Thursday 20 November 2014

திருச்சி முகாம் போராளிகள் வைத்தியசாலையில் அனுமதி


திருச்சி முகாமிலுள்ள 23 இலங்கையர் வைத்தியசாலையில் அனுமதி

Submitted by P.Usha on Thu, 11/20/2014 - 12:12

இந்தியா - திருச்சி  விசேட முகாமிலுள்ள  23  இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சி விசேட முகாமில் 5 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 23 இலங்கையர்களே  சுகயீனமுற்ற நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 23 பேரில் 7 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 15 ஆம் திகதி முதல் இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை
( நிரபராதிகளான தம்மை விடுதலை செய்யுமாறு கோரி) முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...