Monday 22 October 2012

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 அக்டோபர், 2012 - 16:13 ஜிஎம்டி பி.பி.சி.தமிழோசை

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என இலங்கை-இந்திய உறவுகள் குறித்து கவனம் செலுத்திவரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் கூறுகிறார்.


இறையாண்மை பெற்ற ஒரு நாடு என்ற வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் உரிமை இலங்கைக்கு உண்டு , எனவே இந்த சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூலமாக அது ரத்து செய்வது என்பது சட்டப்படி சாத்தியமே என்றாலும் அது அரசியல் ரீதியில் தவறான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட 13வது சட்டத்திருத்தத்தை இலங்கை ரத்து செய்தால் அதன் விளைவுகள் இலங்கையை மீறி இருக்கும், இலங்கையின் நம்பகத்தன்மையை அது பாதிக்கும் என்கிறார் ஆய்வாளர் பேராசிரியர் சஹாதேவன் ஏனென்றால்,  இந்த சட்டத்திருத்தம் இலங்கையின் மற்ற சட்டத்திருத்தங்களைப் போன்றதல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட ஒரு நடவடிக்கை. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், தமிழ்ச் சிறுபான்மையினருக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை தர அரசு முன்வரவில்லை என்ற கருத்து சர்வதேசத்தில் மேலோங்கியிருக்கும் நிலையில், இவ்வாறான நடவடிக்கை, இலங்கை மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றார் சஹாதேவன்.

இந்தியா இந்த நடவடிக்கையைத் தடுக்குமோ இல்லையோ , ஆனால் நிச்சயம் வரவேற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சட்டத் திருத்தம் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்ற கருத்து தவறானது என்று கூறிய சஹாதேவன், இலங்கையில், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அரசுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றங்களை ஒட்டியே இந்த சட்டத்திருத்தம் வந்தது என்று சமீபத்தில் இந்தியா வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் கூறியதை சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்திருத்தம் வெளிநாட்டினால் திணிக்கப்பட்டதல்ல, உள்நாட்டு வழிமுறையிலேயே உருவானது என்று அவர் கூறினார்.

'இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை பெரிய அளவில் இல்லை'- சந்திரஹாசன்

'இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை'- சந்திரஹாசன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 அக்டோபர், 2012 - 18:27 ஜிஎம்டி பி.பி.சி.தமிழோசை

இலங்கையிலிருந்து யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்புவதில் எந்தவிதமான பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகளும் இல்லையென்று இந்தியாவில் இலங்கை அகதிகளின் நலன்சார் விடயங்களில் ஈடுபட்டுவரும் தொண்டுநிறுவனமான ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் (ஆஃபர்) (OfERR (Organisation for Ealam Refugees Rehabilitation) தலைவர் எஸ்.சி. சந்திரஹாசன் கூறுகிறார்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிச்சென்றுள்ள இலங்கை அகதிகள் 6 ஆயிரம் பேர் வரையில் தமக்கு அங்கு பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதாக உணரவில்லை என்றும் அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனைகளே இருப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


தமிழகத்தில் வசிக்கின்ற இலங்கை தமிழ் அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இருநாட்டு அரசுகளுடன் இதற்காக பேச்சுநடத்தி இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை உருவாக்கும் முயற்சிகளிலும் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் சந்திரஹாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் வசிக்கின்றனர், அவர்களில் 70 ஆயிரம் பேர்வரையில் முகாம்களிலேயே தங்கி இருக்கின்றனர் என்று ஆஃபர் அமைப்பு கூறுகிறது.

21 ஆயிரம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள்1983-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்ற குடும்பங்களிலிருந்து சுமார் 21 ஆயிரம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் என்றும் அவர்களில் தற்போது 16 ஆயிரம் பிள்ளைகளுக்கு இலங்கை உயர்ஸ்தானிகரகம் ஊடாக பிறப்புச் சான்றிதழ்களைப் பெற வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

நூற்றுக் கணக்கான தமிழர்கள் அண்மைய காலங்களில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்று பிடிபட்டிருக்கிறார்கள்.

இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பிறப்பை பதிந்து பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் 'நாடற்றவர்களாகும்' நிலை இருப்பதால் அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுத்து இலங்கைக் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டியிருப்பதாகவும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் ஸ்தாபகர் சந்திரஹாசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மலையக பிரதேசங்களிலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேறி, பின்னர் அங்கிருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இந்திய வம்சாவளி தமிழர்களில் சுமார் 30 ஆயிரம் பேர்வரையில் முகாம்களில் இருப்பதாகவும் அவர்கள் வந்த காலத்தில் நாடற்றவர்கள் நிலையில் இருந்ததால் அவர்களுக்கும் குடியுரிமை ஆவணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியிருப்பதாவும் அவர் கூறினார்.
அந்த நடவடிக்கையின் ஒருகட்டமாகவே சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இருப்போருக்கு சனிக்கிழமை பிறப்புச் சான்றிதழ்களும் குடியுரிமை ஆவணங்களும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்பு காணிகளில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதையும் அங்கு அரசியல் தீர்வுத்திட்ட முயற்சிகள் முடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழோசை கேள்வி எழுப்பியபோது, அந்தப் பிரச்சனைகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமாக பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் சுட்டிகாட்டினார்.

Saudi wants our AG there to discuss Rizana Nafeek’s release


Saudi wants our AG there to discuss Rizana Nafeek’s release
The Saudi Arabian Government has indicated that the Attorney General (AG) of Sri Lanka should
come to Saudi Arabia to discuss the legal issues connected with the release of condemned Sri
Lankan maid Rizana Nafeek, foreign media reported.

President Mahinda Rajapaksa met with Prince Salman bin Abdulaziz Al Saud of Saudi Arabia on
the sidelines of the Asia Corporate Dialogue Summit in Kuwait City this week.

Crown Prince Salman bin Abdulaziz Al Saud, is presently the Vice Custodian of the Two Holy
Mosque, First Deputy Prime Minister and Minister of Defence of Saudi Arabia, as well as the
most senior member of the House of Saud, next to the King of Saudi Arabia.

Prince Salman who is expected to succeed the King of Saudi Arabia was earlier the Governor of
Riyadh and handled the files connected with Rizana Nafeek .

 The Saudi Government has told the Sri Lankan delegation that met them, to send Sri Lanka’s
Attorney General to Saudi Arabia for further talks regarding the legal issues connected with the
release of the maid, according to media reports. (Ceylon Today Online)

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...