Monday 18 September 2023

ரஷ்ய மக்கள் உக்ரைன் அகதிகளுக்கு உதவிக்கரம்

 


2022 டிசம்பர் மாத நிலவரப்படி, ரஷ்யாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 இலட்சத்திற்கும் மேல் உள்ளனர். 

ஐநா சபை 

thamilan.lk/articles/17 September 2023 | Saranyaa Sri

உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு ஆண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, போருக்கு மத்தியிலும் ரஷ்ய அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். 

இராணுவ தாக்குதல் காரணமாக ரஷ்யாவிற்கோ அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக வருகின்றனர்.

தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய மக்கள் உதவி செய்து வருகின்றனர். 

2022 டிசம்பர் மாத நிலவரப்படி, ரஷ்யாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 இலட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

----------------------------------

(Only the headline and picture of this report may have been reworked by the ENB staff; the rest of the content is, as mentioned sources) 

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...