Tuesday 4 November 2014

இது ஒரு புதினமாம் தோழி. சு.பி.வழங்குமாம் காணி!

அரசாங்கம் மறுத்தால் மலையக உறவுகளுக்கு வடக்கு - கிழக்கில் காணிகளை வழங்கத்தயார் :சுரேஷ் எம்.பி.
Submitted by MD.Lucias on Mon, 11/03/2014 - 09:59

கொஸ்­லந்­தையில் மண் சரிவு அனர்த்­தத்தில் எமது மலை­யக உற­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தொடர்ந்தும் 10ஆயி­ரத்­திற்கும் அதி­க­மானோர் அபா­யத்­தினை எதிர்­நோக்­கிய வண்­ண­முள்­ளனர். இவ்­வா­றான நிலையில் அம்­மக்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் வீடு­களை அமைத்­துக்­கொள்­வ­தற்­காக அர­சாங்கம் காணி­களை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காணி­களை வழங்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

மீரி­ய­பெத்­த­வுக்கு நேற்று விஜயம் செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பினர் மண்ச­ரிவு அனர்த்தம் இடம்­பெற்ற பிர­தே­சத்தின் நிலை­மை­களை நேர­டி­யாகப் பார்­வை­யிட்­ட­துடன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்­பாக தமது அனு­தா­பங்­களை தெரி­வித்­த­துடன் முகாம்­களில் உள்ள மக்­க­ளி­டத்தில் நீண்­ட­நே­ர­மாக கலந்­து­ரை­யா­டி­ருந்­தது. இதன்­போதே அம்­மக்­க­ளி­டத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கண்ட­வாறு தெரி­வித்­தது.

அர­சாங்கம் மலை­ய­கத்தில் மண் சரிவு அபாயம் உள்­ள­தாக பல இடங்­களை குறிப்­பிட்டுக் கூறி­யுள்­ளது. இவர்­களை உரிய இடங்­களில் இருந்
தும் வெளி­யேற்றும் முயற்­சி­களும் இடம்­பெற்று வரு­கின்­றன. இது போன்றே கொஸ்­லந்தை பகு­தி­யிலும் மண் சரிவு அபா­யத்­தினை காரணம் காட்டி பாட­சா­லை­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

மண்­ச­ரிவு தொடர்­பான அச்சம் கார­ண­மாக இத்­த­கைய பல குடும்­பங்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ள­மையை காண முடி­கின்­றது. எனினும் இத்­த­கை­யோர்­க­ளுக்கு புதி­தாக வீட­மைத்துக் கொள்ளும் பொருட்டு அர­சாங்கம் உரிய காணி­களை வழங்­கு­வதில் பின்­ன­டிப்­பையே செய்து வரு­கின்­றது. காணிகள் வழங்­கப்­ப­டு­மி­டத்து வீட­மைப்­பிற்­கென இந்­தியா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட பல நாடு­களும் இன்னும் பல தொண்டர் நிறு­வ­னங்­களும் ஒத்­து­ழைப்பும் உத­வியும் வழங்கும் என்­பதே உண்மை.

மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் பாதிப்­பினை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­க­ளுக்கும் அரசு காணி­களை வழங்க மறுக்­கு­மி­டத்து வடக்கு கிழக்கில் நாம் காணி­களை பெற்­றுக்­கொ­டுக்க தயா­ராக உள்ளோம். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் காணிகள் வழங்­கப்­பட வேண்டும். பல்­வேறு அமைப்­புக்­க­ளுடன் கலந்து பேசி வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம். நாங்கள் யுத்தத்தினால் பல பாதிப்புக்களை எதிர்கொண்டு பல இழப்புக்களையும் சந்தித்திருக்கின்றோம். இழப்புகளின் வலி எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, இயன்ற உதவிகளை நாம் செய்வோம்.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...