Monday 27 April 2015

புதிய ஈழப்புரட்சியாளர்களின் மே நாள் முழக்கங்கள்

மே1-மே18
புரட்சித்திருநாள் சூளுரைகள்:

* அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 
மைத்திரி-ரணில்-பொன்சேகா கும்பலின் அரசாங்கம் தேசத்துரோக அரசாங்கமே!

* ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் ரசிய-சீன முகாமுக்கு எதிராக அமெரிக்க இந்திய முகாமுடன் அணி சேரும் வெளிவிவகாரக் கொள்கை, `அணி சேராக் கொள்கை`யைக் கைவிடும் விதேசியப் பாதையே!

* உலக மறுபங்கீட்டுப் போரில் இந்த முகாம்களில் எந்த ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

* பக்ச பாசிஸ்டுக்களுக்கு மாற்று மைத்திரி ரணில் பாசிஸ்டுக்கள் அல்ல!

* சரிந்து வரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க சாகச வெறியாட்டங்களை எதிர்ப்போம்!

* முண்டு கொடுக்கும் இந்திய அரசின் ஆசிய விரிவாதிக்க கனவை தகர்ப்போம்!

* அண்டிப் பிழைக்கும் மைத்திரி - ரணில் கும்பலின் தேசத்துரோக அரசாங்கத்தை தூக்கியெறிவோம்!

* அதிகாரப்பரவலாக்கல் பாதையை நிராகரித்து, ஈழச்சமரசவாதிகளை, நாடுகடந்த-புலம் பெயர்ந்த தமிழீழ ஏகாதிபத்திய தாசர்களை, தமிழக- இந்திய விரிவாதிக்க நீசர்களை தனிமைப்படுத்துவோம்!

* சிங்கள, தமிழ் - இரு தேச உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்க ஈழப்பிரிவினையை உயர்த்திப்பிடிப்போம்!

* மலையக முஸ்லிம் ஈழத்தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் கட்டியமைக்க போராடுவோம்!

* ஏகாதிபத்திய உலகமய, உலக மறுபங்கீட்டு கொடுங்கோன்மையை எதிர்த்து அலைகடலென ஆர்ப்பரிக்கும் உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!

* இனப்படுகொலையாளரை கூண்டிலேற்ற ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

*பாராளமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம், புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!

மே நாள் தியாகம் - முள்ளிவாய்க்கால் தியாகம் நீடூழி வாழ்க! 
மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!
புதிய ஈழம் மலர்க!
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப்புரட்சியாளார்கள்



No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...