Wednesday 15 February 2012

மாதம் 15 நாள் வேலை! மலையகத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்!



                                        ராகலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராகலைப் பிரதேச புரூக்சைட், செல்வகந்தை, கொன்கோடியா மற்றும் டென்ட்லெந் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தோட்ட நிருவாகத்தால் இன்று முதல் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே 400 தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
 தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களை இரண்டாக பிரித்து 'ஒன்றை விட்டு ஒருநாள்' என்ற அடிப்படையில் இன்று முதல் வேலை வழங்கப்படும் என தோட்ட நிருவாகம் அறிவித்திருந்து.

இதன்காரணமாக, தொழிலாளர் ஒருவர் மாதத்தில் 15 நாட்களே வேலையில் ஈடுபட முடியும்.

இந்நிலையில், 30 நாட்கள் வேலை செய்வதால் கிடைக்கும் சம்பளமே குடும்ப செலவினங்களை குறைக்க போதாமலிருக்க, 15 நாட்கள் வேலை செய்து பெறும் சம்பளத்தை வைத்து என்ன செய்வது என்ற கேள்வியை தொழிலாளர்கள் எழுப்புகின்றனர்.

நன்றி யாழ் உதயன் 13 பெப்ரவரி 2012, திங்கள்

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...