங்கு சிறு­பான்­மையின­ராக மாற்­று­வ­துமே இந்­தக் குடி­யேற்­றத் திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.  இது எதிர்­பார்த்­த­ப­டியே நிறை­வேறி வரு­வ­தைக் காண­மு­டி­கின் றது.

வடக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் முல்­லைத்­தீவு, வவு­னியா மாவட்­டங்­க­ளின் எல்­லைக் கிரா­மங்­கள் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அங்­கி­ருந்து பரம்­ப­ரை­யாக வாழ்ந்த தமிழ் மக்­கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளனர்.

முல்­லைத்­தீவு மாவட்­டம் காட்டு வளத்­தை­யும், கடல் வளத்­தை­யும் , செழிப்­பான மண் வளத்­தை­யும் தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது. அத்­து­டன் கற்­பா­றை­க­ளும்  நிறை­யவே காணப்­ப­டு­கின்­றது.

அது­மட்­டு­மல்­லாது ஆற்று மண­லும் நிறை­யவே கிடைக்­கின்­றன. விடு­த­லைப்­பு­லி ­கள் இருந்த வரை­யில் இயற்கை வளங்­கள் யாவும் பேணிப் பாது­காக்­கப்­பட்­டன. ஆனால் போர் ஓய்ந்­த­தன் பின்­னர் நிலமை தலை­கீ­ழாக மாறி­விட்­டது. வெளி­யி­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளால் காட்டு வளங்­கள் வகை தொகை­யின்றி அழிக்­கப்­பட்டு எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றன. கற்­பா­றை­கள் வெடி­வைத்­துத் தகர்க்­கப்­பட்டு கருங்­கல் சல்­லி­க­ளாக விற்­கப்­ப­டு­கின்­றன.

இங்கு முகா­மிட்­டி­ருக்­கும் வெளி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் பெரு­ம­ள­வில் மணலை அகழ்ந்து வெளி­யி­டங்­க­ளுக்கு எடுத்­துச் செல்­கின்­ற­னர். ஆனால் உள்­ளூ­ரில் வீட்­டுத் திட்­டங்­க­ளுக்­குள் உள்­வாங்­கப்­பட்ட மக்­கள் தமது தேவைக்­கு­ரிய மண­லைப் பெறு­வ­தில் பெரும் சிர­மங்­களை  எதிர்­கொள்­கின்­ற­னர்.

வெளி­யூர் (சிங்கள*)மீன­வர்­கள் இங்கு நிரந்­த­ர­மா­கவே தங்கி நின்று  மீன்­பிடித்­தொ­ழி­லில் ஈடு­பட்டு வரு­வ­தால் உள்­ளூர்  மீன­வர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வாழ்­கின்ற தமிழ் மக்­கள் எல்லா வகை­யி­லும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இதே­வேளை திட்­ட­மி­டப்­பட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இன ­வி­கி­தா­சா­ரத்­தில் பெரும் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­வி­டப்­போ­கின்­றது. நாடா­ளு­மன்­றம், மாகா­ண­சபை, பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்­குப் பிர­தி­ நி­தி­க­ளைத் தெரிவு செய்­யும் போது தமி­ழர் தரப்­பின் விகி­தா­சா­ரம் குறை­வ­டைய நேரிட்­டு­வி­டும். இதை­விட வேலை­வாய்ப்பு, பல்­க­லைக்­க­ழக அனு­மதி ஆகி­ய­வற்­றி­லும் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும்.

இலங்­கை­யில் மொத்­த­மாக ஒன்­பது மாகா­ணங்­கள் உள்­ளன. இதில்  வடக்கு  மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லேயே தமி­ழர்­கள் செறிந்து வாழ்­கின்­ற­னர். ஏனைய ஏழு மாவட்டங்­க­ளி­லும் பெரும்­பான்­மை­யின மக்­கள் வாழ்ந்து வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில் வடக்­குக் கிழக்­கில் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தன் நோக்­கம் எந்த வகை­யி­லும்   ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தல்ல.

இஸ்­ரே­லும் பாலஸ்­தீ­னத்­தில் இவ்­வாறு தான் நடந்து கொள்­கின்­றது. இத­னால் பாலஸ்­தீன மக்­க­ளின் எதிர்­கா­லம் இருள் சூழ்ந்து காணப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு நிலை இங்­கும் ஏற்­ப­டப் போகின்­றது என்­ப­து­தான் யதார்த்­தம்.

நன்றி: சேரலாதன் உதயன்      * சேர்க்கை ENB

====================================================
பிற்குறிப்பு:

ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் தொடர்பான சில தகவல்களையும் அதன் விளைவுகளையும் சரியாகவே சுட்டிக்காட்டிய இச் செய்திக் குறிப்பாளர், தீர்வு என்று வருகின்ற போது அதிகாரப் பகிர்வு சகதிக்குள் வீழ்ந்து விடுகின்றார்.

குடியேற்றப் பிரச்சனை விவசாயப் பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனை,இதனை அதிகாரப் பரவல் மூலம் தீர்க்க முடியாது,சுய நிர்ணய உரிமை,பிரிவினை,பொது வாக்கெடுப்பு வழியில் தான் தீர்க்க முடியும்.சுபா
 

போர்க்குற்றச் சிங்களமே ஈழப்போராளி தேவதாசனை விடுதலை செய்!


தேவதாசன் குறித்து ஒரு பதிவு:

2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பங்களிலேயே "சலனச்சித்திரம்" என்னும் சினிமா இயக்கத்தை ஆரம்பித்து சினிமா மீது காதல் கொண்டு அலைந்து கொண்டிருந்த பல தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு சினிமாவைக் கற்பித்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்கிய தேவதாசன் அவர்கள் கோட்டை புகையிரத நிலையக் குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாக 2009ம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணை இன்றி ஏழு வருடங்களுக்கு மேலாக சிறையில் வைக்கப்பட்ட அவர் சிறைக்குள்ளிருந்து தனக்காகத் தானே போராடியதன் விளைவாக அவருடைய வழக்கு விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு:

20 வருடகால சிறைத் தண்டனை.

நான் 9 ம் வகுப்பு படிக்கிற காலத்தில் முதன் முதலாக தேவதாசன் அவர்களை பார்க்க கிடைத்தது. "தமிழீழ மக்கள் புரட்சி பேரவை" என்னும் தீவிர இடதுசாரி இயக்கத்தை ஆரம்பித்து என் போன்ற இளைஞர்கள் (மனித உரிமைவாதிகளின் மொழியில் "சிறுவர்கள்") மத்தியில் அரசியல் வகுப்புகள் எடுத்து கொண்டிருந்தார் - கூடுதலாக வரமராட்சிப் பிரதேசத்தில்.

புலோலியில் ஒரு வீட்டில் இரகசியமாக நடந்த அவருடைய ஒரு அரசியல் வகுப்பில் நானும் பங்குபற்றினேன். அப்போ ஹாட்லி கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்த சில மாணவர்கள் இந்த இரகசிய அரசியல் வகுப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிறைய மாணவ, மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கங்களுக்கு ஓடிக் கொண்டிருந்த சீசன் அது. புலிகளை தவிர ஏனைய பெரிய இயக்கங்கள் அனைத்தும் சிறுவர்களை ஆயுதப் பயிற்சிக்காக
அள்ளுகொள்ளையாக அள்ளிக் கொண்டிருந்தார்கள். எந்த அரசியல் விழிப்புணர்வும் இல்லாமல் மாணவர்கள்/சிறுவர்கள் இயக்கங்களுக்கு அவ்வாறு ஓடுவதை ஓரளவு குறைத்தது தேவதாசன் போன்றவர்களின் அரசியல் வகுப்புகள்.

அதன் பின்னர், 18 வருடங்கள் கழித்து அவரை நான் கொழும்பில் 2001ம் ஆண்டு சந்தித்தேன். அதே கம்பீரம். அதே உறுதியான பேச்சு. அதே இலட்சிய மனம். ஆனால் துறை மட்டும் மாறியிருந்தது.
ஆம்....
அப்போது அவரும் என்னை போன்றே ஒரு சினிமா செயற்பாட்டாளனாக மாறியிருந்தார்.
ஆனால் அவர் என்னை விடவும் "மொக்கு தனமாக" இருந்தார்.

ஆம், சில ஆளுமைகள் அவ்வாறுதான் படைக்கப்படுகிறார்கள். அவர்களால் "பொதுவேலை" செய்யாமல் இருக்க முடியாது. பொது வேலைக்காக எந்த உச்ச ஆபத்தையும் எதிர் கொள்ளவும் தயங்க மாட்டார்கள்
அத்தகையவர்கள்.

தேவதாசன் அவர்களின் பின்னால் பெரும் இளைஞர் பட்டாளம் ஒன்று யாப்பாணத்திலும், வவுனியாவிலும், கொழும்பிலும் இயங்கிக் கொண்டிருந்தது. அடிப்படை சினிமா அறிவு ஏதும் இல்லாமல் சினிமா செய்ய வெளிக்கிட்ட பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் தன்னால்
 முடிந்தளவு அடிப்படை சினிமா அறிவை வழங்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் தன் சொந்த பிரயத்தனத்தின் ஊடாக "இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்" பணிப்பாளர் சபையில் அங்கத்தவரானார். அவருடைய முயற்சியில் உருவானதுதான் இலங்கை திரைப்படக்
கூட்டுத்தாபனத்தின் "தமிழ் பிரிவு".
உண்மையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் என ஒன்று உள்ளது, என எம்மவர் பலருக்கு அறிமுகம் செய்தவரே அவர்தான்.

என்னுடைய சினிமா செயற்பாட்டுக்கும் தேவதாசன் அவர்களின் சினிமா செயற்பாட்டுக்கும், சினிமா பற்றிய புரிதலுக்கும் கூட பாரிய வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருந்தன.

ஆனால் தமிழ் பேசும் இளைஞர்கள் மத்தியில் சினிமா செய்வதற்கான தைரியத்தை கொடுத்ததில் தேவதாசன் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. அதற்காக அவர் இழந்தது பல. அதற்கான அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நாம் மறந்துவிட முடியாது.

பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் "குற்றவாளிகள் அல்ல" என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சந்தர்ப்பவசமாக "பயங்கரவாத" செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட தேவதாசன் போன்ற சமூகச் செயற்பாட்டாளர்கள், கலைஞர்களுக்கு...

20 வருட கடும் சிறைத் தண்டனை.

"அவர்களும் எம்மை கொன்றார்கள், நாங்களும் அவர்களைக் கொன்றோம். கணக்குச் சரியாப் போச்சிது. நடந்ததை மறப்போம்" என பேரினவாத பயங்கரவாதத்தையும், தமிழர் விடுதலைக்கான ஆயுத
போராட்டத்தையும் சமப்படுத்திக் கொண்டிருக்கும் சனநாயகவாதிகளும் சரி.... மனித நேய சக்திகளும் சரி....
இன்று சினிமா "ஜாம்பவன்களாக, நட்சத்திரங்களாக, பிரபல்யங்களாக..." வர துடித்துக் கொண்டிருக்கும் ஈழம் சினிமா கலைஞர்களும் சரி....
யாருக்கும் தோன்றவில்லை...
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க,
நீதிக்காக குரல் கொடுக்க...

நாம், "நாமுண்டு நம் நலமுண்டு" என இப்படியே இருப்போமாயின் நம்மையும் இந்த உலகம் இலகுவில் மறந்து விடும்.

நன்றி:ஞானா

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...