Thursday 26 June 2014

பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது




பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது – பெளவுத்த பல படை அணியின் மற்றொரு பாசிசத் தாக்குதல்!

[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 05:30 GMT ]

பாணந்துறையில்  முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஆடை வர்த்தக நிறுவனம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மருத்துவமனைக்கு அண்மையாக உள்ள நோலிமிட் ஆடைக் காட்சியறையே தீக்கிரையாக்கப்பட்டது.

பெற்றோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும், இது மின்கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை கருத்து வெளியிட்டுள்ளது,

இன்று அதிகாலை 3 மணியளவில் பற்றிய தீயை அணைக்க, 5 தீயணைப்பு வண்டிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது.

இது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதும், அண்மைக்காலத்தில் நோமிலிட் காட்சியறைகளைக் குறிவைத்து பௌத்த அடிப்படைவாத பெளவுத்த பல படையணி , இராவண பலய போன்ற அமைப்புகள் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வரும் நிலையில், பாணந்துறையில் ஆடை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் : ஜே.வி.பி

சொல்லில் சோசலிசமும் செயலில் சிங்களப் பேரின பெளத்த வெறியுமான ஜே.வி.பி.சமூக பேரின வெறியர்களின் `ஒற்றுமைக் கோரிக்கை` சிங்களத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் கோரிக்கையே ஆகும்.

===========================  புதிய ஈழப்புரட்சியாளர்கள்

தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் : ஜே.வி.பி  ரில்வின் சில்வா

Submitted by Priyatharshan on Thu, 06/26/2014 - 20:45

அளுத்கம, தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. சிங்களவர்,தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் புதன்கிழமை திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இந்த நாட்டில் இனவாதத்தை உருவாக்கி இனங்களை மோத விடுகின்ற வேலையை ராஜபக்ஷவின் குடும்பம் மேற்கொண்டு வருகின்றது.

அளுத்கம தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு முழுப்பொறுப்பையும் அரசாங்கமே எடுக்க வேண்டும்.

இனங்களை மோதவிட்டு அதனூடாக அரசியல் நடத்தும் வேலைகளையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. ஊழல், மோசடி, வன்முறை இவ்வாறுள்ள இந்த அரசாங்கத்திற்குத்தான் இன்று அமைச்சர்களான ஹக்கீம், றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், ஹிஸ்புல்லாஹ், தொண்டமான் போன்றரோர் ஆதரவளிக்கின்றனர்.

இன்று மக்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் பக்கம் மக்கள் நாளர்ந்தம் வந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்திலும் மக்கள் விடுதலை முன்னணி எதிர் காலத்தில் மாபெரும் எழுச்சி காணும்.

இனவாத மத வாத அடிப்படைவாதிகளால் இழைக்கப்படும் துரோகத்தை வளர்க்கும் பொறியில் சிக்கி விடக் கூடாது.
 பொறுமையாகவும் அமைதியாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றுபட வேண்டும்
 என அவர் மேலும் தெரிவித்தார்.

களுத்துறை வெறியாட்டம் `சிறு சம்பவம்` ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச!

நால்வர் பலி!
600 கோடி ரூபாய் உத்தேச சொத்திழப்பு!
களுத்துறை மேல் மாகாணத்தில் இஸ்லாமியத்தமிழர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல்!
நாடு தழுவி பரந்துவாழும் இஸ்லாமியத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதல்கள்!
மாட்சிமை தங்கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு இவையெல்லாம் 
`சிறு சம்பவம்`!

வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­கள் விரட்­டி­ய­டித்த போது காத்­தான்­குடி
பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட போது கடை­ய­டைப்பு ஹர்த்தால் செய்­வ­தற்கு எவரும் இருக்­க­வில்லை. இன்று ஹர்த்தால் செய்­த­வர்கள் அன்று எங்­கி­ருந்­தார்கள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ.

இன்று சிறு சிறு சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்துக் கொண்டு ஹர்த்தால் செய்­கின்­றனர். இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரு தரப்­பி­னரும் நிறுத்திக் கொள்ள வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அம்­பாந்­தோட்டை மாகாம்­புர மஹிந்த ராஜபக்ஷ துறை­மு­கத்தில் 76 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட எரி­பொருள் தாங்­கி­களை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்றும் போது,

அன்று வடக்­கி­லி­ருந்து 19000 முஸ்லிம் மக்­களை உடுத்த உடுப்­போடு இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் கையில் கிடைத்­ததை எடுத்துக் கொண்டு வீடு­க­ளி­லி­ருந்தும் கிரா­மங்­க­ளி­லி­ருந்தும் விடு­த­லைப்­பு­லி­களே விரட்­டி­ய­டித்­தனர்.

அப்­போதே ஹர்த்தால் கடை­ய­டைப்பு எங்கே? இன்று ஹர்த்தால் மேற்­கொள்வோர் அன்று எங்­கி­ருந்­தார்கள்?எவரும் எதையும் செய்­ய­வில்லை.காத்­தான்­குடி பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்தி விடு­தலை புலிகள் முஸ்­லிம்­களை கொலை செய்­தனர்.யார் ஹர்த்தால் செய்­தார்கள்?ஆனால், இன்று சிறு சம்­ப­வத்­திற்­காக ஹர்த்தால் செய்­கின்­றனர்.இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.

நாட்டின் சமா­தா­னத்தை அமை­தியை பாது­காக்க அர­சாங்கம் மட்­டு­மல்ல மக்­களும் பங்­க­ளிப்பு வழங்க வேண்டும்.அன்று சிங்­கள முஸ்லிம் தமிழ் மக்கள் விடு­தலைப் புலி­களால் கொலை செய்­யப்­பட்­டார்கள்.

அப்­போ­தெல்லாம் ஹர்த்தால் எங்­கி­ருந்­தன ?நாட்டில் ஆங்­காங்கே சிறு சிறு சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது தொடர்பில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு ஆலோ­ச­னைகள் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று அளுத்­க­ம­விற்கு ஏன் இரா­ணு­வத்­தி­னரை அனுப்­ப­வில்லை என கேள்வி எழுப்­பு­கின்­றனர்.ரத்­துபஸ் வலைக்கு இரா­ணு­வத்தை அனுப்பி வைத்தோம். இன்று அது தொடர்பில் ஐ.நா. எம்­மிடம் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றது.

இந்­நாட்டில் இன­வா­தத்­திற்கு தூப­மி­டு­வதை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.சம்­பவம் இன்று முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் வதந்­திகள் பரப்­பப்­ப­டு­வதை இன்று நிறுத்த வேண்­டி­யுள்­ளது.

எமது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு சீனா மட்­டு­மல்ல இந்­தியா, கொரியா, ஜப்பான், பிரிட்டன் போன்ற பல நாடுகள் உத­வி­களை வழங்­கு­கின்­றது.ஆனால், சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இவ் அபி­வி­ருத்­தி­களை தடுக்கும் கைங்­க­ரி­யங்­களில் ஈடு­ப­டு­கி­றது.இதனால் நாடும் மக்­க­ளுமே பாதிப்­ப­டை­வார்கள்.

எதிர்க்­கட்சி…

நாட்டில் எதிர்க்­கட்­சி­யொன்று இருக்க வேண்டும். ஆனால் அபி­வி­ருத்­தி­களை எல்லாம் தடுத்து நிறுத்தும் முட்­டுக்­கட்டை போடும் எதிர்க்­கட்­சி­யாக இருக்கக் கூடாது. அபி­வி­ருத்­திக்கும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் ஒத்­து­ழைப்பு வழங்கும் எதிர்க்­கட்­சி­யாக இருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறானதொரு கொள்கை எமது நாட்டு எதிர்க்கட்சியிடம் கிடையாது.நாட்டின் அபிவிருத்திகளை மக்களே அனுபவிப்பார்கள் எதிர்கால சந்ததியினரே பயன்படுத்துவார்களென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஸன யாபா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் உரையாற்றினர்.

களுத்துறை வெறியாட்டம் சொத்திழப்பு 600 கோடி ரூபாய்!


இழப்புகளைக் கணக்கிட ஆணைக்குழு
[ MY ARTICLE PUBLISHED IN SUDAR OLI ON 25-06-2014]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையாக நிவாரணம் வழங்கும், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இழந்த சொத்துகள் தொடர்பான பதிவுகள் முறையானவையாக முழுமையானவையாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வாறானதொரு கொடுமை இழைக்கப்பட்டது என்பதற்கு அந்தப் பதிவுகளே சான்றுகளாக அமையும். ஆகவே, ஆவணப்படுத்தல் முக்கியம். இதை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும். [ M.I.MUBARAK ]

நடந்து முடிந்த கறுப்பு ஜூன் கலவரத்தால் அளுத்கம, பேருவளை மற்றும் தர்ஹா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் 600 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன சூறையாடப்பட்டுள்ளன.

ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பின் மூலமே இந்தச் சேத விவரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவசரம் காட்டாமல் அமைதியாகக் கணக்கெடுப்பை மேற்கொண்டால் சேதமடைந்த சொத்துகள் 600 கோடி ரூபாவைத் தாண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இதுதான் உண்மை.

அப்படியாயின், உண்மையான சேத விவரங்களைக் கண்டறிவதென்றால் அந்த சேத விவரங்களை அரசும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வதென்றால் அரசால் ஒரு நடுநிலையான ஆணைக் குழுவொன்று நியமிக்கப்படவேண்டும். அந்தக் குழுவில் மிதவாத சிந்தனையுள்ள சிங்களவர்களும் முஸ்லிம்களும் அடங்கவேண்டும். அப்போதுதான் உண்மையான சேதவிவரங்களைத் திரட்ட முடியும்.

ஆனால், இப்போது நடப்பது என்ன? பொலிஸார்தான் இந்த சேதவிவரங்களைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர் பொலிஸார் மேற்கொள்ளும் கணக்கெடுப்பு நிச்சயமாக முழுமையானதாக இருக்காது அவர்கள் சேதத்தைக் குறைத்தே கணக்கெடுப்பர் அத்தோடு,இந்தக் கணக்கெடுப்பில் மறைமுகமாகவோ நேரடியாகவோ பேரினவாதிகளின் தலையீடு இருக்கப்போவது நிச்சயம்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம்தான் பேரினவாதிகள் நல்ல பிள்ளைகளாகுவர். அந்த மதிப்பீடு அரசுக்கும் சாதகமாகவே அமையும். சேதங்கள் எவ்வளவு குவாக மதிப்பீடு செய்யப்படுகிறதோ அவ்வளவு தூரம் அரசுக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாதகமான நிலை ஏற்படும்.

இந்தப் பேரழிவு ஏற்படுவதற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பக்கச்சார்பான செயற்பாடுகளே காரணம் என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய பேரினவாதிகளைக் கட்டுப்படுத்தாது அவர்களுக்கு இந்தப் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் ப+ரண பாதுகாப்பு வழங்கினர் என்று பாதிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த முஸ்லிம்கள் கூறுகின்றனர். அதுபோக, உயிரிழந்த இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதுபோக, கலவரம் தொடங்கி மறுநாள் உயிரிழந்த சகோதரர்களின் ஜனாஸாக்களை களுத்துறையிலிருந்து தர்ஹா நகருக்கு எடுத்துச்சென்ற சகோதரர்கள் மீதும் பேரினவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் முன்னிலையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அத்தாக்குதலைத் தடுக்காது அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும முஸ்லிம்களைக் காப்பாற்றி அழைத்து வந்துகொண்டிருந்த போது அவர் மீதும், அவர் அழைத்துவந்த முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலும் பொலிஸாரும் அதிரடிப் படையினரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் இடம்பெற்றது என்று அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டாரும் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் பேரினவாதிகள், அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் சகிதம் வந்தே தமது வீடுகளையும், கடைகளையும் எரித்தனர் என்பவையாகும். இந்தப் பேரினவாதிகளும் பொலிஸாரும் தங்கள் வீட்டுக்கு வந்து தேநீர் தயாரித்துப் பருகி அங்குள்ள உணவுப்பொருட்களையெல்லாம் உண்டு, குடித்துவிட்டே வீடுகளுக்குத் தீ வைத்தனர் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
பேரினவாதிகள் வாகனங் களைக் கொண்டுவந்து ஆறுதலாக இருந்து தங்களது சாமான்களை ஏற்றிச்செல்லும் வரை பொலிஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர் என்று அந்த மக்களின் வாக்குமூலங்க ளிலிருந்து அறிய முடிகின்றது.

இதுபோக, பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்வதற்கு முஸ்லிம்கள் செல்கின்றபோது பொதுபலசேனாவுக்கு எதிராக முறைப்பாடுகளைத் தரவேண்டாம் என்று பொலிஸார் தம்மிடம் கூறுவதாகவும் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

ஆகவே, இவ்வாறு அனைத்து நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கும்போது பொலிஸார் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. அவ்வாறானதொரு நிலையில், எவ்வாறு அவர்கள் மேற்கொள்ளும் சேத விவரக் கணக்கெடுப்பு நியாயமானதாக இருக்கப்போகின்றது? இவர்கள் நிச்சயம் குறைத்தே மதிப்பீடு செய்வர்.
அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இதயசுத்தியுடன் செயற்படுவது உண்மையென்றால் சிங்கள மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் ஆணைக்குழுவை நியமித்து அதனூடாகவே கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்று வேண்டுவது இழக்கப்பட்ட சொத்துகளில் கொஞ்சமேனும் குறையாமல் அப்படியே வேண்டும் என்பதுதான். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அப்படியாயின், அவர்களின் சொத்துக்களின் கணக்கெடுப்பு சரியாக மேற்கொள்ளப்படவேண்டும். இந்தக் கோரிக்கையையேனும் அரசு தட்டிக்கழிக்காமல் நிவேற்ற முன்வரவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையாக நிவாரணம் வழங்கும், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இழந்த சொத்துகள் தொடர்பான பதிவுகள் முறையானவையாக முழுமையானவையாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வாறானதொரு கொடுமை இழைக்கப்பட்டது என்பதற்கு அந்தப் பதிவுகளே சான்றுகளாக அமையும். ஆகவே, ஆவணப்படுத்தல் முக்கியம். இதை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும்.
[ M.I.MUBARAK ]

சொல்லாத சோகம்

சொல்லாத சோகம்

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...