Friday 2 August 2013

சுகு சிறிதரனது பாரியார் ஈபிடிபி சார்பில் வேட்பு மனுத் தாக்கல்!


ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி!

31 ஜூலை 2013 Global Tamil News

சுகு சிறிதரனது பாரியார் ஞானசக்தி சிறீதரன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஜக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வடக்கு தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது.

அவ்வகையில் அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சுகு சிறிதரனது பாரியார் ஈபிடிபி சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு ஜக்கிய மக்கள்  சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக ஞானசக்தி சிறீதரன் மட்டுமே களத்தில் குதித்துள்ளார்.

முன்னதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினுடன் இணைந்து போட்டியிட பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முற்பட்டிருந்தது.அவ்வகையில் ஆனந்த சங்கரி தனக்கு ஒதுக்கப்பட்ட இடமொன்றை வழங்க முன்வந்திருந்தார். இவ்விடயத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன் சமரசத்திற்கு முன்வர மறுத்ததுடன் பத்மநாபா ஈழமக்கள் விடுதலைமுன்னணி என 2 ஈபீஆர்எல்எவ் கடசிகள்  கூட்டமைப்பில் இருக்க முடியாது என தெரிவித்து தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக தெரிவித்துள்ளார். (? பி-ர்)

இதனையடுத்து பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை கூட்டமைப்பினுள் இணைக்கும் முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது.   அதன் தொடர்ச்சியாகவே அவ்வமைப்பின் முக்கியஸ்தரான சுகு சிறிதரனது பாரியார் ஈபிடிபி சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். எனக் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...