Monday 10 March 2014

ENB WEST: Ukrainian Communists Condemn Violence and the US, ...

ENB WEST: Ukrainian Communists Condemn Violence and the US, ...:



Ukrainian Communists Condemn Violence and the US, EU for Orchestrating a Coup with Fascists

By CPC Global Research, March 07, 2014



In these circumstances, the Communist Party of Ukraine presents concrete proposals to resolve the situation:
 - Declare a Ukrainian referendum on the definition of foreign economic policy of Ukraine’s integration.

- Conduct a political reform to eliminate the presidency and install a parliamentary republic, and significantly expand the rights of territorial communities.

- Return to a proportional voting electoral system.

- Establish an independent civilian “National control” body with the broadest powers.

- Conduct judicial reform and introduce the institution of electing judges.

The CPU also urges international condemnation of extremist actions, fascist propaganda, and external interference in the internal affairs of Ukraine.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்.








மெல்லத் தமிழ் இனிச் சாகும்.

மேற்காண்பவை சிங்களத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளிலும், நிறுவனங்களிலும் வைக்கப்பட்டு வருகின்ற அடையாளப் பலகைகள் ஆகும்.இவை வெறுமனே எழுத்துப் பிழைகள் சம்பந்தப்பட்ட மொழிப்பிரச்சனை மட்டுமல்ல,சிங்கள அரசுமுறையின் அதிகாரவர்க்கப்பிரிவில் `தமிழ்` அங்கம் பெறாமை ஒரு முக்கிய காரணமாகும்.அதாவது,போதுமான தமிழ் ஊழியர்கள் இன்மை,மும்மொழிக் கொள்கை அமூல்படுத்தப்படாமை, நவீன கணனி உலகுக்கு அதிகாரத்துறையில் தமிழ் உயர்த்தப்பட்டு-வளர்த்தெடுக்கப்படாமை,சிங்கள அதிகாரிகளின் அலட்சியப் போக்கு,தமிழ் ஊழியர்களின் அடிமைப்பட்ட நிலை போன்ற அரசுத் துறைப் பிரச்சனைகளும் முக்கிய காரணியாகும்.இந்த அரசுமுறை ஜனநாயகப் படுத்தப்படாமல் மொழிப்பிரச்சனை தீராது. அரசு எந்திரம் சிங்கள மயப்பட்டிருப்பதை மாற்ற வேண்டுமானால் தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவேண்டும்.இல்லையெனில் அரசு மற்றும் அதிகார, கல்வித் துறைகளில் மெல்லத் தமிழ் இனிச்சாகும்.இதற்கு சில சாட்சியங்களையே மேலே காண்கின்றோம்!

குறிப்பு: தகவல் மற்றும் புகைப்படங்கள், நன்றி Face Book நண்பர்

பாருங்கள்,அதிர்ச்சியடைவீர்கள்..! குளியாபிட்டியவில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம்
கண்காட்சியின்போது வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளைப் பாருங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்!

இலங்கை இராணுவப் பயிற்சி தொடரும்: மேனன் உறுதி

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தொடரும்; கோட்டாவிடம் 
மேனன் உறுதி

வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014 11:18 0 COMMENTS

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகள்
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று புதுடில்லிக்கான விஜயத்தை
மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் கடல்வழி
பாதுகாப்பின் ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர்
முகம்மது நஜீம், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ
ஆகியோர் கலந்து கொண்டனர். மொரீஷியஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளின்
பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய
நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளித்தல்,
தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன்
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படும்
பயிற்சிகள் தொடரும் என சிவசங்கர் மேனன் உறுதியளித்துள்ளார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. (நக்கீரன்) 

`மாந்தை சமூகப் புதை குழி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவக்காலை`

'மன்னார் மனித புதைகுழி, பழைய மயானம்'
சனிக்கிழமை, 08 மார்ச் 2014 01:05 0 COMMENTS

குறிப்பு: இந்தச் செய்தி குருட்டு மற்றும் முட்டாள்த் தனமாகப் பிரயோகிக்கும் மயானம் என்கிற வார்த்தையை சவக்காலை எனப்படியுங்கள்.ENB

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழியென தோண்டப்பட்ட
பகுதி பழைய மயானமொன்றாகும் என தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்தது.

மேற்படி புதைகுழியில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த விதம், சடலங்கள்
மண்ணினால் மூடப்பட்டிருந்த முறை மற்றும் மனித எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமையை அடுத்தே மேற்படி மனித புதைகுழியானது பழைய மயானம் என்ற முடிவுக்கு வந்ததாகவும் இதனையடுத்து புதைகுழியைத் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் தொல்பொருட் ஆராய்ச்சி திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவு அதிகாரி ஏ.ஏ.வி.விஜேரத்ன தெரிவித்தார்.

இந்த சடலங்கள் முறைப்படியே புதைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சடலத்துக்கு வௌ;வேறு குழிகள் தோண்டப்பட்டே புதைக்கப்பட்டுள்ளன என்பதற்கு சாட்சிகள் உள்ளன என்று அவர் கூறினார்.

இந்த சடலங்கள் வெவ்வேறு காலப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இவை 50 - 60 வருடங்கள் பழைமையானவை. சில மனித
எலும்புக்கூடுகள் 100 வருடங்கள் பழைமையானவை என்றும் அவ்வதிகாரி
சுட்டிக்காட்டினார்.

இந்த சடலங்கள் புதைக்கப்பட்ட காலங்களில் சவப்பெட்டிகள்
பயன்படுத்தப்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் 1936 மற்றும் 1937 ஆண்டுக் காலப்பகுதியில் உலர் வலயப் பகுதிகளில் பரவிய மலேரியா காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் சடலங்களே இப்பகுதியில்
புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த மனித புதைகுழி தொடர்பான அறிக்கையை தொல்பொருட் ஆராய்ச்சி
திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அகழ்வுப் பிரிவு
அதிகாரி ஏ.ஏ.வி.விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில் நீரிணைப்பு
வேலைத்திட்டத்திற்காக பள்ளம் தோண்டியபோது, அங்கு மனித
எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் உள்ளமை தெரியவந்தது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் கடந்த 5ஆம் திகதிவரை 33 தடவைகள்  குறித்த மனித புதைகுழியை  தோண்டும் பணியை  மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர்
மேற்கொண்டுவந்தனர்.

இதன்போது, சுமார் 84 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள்  மீட்கப்பட்ட
நிலையில், மன்னார் நீதவானின் உத்தரவுக்கமைய இவை பெட்டிகளில்
தனித்தனியாக பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தொடர்கிறது புலிகளுக்கான தடை

அமெரிக்காவில் தொடர்கிறது புலிகளுக்கான தடை

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் பட்டியலை அமெரிக்கா
வெளியிட்டுள்ளது.

அதில்  தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை
செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை
செய்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி, முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழீழ விடுதலைப் புலிகளை
அமெரிக்கா தடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.phpid=560282713108389693#sthash.YSOe0TAr.dpuf

அனந்தி: ஜெனிவாவில் போர்க்குற்றம் பற்றிப் பேச சுமந்திரன் அநுமதிக்கவில்லை.

ஜெனீவா சென்றபோதும் சர்வதேச விசாரணை குறித்து என்னை 
பேசவிடவில்லை; அனந்தி சசிதரன்
2014-03-06 18:16:27 | General
யாழ்நகர் நிருபர்

ஜெனீவா சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் முன்வைக்காத நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரான என்னையும் பேசுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்று அனந்தி சிறிதரன் கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற
ஊடகவியியலாளர் சந்திப்பின் போது ஜெனீவா சென்ற கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணை தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறப்பட்டு வருவது தொடர்பில்  ஊடகவியிலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப்

பதிலளிக்கையிலையே அனந்தி சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?
local/dkaquzjnoc10505055cbf43f4943cunpmac3f7e2336b27310f0b9efd0htr#sthash.LVVPKeQ6.dpuf
=================
பலத்த ஏமாற்றம்; அனந்தி சசிதரன்
2014-03-06 17:47:55 | General
எஸ்.நிதர்ஷன்,கே.ஹம்சனன்

ஜெனிவாவில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை ஒட்டுமொத்த தமிழ்
மக்களுக்கும் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்
தெரிவித்தார்.

ஜெனிவாவினூடாக நீதி கிடைக்குமென நம்பியிருந்த நிலையில் இன்று எமக்கு நீதி கிடைக்காததால் எமது எதிர்கால சந்ததியினர் மாற்று வழியை
எடுப்பார்களாக இருந்தால், இங்கு நீதி கிடைக்கப்பெற்று சமாதானம் நிலவுவதாக கூறுகின்ற சர்வதேச நாடுகளே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா பிரேரணை தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக
சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் மதியம் நடைபெற்றது. இதன்   போது கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php local/udfamrzzl254013ab6be46e113643ppthqd6b21d59a3c3a0b9d0f6efrbkyc#sthash.ZzQ6aP27.dpuf

இந்தியாவுக்குள்ள நிர்ப்பந்தத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும்; ஜனாதிபதி

இந்தியாவுக்குள்ள நிர்ப்பந்தத்தை எம்மால் புரிந்துகொள்ள முடியும்; 
புதுடில்லியுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளோம்; ஜனாதிபதி

2014-03-02 05:56:35 | General

ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின்
கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால்
கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து எவ்வாறான நிலைப்பாட்டை
எடுப்பதென்பதில் இந்தியாவுக்கு இருக்கக்கூடிய தேர்தல் நிர்ப்பந்தங்களை தான் புரிந்துகொள்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். 3 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் உட்பட பலவிடயங்கள் குறித்தும் பேசினார்.

மனித உரிமைகள் பேரவையில் இந்தியா எவ்வாறு வாக்களிக்கும் என்பது
தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். “எனக்குத் தெரியாது. மார்ச் மாதக்
கூட்டத் தொடர் முடிவடைந்து ஒரு மாத காலத்தில் இந்தியா தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கவுள்ளது. தமது எதிர்காலத்தையிட்டு சிந்திக்க
வேண்டியவர்களாகவும், வாக்காளர்களின் மனநிலையையிட்டு சிந்திக்க
வேண்டியவர்களாகவுமே அவர்கள் இருப்பார்கள். அவர்களை நாம்
புரிந்துகொள்கிறோம். அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள
வேண்டும்’ என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் இந்தியா உட்பட மனித உரிமைகள் பேரவையில் உள்ள
அனைத்து நாடுகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும் என குறிப்பிட்ட மகிந்த
ராஜபக்ஷ, “இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை மியன்மாரில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் நான் சந்திக்க உள்ளேன். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியவெளி விவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் 5 நாட்களுக்கு முன்னர் பேசியுள்ளார். நாம் தொடர்ச்சியாக தொடர்பு கொண்ட நிலைமையிலேயே உள்ளோம்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் அது மென்மையானதாக
இருந்தாலும் கூட, எமக்கு சங்கடத்தை ஏற்படுத்துபவையாக இருக்கும்.
அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் ஈழம்
அமைப்பதற்காக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கைத்

தமிழர்கள் மத்தியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என
தெரிவித்துள்ளது தொடர்பாக கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “புலம்பெயர்ந்த தமிழர்கள் இதில் எவ்வாறு பங்கு கொள்ள முடியும்? அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்ல. அவர்கள் வேறு நாட்டுப் பிரஜைகளாகவே உள்ளார்கள். அந்த நாடுகளில் நடைபெறும் சர்வஜன வாக்கெடுப்புகளில் மட்டுமே அவர்கள் பங்குகொள்ள முடியும்’ எனத் தெரிவித்தார்.

போருக்கு பின்னரான நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் சர்வதேச ரீதியாக
விமர்சனங்கள், முன்வைக்கப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு
பதிலளித்த ஜனாதிபதி “எம்மால் முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளோம்.

இடம்பெயர்ந்த மக்களை நாம் மீளக் குடியமர்த்தியுள்ளோம். அவர்களுக்கு
மின்சாரம், வீதிகள், பாடசாலைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன. போர்
இடம்பெற்ற பகுதிகளில் 94வீதமான பகுதிகளில் இருந்து கண்ணி வெடிகளை
நாம் அகற்றியுள்ளோம். இந்த நிலையில் எமக்கெதிராக தெரிவிக்கப்படும்
குற்றச்சாட்டுகள் நியாயமற்றவைகளாகும்’ எனக்குறிப்பிட்டார்.

“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கைக்கு அமைச்சரவை 2012ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே
அங்கீகாரத்தை வழங்கியது. அதில் உள்ள 280 பரிந்துரைகளையும்
நடைமுறைப்படுத்துவதற்கு எமக்கு பத்தொன்பது மாதங்களே இருந்தன. காணி உரிமை, மொழி போன்றவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு காலம் எடுக்கும்’ எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்கா இலங்கைக்கு எதிராகச் செயற்படுவது, கலியஸ்கிலே என அறியப்பட்ட குத்துச் சண்டை வீரர் முகமத் அலியுடன் பாடசாலை மாணவன் ஒருவருடன் மோதுவதைப் போன்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணைகளை கொண்டு வருவது ஆட்சி மாற்றத்திற்காகவா? என்று கேட்ட போது,
“அவர்களிடம் இரகசிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இருக்கலாம். ஆனால், மக்களுடைய ஆதரவு எனக்கு இருக்கும் வரையில் அதனையிட்டு நான் கவலைப்படப் போவதில்லை’ எனத் தெரிவித்தார். 

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படுவது கலியஸ்கிலே என அறியப்பட்ட குத்துச் சண்டை வீரன் முகம்மத் அலியுடன் பாடசாலை மாணவன் ஒருவன் மோதுவதைப் போன்றதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளும் தம்முடைய
உள்நாட்டு தேர்தல் நிர்பந்தங்கள் காரணமாகவே இலங்கை தொடர்பான
நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இலங்கைக்கு எதிராக சர்வதேச தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியக்
கூறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட போது “அவ்வாறான தடைகள் எதனையும்
மனித உரிமைகள் பேரவையால் விதிக்க முடியாது. தனிப்பட்ட நாடுகளே
அவ்வாறான தடைகளை விதிக்க முடியும். ஐ.நா. பாதுகாப்பு சபைகள் மட்டுமே
சர்வதேச தடை ஒன்றுக்கான உத்தரவினை பிறப்பிக்க முடியும்.

அங்குகூட சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வீட்டோ உரிமைகளை கொண்டுள்ளது.

அவை இலங்கையின் நட்பு நாடுகளாகும்.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்காவின்
அனுபவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்கப்பட்டபோது, “இது
தொடர்பாக பேச்சு வார்த்தைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று
வருகின்றன. இரண்டு தரப்பு பிரதிநிதிகளும் மற்றைய நாட்டிற்கு விஜயத்தை
மேற்கொண்டு உள்ளார்கள்’ என ஜனாதிபதி பதிலளித்தார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் மத்தியஸ்த முயற்சி ஒன்றை
ஜப்பான் மேற்கொள்கின்றதா? என கேட்கப்பட்ட போது, “எந்தவொரு நாடுமே
மத்தியஸ்தப் பணியை மேற்கொள்ளவில்லை’ என தெரிவித்த ஜனாதிபதி
கடந்தமுறை இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஜப்பான் வாக்களிக்கவில்லை என குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் திடீர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தப்படுவதற்கு திட்டம் ஒன்று உள்ளதா என கேட்கப்பட்டபோது, “என்னுடைய ஆறு வருட பதவிக்கால முடிவில் 2016ஆம் ஆண்டில் தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

- See more at: http://www.thinakkural.lk/article.phplocal/gtogmizgit67618ab70731b116340kkrae553f17c11a3bbc87e0b605rggg5#sthash.TK5KfutM.dpuf

, “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை! மாவை சம்பந்தன்

 “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம்  இருந்ததில்லை``

மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரும், தனித்தனியாக தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களில், “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் வாழும், தேசபக்தி மிக்க இலங்கையர் நாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை இலங்கை உயர்நீதிமன்றம்,
வரும் மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மிகவும் சுவாரசியமான வழக்கு இது.

“இந்த இரு தமிழ் கட்சிகளின் இலக்கு, இலங்கையில் ஈழம் என்ற பெயரில்
தனிநாடு அமைப்பது என்பதை நீதிமன்றம் பிரகடனம் செய்ய வேண்டும்” என,
ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. “அப்படி ஈழம் அமைக்கும்
நோக்கமே எமக்கு கிடையாது” என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு
மற்றும் தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இனி விசாரணையின்போது, இவர்களுக்கு ஈழம் வேண்டுமா, இல்லையா என்பது முடிவு செய்யப்பட வேண்டும்.

இலங்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ், மற்றும்
நீதிபதிகள் சந்திரா ஏக்கநாயக்க, பீ.பி அலுவிஹார ஆகியோர் முன்னிலையில்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய
கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில், முதலில் கூறப்பட்ட இருவரும், ஈழம் அமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளவர்கள் எனவும், அப்படி ஒரு நோக்கம் அவர்களுக்கு உள்ளது என்று தெரிந்தும், அவர்களது கட்சிகளை தேர்தல்களில் போட்டியிட அனுமதித்தது தவறு என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீதும், 5 மனுக்களிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் ஆகிய இருவரும், தனித்தனியாக தாக்கல் செய்துள்ள பதில் மனுக்களில், “ஈழம் அமைவதில் எமக்கு எப்போதும் நாட்டம் இருந்ததில்லை. ஒன்றுபட்ட இலங்கையில் வாழும், தேசபக்தி மிக்க இலங்கையர் நாம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை, வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான செய்திகளை அதிகம் வெளியிடாமல் அடக்கி
வாசிக்கும்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மீடியாக்களுக்கு
சொல்லப்பட்டுள்ளது. “எமக்கு வேண்டாம் ஈழம்” என்று இவர்கள் வாதாடுவதால், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் புலம்பெயர் தமிழர் நிதி வசூல்கள் பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

http://tamil.north-lanka.com/2014/01/23/60123/

தொடரும் தமிழக அரசின் அராஜகம் . ஈழத் தமிழர் செந்தூரன் மீண்டும் சிறப்பு முகாமில் அடைப்பு !



சென்ற ஆண்டு பூந்தமல்லி சிறப்பு முகாமில் 42 நாட்கள் கடுமையான உண்ணா நிலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் செந்தூரன் . தானும் மற்ற முகாம்வாசிகளும் விடுதலை அடைய வேண்டும் என உண்ணா நிலைப் போராட்டம் செய்த செந்தூரனுக்கு ஒட்டுமொத்த தமிழகமே ஆதரவு தந்தது . தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் செந்தூரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதன் பலனாக இறுதியில் செந்தூரன் விடுவிக்கப்பட்டார். செந்தூரன் மட்டுமல்லாமல் 30 மேற்பட்ட ஈழத் தமிழர்கள் விடுதலை ஆனார்கள்.

செந்தூரன் விடுதலை பெற்று தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். எனினும் தமிழக அரசின் கியூ பிரிவு காவல்துறை செந்தூரனை விடுவதாக இல்லை . செந்தூரனை நாடுகடத்த வேண்டும் என சதி செய்தது . அவரை நாடுகடத்த உத்தரவையும் பெற்றது . இதற்கிடையில் செந்தூரன் தன்னை நாடுகடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து செந்தூரனை நாடு கடத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கியூ பிரிவு காவல்துறை வேறு வழிகளில் செந்தூரனுக்கு தொந்தரவு கொடுத்து வந்தது. செந்தூரனின் உறவுக்கார பெண்மணியை வைத்து செந்தூரனை வேவு பார்த்தது. இதனை அறிந்த செந்தூரன் உறவுக்கார பெண்மையை கண்டித்து உள்ளார் . இதையே காரணமாக வைத்து செந்தூரான் உறவுக்கார பெண்ணை தாக்கினார் என்று பொய் வழக்கு போட்டு செந்தூரனை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

மூன்று வாரம் சிறைவாசம் அனுபவித்து சிறையில் இருந்து வெளியேறிய செந்தூரனை கியூ பிரிவு காவல்துறை அகதிகள் சிறப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு அகதிகள் முகாமில் அடைத்தது . எந்தவித காரணமும் இன்றி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட செந்தூரன் இப்போது சிறப்பு முகாம்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் . இன்றுடன் நான்காவது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார் . தமிழக அரசின் சார்பில் அவருக்கு எந்த வித கரிசனமும் காட்டப்படவில்லை. செந்தூரனை நாடு கடத்தவே இன்று வரை முயற்சி செய்கிறது தமிழக அரசு . செந்தூரன் இலங்கை சென்றால் நிச்சயம் இலங்கை அரசு அவரை சாகும்வரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் அல்லது கொன்றுவிடும். தஞ்சம் தேடி தமிழகம் வந்தாலும் தமிழக அரசும் இலங்கை அரசைப் போலவே நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக செந்தூரன் தெரிவித்து உள்ளார் .

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சட்டமன்ற தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர் ஏன் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களை மூட மறுக்கிறார்? சிறப்பு முகாம்களில் தவிக்கும் பல தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சொல்லவொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் . இவர்களை விடுதலை செய்து தமிழர்களுக்கு நீதி வழங்காமல் , ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவேன் என தமிழக முதல்வர் சொல்வது கபட நாடகமாக தெரிகிறது என்று கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள் . உண்மையில் ஈழத் தமிழர்கள் மேல் தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால் முதலில் செந்தூரன் மற்றும் அனைத்து சிறப்பு முகாம் வாசிகளையும் உடனடியாக விடுதலை செய்யட்டும் என்று கூறிகின்றனர் தமிழீழ ஆதரவாளர்கள் . செய்வாரா முதல்வர் ?

தகவல் இணையம்

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...