Sunday 25 November 2018

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் இறுதி ஊர்வல அறிவிப்பு


புரசிகர போல்சுவிக் தோழர் 
ஏ.எம்.கோதண்டராமன்

அவர்களின் இறுதி ஊர்வல அறிவிப்பு.

தோழர் ஏ.எம்.கே.அவர்களின் இறுதி ஊர்வலம்,

சிவப்பு அஞ்சலிக்கு அனைவரும் வருக!

26-11-2018, திங்கள் மாலை 4.00 மணி

இடம்:நியூ காலனி, திருநகர், காட்பாடி, வேலூர்.

இ.க.க.(மா.லெ) மக்கள் யுத்தம் போல்ஸ்விக்-தமிழ் நாடு
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்-தமிழ்நாடு

தொடர்புக்கு: 9941611655,  9003164280


சர்வதேச போல்சுவிசத்தின் தீரமிக்க போர்வாளும், இந்தியப்புரட்சி இயக்கத்தின் தத்துவ ஆசானுமாகிய தோழர் ஏ.எம்.கோதண்டராமன் அவர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று, 84வது வயதில் தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டார்.


இந்திய உழைக்கும் மக்களே, உலகத் தொழிலாளர்களே,ஒடுக்கப்படும் தேசங்களே, புரட்சிகர ஜனநாயக சக்திகளே, அறிவுஜீவிகளே, கட்சி உறுப்பினர்களே,கழகத் தோழர்களே; இந்தச் செய்தியை மிகுந்த துயருடன் 
தங்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம்.


கட்சித் தோழர்களாலும், புரட்சிகர ஜனநாயக அறிவுஜீவிகளாலும் தோழர் ஏ.எம்.கே என்றும், தொழிற்சங்க பரப்பில் `பெரியவர்` என்றும், ஈழத் தோழர்களிடையே `தாத்தா` என்றும் அன்புடனும்,மதிப்புடனும்,தோழமையுடனும் அழைக்கப்பட்ட
அந்த அற்புதமான மானுடர் இன்று எம்முடன் பெளதீக ரீதியாக இல்லை.இயங்கியலுக்கு எதுவும் விதிவிலக்கல்ல!


எனினும் அவர் தம் சிந்தனையாலும்,சொல்லாலும்,செயலாலும் எம்மில் பிரிக்க இயலா அங்கமாக, உணர்வில் கலந்த உயிராக என்றும் வாழ்வார். இங்குதான் ஒரு தனிமனிதரின் வரலாற்றுப் பாத்திரம் அடங்கியிருக்கின்றது.


இந்திய விடுதலையில் இரண்டு தாத்தாக்கள்.
ஒன்று விதேசியத் தாத்தா! மற்றது தேசியத் தாத்தா!!

முதலாவது முடிந்துவிட்டது,இரண்டாவது தொடங்கிவிட்டது.

ஈழப்புரட்சிக்கும் இது பொருந்தும். 

இனி வரலாறு அவர் வழியில் தான் நடக்கும்.
அவர் நாமம் தான் நிலைக்கும்.

எமது அருமைத் தாத்தா,
புரட்சிகர போல்சுவிக் தோழர்
ஏ.எம்.கோதண்டராமன் நாமம் நீடூழி வாழ்க!
அவர்தம் புரட்சிப்பயணம் வெல்க!!

அஞ்சலிக்க அணிதிரள்வோம்!


No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...