Thursday 31 March 2016

மறவன் புலவு ``தற்கொலை அங்கி`` யும், ஈழம் மீது இராணுவ ஆக்கிரமிப்பும்!

முப்பது ஆண்டுகால நீண்டயுத்தத்தின் இராணுவ உபகரணப் புதையல்களின் மீட்பை, தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயம் செய்ய, சம கால அச்சுறுத்தலாக சித்தரிக்கும்,சிங்களத்தின்
சதிகார பிரச்சார மோசடியை முறியடிப்போம்!


ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவமே வெளியேறு!

==============================================================

Recovery Of Arms Cache May Impair De-Militarization Of North Lanka
By PK Balachandran | ENS Published: 30th March 2016 04:49 PM Last Updated: 30th March 2016 04:49 PM

COLOMBO: The accidental discovery of an arms cache, including three parcels of TNT and a suicide jacket, in a house at Chavakachcheri in Jaffna District on Wednesday, may hinder the demilitarization of the Northern Province which is one of the major post-war demands of Sri Lankan Tamils and which was promised to the UN Human Rights Council (UNHRC) by the Lankan government headed by President Maithripala Sirisena.

Opponents of demilitarization like MP Namal Rajapaksa have already tweeted that the cache is a sign of the resurgence of the LTTE and that there is no case for lowering vigil.

Recently, President Sirisena himself said that the separatist "Eelam" mindset is still prevelant among the Tamils, but he was quick to add that the only way to neutralize it is the promotion of reconciliation.

The Sirisena-Wickremesinghe government is keen on demilitarization to the maximum extent, and has got the army, navy and air force to vacate hundreds of acres of land in favor of their former civilian owners.

But observers say that the military may not be entirely with the government in this.In fact, Maj Gen.Chaggi Gallage had an open spat with Foreign Minister Mangala Samaraweera at a meeting he had with troops at the army base in Palaly. He was transferred for "insubordination".

After the war ended in 2009, and especially after the exit of President Mahinda Rajapaksa in January 2015, the military has lost much of its power and influence.Despite assurances by Sirisena and Wickremesinghe, the military top brass are not convinced that they will not be tried for war crimes by an international judicial mechanism set up by the UN.

In this context, incidents and discoveries showing resurgence of the LTTE, are expected to restore the relevance of the military in the affairs of the nation and prevent the government from bowing to the diktats of the West and the UNHRC.
             ==============================================================
மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. 
மீன்பிடிக்கவே வெடிபொருட்களை கொண்டுவந்தேன்!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை என்ன காரணத்துக்காக எங்கிருந்து கொண்டுவந்ததான தகவல்களை, அவ்வீட்டின் உரிமையாளரான சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி அங்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் அச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 
================================

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - கூட்டு எதிர்க்கட்சி
30 மார்ச் 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மைகளை மக்களிடமிருந்து மூடி மறைக்க முயற்சிப்பதாகவும்,தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கரிசனை காட்ட வேண்டுமெனவும், அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

வெள்ளவத்தையில் உள்ள இடமொன்றுக்கு அனுப்பி வைக்க, இந்த வெடிபொருட்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர்,இந்த சம்பவத்தை உதாசீனம் செய்து விட முடியாது எனவும், உண்மையாக மீட்கப்பட்ட பொருட்களின் விபரங்களையும் என்ன நோக்கத்திற்காக இந்த வெடிபொருட்கள் ஆயத்தப்படுத்தப்பட்டன என்பது பற்றியும் அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
=========================
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
MAR 30, 2016 | 11:36by கார்வண்ணனின் செய்திகள் Karunasena Hettiarachchi

சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முனைவதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையத் தொடங்கியுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சிக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்பட இருந்தவை என்றால், அது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அளித்துள்ள செவ்வியில், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஒன்றும் அதிமுக்கியமான விடயமல்ல என்றும், அது போர்க்காலத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில், விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வெடிபொருட்களை நாம் அடிக்கடி மீட்கிறோம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=============================

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில், சிங்கள மொழிப் பத்திரிகை மற்றும் உரப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தத் தற்கொலை அங்கியும் இதர வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வெடிபொருட்களில், தற்கொலை அங்கி, 4 கிளைமோர் குண்டுகள், 12 கிலோ கிராம் நிறைகொண்ட வெடிபொருட்கள் அடங்கிய மூன்று பொதிகள், 9 மில்லிமீற்றர் ரவைகள் அடங்கிய இரண்டு பொதிகள் (அந்தப் பொதிகளில் 100 ரவைகள் இருந்துள்ளன),  கிளைமோர் குண்டை வெடிக்க வைப்பதற்கான மின்கலப் பொதிகள் இரண்டு, சிம் அட்டைகள் ஐந்தும் அடங்குகின்றன.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆயுதங்கள் மீட்கப்பட்ட, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர் ஒரு வர்த்தகர் என்றும் அவரிடம், சிறிய ரக லொறியொன்று இருப்பதாகவும், அதிலேயே அவர், பொருட்களை ஏற்றியிறக்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அவர், கடத்தி விற்பனை செய்வதாகவும் இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், குறித்த நபர் வீட்டுக்கு வருவதாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார், அவரை மடக்கிப் பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சந்தேகநபர், இரவு 9 மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்தே அப்பகுதியை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து,  பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அதன் பின்னர், குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில், சந்தேகநபரின் மனைவி மற்றும் அவர்களுடைய பிள்ளை மற்றும் சந்தேகநபரின் தந்தை ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டில், கஞ்சா போதைப்பொருளைத் தேடி, தேடுதல் வேட்டை  நடத்திய பொலிஸார், படுக்கையறையின் தட்டிலிருந்தே இந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவருடைய மனைவி,  அவ்விடத்திலேயே விழுந்துவிட்டார். இதனையடுத்து சந்தேகநபர் தொடர்பிலான விவரம் அடங்கிய தகவல், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. மயங்கி விழுந்த அப்பெண், பொலிஸ் பாதுகாப்புடன் சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார், அவர்களுடைய பிள்ளையையும் கூடவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

சந்தேகநபரின் தந்தையை பொலிஸார், தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மயக்கம் தெளிந்ததும், பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் அப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அவர், கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு அடிக்கடி சென்றுவருவதாக தெரிவித்ததையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே, அக்கராயன் பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் 2 மணியளில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது. அதன் பின்னர் சாவகச்சேரிக்கு, மாலையில் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தது.

சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார்.

அவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாவும், அச்சண்டைகளின் போதெல்லாம், மனைவி கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி விடுவதாகவும் தெரியவருகின்றது.

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. இவ்வாறு மீட்கப்பட்ட இந்தத் தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும், அவ்வளவு பழையன இல்லை என்றும் வடக்கு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இவை, ஏதாவது பிரதேசத்திலிருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டனவா, சந்தேகநபருக்கு இப்பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் அவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலின் (வயது 32) என்றும் அவர்,  தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில், 13 வயதில் இணைந்து கொண்டார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நன்றி: தமிழ் மிரர்/ யாழ் உதயன்
==============
சாவகச்சேரி விவகாரம்: பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை
31-03-2016 10:18 AM Comments - 0       Views - 25

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, மேற்படி பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


மூலம்: http://www.tamilmirror.lk/
=======================

புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களால் அச்சுறுத்தல் – கோத்தா எச்சரிக்கை
MAR 31, 2016 | 1:07by கி.தவசீலன்in செய்திகள்
gota-udaya (1)சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய 

ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2009ஆமே் ஆண்டு மே மாதம், போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையாதவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

இவர்கள், மோசமான அச்சுறுத்தலாக உருவாகக் கூடும்”  என்றும் கோத்தாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

================
Sri Lanka recovers second stock of explosives from former war zone
Source: Xinhua   2016-03-31 01:01:36   More

COLOMBO, March 30 (Xinhua) -- Sri Lankan police on Wednesday recovered a stock of explosives in the north of the country hours after a suicide jacket had been discovered at another location.

Police Spokesperson Ruwan Gunesekara said that several explosives including small bombs and a rocket-propelled grenade (RPG) launcher had been discovered from an abandoned well in Mannar in the north after police had conducted a search operation in the area.

Gunesekara said that the explosives are believed to have been hidden by the Tamil Tiger rebels during the war period and after obtaining a court order, the army had destroyed it.

Police had earlier on Wednesday recovered a suicide jacket and explosives from a house in Chavakachcheri, also in the north, sparking concerns from opposition parliamentarians that the Tamil Tiger rebels may try to regroup.

Sri Lankan armed forces militarily defeated the rebels in May 2009, ending 30 years of a civil conflict.

The suicide jacket and explosives were recovered from a house based on information received by police.

The police said that three parcels found in the house contained 12kg of TNT explosives. They also recovered 100 bullets and batteries used to trigger explosives.

Soon after the recovery, Defence Secretary Karunasena Hettiarachchi dismissed concerns, stating that there was no threat to the country's national security as these were weapons hidden by the rebels during the war.
==============================
எதையும் எதிர்கொள்ள சிறிலங்காப் படையினர் தயார் – யாழ். படைகளின் தளபதி
MAR 31, 2016 | 1:15by கார்வண்ணனின் செய்திகள்
Major General Mahesh Senanayaka

வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
 சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,
“ முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளியின் நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
 ஆனாால், எந்த அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், சிறிலங்கா படையினர் தொடர்ந்து மூலோபாய ரீதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
==========================================
வெடிபொருள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் கிளிநொச்சியில் கைது
MAR 30, 2016 | 11:19by கி.தவசீலனின் செய்திகள்

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில், தற்கொலைத் தாக்குதல் அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட, வீட்டில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் இன்று கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கராயன் பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

31 வயதுடைய இந்த இளைஞரின் பெயர் எட்வின் என்றும் கூறப்படுகிறது. இவரே அந்த வீட்டின் உரிமையாளர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Tuesday 22 March 2016

காலச்சுவட்டில் பிரேமா ரேவதியின் தமிழினிக் கட்டுரை!



மேற்காணும் கட்டுரையில் தான் பிரேமா ரேவதியின் கீழ்க் காணும் குறிப்பு உள்ளது,

''புலிகளின் வீரவரலாறு, புலிகளின் துரோக வரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் உண்மை வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கல்லறைகள் நிற்கும் அந்த காம்பவுண்டுகளில் துயிலும் மாவீரர்கள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது. ஒரு இயக்கத்தின் தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்க வேண்டி வந்த புலிப்படையணிகளை, சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில் இருந்து போர்முனை சென்ற சூரியப் புதல்விகளான புலிகளின் பெண்கள் படையணிகளை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.''

இந்த மேற்கோளில் உள்ள `காம்பவுண்டுகளில்` என்கிற தமிழக பேச்சுவழக்குச் சொல், ஈழத்தமிழ் வழக்குக்கு அமைய `இல்லங்களாக` மாற்றப்பட்டு,தமிழினியின் கருத்தாக, `ஒரு கூர் வாளின் நிழலில்` பிரசுரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதற்கு யார் யார் பொறுப்பு?


மேலும் இந்த ஒரு மேற்கோள் மட்டுமல்ல,காலச்சுவடு மார்க்சிய விரோத,ஈழ தேசிய விடுதலை விரோத,விடுதலைப்புலி எதிர்ப்புச் சஞ்சிகை என்பதும்,பிரேமா ரேவதியின் `நலமா தமிழினி`க் கட்டுரையின் தொனியும் அணுகுமுறையும்,காலச்சுவட்டின் நிலைப்பாட்டை அனுசரித்து இருப்பதும், இதற்கமைய `கூர்வாளின் நிழல்` தொகுக்கப்பட்டு அதே காலச்சுவடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருப்பதும்தான் விவகாரம்,வழக்கு,குற்றச்சாட்டு.

சம்பந்தப்பட்டோர் பதிலளிக்க வேண்டும்.

துப்புத் துலங்கிய பின்னால், திருடர்கள் துப்பறிந்தவர்களை  திட்டிவிட்டு கூர்வாளோடு தப்பியோடக் கூடாது!

நியாயம் நிழல் போலத் துரத்தும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
==========================================
பிற்குறிப்பு : மேலும் வாய்ப்புக் கிடைத்தால், பிரேமா ரேவதியின் `சாதிய நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் உள்ள ஈழத்தில்` என்கிற ஈழ சமூக வரையறை குறித்து விரிவான தளத்தில் பேசுவோம். 

23-03-2016

Monday 21 March 2016

ஈழப் போர் வாளின் தழலில் காலச்சுவடு - மூன்று


ஈழப் போர்வாளின் தழலில் காலச்சுவடு - இரண்டு


ஈழப் போர் வாளின் தழலில் காலச் சுவடு - ஒன்று


'காலச்சுவடு` மீது ஈழத்தமிழர் வழக்கு!


வெற்றிச் செல்வி படைப்பும் பகிர்வும்


“முயற்சித் திருமகள்” விருது பெற்ற வேலு சந்திரகலா எனும் இயற்பெயரைக் கொண்ட வெற்றிச் செல்வியின் அகத்திலிருந்து
By, மன்னார் இணையம் On Sunday, Feb 15 2015

மன்னார் இணையத்தின் கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மை காண வருபவர், உலுக்கிய யுத்தத்தின் இலக்கியப் போராளி, புலிகளின் குரல் வானொலி அறிவிப்பாளர், மேடை நாடக இயக்குநர், கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தோடு வாழும் இளம் படைப்பாளி. ஒரு கையை யுத்தத்தால் இழந்தாலும் தன்னம்பிக்கையோடு அடம்பன் பண்ணையின் முகாமையாளராக கடமையாற்றி வாழ்ந்து கொண்டு இருக்கும், வாழ்வின் சிறப்பிற்காக “முயற்சித்திருமகள்” விருது பெற்ற வேலு சந்திரகலா எனும் இயற்பெயரைக் கொண்ட வெற்றிச்செல்வியின் அகத்திலிருந்து.........

தங்களைப் பற்றி?

எனது சொந்த இடம் அடம்பன் கள்ளிக்குளம். எனது அப்பா வேலு சிறந்ததொரு விவசாயி. அம்மா வேலு தவமணி சிறந்த இலக்கிய ஆர்வம் கொண்டவர். நளவெண்பா, பொன்னியின் செல்வன் போன்ற புராணக்கதைகளை அருமையாகச் சொல்வார்.

 நாங்கள் ஆறு பேர் சகோதரர்கள். எனது ஒரே ஒரு அண்ணன் கணபதி, 1987 இல் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தர்மேந்திரா எனும் பெயரில் சிறந்த வீரனாக வாழ்ந்து, 1994-ல் வீரச்சாவடைந்தார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இரண்டாவது சகோதரியும் அவர்களது இரண்டு பிள்ளைகளும் எறிகணை வீச்சில் இறந்து போனார்கள்.

மூன்றாவது சகோதரி இந்தியாவிலும் கடந்த மாதம் (10-01-2015) சுகவீனமாக இருந்த எங்களது தந்தையும் இறந்தார்கள்.

இப்போது நானும் எனது இரு சகோதரிகளும் அம்மாவும் தான்.

இழப்புக்களின் வெளியில் அழகான அருமையான எமது ஊரும் எனது குடும்பமும் இப்போது வலிகளிலிருந்து மீளத் துடிப்பவர்களாய்......

உங்கள் பாடசாலைக் காலம் பற்றி?

எனது பள்ளிக்காலம் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை. நான் மட்டுமல்ல இன்னும் பலரின் பள்ளிக்காலமும் மிகவும் கவலைக்குரியதுதான். விபரம் தெரிந்த காலந்தொட்டு இடப்பெயர்வுதான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் தான் எமது படிப்பு. கல்விக்காலம் வரப்பிரசாதமாய் அமையாவிட்டாலும் புதிய புதிய மாணவர்கள் புதிய சூழல்கள் என நல்ல அனுபவம் கிடைத்தது. ஒழுங்கான கல்வி கிடைக்கவில்லை.

நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தது எவ்வாறு?

எனது கல்வி ஒழுங்காக அமையாவிட்டாலும் அந்தச் சூழல் என்னை மாற்றியது. போரட்டச் சூழலும் இடப்பெயர்வுகளும் சுற்றி சுற்றி எம்மை புடம் போட்டன. அந்த நேரத்தில் விடுதலைப் போராட்டத்தின் மீது  ஈர்ப்பும் மனவெழுச்சியும் ஏற்பட என்னிடம் இருந்த கவிதையாற்றல் எழுச்சிக் கவிதைகளாக வெளிப்பட ஆரம்பித்தன. என்னைச் சுற்றி வாழ்ந்த போராளிகளின் வீரம்-தீரம்-அன்பு-தேசவிடுதலை எண்ணம் இன்னும் எத்தனையோ...... உண்மையின் உணர்வுகளின் வெளிப்பாட்டினை எழுத வேண்டிய அவசியமும் சூழலும் அமைந்து எழுதினேன். ஆனால் அது கவிதைகளா.... என எனக்கு தெரியவில்லை. எனது உள்ளத்துணர்வுகளை எழுதியபின் எனது நண்பர்களிடமும் மேடைநிகழ்ச்சிகளில் வாசிக்கப்பட்ட போதும் நண்பர்களால் பாராட்டப்பட்டேன். அதுவே விடுதலைப்போராட்ட உணர்வின் வெளிப்பாடாய் அமைந்தது எனலாம்.

முதலில் நீங்கள் எழுதியது கவிதையா சிறுகதையா?

கவிதைதான். நான் எழுதிய சிறுகதைதான் முதலில் சஞ்சிகையில் பிரசுரமானது. பெண்கள் ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நாற்று சஞ்சிகையில் 1997-இல் ” பூபாளம் இசைக்கத்துடித்தவள்” எனும் பெயரில் பிரசுரமானது. பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளேன். எழுதியும் வருகிறேன். அந்த நேரத்தில் பல சஞ்சிகைகள் வெளிவந்தன. விடுதலைப்போராட்டம் பல படைப்பிரிவுகளை கொண்டமைந்தது.
நான் இணைந்திருந்த பிரிவு பயிற்சித்தளமாளகவே நீண்ட நாட்கள் இயங்கியது. வெளியுலகம் எங்களுக்குள்ளும் வராது. நாமும் வெளியுலகைப் பற்றி அறிய மாட்டோம்.எங்களின் சூழலை வெளிப்படுத்த

வேண்டும் என்றால் அதற்கு எழுதுவது தான் சிறந்தது என்று மாத சஞ்சிகையை வெளியிட்டோம். அப்போது நான் படையணியின் அணிநடை வாத்தியக்குழுவில் ஒருவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.

அதன்போது எனது பயிற்சித் தளத்திற்குள் இருந்த நூலகத்தை பொறுப்பேற்று பராமரித்தேன். எமக்கான பயிற்சி முடிந்ததும் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களிலெல்லாம் வாசிக்கப்படவும் எழுதப்படவும் வேண்டும் என்ற எண்ணத்துடன் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தினேன். நானும் பல கவிதைகள் சிறுகதைகள் எழுதினேன். தற்போது அவைகளில் எவையும் எனது கைவசம் இல்லை. அதை யாரும் ஆய்விற்கு உட்படுத்தவும் இல்லை.

தங்களது முதலாவது நூல் வெளியீடு பற்றி?

எனது முதலாவது நூல் வெளியீடானது மிகவும் வித்தியாசமானது. நூலாகவும் எனது குரலில் இறுவட்டாகவும் வெளியிட்டேன்.“ இப்படிக்கு அக்கா” எனும் கவிதை நூலே அதுவாகும். தம்பியை ஆமி பிடித்துபோய்
சிறையில் அடைத்து சித்தரவதை செய்கிறான். தம்பி மீதான பாசஉணர்வும் தம்பி, தானது தாய் அக்கா மீதான பாசஉணர்வும் அந்தச் சூழலின் உணர்வினை உருக்கமாய் வெளிப்படுத்துவதாய் அமைந்தது.

“ இப்படிக்கு அக்கா”....
எப்படி இருக்கிற என்று கேட்கவே
அழுக பொங்குதடா.....
எப்படி இருப்பாய் என தெரிஞ்சுகிட்டும்
எப்படிடா நான் கேட்க?
கண்ணீரு இல்லாம எத கொண்டு அழ?
எண்டு நீ எழுதிய வரிகளால
ஓடுது அண உடைச்சு
கண்ணீரு ஆறு இங்க.......

இந்தக் கவிதைகளை எழுதிய நாட்களில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி உண்ணாவிரதம் இருப்பதும் கூரைகளில் ஏறி நின்று போராட்டம் செய்வதும் தம் இன்னுயிர்களை இழப்பதும் நிகழ்ந்தது.

இந்தச்சுமைகளை சுமந்து வந்தது தான் “ இப்படிக்கு அக்கா”. போராட்டம் வெறுமனே ஆயுதம் ஏந்தி போராடுவதல்ல. விடுதலை உணர்வோடு தேச விடுதலைக்காய் போராடியவர்களைத்தான் வன்முறையாளர்கள் என்கிறார்கள். தீவிரவாதிகள் என்கிறார்கள். அவர்களுக்குள், அன்பு, இரக்கம், தாராளகுணம் எல்லாமே அதிகம் உண்டு.

தடுப்பு முகாமில் உங்கள் செயல்பாடு பற்றி?

 நான் பம்பைமடு தடுப்புமுகாமில் ஒரு வருடம் இருந்தேன். என்னோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தோழிகள் இருந்தார்கள். அவர்களில் என்னைப் போலவே இத்துறையில் ஈடுபாடு இருந்தவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். சும்மா இருப்பதைவிட, எனது சுமையை, வலியை ஏன் எழுதக் கூடாது என நினைத்தேன். அதற்கான வசதி எதுவும் ஏற்படவில்லை. எனினும் கிடைக்கிற அங்கர் மட்டைகள், பிறஸ்-சிக்னல் மட்டைகள், கடதாசித்துண்டுகள் என எல்லாவற்றிலும் எழுதினோம். ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு படிப்போம். எம்மை பார்க்க வருகின்ற உறவினர்களிடம் கொப்பியும் பேனாவும் கொண்டு வரச் சொல்லி எமது பதிவுகளை பதிந்தோம். யாரும் அந்த பதிவுகளை படிக்கலாம், அதில் தங்கள் உணர்வுகளை எழுதலாம். என்னுடையது மட்டுமல்ல, அதில் பலருடைய மனக்குமுறல்களும் அதில் பதிவாயின. பாரச்சுமைகளை பகிர்ந்துக் கொண்டபோது, ஒருவித அமைதி கிடைத்தது. கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. அதிலும் என்னுடைய பதிவுக்கு அதிகமான வரவேற்பு இருந்தது. இவ்வாறு பதிவுகள் தொடர்ந்து. அது தானாக தனக்கான ஒரு வடிவம் எடுத்து, அத்தியாயம்-1, அத்தியாயம்-2 என அத்தியாயம் -18 வரை வளர்ந்து “ ஈழப்போரின் இறுதிநாட்கள்”  எனும் நூலாக, 20112-ல் சோழன் படைப்பகத்தின்
வெளியீடாக வெளிவந்தது.

தங்களின் போராட்ட வாழ்வில் மறக்க முடியாத சந்தர்ப்பம், சம்பவம் பற்றி?

அவை ஒன்று இரண்டல்ல. ஓராயிரம் சம்பவங்கள் உள்ளன. நாங்கள் வாழ்ந்த வாழ்வை எப்படிச் சொல்வது?......அந்த வாழ்க்கை மறக்க முடியாத ஒன்று. இப்போது வாழ்கின்ற வாழ்க்கைதான் மிகவும் மோசமானதும் கஸ்றத்திற்குரியதும் என்பேன்.

ஆயுதப்போராட்டம் தோற்றதற்கு காரணம் தனிப்பட்ட முறையில் புலிகள் கிடையாது. அதுபோல வெற்றி பெற்றது தனியாக மஹிந்தவின் அரசாங்கம் கிடையாது. அது உலக அரசியல் சம்பந்தப்பட்டது. இதை எப்படி விடுதலைப் போராட்டத்தின் தோல்வி என்று சொல்ல முடியும் என்று தெரியவில்லை. போராட்டத்தினை நடத்திய அமைப்பு அப்போராட்டத்தினை கைவிட்டுள்ளது.
ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது அவ்வளவுதான்.

அந்தச் சூழலில் வாழ்ந்த மக்கள் மனதில் இன்னும் விடுதலைச்சுடர் சுடர்விட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் இப்போது வாழ்கின்ற இளைய தலைமுறையினரிடம் எந்தவித உணர்வும் இல்லையே என்பதுதான் கவலை.....அதிலும் சிலபேர் போராட்ட காலத்தில் போராளிகளாக இருந்தவர்களே. இப்போது விடுதலைப் போராட்டத்தினை விமர்சிப்பதும் கொச்சைப்படுத்துவதும் பலரின் எச்சிப் பொருளுக்காய் பட்டம் பதவிக்காய் எனும்போது இன்னும் வேதனை. கடைசி நேரத்தில் சில போராளிகளுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை முரண்பாடுகளை வைத்துக் கொண்டு மக்களின் விடுதலைக்காய் தேசஅபிமானத்தோடு இன்னுயிர்களைத் தியாகம் செய்த உண்மைத் தியாகிகளையும் விடுதலைப்போராட்ட வரலாற்றையும் கொச்சைப்படுத்தி விமர்சிக்க வேண்டாம் என்பது என்னுடைய தயவான வேண்டுகோள்.

தடுப்பு முகாமில் ஒரு வருடம் தங்களது மனநிலையும் நடந்த செயலும்?

தடுப்பு முகாம் எனும்போது நிறையவே....பல விடயங்களை நாம் அங்கு கற்றுக் கொண்டோம். நிர்வாகம் என்றால் என்ன என்பதை நாம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். சில செயற்பாடுகளால் எவ்வளவிற்கு எங்களை அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவிற்கு அவ்வளவு  அவமானப்படுத்தினார்கள். எனினும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் என்று சொல்லுவார்கள். போராளிகள் போராளிகளாகவே இருக்கிறோம். தடுப்பு முகாமில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் கொடூரமான முறையில் தண்டணை, அட்டூழியங்கள், துன்பதுயரங்கள் எல்லாம் நடந்தது உண்மைதான். தடுப்பு முகாமிற்குள் கொண்டு வருவதற்குள் முன் பரிசோதனை என்ற பெயரில் சதுரக் காப்பரனுக்குள் நாம் நிர்வாணமாக்கப்பட்டோம். அந்தக் காப்பரனின் சிறு சிறு ஓட்டைகள் வழியே பல கண்கள் எம்மை மேய்ந்தன.

அவர்கள் எங்களை பரிசோதனை செய்யவில்லை. நிர்வாணமாக்கி கொச்சைபடுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். வெற்றி மமதையில் இருந்தார்கள், மனிதம் அவர்களிடம் மரணித்து போயிருந்தது. இவ்விடயத்தை எம் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.

ஆனால் நான் இருந்த பம்பைமடு தடுப்பு முகாமில் அவ்வாறு பெண்களை பாலியல் இச்சைகளுக்காக பயன்படுத்திய செயல் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் அரசாங்கத்திற்கு அடிக்க வேண்டும், கரிபூச வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் பலவாறு இல்லாத பொல்லாத செய்திகளையும் எழுதியது. நடக்காததை நடந்ததாகவும் எழுதிய சம்பவங்கள் உண்டு. நான் உட்பட பம்பைமடு தடுப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தோம். எங்கள் பிரிவுக்கு கேப்டன் லக்மலி எனும் பெண் அதிகாரிதான் பொறுப்பாக இருந்தார். அவருக்கு கீழ் பெண் இராணுவத்தினர் செயல்பட்டனர். வேலிக்கு வெளியேதான் ஆண் போலிஸ். உணவு, சுகாதாரம்,வைத்திய தேவை கடமையில் ஆண்கள் ஈடுபட்டார்கள். பம்பைமடு தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெறும் பெண்கள் படையினரின் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என “ ஆனந்த விகடன் ” இதழில் கட்டுரை வெளியிட்டு இருந்தார்கள். அந்த இதழைப் பார்த்ததும் அங்கிருந்த பெண்கள் துன்பமடைந்தார்கள்.

எனது நண்பி கேட்டாள், “ அக்கா எப்படி நாங்கள் வெளியில் போய் வாழ்வது?” முன்னாள் போராளியென ஒதுக்குவார்கள். இப்போது இந்த தகவலால் எம்மை கேவலமான முறையில் எல்லாமே பார்ப்பார்கள்.இல்லையா? ஏன் இப்படி எழுதுகிறார்கள். அரசாங்கத்தை எதிர்ப்பதாக நினைத்து ஆயிரம் பெண்களின் வாழ்வையே எரிப்பதா?”

இன்னும் எதையாவது எழுத வேண்டும் என்று எண்ணியதுண்டா?

ஆம். நிச்சயமாக. நிறையவே எழுத இருக்கிறது. இதுவரை நடந்தவற்றை, அதாவது முள்ளிவாய்க்கால் வரை எழுதியுள்ளேன். இப்போதிருக்கும் சமுதாயத்தை, சமூக வாழ்வை, பிரச்சனையை யார் எழுதுகிறார்கள்?
எழுதுவார்கள்? கெட்ட விடயங்களையும் இல்லாதவற்றையும் எழுத ஆயிரம் பேர் உள்ளனர். தற்போது மக்களின் நிலைமையை வேலை-வீடு-காணி-பாதைப்பிரச்சனைகள் பலவற்றைப் பற்றி எழுத வேண்டும்.

போருக்கு பின்னான எம்மினத்தின் வாழ்வை பதிவு செய்ய இருக்கிறேன். எமது 30  வருட விடுதலைப்போரையே இருட்டடிப்பு செய்கின்ற நாங்கள், இதைப் பற்றி எழுதாமலும் பிரசுரிக்காமலும் இருக்கும் நாங்கள், அதற்கு பல காரணங்களை முன்வைக்கிறோம். பாதுகாப்பு இல்லை என்று சொல்லி விலகி விடுகிறோம். எனது விருப்பம் அந்த 30 வருடத்தை உண்மையில் நடந்தவற்றை அப்படியே வாழ வைக்க வேண்டும். 30 வருடத்திற்கு பின்னும் தான்.....

தங்களின் அங்க இழப்பிற்கான சூழலும் அதற்குப் பின்னான வாழ்வும் பற்றி?

19 வயதிலேயே யுத்தத்தின் காரணமாக எனது கையையும் பார்வையையும் இழக்க நேர்ந்தது. எனது வாழ்வில் முன்பை விடவும் தன்னம்பிக்கையும் தெளிவும் அதிகமாகத்தான் இப்போது இருக்கின்றது.

அங்கமிழப்பு என்பது மற்ற மனிதரை விடவும் நீ எப்படி முன்னுக்கு வரவேண்டும என்பதை எனக்கு கற்றுத் தந்துள்ளது. அங்கமிழந்தவள் என்று என்னை நான் எப்போதும் நினைத்ததில்லை. மனமுடைந்து போகவும்
இல்லை. இரண்டு கண்ணும் கையும் இயங்காமல்தான் இருந்தேன். கண்பார்வை தெரியவரும், நான் எழும்பி நடப்பேன் என்று காயப்பட்டவேளை நான் நினைக்கவேயில்லை. எனது நம்பிக்கைதான் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் கற்றுக் கொடுத்தது. இந்த அங்கம் இழப்புதான் சமூகத்தின் கருத்தை நாம் கருத்தில் கொள்ளாது, உனது திறமையில் தன்னம்பிக்கையோடு முன்னேறு, உன்னால் எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியும் என்று கற்றுத் தருகிறது.

பெண் கவிஞர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவையென நீங்கள் கருதுகிறீர்கள்?

எழுத்துலகம் எனும்போது ஆண் பெண் என்று வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். எழுதுகின்றவர்கள் துணிவுடன் இருக்க வேண்டும். எழுத்து தெளிவாக இருக்க வேண்டும். யாருடைய
வற்புறுத்தல்களுக்கும் பயந்து மாறுகின்றவர்களாக இருக்கக் கூடாது. எடுத்துக் கொள்ளும் பணியில் உறுதி வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனியான குணம் இயல்பு இருக்கும். அதற்கு ஏற்றாற் போல்தான் எழுதுவார்கள். அதற்காக முற்பத்தையை வீட்டு முற்றத்தில் வைக்க முடியாது.

தங்களது புனைபெயர்கள் மற்றும் அடுத்த வெளியீடு பற்றி?



வெற்றிச்செல்வி-நிலவுமகள்-ஆநதி-தர்மேந்தினி எனும் புனைபெயர்களில் எழுதி வந்தேன். இப்போது வெற்றிச் செல்வி மட்டுமே.
இதுவரை கவிதைகளாக “ இப்படிக்கு அக்கா” , “ இப்படிக்கு தங்கை”, “ துளிர்விடும் துயரங்களும் நம்பிக்கைகளும்”
சிறுகதைகளாக “ முடியாத ஏக்கங்கள் 2012”, “ காணாமல் போனவனின் மனைவி”, நாவலாக “ போராளியின் காதலி”“
கட்டுரைத் தொடராக “ ஈழப்போரின் இறுதி நாட்கள்”.......

எழுதுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. நான் கட்டாயம் எழுத வேண்டியிருக்கின்ற பலதை எழுதியே ஆக வேண்டும்.

நான் ஏன் போராளி ஆனேன் என்பது தொடக்கம். போருக்கு பின்னான வாழ்வு பற்றி நிச்சயம் எழுதுவேன்.

தங்களுக்கு கிடைத்த முதல் விருதும் மனநிலையும் பற்றி?

மன்னார் தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவில் எனக்கு “ முயற்சித்திருமகள்” எனும் விருது தந்து என்னை கௌரவித்தார்கள். நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் மன்னார் தமிழ்சங்கத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருந்திருக்கவில்லை. தமிழ்சங்கத்தின் செயல்பாடுகள் என்னவென்பதை அறியாமல் இருந்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பற்றியும் எனது படைப்புகளையும் நன்கு அறிந்து இருக்கிறார்கள். முதல்நாள் கவியரங்கம் தமிழ்மணி அகளங்கள் ஐயா தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு கவிதை வாசித்தேன். அடுத்தநாள் விருதும் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அங்கு விருது பெற்ற பத்து கலைஞர்களில் நான் மிகவும் சிறியவள். அதேநேரம் ஒரேயொரு பெண் கலைஞர் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன்.

தங்களின் வாழ்வில் இருந்து பெண்களுக்கு சொல்லக் கூடியவை?

யார் என்ன சொன்னாலும் பெண்கள் தங்களின் மனதாலும் உடலாலும் இன்னும் வலுவில்லாமலே வாழ்கின்றார்கள். அவர்கள் தங்களின் நிலைமையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண் பெண் என்று
பிரிக்காமல் அவர்களின் உணர்வுக்கும் உறவுக்கும் மதிப்பு கொடுங்கள்.

விரும்பியோ விரும்பாமலோ பெண்களின் தலைமையில் குடும்பச் சுமையை ஏற்றி விட்டிருக்கின்றோம். அதனால் அவர்கள் பல நிகழ்வுகளில் கூட கலந்துக் கொள்ள முடியாமல் போகிறது. எழுத்துலகில் இருக்கும் பெண்களின் நிலையும் அதுதான். ஆண்கள் பொதுவாக வெளியில் சென்று உழைப்பதும் மாதமானால் சம்பளம் எடுப்பதும் தெரிகிறது.

ஆனால் அதுபோலவே அந்த வீட்டில் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கின்ற பெண்களின் உழைப்பை கணக்குப் போட்டுப் பார்த்தால் ஆண்களின்
சம்பளத்தைவிட அதிகமாகத்தான் இருக்கும். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தங்களையே அர்ப்பணிக்கும் பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும். தாய்க்கும் சமீபத்தில் எனது தந்தைக்கும் இடையில்
சிறிது உரையாடல் எனது தாய் சிரித்துக் கொண்டே “ உங்களுக்கு துணிமணிகளை துவைத்துக் கொடுப்பது போல வெளிநாட்டிற்குச் சென்று துவைத்துக் கொடுத்திருந்தால் மாதமாதம் பல ஆயிரம் டாலர்கள்
சம்பாதித்திருப்பேன்” என்றார் புன்னகையோடு. தந்தையும் சிரித்தார். அப்போதுதான் அம்மா சொல்ல வந்த விடயத்தை விளங்கிக் கொண்டேன்.

நீங்கள் ஏதாவது அமைப்பினை நடத்தினீர்களா?

சிறிதாக- மாற்று வலுவுள்ளோர்களுக்காக “தேனீ” எனும் பெயரில் நடத்தினேன். மனமுடைந்துள்ள மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை உயர்த்தவும் ஆலோசனை வழிகாட்டியாகவும் செயல்பட்டு வந்தேன்.
அமைப்பினை பதிவு செய்வதில் கடினம். எனவே என்னாலானவற்றை தனிப்பட்ட முறையிலே செய்து வருகிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எனது வீட்டு முற்றத்தில் சிறுவர் சிறுமியருக்கு என்னால்
ஆனவகையில் விளையோட்டோடு கல்வியையும் கற்றுக் கொடுக்கிறேன்.

பெரியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் எவ்வித இடையூறுகள் இல்லாமல் என் மன அமைதிக்காகவும் செயல்பட்டு வருகிறேன். அதே போல் இரண்டு மாத்ததிற்கு ஒரு தடவை வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி வகுப்புகளில் ஆலோசனை வழங்குனராக கலந்து கொள்கிறேன். தேனீ அமைப்பு இப்போது எனது தனிப்பட்ட முயற்சியில் என்னை மட்டும் நானே இயக்கும் சக்தியாக மனத்திற்குள் உயிர்ப்புடன் இருக்கிறது.

மன்னார் கலைஞர்களுக்கான கௌரவம் மன்னாரில் எவ்வாறு உள்ளது?

என்னைப் பொறுத்தவரையில் கலைஞர்களுக்கு கௌரவம் இருப்பதாகத்தான் உணர்கிறேன். “முயற்சித்திருமகள்” விருது தந்தார்கள். என்னை கௌரவிக்கத்தானே. மன்னார் இணையத்திற்காக நீங்களும் என்னை பேட்டி காண வந்துள்ளீர்கள். என்னைப் பொறுத்தவரை முகத்திற்கு நேரே புகழ்ந்து விட்டு பின்பு இகழ்வதை விட எனது படைப்பின் மூலம் இன்னொருவருக்கூடாக என் படைப்பைப் பற்றி என்னைப் பேசும்போது, அதுதான் உண்மையில் எமக்கு கிடைக்கின்ற சிறந்த விருது. அதைவிட்டு நான் நான்கு புத்தகம் வெளியிட்டு விட்டேன். எனக்கு விருது தரவில்லை என்றால் , அது எனது மடத்தனமாகத்தான் இருக்கும்.

ஒரு தந்தை “ எனது மகள் இறுதி யுத்தத்தின்  அதிர்வில் இருந்து வெளிவராமல் இருந்தாள். உனது புத்தகத்தை படித்த பின்புதான் அவள் நல்ல நிலைக்கு திரும்பியிருக்கிறாள் ``
 என்றபோதுதான் நான் மிகவும் சந்தோசமடைந்தேன்.  அது என்னை கௌரவிப்பதாக இருந்தது.

மேடையில் மாலைபோடுவது மட்டுமே கௌரவிப்பது ஆகாது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

எழுத வேண்டும் என்பது எழுத்தாளர்களின் கடமை. கௌரவிப்புகளை எதிர்ப்பார்க்காமல் காலத்திற்கான கடமையைச் செய்வோம். காலம் நம்மை தேவையான போது கௌரவிக்கும்.

மன்னார் மக்கள் கலைஞர்கள் என மன்னாரில் மகிமை பேசுகின்ற மன்னார் இணையம் பற்றி?

மன்னார் இணையம் எனும்போது இதுவரை பொதுவாக மற்ற இணையங்களைப் பார்ப்பது போல நுனிப்புல் மேய்வது போலத்தான் பார்த்து வந்தேன். ஆனால் நீங்கள் எங்களைப் போன்ற கலைஞர்களை வீடு தேடி
வந்து பேட்டி கண்டு இணைய வாயிலாக அறிமுகப்படுத்தும் போது ஆர்வம் ஏற்படுகின்றது. மன்னார் இணையத்தினை முழுமையாக பார்வையிட விரும்புகிறேன்.தொடரவிருக்கிறேன். மன்னார் இணையம் தொடர்பான எனது கருத்தினையும் விருப்பத்தினையும் பகிர்ந்துக் கொள்வேன். தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் என்றும்!

மன்னார் இணையத்திற்காக –வை. கஜேந்திரன்.

நன்றி மன்னார் இணையம்:தங்கள் போர் வாழ்வு பணி வாழ்க
தமிழீழச் செய்தியகம்

Friday 18 March 2016

இந்திய மக்களுக்கு காங்கிரசின் நற்செய்தி!

பசுவை தேசத் தாயாக அறிவித்தால் ஆதரிப்போம்: காங்கிரஸ்

By காந்திநகர்
First Published : 19 March 2016 03:35 AM IST

குஜராத் மாநிலத்தில், பசுவை தேசத் தாயாக அறிவிக்கும் முடிவை பாஜக தலைமையிலான மாநில அரசு எடுத்தால் ஆதரிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், இதுதொடர்பாக பாஜக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த 8 விவசாயிகள் பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், ஹிந்தாபாய் வம்பாடியா என்ற விவசாயி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம், குஜராத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது. அவையில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா வலியுறுத்தினார். ஆனால், அதற்கு பேரவைத் தலைவர் கண்பத் வசாவா அனுமதி மறுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்எம்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிதீஷ் படேல் கூறுகையில், ""மாட்டிறைச்சியை உண்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், கேரளத்தில் காங்கிரஸ் எம்எம்ஏ ஒருவர் கடந்த காலத்தில் மாட்டிறைச்சி விருந்து அளித்துள்ளார். எனவே, பசுவதை பற்றி பேசுவதற்கு காங்கிரஸýக்கு உரிமை இல்லை'' என்றார்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் சங்கர்சிங் வகேலா கூறுகையில், ""பசுவை தேசத் தாயாக பாஜக அறிவித்தால், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். வாக்குகளைக் கவர்வதற்காக மட்டுமே பசுப் பாதுகாப்பு பற்றி பாஜக பேசுகிறது'' என்றார்.

கடையடைப்புப் போராட்டம்: இதனிடையே, பசுவை தேசத் தாயாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, "பசு பாதுகாப்பு சமிதி' என்ற அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ராஜ்கோட் மாவட்டத்திலும், செளராஷ்டிரம் பகுதியிலும் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு, விஹெச்பி, பஜ்ரங் தள், படேல் இடஒதுக்கீட்டுப் போராட்டக் குழு ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

சீர்காழியில் ம.ஜ.இ.க தோழர் மனோகரனின் வெள்ள மறுவாழ்வு விவசாயப் புரட்சி உரை.






இணைய ஒலி நாடா நன்றி: ம.ஜ.இ.க.SR

Thursday 17 March 2016

'பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்`- தமிழ் Mirror


குறிப்பு: தமிழ் மிரர் சிறிலங்காவில் வெளிவரும் Daily Mirror ஆங்கிலப் பத்திரிகையின் சகோதர நாளாந்த தமிழ்பத்திரிகை ஆகும்.(ENB)

தமிழக ஊடகப் பிரச்சாரம்
நக்கீரன்
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் ; 
தமிழ்நாட்டில் வாழ்கிறார் - பரபரப்பு தகவல்

இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.

புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்.  என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப் பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது. 

பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர். நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளி தழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

 அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் உள்ளனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.

 இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினத்தந்தி

விடுதலைபுலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் இலங்கை பத்திரிகை தகவல்

இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.

விடுதலைப்புலிகளின் உள் கட்டமைப்பு வலுவாக இருந்ததற்கு இவரது உளவுப் பிரிவு தகவல்கள் முக்கிய பங்கு வகித்தது. சிங்கள படை நகர்வுகளை மிகத் துல்லியமாக பிரபாகரனுக்கு பொட்டுஅம்மான்தான் வழங்கினார்.புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்.

என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது. பிரபாகரன் உடலை இந்த உலகுக்கு காட்டிய சிங்கள ராணுவத்தால் பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர்.நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளிதழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளார் 

அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர் களும் உள்ளனர். தமிழ்நாட் டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளார் என்பது பற்றிய உறுதியான தகவல்களை  கடந்த அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கவில்லை இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wednesday 16 March 2016

வெற்றிச் செல்வி: மரணம் தாண்டியும் மறக்க முடியாது.



மனதின் மடல்

Posted on December 2, 2013  


பிரியமானவனே,
கனவுகளோடும் கேள்விகளோடும்
கழிகிறது வாழ்நாள்.


நீயும் நானுமாய்
கண்ட கனவுகள்
கட்டிய கோட்டைகள்
மண்ணோடு மண்ணாகிப்போனது
உண்மைதான்.

என்றாலும்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் போதுமென்று
எப்படி நான் ஆறிக்கொள்ள?

என்னவனே,
உன்னைப்போல்
நம் உறவுகளும்
ஊரவரும்
கண்ட கனவுகள் கொஞ்சமல்ல.
கிழக்கிலே உதயமும்
வடக்கிலே வசந்தமும்
வீசத் தொடங்கியபோதுதான்
நம் கனவுகள் கலைந்தன.

அட, அதுவரையும்
நாம் கனவிலேதான் வாழ்ந்தோமா?
நம்பத்தான் முடியுதில்லை.

இப்போதும்
எல்லாம் கனவுபோலத்தான் இருக்கிறது.

நல்லவனே,
உன் மௌனங்களை
எவரும் எனக்கு
மொழி பெயர்த்துச் சொல்லவில்லை.

அதை புரிந்து கொள்ளாதது
என் மடத்தனமா?
புரிய வைக்காதது
உன் மடத்தனமா?
புரியவே இல்லை.

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமே
என்றாலும் சுகமே.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
என்பதைப்போல,
உனது அருமையும் பெருமையும்
இப்போது புரிகிறது.

இருந்துமென்ன
நீயில்லாத வாழ்வை
வாழப்பிடிக்குதில்லை.

உன்னோடு பழகிய
அழகிய ஞாபகங்கள்
குடையென விரிந்து
நிழல்களை நினைவுபடுத்துகின்றன.

நம்வீட்டு ரோஜாக்களும்
மல்லிகைகளும்
உதிர்ந்து போனாலும்
அவைதந்த நறுமணங்கள்
மனசைவிட்டு அகலுதில்லை.

தோழனே,
நீ சொல்லித் தந்த தோழமையை
பற்றுப் பாசத்தை
தன்னம்பிக்கையை
மரணம் தாண்டியும்
மறக்க முடியாது.

என் ஆன்மா
அவற்றின் பதிவுகளோடேயே
அடுத்த பிறவி எடுக்கும்.

நெஞ்சம் நிறைந்தவனே,
உன்னை
காதலித்த காலங்களை
பவுத்திரப்படுத்துகிறது மனசு.

நீ இருக்கிறாயா?
இல்லையா?
என் குங்குமத்தை அழித்துக்கொள்ள
எனக்கு விருப்பமில்லை.
அதனால்
நீ இல்லை என்பதை
நான்
ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நீ தந்த
நம்பிக்கைளோடேயே
காத்திருப்பேன்.

 — வெற்றிச்செல்வி

வெற்றிச் செல்வி: படைப்புகள் கிடைக்கக் கூடிய இடம்


வெற்றிச் செல்வி: போராளியின் காதலி


நாவல் குறித்து DJThamilan  குறிப்பு:

இறுதி ஆயுதப்போராட்டம் வன்னிக்குள் உக்கிரமாகின்ற காலத்தில் (முதல் ஈழப்போரின் இறுதி நாட்களில் ENB), வைத்தியசாலையில் வேலை செய்கின்றவர்களின் மிகவும் துயராந்த வாழ்வு முறையும், காயப்பட்டும், இனித் தப்பவேமுடியாதென குற்றுயிராய் வருகின்ற உடல்களோடும் போராடுகின்ற -நாம் நம் கற்பனைகளில் வரைந்து பார்க்கவே முடியாத- பல இடங்கள் இந்நாவலில் வருகின்றன. 2009ல் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்தபோது எழுதப்பட்ட நாவல் இதென நினைக்கின்றேன். எனவே அதற்குரிய பலவீனங்கள் பல இருந்தாலும், நாம் கடந்து செல்ல முடியாத ஒரு புதினமாகவே கொள்கின்றேன்.

முக்கியமான வைத்தியசாலைகளில் கொண்டுவரப்படும் காயப் பட்டவர்களைப் பற்றிய சித்தரிப்புக்களை அவ்வளவு எளிதில் எவராலும் கடந்துவரமுடியாது.

வாசித்துக்கொண்டிருந்த ஒருகட்டத்தில் உடல் முழுதும் வியர்த்து, வயிறெல்லாம் பிரட்டுகின்ற நிலைமையில், இந்நூலை வாசிக்காது இரண்டு நாட்களுக்கு தவிர்த்துமிருந்தேன். பிறகு தொடர்ந்த வாசிப்பிலும் இவ்வாறான சம்பவங்கள் எழுதப்பட்ட இடங்களை மேலோட்டமாய் வாசித்து தாண்டிச் சென்றிருக்கின்றேன். 
அந்தளவிற்கு கோராமான, எழுத்தில் வைக்கப்பட்டபோதுகூட மிக உக்கிரமான பகுதிகள் அவை.

இந்நாவலின் ஆசிரியரான வெற்றிச்செல்வி, 90களில் புலிகளோடு இணைந்து அவரது 19வது வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும், கண்களில் ஒன்றையும் இழந்தவர். முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின் இறுதிநாட்கள் வரை இருந்து, ஒன்றரை வருடத்திற்கு மேலாய் இலங்கையரசின் 'புனர்வாழ்வு' மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். இன்று தனது சொந்த ஊரான மன்னாரில்(?) (மன்னார் நகரின் அடம்பன் கிராமத்தில் ENB) வசித்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகளோடு இணைந்து பணியாற்றுவதும், எழுதுவதுமாய் இருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன.

இன்று ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் எழுதப்பட்ட புதினங்களின் பெரும்பாலானவற்றை வாசித்தவன் என்ற அடிப்படையில் ஒன்றையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
இவ்வளவு மிகக்கொடுரமான காலத்தின் நேரடியாகவோ/நேரடியற்றோ சாட்சியங்களாக இருக்கும் நாம் எந்தவகையான அரசியலைப் பேசுவதாயினும் மிகநிதானமாவும், மிகுந்த பொறுப்புணர்வுடன் நம் ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசவேண்டும் என்பதையே.
 (ஆடி 27, 2015)

http://djthamilan.blogspot.co.uk/2015/09/blog-post.html

வெற்றிச் செல்வி: ஈழப்போரின் இறுதி நாட்கள்


Tuesday 15 March 2016

வெற்றிச் செல்வி படைப்புகள்

வெற்றிச் செல்வியின் ஒரு கவிதை!



எங்கள் கண்ணீருக்கு மட்டுமல்ல
செந்நீருக்கும் விலையற்றுப்போன
வேதனை வரலாற்றை எழுதுவதால்
யாருக்குப் பயன்?

பத்திரிகைகள்
காலத்தின் கண்ணாடிகள்தான்.
எனினும்
குருதிப் படிவும் பிணத்தின் நெடியும் வீசும்
மரணக்குழியாகிய எனது முகத்தை
கண்ணாடியில் பார்க்க எனக்கு விருப்பமில்லை.

வீரத்தின் கொடியேற்றங்களை எழுதிய
எனது பேனாவுக்கு,
தியாகத்தின் உச்சங்களை பாராட்டிய
எனது பேனாவுக்கு,
தோழிகளின் குறும்புகளை வடித்த
எனது பேனாவுக்கு,
துயர்மிகுந்த அந்த வீழ்ச்சியை எழுத
பிடிக்குதேயில்லை.

துகிலுரியப்பட்ட பெண்களாய்
என் தோழிகளை பார்ப்பேன் என்று
நான் கனவிலும் நினைத்தவளில்லை.

இப்போது கனவுகளும் நினைவுகளும்
அவைகளாகவே இருப்பதனால்
எனது எழுத்து
என்னோடு முரண்டுபிடிக்கிறது.

எனது முகத்தின் வடுக்களை பார்த்து
இன்னொருவர் அழுவாரா?
துடிப்பாரா?

யாருக்கு வேண்டும் அந்த வலியின் பிரதிபிம்பங்கள்?
உன்னையும் என்னையும் பெற்றதற்காக
பெருமைப்படவேண்டிய மண் இப்போதெம்மை
புனைபெயர்களில் ஒழித்துவைத்திருப்பதற்காக
அழுகிறேன்.

என் அழுகுரல் கேட்கிறதா?
நித்திரைகூடப் புறக்கணித்த என் இரவுகள்
என்னை குத்திக்கிழிப்பதால்
நானிடும் ஓலம் எவரின் செவிகளையும்
தொட்டுவிடுமா என்ன?

எனினும்
வழியும் விழிகளை துடைத்தபடிஎன் நம்பிக்கைகள்
புதிதாய் துளிர்விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

வெற்றிச்செல்வி

வெற்றிச் செல்வி ஒரு போராளிப் படைப்பாளி!

படைப்பாளிப் போராளி!


30 ஆண்டுகள் அகிம்சாவாதிகளுக்கு எதிராகவும், அடுத்த 30 ஆண்டுகள் ஆயுதப் போராளிகளுக்கும், ஆதரவான பொதுமக்களுக்கும் எதிராகவும் ஆக மொத்தம் அறுபது ஆண்டுகள் சிங்களமும்,இந்தியமும்,ஏகாதிபத்தியமும், நடத்திய இனப்படுகொலை யுத்தத்தை எதிர்த்த முதலாவது ஈழ விடுதலை யுத்தம் மே 18 2009 இல் முள்ளிவாய்க்காலில் ஓய்ந்தது;

``துயர் மிகுந்த அந்த வீழ்ச்சியை`` அரசியல் இலக்கிய வரலாறாக்குகின்றது, வெற்றிச் செல்வியின் கலைத்துவம்.


துணை புரிகிறது வலது கண்ணையும், செவிப்பறைகளையும், வலது கையையும் இழந்து புதிய போராயுதமாக அவர் பழக்கி எடுத்துக் கொண்ட இடது கரத்தின் காயம் பட்ட ஐந்து விரல்கள்.

வெற்றிச் செல்வி ஈழ மன்னார் மாவட்டத்தில் அடம்பன் என்கிற நெல் விவசாயக் கிராமத்தைச் சார்ந்தவர்.தந்தை வேலு விவசாயி, தாயார் பொன்னியின் செல்வன், நளவெண்பா போதித்த இலக்கியவாதி.

1970 களின் உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியைச் சார்ந்து, தரகு வணிக நாடாக இருந்த இலங்கையிலும் பொருளாதார நெருக்கடி வெடித்தது.சிங்களம் அன்றும் இன்றும் கையாளும் அதே தந்திரத்தை 70 களிலும் கடைப்பிடித்தது. ஏகாதிபத்திய நெருக்கடிக்கு முண்டு கொடுக்க உள்நாட்டில் இன மோதலை ஊக்குவித்தது.

1980 களில் இந்த இன ஒடுக்கு முறை அரசியல் இனப்படுகொலை யுத்தமாக வடிவெடுத்து 1983 இல் உள் நாட்டு யுத்தமாக மாறியது.

1970 களில் இலங்கையில் ஒரு விவசாயப் பிரச்சனை எழுந்தது, 1972 அரசியல் யாப்பு,தரப்படுத்தல் திட்டமும், அதை எதிர்த்த ஈழ மாணவர் இயக்கமும், ஜே.வி.பி.இன் ஆட்சிக் கவிழ்ப்பு கிளர்ச்சியும் ஒரு மரத்தின் இரு கிளைகளாகும்.

இதுதான் வெற்றிச் செல்வியின் இளம் பருவக் காலம்.அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தது 16 வயதினிலே!

வெற்றிச்செல்வி 19 வயதில் ஈழ தேசிய தற்காப்புப் போர்க்கடமையில் வலது கையையும் வலது கண்ணையும், செவிப்பறைகளையும், இழந்து புற ``முதுகு தவிர பெரு விரல் வரை``  உடல் எங்கும் காயப்பட்டார்.

முள்ளிவாய்க்காலில் இவர் கைதி ஆனார்.

``புனர்வாழ்வுப் பயிற்சியின் போது எனக்கு பயிற்சி எதுவும் கிடைக்கவில்லை , அரசாங்கம் தானாக முன்வந்து கொடுத்த கடன் உதவியின் மூலம் தன்னைப் போன்றவர்கள் வாழ்வாதார முயற்சிகளில் முன்னேறுவதற்குப் பதிலாக கடனாளிகளாக மாறியுள்ளோம்``
என பி.பி.சி.தமிழோசைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 தனது இடது கையைக் கொண்டு பல்வேறு பணிகளையும் செய்யும் இவர் பிறப்பியல்பாக வலது கைப்பழக்கத்தைக் கொண்டிருந்தவர். கடுமையான சுய பயிற்சியின் மூலம் இடது கையினால் அழகாக எழுதவும் கணணியில் வேகமாகத் தட்டச்சு செய்யவும், மோட்டார் சைக்கிளில் ஓடித்திரிபவராகவும் இருக்கின்றார். அரசாங்க ``ஐசலக்கா``வீட்டுத்திட்டத்தில் ஒரு குடில் பெற்று விட்ட வெற்றிச் செல்வி அதனை ஒரு பூங்கா வனமாக, தூங்கா ஈழக் கனவாக,
புத்துயிர் பெற்ற பொருளாக படைத்துள்ளார்.

வீட்டுச் சுற்றமே சொல்லும் அவர் படைப்பின் இரகசியத்தை.

அரசாங்க சுயதொழில் திட்டத்தின் இலாப போட்டி இயந்திர வாழ்க்கையை கைவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றின் மாத வருமானத்தில் தற்போது வாழ்க்கை நடத்தி வருகின்றார்.

சமூக முன்னேற்றத்துக்கும், ஈழப் போர்க்கால மானுட வாழ்வை இலக்கிய ஆவணமாக படைத்தளிக்கும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது வரையில் கட்டுரை,கவிதை,சிறுகதை,நாவல் என ஐந்து நூல்கள் வரை வெளியிட்டுள்ளார்.

மன்னார் அமுதனின் ஒரு குறும் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்,



அவர் தன்னைப்பற்றியும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால்  தான் காணும் ஈழ சமூகத்தைப் பற்றியும் இதில் தனது பங்கு பாத்திரம் குறித்தும் மன்னார் இணையத்துக்கு அளித்த பேட்டி வருமாறு.







Wednesday 9 March 2016

ஆசிய பஸிவிக் பிராந்தியத்தில் அமெரிக்க சீன உலக மறுபங்கீட்டு மோதல்!

US Sends Aircraft Carrier, Destroyers to South China Sea


US Sends Aircraft Carrier, Destroyers to South China Sea
VOA Ken Schwartz March 04, 2016 9:18 PM

The United States has deployed an aircraft carrier and several escorts to the South China Sea in an apparent show of force to China.

The John C. Stennis, along with two destroyers and two cruisers, reportedly arrived in the disputed waters earlier this week. A U.S. flagship is also in the region.

China claims almost the entire South China Sea. The United States has accused Beijing of militarizing the region as it tries to contest territorial claims by other nations.

After China deployed surface-to-air missiles on the Paracel Islands last month, the head of the U.S. Pacific Command, Admiral Harry Harris, told Congress that China is clearly militarizing the sea.

"You'd have to believe in a flat Earth to believe otherwise," Harris testified.

China denies the accusation and says it is the U.S. that is causing the tension.

"If you take a look at the matter closely, it's the U.S. sending the most advanced aircraft and military vessels to the South China Sea," said a spokeswoman for Beijing's Foreign Ministry, who warned that such a buildup could lead to a "miscalculation."

Pacific Fleet officials say the United States has routinely patrolled the Pacific, including the South China Sea, for decades and has no intention of easing up.

U.S. Defense Secretary Ash Carter told a group of U.S. troops Friday that China's rise as a prosperous nation "is fine. China's aggressive behavior is not, and we and lots of our partners... look to us to apply a counterweight to check anything excessive."

Six Pacific nations — including Vietnam and the Philippines — have territorial claims in the South China Sea, and accuse China of using its military might to intimidate them into backing down.

China also has been building artificial islands in the sea to try to strengthen its claims.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்!  பேரா.எஸ்.இசட்.ஜெய்சிங் ஜனவரி 2, 2020 தீக்கதிர் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்...