Friday 3 September 2010
அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? 6 ஆம் திகதி தீர்மானம் ‐ மாவை சேனாதிராஜா
உத்தேச அரசியலமைப்புத் திருத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் 6 ஆம் திகதி கூடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்ததில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தீர்மானம் ஒன்றை இன்னும் மேற்கொள்ளாததால், அது குறித்து மேலதிகமான எதனையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Xi meets Sri Lankan PM
This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...
No comments:
Post a Comment