Tuesday 4 December 2012

மோசி: எகிப்தின் இரண்டாம் முபாரக்!

மோசி: எகிப்தின் இரண்டாம் முபாரக் ஒட்டுச்சித்திரம் சுபா

லங்கையில் 1977 பொதுத்தேர்தலில்  அறுதிப்பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்ற ஜே.ஆரின் யு.என்.பி.அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியை மன்னனாக்கும் 1978 அரசியல் யாப்பை வகுத்து, ஜனாதிபதி ஆட்சிமுறையை உருவாக்கியது.அன்று முதல் இலங்கையில் நாடாளமன்றம் என்பது மன்னராட்சியை மூடி மறைக்கும் மாயத்திரையாகவே உள்ளது.

எகிப்தில் மோசியின் அரசியல் அதிகாரக் குவிப்பும் இதையொத்ததுதான்.இது வெற்றியடைந்தால் இவர் முபாரக்கை விடவும் அதிக அதிகாரம் படைத்தவராக இருப்பார்.ஜே.ஆரின் வார்த்தைகளில் ``ஆணைப் பெண்ணாக மாற்றுவது தவிர்ந்த அனைத்து அதிகாரமுமுள்ள சர்வ வல்லமை மிக்க ஜனாதிபதி`` யாக இருப்பார்.

எகிப்தில் வெடித்த வெகுஜனக் கிளர்ச்சி தன்னியல்பானது. இதுவரை காலமும் தாம் ஆளப்பட்ட முறையில் இனிமேலும் ஆளப்படுவதை அநுமதிக்க முடியாத வெஞ்சினத்தின் வெளிப்பாடாக அமைந்தது.இதனால் அதன் முழக்கம் வெறும் `ஆட்சி மாற்றம்` என்பதாகவே இருந்தது.வெகுஜனங்களின் வெஞ்சினத்துக்கு அஞ்சி இராணுவமும் பதுங்கி இருந்து ஒரு தற்காலிக சமரசம் செய்து கொண்டது.

முபாரக் பதவி கவிழ்க்கப்பட்டாலும் ஆட்சி மாறவில்லை.இராணுவம் ஆட்சியில் அமர்ந்து கொண்டது.மீண்டும் இராணுவத்துடனான மோதல் தொடங்கியது.ஆப்கான் யுத்தத்தில் வடக்குக் கூட்டமைப்பு என்கிற காவாலிக்கூட்டத்தோடு அணிசேர்ந்து தலபானை வீழ்த்த முயன்றதுபோன்று, இதுவரையும் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்கு எதிராக அமெரிக்கா பரப்பி வந்த அனைத்து ஜனநாயக இலட்சியங்களையும் ஒரே இரவில் மண்மூடிப் புதைத்துவிட்டு, பகிரங்கமாக கை குலுக்காமல் தன் கற்பைக் காத்துக்கொண்டு, திரை மறைவில் மோசி அரசுடன் பஞ்சணை அமைத்துக் கொண்டது.

காசாப் போரில் ராஜதந்திர மகுடம் ஏந்தி எட்டு நாட்களுக்குப் பின்னால் ஒரு போலியான தற்காலிக யுத்த நிறுத்தம் ஏற்பட்ட கையோடு தனது வலிமையப் பற்றிய முற்றிலும் தப்பான கணக்கோடு அதிகாரத்தை ஏகபோகமாக்கும் முயற்சியில் இறங்கினார்.

இதுவரையான நிகழ்ச்சிகளின் அடிப்படையில் மோசியின் கனவு நனவாகும் எனத் தோன்றவில்லை.எகிப்த்திய வெகுஜனங்களின் அரசியல் விழிப்புணர்வு அதை அநுமதிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது அரசியல் ஏஜென்டுகளான என்.ஜி.ஓ க்களும், ஊதுகுழல் ஊடகங்களும் சொந்தப்புத்தியற்ற புத்திஜீவி்களும், புரட்சிக்கு பல வர்ணங்கள் தீட்ட முயலுகின்றனர். இந்த `அரபு வசந்தம்` என்பதும் அத்தகைய ஒன்றுதான்.

இவர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் முரட்டுப் பிடிவாதமுள்ள வரலாறு புரட்சியின் நிறம் சிவப்பு என்பதை உறுதி செய்தே தீரும்.அது ஆட்சிமாற்றத்தோடு நிற்காது அரசுமுறையையும் மாற்றும்.மக்கள் ஜனநாயக தேசிய சுதந்திரக் குடியரசுகள் வேண்டுமென்று கோரும்.

எகிப்து அதற்கு கண்முன்னான சாட்சியம் ஆகும்.

தேவையானது எல்லாம் எகிப்திய சமூகபொருளாதாரப் படிவத்தில் இருந்து எழுகின்ற சமூகவர்க்கங்களின் ஆய்வில் அடிப்படையில் வகுத்துக்கொள்ள வேண்டிய திட்டம்  தான், அதன் மீதமைந்த கட்சி தான்.

இப்பெரும் அறிவுப் பணியை எகிப்திய பாட்டாளி மக்களின் முன்னணிப்படை  நிறைவேற்றி போராடும் வெகுஜன மக்களுக்கு கையளிக்கும் என்று நம்புவோமாக!

அபாசுக்கு ஐ.நா.சூடிய `அரசுப் பட்டம்`, பாலஸ்தீனப் போராளிகளைப் பிரித்தழிக்கும் திட்டமே!


Cartoon | Mother Palestine gives Israel agent Mahmoud Abbas a lesson on the Right of Return
 ~ by @CarlosLatuff
அபாசுக்கு ஐ.நா.சூடிய `அரசுப் பட்டம்`, பாலஸ்தீனப் போராளிகளைப் பிரித்தழிக்கும் திட்டமே!

ஐ.நா.சபையில் பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் `உறுப்புரிமையற்ற அரசுப் பட்டம்` வெறும் தம்பட்டமே.அது பாலஸ்தீனத்தின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது ஏனெனில் பாலஸ்தீனர்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை, அவர்களிடம் அரசும் இல்லை. காசாப் பகுதியில் ஹமாஸ் இயக்கமும், West Bank பகுதியில் PFLP மற்றும் குழுக்களும் பகுதியான அதிகாரத்தைக் கொண்டுள்ளன.எனினும் இதை அழிப்பதற்காக இஸ்ரேல் தொடர்ந்து வலிந்து யுத்தம் தொடுத்து அந்த அதிகாரத்துக்கான அடித்தளங்களை அழித்துவருகின்றது. இவையெதையும் தடுக்க வல்லமையில்லாத இந்த அரசுப்பட்டம் அபாசின் தம்பட்டமே! ``இப்போது எமக்கு அரசு இருக்கிறது`` என்கிறார் அபாஸ், அப்படியானால், முடிசூட்டு விழாவின் மறு நாளே ஜெருசலேமில் இஸ்ரேல் ஆரம்பித்துள்ள பாலஸ்தீன நில ஆக்கிரமிப்புத் திட்டத்தைத் தடுக்கட்டும் பார்ப்போம்! இந்த மோசடியின் ஈழத்து வடிவம் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்! பாலஸ்தீனப் போராளிகளைத் தனிமைப்படுத்தி இஸ்ரேலின் நம்பகமான நண்பனும், அமெரிக்கத் தரகனும், சமரசவாத சந்தர்ப்பவாத, சரணாகதியாளனும் அரபாத்தின் முதுகில் குத்திய கயவனும், பாலஸ்தீனத்தின் பாலசிங்கமுமான அபாஸுக்கு வழங்கும் சர்வதேச அங்கீகாரமே இந்தப் பட்டம்.

இதுகுறித்து லண்டன் நகரில் வெளிவரும்  Times பத்திரிகையின் இணையப் பதிப்பின் ஆசிரியர் தலையங்கத் தலைப்பு வருமாறு,

The State of Palestine
The UN has given Abbas a chance to start marginalising Hamas
Published at 12:01AM, November 30 2012 The Times UK

When Mahmoud Abbas returned to Ramallah after launching Palestine’s bid for statehood at the United Nations last year, he was given a hero’s welcome. When he returns after yesterday’s vote in New York to make Palestine a non-member observer state of the UN, the reception will be even rowdier. For this reason, among others, this step towards full statehood is constructive.
 

“மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”, “மாணவர்கள் மீது வன்முறை புரியாதே”கண்டன ஆர்ப்பாட்டத்தில் யாழ் மக்கள் முழக்கம்!


“மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”, ''மாணவர்கள் மீது வன்முறை புரியாதே''!

கண்டன ஆர்ப்பாட்டத்தில் யாழ் மக்கள் முழக்கம்!

மாவீரர்களை நினைவு கூர்ந்ததற்காக சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், `மாவீரர் தினத்தை
அநுஸ்டிப்போம்` என சிங்களத்தை எச்சரித்தும் யாழ். பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* அரசே தமிழர்களின் கல்வி வளத்தை அழிக்காதே!
* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்!
* அரச பயங்கரவாதம் எமக்கு வேண்டாம்!
* கல்வியைத் தொடர பல்கலை மாணவர்களை உடனே விடுதலை செய்!
* இனப்படுகொலை இராணுவமே உன் அராஜகத்தை உடனே நிறுத்து!
* இராணுவமே எமது மண்னை விட்டு வெளியேறு!
* சர்வதேசமே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கிகரி!
* மாணவர்களின் ஜனநாயக உரிமையினை பறிக்காதே!
* தாக்காதே தாக்காதே மாணவர்களை தாக்காதே!
* பல்கலைக் கழக விடுதிக்குள் உனக்கு என்ன வேலை!
* “மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”!
* “மாணவர்கள் மீது வன்முறை புரியாதே”!
* “கைது செய்த மாணவர்களை விடுதலை செய்“!
* “சர்வதேசமே இனியும் மௌனம் காக்காதே” !
* “தாக்காதே தாக்காதே... ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்காதே”!
* “ஜனநாயக உரிமைகளை மிதிக்காதே”!


இவ்வாறு முழக்கங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கி, கண்டன முழக்கமிட்டவாறு   மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்!
இவ் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, மற்றும் நவ சம சமாஜ கட்சியின் உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர், தொழிற்சங்கப் பிரதிநிதிகள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், பல்கலைக்கழக போராசிரியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

நன்றி: தகவல் உதயன்

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...